Posted by அந்நஜாத் on Sep 10 2010
21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும்.
Posted by அந்நஜாத் on Sep 09 2010
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : மனாருல் ஹுதா ஆகஸ்ட் 2010 மாத இதழ் பக்.10,11ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ”இங்கு ஒரு வியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சூரியன் முழுமையாக மறைந்த பின்பு நோன்பு திறப்பதுதான் ஷரீஅத் சட்டமாகும். வான சாஸ்திர கலையறிந்த நம்பத்தகுந்த அறிஞர் பெருமக்களால் தொகுத்தளிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள தொழுகை, நோன்பு கால அட்டவணையில் கூறப்பட்டுள்ள சூரியன் மறையும் நேரம்தான் சரியானது. தினமும் சில ஆங்கில பேப்பரில் போடப்படும் நேரம் சூரியன் மறைய ஆரம்பிக்கும்போதுள்ள நேரமாகும். அது [...]
Posted by அந்நஜாத் on Sep 08 2010
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா? ஜும்ஆ தொழாவிட்டல் லுஹர் தொழ வேண்டுமா? வேண்டாமா? இதற்குச் சரியான ஆதாரம் உண்டா? விளக்கவும். அபூயாஸிர், மதுரை.
Posted by அந்நஜாத் on Sep 08 2010
ஐயம் : நபி(ஸல்) இரவுத் தொழுகை 8+3 என தொழுதிருக்க ஓர் ஆலிம் 8+3 போக விடிய விடிய நஃபில்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று கூறுகிறார். அவ்வாறு தராவீஹ் (தஹஜ்ஜுத்) தொழுத பின் பல நஃபில்கள் தொழலாமா? ராஹிலா, உசிலம்பட்டி.
Posted by அந்நஜாத் on Sep 07 2010
இப்னு ஹத்தாது இஸ்லாம் வட்டியை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது; மறுத்துள்ளது. ஆயினும் உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள் உட்பட வட்டியின் அடிப்படையில் அமைந்துள்ள பேங்குகள் தான் செயல்பட்டு வருகின்றன. விரல்விட்டு எண்ணப்படும் ஒரு சில பேங்குகள் அதுவும் நம் நாட்டிலில்லை, வெளிநாடுகளில் வட்டி அடிப்படையில்லாமல் செயல்படலாம். இந்த நிலையில் வட்டி அடிப்படையிலான பேங்குகளில் வரவு செலவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்த நிலையிலுள்ளவர்கள், அவர்கள் அந்த பேங்குகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்குரிய வட்டியை வாங்காமல் விட்டுவிடுவது, அந்த வட்டி [...]
Posted by அந்நஜாத் on Sep 06 2010
ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:- “எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால், ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழுகைக்கு பின்னர் அதனைக் கொடுக்கின்றாரோ, ஸதகாவாக [...]
Posted by அந்நஜாத் on Sep 06 2010
இப்னு ஹத்தாது 08.08.2010 ஞாயிறன்று சென்னை ஜாக் தலைமையகத்தில் “பிறைக் குழப்பமும் இஸ்லாமியத் தீர்வும்’ என்ற அறிவிப்போடு பலர் பேசினர். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவர்கள் என்ன பேசுகிறார்கள்? அதில் ஏற்கத்தக்க ஆதாரங்களைத் தருகிறார்களா? அதை ஏற்போமே என்று 39:18 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து அங்கேயே இருந்து அவர்கள் உரைகளை கவனமாகக் கேட்டோம். பிறையைக் கண்ணால் கண்டிப்பாகப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரேயொரு ஆதாரத்தையும் அவர்களில் யாருமே தரவில்லை. மாறாக [...]
Posted by அந்நஜாத் on Sep 05 2010
அபூ முஹம்மத் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டதன் மூலமும், மனிதனைப் பக்குவப் படுத்துவதற்காக நோன்பு கடமையாக்கப் பட்டதன் மூரமும் மிகப் பெரும் சிறப்பை எல்லாம் வல்ல அல்லாஹ் ரமலான் மாதத்துக்கு வழங்கியுள்ளான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அதன் தனிச் சிறப்புகளை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் விளக்ியுள்ளனர். இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த மாதத்தில் மகத்தான ஒரு இரவையும் அல்லாஹ் அமைத்து, அந்த இரவை ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் தன் அருள் மறையில் தெளிவாக்குகின்றான். அதற்காக ஒரு சூராவை [...]
