பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்:19 A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்;
3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45 ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் […]
தொடர் : 2 முஹிப்புல் இஸ்லாம், துபை. இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, […]
பெங்களூர் M.S.கமாலுத்தீன் அமைதியின் ஆட்சியின் கீழ் பூமி இருந்த காலம் அது. நிசப்தமே நிரம்பியிருந்தது; மனிதர்களின் வருக்கைக்குப் பிறகு சலசலப்பும் சண் டையும் ஆரம்பித்தன. ஷைத்தானின் சகோதரர்கள் இப்பூமியிலிருந்து அமைதியை அப்புறப் படுத்திட இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இம் முயற்சியை முழுமையாக முறியடித்து இப்பூமியில் மீண்டும் அமைதியின் ஆட்சியை கொண்டு வர ஏக இறைவன் கொடுத்த வழி முறையே “”அமைதி மார்க்கம் இஸ்லாம்”
அபூ அப்தில்லாஹ் ஷைத்தானின் சபதம் ஆதித் தந்தை ஆதம்(அலை) படைக்கப்பட்டு, மலக்குகளுக்கும் அவர்களுக்குமிடையே போட்டி நடந்தது. அதில் மலக்குகளும், ஜின் இனத்தைச் சேர்ந்த (18:50) இப்லீசும் தோல்வி அடைந்தனர். அதன் காரணமாக மலக்குகளையும், இப்லீசையும் ஆதமுக்குச் சிரம் பணிய அல்லாஹ் கட்ட ளையிட்டான். மலக்குகள் அடிபணிந்தனர். இப்லீஸ் அடிபணிய மறுத்ததோடு ஆணவம் பேசி, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி ஷைத்தான் ஆனான்; நரகவாதியானான்.
அ.ப.அகமது, புதுக்கோட்டை அந்தக் காலத்தில் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற கட்சி ஜொலித்தது. கால ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய்விட்டது. சிலர் அந்த பேரியக்கத்தை இன்று சின்னக் கடைகளாக நடத்தி வருகிறார்கள். பின்னா ளில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வு களை தூண்டி பழனி பாபா அரசியல் நடத்தி னார். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிர்வினை அரசியல் பண்ண எண்ணியதாலோ என்னவோ, அறிவு பூர்வ அரசியலை விட்டுவிட்டு இனவெறி அரசியலைத்தான் அவரால் தமிழகத்துக்கு தர முடிந்தது. அவரின் மறைவுக்குப் […]