Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 05 2007
அபூ அப்துல்லாஹ் சூரியன் சந்திரனுக்கிடையே பாரபட்சம் ஏன்? சூரியனின் உதயம், மறைவு அடிப்படையில் நிறை வேற்றும் தொழுகைகளை அந்தக் காலத்தில் நேரங்காட்டும் கருவிகள் இல்லாத காலத்தில் நேரடியாக உதயம், உச்சி, அஸ்தமனம் இவற்றை நேரடியாகப் பார்த்து நேரத்தைக் கணித்தது போல் இப்போதும் கணிக்க வேண்டியதுதானே? அதில் மட்டும் எப்படி வானியல் அறிஞர்களின் கணிப்புப்படியுள்ள கடிகாரத்தை ஏற்றுச் செயல்படுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக,
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 05 2007
அபூ அப்துல்லாஹ் உலகமெல்லாம் ஒரே கிழமை இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கு பிறை விஷயத்தில் உலகின் அமைப்பை எப்படி விளங்கிக் கொள்ள முடியவில்லையோ, அதுபோல் கிழமை விஷயத்திலும் உலகின் அமைப்பை விளங்கிக் கொள்ளும் ஆற்றலோ தேதி, கிழமைகளில் உலகளாவிய ஒற்றுமை ஏற்பட கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளோ, தெரியவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 05 2007
அபூ அப்துல்லாஹ் கிரகணத் தொழுகை அடுத்து கிரகணத் தொழுகையை தலைப் பிறையோடு சம்பந்தப்படுத்தி மூன்று பக்கங்களை நிரப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிரகணங்களைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லாததால் இவ்வாறு எழுதியுள்ளார்களோ என்று எண்ணவும் முடியவில்லை. காரணம் அவர்களது ஆய்வில் வானியல அறிஞர்களும் (?) இடம் பெற்றதாக அறிவித்துள்ளார்கள். கிரகணங்கள் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுவதாகும். சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அதிகபட்சம் சில மணித்துளிகளே நீடித்து இருக்கும். அமாவாசையை [...]
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 04 2007
அபூ அப்துல்லாஹ் ஹதீஸில் மோசடி அவர்கள் தங்களது அரபி புலமையைக் காட்ட எடுத்தெழுதியுள்ள ஹதீஸைப் பாருங்கள். “மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக்கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது , நபி(ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : [...]
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 04 2007
K.M.H. அபூ அப்தில்லாஹ் அல்முபீன் நவம்பர், டிசம்பர் இரட்டை இதழை பிறை ஒர் ஆய்வு என்ற தலைப்பில் 120 பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அல்முபீன்: “மாற்றுக் கருத்துடையோர் தங்கள் கருத்தே சரியானது என்று கருதுவார்களானால் அதை எங்கள் முன்னே நிரூபித்து, எங்களையும் அந்த உண்மையின் பால் திருப்பும் கடமை அவர்களுக்கு உண்டு. அவர்கள் கூறுவது தவறாக இருந்தால் தங்களைத் தாங்களே அவர்கள் திருத்திக் கொள்ளும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. அழகான முறையில் விவாதித்து நல்ல கருத்தை அடைய முன்வருமாறு [...]
Posted by அந்நஜாத் on Dec 04 2007
(நபியே!) இன்னும் , “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதே ஆகும்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81) அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல ஏகன் நம் அனைவருக்கும் ரமழானின் முழுப்பலனையும், லைலத்துல் கத்ர் பாக்கியத்தையும் நிறைவாகத் தர பிரார்த்திக்கிறேன். இறைவனது அருளைப் பெற அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்து, அவனிடமே அழுது கேட்பதுடன் அவன் இட்ட கட்டளைப் பிரகாரம் முயற்சி செய்வதும், நம்மீது நீங்காத கடமையாக [...]