Posted by அந்நஜாத் on Sep 04 2010
அல்குர்ஆன் விரிவுரைகள் – ஒரு திறனாய்வு வேறுபடுவதில் ஒருமிக்கும் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள்
Posted by அந்நஜாத் on Sep 04 2010
திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி) திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் [...]
Posted by அந்நஜாத் on Sep 03 2010
அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் [...]
Posted by அந்நஜாத் on Sep 02 2010
நமது தாய்த்திருநாட்டின் 64ம் விடுதலை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எப்படித் தெரியுமா? பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அவசர, அவசியத் தேவைகளுக்காகப் பிராயணம் செய்பவர்களுக்கும், கோவில், சர்ச், பள்ளிவாசல் செல்லும் மக்களுக்கும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் பெரும் சிரமங்களைக் கொடுத்து, இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரும் நமது இந்தியப் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டது போல் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று நமது இந்திய தேசியக் [...]
Posted by அந்நஜாத் on Sep 01 2010
1450 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலக மக்கள் எப்படிப்பட்ட அறியாமையில் மூழ்கி அழிவின் விளிம்பிலும், நரக விளிம்பிலும் நின்றார்களோ, அதேபோல் இன்றும் மக்கள் அறியாமையில் மூழ்கி அழிவின் விளிம்பிலும், நரக விளிம்பிலும் நிற்கிறார்கள். அன்று காணப் பட்ட அட்டூழியங்கள், அராஜகங்கள், பஞ்சமா பாவங்கள் அனைத்தும் இன்றும் நீக்கமறக் காணப்படுகின்றன.
Posted by அந்நஜாத் on Sep 01 2010
அபூ யாசிர், உடன்குடி இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப் பத்தை ஏற்படுத்திய “”பத்ரு”போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தை யும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1430 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
Posted by அந்நஜாத் on Aug 31 2010
Dr.A.முஹம்மது அலி, Ph.D., நமது மூலம் மண்ணே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 35:11) ஆதி மனிதனின் படைப்பு மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது. (அல்குர்ஆன் 32:7)
Posted by அந்நஜாத் on Aug 30 2010
1.ஒரு டம்ளரில் தண்ணீரில் அதில் சில ஆயத்துகளை ஓதி ஊதி மற்ற சகோதரர்களுக்கு குடிக்க கொடுக்க அனுமதி உள்ளதா? 2.பல்லியை அடித்தால் பத்து நன்மைகள் எனக் கூறுகின்றனர். இது சரியா? 3.திருகுர்ஆனில் சஜ்தாக்கள் மொத்தம் 15. ஆனால் குர்ஆனில் 22:77 அத்தியாயத்தில் வரும் சஜ்தாவை இமாம் ஷாபீ (ரஹ்)ஐ பின்பற்றுபவர்கள்தான் செய்ய வேண்டும் என்கிறார்களோ? 4.பெண்களுக்கு பெண் ஜமாஅத் வைத்து தொழ தெளிவான ஹதீஸ் இருக்கிறதா?
Posted by அந்நஜாத் on Aug 30 2010
S.N. குத்புதீன், B.A., பொதக்குடி வழிமேல் விழி வைத்து “ரமழான்” மாதத்தை எதிர்கொண்டழைக்க நோன்பு நோற்போரைக் காட்டிலும் இறைச்சிக் கடைக்காரர்கள், காய் கறிக்கடைக்காரர்கள் …. தயாராகிக் கொண்டிருப்பது கண்கூடு. காரணம் அந்த மாதத்தில் பொருளீட்டி இலாபம் சம்பாதிப்போர் அனைவரும் அம்மாதத்தை இரு கரம் நீட்டி வரவேற்பர். (அம்மாதத்தால் வியாபாரம் குறையும் நிலையேற்படும். ஒரு சில வியாபாரிகள் மட்டும் உள்ளுக்குள் வெதும்புவர்.) ஆனால் எந்த இலாபத்தையடைய இறைவன் நோன்பை விதியாக்கினானோ அந்த இலாபத்தை அடையவேண்டுமென்ற இலட்சியத்தில் நம்மில் நோன்பு [...]
