2014 மார்ச்

ஐயம் : மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும், நீர் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கிவிட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே ஊர் தலைவர் இல்லையா? செயலாளர், பொருளாளர் இல்லையா? நீர் எதற்கு புதிய தலைவர் ஆகிறீர்? அவர்களுடன் இருந்தே நன்மையைக் கூறி தீமையை எதிர்க்கக் கூடாதா? அவர்கள் திருந்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்? திருந்தியவருக்கு ஒரு தலைவர், திருந்தாதவருக்கு ஒரு தலைவரா? பிரிவினை […]

அபூ அப்தில்லாஹ் தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.

சித்தி நிஷா அஷ்ரபிய்யா, மார்க்கப் பணிக்கு : மக்களுக்கு இமாமத் செய்வதற்குக் கூலி (சன்மானம் என்ற பெயரில்) வாங்குவது கூடும்! விளக்கமளித்தவர் : “அல்ஜன்னத்’ பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரும், மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலின் இமாமுமான S.செய்யதலி பைஜி, நாகர்கோவில்.

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவன்) என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது. அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும் என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

பீ.ஜையின் அன்றைய நிலை! இன்றைய நிலை? இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது? எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது, நீ தொழ முடிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள […]