Posted by அபூ அப்துல்லாஹ் on Jun 03 2010
அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.
Posted by அபூ அப்துல்லாஹ் on Nov 15 2007
அபூ அப்துல்லாஹ் தொடர்: 9. சென்ற ஜுலை தொடரில் நபி வழியில் தவாஃப் செய்யும் முறையை விவரமாக எழுதி இருந்தோம். ஆனால் நபி வழிக்கு முரணாக இந்த மவ்லவி புரோகிதர்கள் எப்படிப்பட்ட வழிகேடுகளை எல்லாம் புகுத்தி அவர்களை வழி கேட்டில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை அதாவது நாம் நேரில் பார்த்ததை இங்கு காண்போம்.
Posted by அந்நஜாத் on Nov 14 2007
விமர்சனம்: “அல்குர்ஆன் 9 : 37 -ல் காணப்படும் (மாதங்களை) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் நிராகரிப்பை (குஃப்ரை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப்படுகின்றனர்” என்ற வசனப்படி பிறையை புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று அடம் பிடித்து ரமழான், ஷவ்வால் மாத நாட்களை முன்னும், பின்னும் ஆக்குவோர் நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றனர். இதனால் நிராகரிப்பவர்கள் வழிகெடுக்கப்படுகின்றனர் என்று சொல்லும் போது, அப்படியானால் அன்று நபி(ஸல்) அவர்களும் பிறையைக் கண்ணால் பார்த்து நாட்களை முன்பின் ஆக்கி நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களா? என்று [...]
Posted by அந்நஜாத் on Nov 14 2007
சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் இந்த சமுதாயத்தை உம்மத்தன் வாஹிதா – ஒரே சமுதாயம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறான். (21:92,93, 23:52,53) பிளவுக்கும் பிரிவுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என பல இடங்களில் வலியுறுத்துகின்றான். அல்லாஹ்வின் எச்சரிக்கை பற்றி நபி(ஸல்) அவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். தமது உம்மத்தில் நயவஞ்சகர்களாக இருந்து கொண்டு குறைஷ் காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி இணை வைத்தவர்களையும் முஷ்ரிக், காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி [...]
Posted by இப்னு ஹத்தாது on Nov 14 2007
இப்னு ஹத்தாது. “….(நீங்கள்) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிய சூரியனையும் , சந்திரனையும் படைத்தான்……” (6:96) அவன் தான் சூரியனை பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்; ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்……. (10 :5)
Posted by அந்நஜாத் on Nov 13 2007
மூலம் : ஹாரூன் யஹ்பா, தமிழாக்கம்: அப்துஸ்ஸமது என்ஜீனியர். குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.
Posted by அந்நஜாத் on Nov 13 2007
மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)
Posted by அந்நஜாத் on Nov 13 2007
நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் [...]