Posted by அந்நஜாத் on Aug 30 2010
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: பெண் பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மனைவியை மட்டும் குறை கூறும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் வாயடைக்க நல்லதொரு பதிலை தாருங்கள். பாத்திமா, திருவான்மியூர்.
Posted by அந்நஜாத் on Aug 29 2010
1.வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்று உள்ளதே அப்படியானால் இன்று வலக்கரம் சொந்தமான பெண்கள் உண்டா? 2.ஒளூச் செய்யும் இடம் தொலைவில் உள்ளதால் சிரமத்தின் பொருட்டு தயம்மம் செய்யலாமா? 3.ஒருவருக்கு வலது கையில் ஆட்காட்டி விரல் கிடையாது. அவர் இடது கை விரல் மூலமாக இஷாரா செய்கிறார். இவ்வாறு செய்யலாமா? 4.நபிமார்களின் கால கட்டம் எவ்வளவு? எத்தனை வயது வரை வாழ்ந்துள்ளார்கள்?
Posted by அந்நஜாத் on Aug 29 2010
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும்.
Posted by அந்நஜாத் on Aug 28 2010
அபூ உ வைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர்களே! என்று உண்மையை உணரப் போகிறீர்கள்!
Posted by அந்நஜாத் on Aug 27 2010
மவ்லவிகளால் “தராவீஹ்’ என்று அறிமுகப் படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இரவில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை அனுமதித்ததும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை அந்நஜாத், 1986-லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. ரமழான் இரவுத் தொழுகையும்[PDF]
Posted by அந்நஜாத் on Aug 27 2010
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை. இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
Posted by அந்நஜாத் on Aug 26 2010
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனின் 9:60 வசனத்தில் ஜகாத் பெறும் ஏழு கூட்டத்தினரைக் குறிப்பிட்டுவிட்டு எஞ்சிய ஒன்றில் மட்டும் “ஃபீஸபீலில்லாஹ்”, அல்லாஹ்வுடைய பாதையில் என்று பொதுவாக் குறிப்பிட்டுள்ளான். எனவே அந்நஜாத் “ஃபீஸபீலில்லாஹ்”, என்ற பாகத்திற்கு அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தை நிலைநாட்ட செய்யப்படும் எல்லா முயற்சிகளும் இதில் அடங்கும் என்று தெளிவு படுத்தியிருந்தது.
Posted by அந்நஜாத் on Aug 25 2010
Posted by அந்நஜாத் on Aug 25 2010
இஸ்லாமிய இறை நம்பிக்கை! இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம். இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் [...]
Posted by அந்நஜாத் on Aug 24 2010
Dr.A. முஹம்மது அலி Ph.D.. இந்திரிய துளியின் பரிணாம வளர்ச்சி : விதி எண் 5 1. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கப்பட்டும்; குதித்து வெளிப்படும் (ஒது துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகுத் தண்டிற்கும், விலா எலும்ழுகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (அல்குர்ஆன் 86: 5-7 )
Posted by அந்நஜாத் on Aug 23 2010
அபூ ஃபாத்திமா அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்( மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க) கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின் வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 42:21)
Posted by அந்நஜாத் on Aug 22 2010
முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்!! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 1417 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்ககாக விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிம்மீன்” சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1989 ஜனவரிலும், 1991 ஆகஸ்டிலும் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையையே [...]
Posted by அந்நஜாத் on Aug 21 2010
1.முஸ்லிமை காபிஃர் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை 2.இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை 3.ஏன் நீங்கள் அனைத்து ஆலிம்களையும் வசைபாடுகிறீர்கள்?