ஐயமும் தெளிவும்
Posted by அந்நஜாத் on Feb 17 2008
ஐயம் : வெங்காயம், பூண்டு இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று சொல்கிறார்கள். ஷரீஅத் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது? P.M. நாகூர் மீரான், பத்ராவதி.
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 17 2008
ஐயம் : வெங்காயம், பூண்டு இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று சொல்கிறார்கள். ஷரீஅத் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது? P.M. நாகூர் மீரான், பத்ராவதி.
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 17 2008
அபூ அப்துர்ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். நூல்கள் : புகாரி, அஹ்மத். கால் உறைகளின் மீது மஸ்ஹு செய்தல்: அல்குர்ஆன் 5 : 6 வது திருவசனத்தில் ஓளூவைப் பற்றி அல்லாஹ் கட்டளை இடும்போது, “அன்றி நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும், மலம் ஜலம் கழித்துவிட்டு வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு) கொண்டிருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 17 2008
அபூ மர்யம் சென்ற ஜூன், ஜூலை மாத இதழ்களில் புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை வாசகர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
Comments Off
Posted by இப்னு ஹத்தாது on Feb 17 2008
இப்னு ஹத்தாது அல்குர்ஆனின் 62:2 வசனப்படி எழுத்தறிவில்லாத மக்களும் குர்ஆனை எளிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில் குர்ஆன் இறக்கப் பட்டது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அடுத்து வரும் 62:3 வசனம் இதனை இன்னும் உறுதிப் படுத்துகின்றது.
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 17 2008
அபூ உவைஸ் எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது.
Comments Off
Posted by அபூ அப்துல்லாஹ் on Feb 16 2008
K.M.H. அபூஅப்துல்லாஹ் இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். ஒரு கூட்டம் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி காண்பதையே வாழ்க்கையாகக் கருதி வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்து பின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன்பின் ஒரு வாழ்க்கை இல்லை என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்.
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 16 2008
S. கமாலுத்தீன் மதனீ கதைகளின் பெயரால் இடைச்செருகல்கள் பொய்யான ஹதீஸ்களைப் புணைந்து கூறுவதில் கதை சொல்லக்கூடியவர்களும் இடம் பெற்றிருந்தனர். பள்ளிவாசல்களில் அமர்ந்து கதை சொல்லும் பழக்கம் ஆரம்பக் கால முதலே இருந்து வந்துள்ளது. கதை சொல்வதில் திறமை பெற்றவர்கள் பலர் இருந்து வந்துள்ளனர். இவர்களில் ‘தமீமுத்தாரி’ என்பாரும் ஒருவராவார். இவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் கதை சொல்ல அனுமதி கேட்டபோது உமர்(ரழி) அவர்கள் மறுத்து விட்டார்கள். “அம்ர் பின் ஸர்ரார்’ என்பவர் ‘அப்துல்லாஹ் பின் [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 16 2008
புலவர் செ. ஜஃபர் அலீ பி.லிட்., கும்பகோணம். சமூகவியல் உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 16 2008
மவ்லவி P.S. அலாவுத்தீன் மன்பஈ அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை “இறைவா! நான் உனது அடியான்! உமது அடியானின் மகன்! உனது அடியாளின் மகன்! எனது நெற்றி மயிர் உன் கைவசமிருக்கிறது! என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன! உனது விதியில் நேர்மையை உள்ளது! உனக்கு நீயே சூட்டிக்கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய, அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத்தந்த, அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய உனக்குரிய திருநாமங்கள் மூலமும், [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Feb 16 2008
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆகஸ்ட் 1987 – துல்ஹஜ் 1407 ************************** (முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள், என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள், எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள்தாம். (அல்குர்ஆன் 5:44) எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்படி தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களே!) (அல்குர்ஆன் 5:45) ************************* சென்ற ஜூலை இதழில் கிறிஸ்தவர்களிடம் முஸ்லிம்கள் திருமணம் [...]
Comments Off