2017 ஜுலை

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அந்நஜாத் மாத இதழ் 1986 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து பல சிரமங்களிடையே, கடுமையான எதிர்ப்புக்களிடையே, கொலை மிரட்டல்களிடையே, விஷமத்தனமான அவதூறுகளிடையே, ஓயாத கடுஞ்சொற்களிடையே, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே, தபால் துறை அநீதிக்கிடையே கடந்த 31 வருடங்களாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் பேருதவியாலும் பெருங் கிருபையினாலும், அந்நஜாத் நின்றுவிட வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு, விருப்பத்திற்கிடையே இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அல்ஹம்துலில்லாஹ். இத்தனை இடர்பாடுகளுக்குக் காரணம்? […]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அந்நஜாத் ஆசிரியர் K.M.H  அபூஅப்தில்லாஹ் அவர்கள் 12.07.2017 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் நடந்த சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். K.M.H  அபூ அப்தில்லாஹ் அவர்களுடைய மஃபிரத்திற்காக துஆ செய்ய உங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் விபரங்களுக்கு நஜாத் அலுவலர் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண்: 8825184161

ஐயம் : “ஜின்” இனத்தைப் பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க! (முஷ்தக் அஹ்மத், பம்பாய்) தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்த வராவார். இப்லீஸ் இந்த இனத்தவனாவான். ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று நாம் மலக்கு களிடத்தில் கூறியதை (நபியே!) நீர் நினைத்துப் பாரும்) இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். (18:50) […]

அபூ ஃபாத்திமா அல்குர்ஆனில் 16 இடங்களில் அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறி இருக்கும் உண்மையான ஆலிம்கள் அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கும் கட்டளைக்கு அணுவளவும் மாறாமல் அப்படியே அடிபணிவார்கள். அவர்கள் 36:21, 2:79,174,175, 31:6 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரி லாகி, குர்ஆன் போதனைகளுக்கு முரணாக தங்கள் கைகளால் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸி, பிக்ஹ், தஃப்ஸீர் என்ற பெயர்களால் கற்பனைக் கட்டுக் கதை களை எழுதி வைத்துக் கொண்டு, […]

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 Why Don’t Monkeys Talk Like Us? கடந்த வார (9-Dec.-2016) அறிவியல் ஆங்கில இதழ்கள் மற்றும் இணையதளங்களில் “குரங்கு ஏன் நம்மைப்போல் பேசுவதில்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. பரிணாமக் கொள்கைப்படி குரங்கிலிருந்து வந்த மனிதனால் பேசமுடிகிறது. ஆனால் குரங்கால் பேச முடியவில்லை. இதன் முக்கிய காரணம் என்ன? என்பதே அந்த ஆய்வு. http://advances.sciencemag.org/content/2/12/e1600723.full டார்வினின் கருத்துப்படி அனைத்து உயிரினங்களும் ஒரு செல்லிலிருந்து பிரிந்து விரிந்து, பரிணாம வளர்ச்சி […]

அபூ அப்தில்லாஹ் அல்லாஹ்வின் அருளினால் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் 3:103 இறைக் கட்டளைப்படிப் பற்றிப் பிடிக்க முன் வந்த சகோதர்களில் சிலர் மீண்டும் ஸலஃபி, அஹ்லுல் குர்ஆன் என இரண்டு வழிகேடுகளில் சிக்கியுள்ளனர். அவற்றில் ஸலஃபி வழிகேட்டைப் பற்றி இங்கு ஆய்வு செய்வோம். குர்ஆனைப் பாமரர்களாக இருந்தாலும், படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களாக இருந்தாலும், மதரஸாவில் ஓதிய மவ்லவியாக இருந்தாலும், நேரடியாகப் படித்து விளங்க முடியாது. ஸலஃபிகள் விளங்கியபடிதான் விளங்க […]

நிகாருன் நிஷா சித்தீகிய்யா, கோவை. அருள்மிகு மாதமான ரமழான் ஒட்டுமொத்த மனித குலம் நேர்வழி பெறுவதற்கான பொக்கிஷமான வாழ்வியல் நெறிமுறைகளை உள்ளடக்கிய உன்னத வேதமான திருமறை திருக்குர்ஆன் இறங்கிய மாதமாகும். வேதாகமங்களும், தவ்ராத், இன்ஜில், ஜபூர் ஆகிய வேதங்களும், அந்தந்த நபிமார்களுக்கு ஒரே தடவையில் மொத்தமாக அருளப்பெற்றன. ஆனால் குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டிலிருந்து முதல் வானத்திலிருக்கும் பைத்துல் இஜ்ஜா (மதிப்புமிக்க இல்லம்) என்ற இறை இல்லத்திற்கு மொத்தமாக அருளைப் பெற்றது ரமழான் மாதத்தில்தான். […]

MTM முஜீபுதீன், இலங்கை ஜூன் 2017 தொடர்ச்சி…. இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் சந்ததியில் வந்த இறைத் தூதர்களும் தமது சமுதாயத் தினருக்குத் தொழுகையைக் கடமையாக்கி இருந்தனர். மேலும் அவதானியுங்கள் மரியமின் மகன் ஈசா (அலை) அவரகள் குழந்தையாக இருந்த நிலையில் தமது சமுதாயத்தினரிடம் கதைத்தச் செய்தியை : நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை யாக இருக்கிறேன். அவன் எனக்கு நெறிநூலைக் கொடுத்திருக்கிறான்; இன்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கிறான். இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) […]

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அரபகத்தில் நிறைவு பெற்ற தூய இஸ்லாமிய மார்க்கம் நடை முறைப்படுத்தப்படும்போதே இந்தியாவின் தென் பகுதிக்கு கடல் மார்க்கமாக இஸ்லாம் வந்துவிட்டது என்பதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆக முழுமைபெற்ற இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதிக்குக் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டிற்கு ஆரம்ப நிலையிலேயே அறிமுக மாகிவிட்டது. இஸ்லாம் ஆரம்ப நிலையிலேயே அறிமுகமானது போல் அல்குர்ஆனும் நம் நாட்டிற்கு அது இறக்கப்பட்ட அரபு மொழியில் அறிமுகமாகித்தான் இருக்கும். குர்ஆன் ஆரம்ப காலத்திலேயே தமிழகத்திற்கு அரபு மொழியில் […]