Archive for the ‘1987 மே’ Category

திருக்குர்ஆன் அட்டவணை தொடர் -2

Posted by அந்நஜாத் on Jan 17 2008

  அல்லாஹ்வுக்கும் அவனது ரஸுலுக்கும் தான் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனின் வசனங்கள்.

Comments Off

ஒரு மவ்லவியின் மனம் திறந்த மடல்

Posted by அந்நஜாத் on Jan 17 2008

அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் பத்திரிகை உண்மையிலேயே தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு (அந்நஜாத்) ஈடேற்றம் தான் என்பதைப் புரிந்து செயல்படும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது உறுதி.

Comments Off

ஐயமும் தெளிவும்

Posted by அந்நஜாத் on Jan 17 2008

  ஐயம்: வெளிநாட்டில் உள்ளவர்கள் எத்தனை வருடம் மனைவியைப் பிரிந்து இருக்கலாம். மதுக்கூர் M. ஜகபர் அலி, ராணுவப் பயிற்சி முகாம், ஷார்ஜா.

Comments Off

மனித யூகம் மார்க்கம் ஆகாது

Posted by அபூ அப்துல்லாஹ் on Jan 17 2008

K.M.H. அபூ அப்தில்லாஹ் தங்களை மார்க்க அறிஞர்கள் வல்லுனர்கள் என்று அகம்பாவத்துடன் மார்தட்டிக் கொள்ளக் கூடியவர்கள், மார்க்க விவகாரங்களில் தங்களாலும் யூகம் செய்து முடிவு செய்ய முடியும், நாங்கள் நம்பிப் பின்பற்றும் முன் சென்ற அறிஞர்கள் இப்படித்தான் யூகம் செய்து, மார்க்க விவகாரங்களை முடிவு செய்தார்கள், என்று கூறி அதற்கு ஆதாரமாக,

Comments Off

மவ்லவிகளுக்குத்தான் பொறுப்பு என்றால் மற்றவர்கள் முஸ்லிம்களில்லையா?

Posted by அந்நஜாத் on Jan 16 2008

  தருபவர் : மவ்லவி முஹம்மது அலீ ரஹ்மானீ (திருச்சி ‘ரசூல்’ அவர்களால் நடத்தப்பட்ட ‘ஷாஜஹான்’ இதழில் 15-3-54 அன்று வெளியான ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம். 33 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை என்றாலும், இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது) சமூகத்தில் படர்ந்துள்ள அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது . இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம்.

One response so far

ஜியாரத்தும் பெண்களும்

Posted by அந்நஜாத் on Jan 16 2008

P. ஜைனுல் ஆபிதீன் இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

2 responses so far

நபி வழித் தொகுப்பு வரலாறு -5

Posted by அந்நஜாத் on Jan 16 2008

மவ்லவி S. கமாலுத்தீன் – மதனீ ஹதீஸைத் தேடி நபித் தோழர்கள் இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்கள் அபூபக்ரு (ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்களிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக முக்கியமான சில நபித் தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.

Comments Off

நோன்பு காட்டு மிராண்டித்தனமானதா? காரணங்கள் பொதிந்ததா?

Posted by அந்நஜாத் on Jan 16 2008

சங்கை சிராஜுத்தீன் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ என்ற நூலின் இறுதிப் பகுதியில் மஞ்சை வசந்தன் என்பவர் இஸ்லாத்தையும் தனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டு ஒரு மாதம் பட்டினி கிடப்பது காட்டுமிராண்டித்தனமானது’ என்று எழுதியுள்ளார்.

Comments Off

வாசகர் விமர்சனம்

Posted by அந்நஜாத் on Jan 16 2008

“நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தலையை மறைத்த நிலையிலே இருந்திருக்கின்றனர்” என்ற ஹதீஸ் பலவீனமானதா? தொப்பி தலைப்பாகை கட்டுரையில் நபிகள் முன்மாதிரியை விட நபித்தோழுர்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அமைந்துள்ளன. ஏன்? நஜாத்தீ. ரியாத், சவூதி அரேபியா.

Comments Off

உணர்வு பெறுவோர் யார்?

Posted by அந்நஜாத் on Jan 15 2008

புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம். இறைவனின் மாபெரும் அருட்கொடையான அறிவுச் செல்வம், மனித சமுதாயத்துக்கு வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் யாதெனில், சிந்தித்துச் செயல்படுவதற்கே! ஆம்! மனிதன் தன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சிந்தித்துச் செயல்படுவதற்கே!

Comments Off

நபி வழியில் நம் தொழுகை-7

Posted by அந்நஜாத் on Jan 15 2008

  என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள்: புகாரி, அஹ்மத் தூக்கம் ஒளூவை நீக்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்று கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தூக்கமும் ஒன்றாகும். இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூாவமான ஹதீஸ்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.

Comments Off

ஓதுவோம் வாருங்கள் தொடர்-10

Posted by அந்நஜாத் on Jan 15 2008

  இப்னு மர்யம் “மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை  என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது.

Comments Off

மீண்டும் தராவீஹ் -3

Posted by அந்நஜாத் on Jan 15 2008

  மர்ஹும் உமர்(ரழி) அவர்கள் 20 ரக்அத் தொழவில்லை. நிர்ணயம் செய்யவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை என்பதைச் சென்ற இதழில் கண்டோம். இதை மேலும் உறுதி செய்யக்கூடிய ஆதாரங்களைக் கு.குரல் தனது “தராவீஹ்” கட்டுரையில் நமக்கு எடுத்துக் தருகிறார்கள், அவற்றைக் காண்போம்.

Comments Off

இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -9

Posted by அந்நஜாத் on Jan 15 2008

P.S. அலாவுத்தீன் தீமைக்கு எதிராக அறப்போர் புரிதல் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் மறைவழி, நபிவழியில் தீர்ப்பளித்தல் கேள்வி: அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் பரிவதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?

Comments Off

தலையங்கம்

Posted by அந்நஜாத் on Jan 15 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம்   மே 1987  – ரமலான் 1407 அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஜ.உ. சபையின் கவனத்துக்கு… மீண்டும் அழைக்கிறோம் திருச்சியில் உங்களால் நடத்தப்பட்ட ‘அந்நஜாத்’ எதிர்ப்பு மாநாட்டில் “ஃபிக்ஹு கிதாபுகளில் எந்த தவறுமில்லை! தவறு இருக்கின்றது என்று நிரூபிக்க முடியுமா? ஈஸா நபி வந்தாலும் நிரூபிக்க முடியாது” என்றெல்லாம் மக்கள் மத்தியில் முழங்கீனீர்கள்! சவால் விட்டீர்கள்! சவால் விட்டது நீங்கள் தான்.

Comments Off