பகுத்தறிவாளர்களே!

அபூ அப்தில்லாஹ் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் […]

தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]

  அபூ அப்தில்லாஹ் 2010 அக்டோர் தொடர் : 13 உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.

இஸ்லாமிய இறை நம்பிக்கை!  இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம். இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் […]

மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!  ஏப்ரல் தொடர் : 11

அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்! இரு பிரிவினர் : இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி என்று கருதுவதையே காண்பதையே வாழ்க்கையாகக் கருதி, வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை! என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று […]

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! அபூ அப்தில்லாஹ் பிப்ரவரி தொடர் :10

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! அபூ அப்தில்லாஹ் நவம்பர் தொடர் : 8

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! – அபூ அப்தில்லாஹ் டிசம்பர் 2008 தொடர் : 5 உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே சத்தியத்தை-நேர்வழியை அறிந்து நடப்பவர்களக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். அந்நஜாத் இதழுக்கு உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை (Exchange Copy) அனுப்பும் பத்திரிகை தர்மமோ,உண்மை உணர்வோ உங்களிடம் இல்லை என […]