2011 பிப்ரவரி

  அபூ அப்தில்லாஹ் 2010 அக்டோர் தொடர் : 13 உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.

சேலம் S.A.H.அலீ, M.A.,M.Phil.,M.Ed., 1. அல்லாஹ்வின் நியதியும் அதிசயங்களும் வைரஸ், பாக்டீரியா, ஈஸ்டு போன்ற நுண் உயிரினம் ஒன்று, இரண்டாக, நான்காக, எட்டாக பிளந்து பெருகுவது, மனித தாவர விலங்குகளின் நன்மை தீமையை நாடி அல்லாஹ் அனுமதிக்கும் உயிரியல் நியதி. (Biological Nature).

  Y.ஹனீஃப், திருச்சி. “”வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.