2013 ஜூன்

விமர்சனம் : தப்லீக் ஜமாத் என்றால் என்ன? இதனுடைய குறிக்கோள் என்ன? சாதாரண மக்களும் ஜமாஅத்தில் செல்பவர்களும் இது தான் இஸ்லாம்; இதுதான் நபி(ஸல்) அவர்களின் வேலை என்று கருதுகிறார்கள். டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம். கரண்ட் பில் யார் கட்டுவது என்றே தெரியவில்லை என்று மிக பிரமாண்டமாக சொல்கிறார்கள். இவர்களுக்கு யார் அமீர்? இதனுடைய நோக்கம் என்ன? தப்லீக் ஜமாஅத்தால் என்ன நன்மை, என்ன தீமை? இஜ்திமா என்று நடத்துகிறார்கள். அதில் என்ன செய்கிறார்கள். அதனால் […]

 மெளலவி நூஹ் மஹ்ழரி அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா […]

MTM. முஜீபுதீன், இலங்கை மே 2013 தொடர்ச்சி … நாங்கள் ஒரு நாள் அபூபக்ர்(ரழி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் அவர்களிடம் “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது தலையை மூடியவண்ணம், நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”என் தந்தையும் என் தாயும்(நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை […]

இன்று நம் இந்திய நாடு மட்டுமல்ல உலகமே கையூட்டிலும், ஊழல்களிலும் மிதக்கின்றது என்று சொல்வது மிகைப்பட்ட சொல் அல்ல. ஒரு காலம் இருந்தது. அன்று கீழ் மட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்களிடம் மட்டுமே இந்த இரண்டும் காணப்பட்டன. ஆனால் இன்றோ பிரதம மந்திரி, முதன்மந்திரி, மந்திரி, முன்னணி ஆட்சி அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை, அனைத்து அரசுத் துறைகள் என காற்றுப்புகா இடங்களிலும் கையூட்டும், ஊழலும் நுழைந்துள்ளன என்று சொல்லும் அளவிற்கு இவை தலை விரித்து ஆடுகின்றன.