2014 செப்டம்பர்

ஜாபர் சித்திக், கம்பம், 9944283637 ஜூன் 2014 அல்ஜன்னத்தில் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்களால் கணிப்பீட்டுச் சகோதரர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில் பக். 30 முதல் 34 வரை கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இருந்தது. பிறை விஷயத்தில் சுஜ மவ்லவிகள் குழம்பி இருப்பது போல் மதனிகளும், ஃபிர்தெளஸிகளும், உண்மையை அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பிறை விஷயம் ஸலஃபிகளையும் தடுமாற வைத்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. […]

பள்ளியில் சுன்னத் மண்டபத்தில் (பித்அத்) எங்கள் கல்யாணம்! தவ்ஹீத் கல்யாணம்! M. ஜமாலுத்தீன், நாகர்கோவில், 98949324 மார்டன் தவ்ஹீத்வாதிகளின் பேஷன் ஷோ கல்யாணம் பரவலாக அதுவும் அதிகமாக நடை பெறுகிறது. உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று கலாச்சார சீரழிவை நோக்கி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. திருமணம் செய்கிறோம் என்ற பெயரில் அனாச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இதில் சுன்னத் ஜமாஅத்தும் சரி தவ்ஹீத் ஜமாஅத்தும் சரி யாரும் குறைந்தவர்கள் கிடையாது. சுன்னத்தான ஒரு திருமணத்தை […]

இப்னு ஹத்தாது அல்குர்ஆன் 39:42 இறைவாக்குக் கூறும் நேரடிச் செய்தி. “”அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்டத் தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42) இங்கு அரபியில் “”அன்ஃபுஸ” என்றே இருக்கிறது. அதை நேரடியாக மொழி பெயர்த்தால் “”ஆன்மாக்கள்” என்றே மொழி பெயர்க்க வேண்டும். அதற்கு […]

இன்று உலகளாவிய அளவில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 50 நாடுகளில் முஸ்லிம்களே ஆட்சியில் அமர்ந்துள்ளனர். ஆயினும் எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் அமைதியான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ்வ தாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி, சிறு பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி முஸ்லிம்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் 3:138,139 இறைவாக்குகளில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… பீ.ஜையும்! சூன்யமும்!! – அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888 அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் […]