2015 மார்ச்

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

அபூ அப்தில்லாஹ் ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் […]

M.T.M முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2015 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் படைப்பான மலக்குகள் (வானவர்கள்) மீது நம்பிக்கை : வானங்கள், பூமி, மற்றும் மனிதன், அறிந்த, அறிந்துகொள்ள முடியாத சகலவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன் ஏக இறைவன் ஆவான். இவை பற்றிய பல செய்திகளை இறைநெறி நூல்கள் மூலமாக மனிதன் அறிந்தே வைத்துள்ளான். எனினும் முன்னைய இறைநெறி நூல்களில் மனிதனின் தப்பும் தவறுமான கருத்துகள் நுழைந்து வழக்கிழந்த வேதங்களாக்கப்பட்டதால் அல்லாஹ் முழுமை பெற்ற இறுதி இறை நெறியாக அல்குர்ஆனை இறக்கி […]

இப்னு ஹத்தாது அந்நஜாத் வாசகர்களான அன்புச் சகோதரர்கள், சகோதரிகளாகிய அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான, நேரடியான எச்சரிக்கை விடுவது அவசியம் என்ற நன்நோக்குடன் இரண்டு சம்பவங்களை உங்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அந்நஜாத் ஜூலை, செப்டம்பர் 2014 இதழ்களில் சூனியம்-சிஹ்ர் மற்றும் பீ.ஜையும்! சூன்யமும்!! என்ற இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றதை அறிவீர்கள், இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்தவர் நமக்கு அறிமுகமானவரோ, அந்நஜாத் சந்தாதாரரோ […]