Posted by அந்நஜாத் on Mar 11 2008
S. ஹபிபுல்லாஹ் – சென்னை-33. வேதக்காரப் பெண்களை இக்காலத்தில் மண முடிக்கலாமா? என்று சகோதரர் ஒருவர் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு நாம் வசனம் 5:5யும், நபித் தோழர்களின் செயல்களையும் ஆதாரமாகக் காட்டி விளக்கினோம். ஆனால் சில பத்திரிகைகள் ஆதாரமின்றி, விளம்பர ஆதாயம் தேடி அந்நஜாத்திற்கு வினா விடுக்கின்றனர். அவர்களுக்கு நமது வாசகர் ஒருவர் விளக்கமாக எழுதிய கட்டுரையை, வாசகர் மலரில் வெளியிடுவது பொருத்தமாக அமையும். – ஆசிரியர்.
Posted by அந்நஜாத் on Mar 11 2008
A.R. முகையத்தீன், B.E., விருதுநகர். “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200.
Posted by அந்நஜாத் on Mar 11 2008
ஆமீனா முஹம்மது, B.Sc., B.Ed., பொன்மலை. லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.
Posted by அந்நஜாத் on Mar 11 2008
திருக்களாச்சேரி, K.M. அப்துல் ஹமீது, (கேம்ப் : துபை) கண்ணியமிக்க ஆலிம்களே, இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை உருவாக்க, மக்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லி, ஏகத்துவத்தின் பக்கம் அழைக்க முற்பட்ட தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், குறைஷி காபிர்களுக்கு மத்தியில் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், ஆளாகி, தனக்கு வல்ல அல்லாஹ் அளித்த திருமறைப்படி மக்களை அழைத்து, இதுதான் இஸ்லாம் – இப்படித்தான் அல்லாஹ் நம்மை நடக்கச் சொல்லி உள்ளான் [...]
Posted by அந்நஜாத் on Mar 11 2008
அபூ ரஜீன் அல்லாஹ் உண்மையையே கூறி (அதன் மூலம் மக்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறான். (33 : 4) மனித இயல்பின்படி மறதி என்பது அனைவரிடத்திலும் காணப்படுகிறது. மனிதன் மறதியாளனாயிருப்பதன் காரணமாகவே சந்தேகம் அவனில் தோன்றுகிறது. சந்தேகமே அவனை அவ நம்பிக்கைக்கு ஆளாக்குகிறது.
Posted by அந்நஜாத் on Mar 11 2008
இப்னு ஷேக் நாம் ஹிஜ்ரி 1408 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.
Posted by அந்நஜாத் on Mar 11 2008
ஸவூதியிலிருந்து அறிவுறுத்துகிறார்கள்: திருச்சி A. அப்துற் றசாக், நெல்லை M. நூர்தீன், அறந்தாங்கி Y. அப்துல் நாசர், கீழக்கரை S. ஹலரத் அலி கேம்ப்: ஜித்தா அன்பிற் சிறந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சீரிய சிந்தனைக்கு, எங்களின் எளிய முயற்சியை முன் வைக்கிறோம். கஃபத்துல்லாஹ், மஸ்ஜிதுந் நபவி – மஸ்ஜித்களைக் கொண்டிலங்கும் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இஸ்லாமிய சகோதரர்கள் எழுதுவதாவது:
Posted by அந்நஜாத் on Mar 07 2008
(ஒரு பகிரங்கக் கடிதம்) A. ஷேக் அலாவுதீன், நல்லம்மாள். அன்புள்ள மவ்லவி………ரப்பானி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற 24-8-87ம் தேதி காரைக்காலை அடுத்துள்ள நல்லம்பல் எனும் ஊரில் நடந்த ஷரீஅத் விளக்கப் பொதுகூட்டத்தில், தாங்கள் ‘ஷரீஅத்தை’ப் பற்றி பேசினீர்கள்.
Posted by அந்நஜாத் on Mar 07 2008
மவ்லவி P.M.S. காசிமிய்யி, மன்/ கரடிக்குளி, இலங்கை வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக்கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.
Posted by அந்நஜாத் on Mar 07 2008
M. அப்துல் ஹமீது, திருச்சி. சமீப காலத்தில் வெளியாகிய மத்ஹபுகள் அவசியமே என்ற நூலை, ஆரம்பம் முதல் இறுதி வரை கவனமாகப் படித்து பார்த்தேன். அப்புத்தகத்தைப் படித்துப் பார்த்த பின் மத்ஹபுகள் அவசியமே இல்லை! என்ற முடிவுக்கே என்னால் வர முடிந்தது. அதற்குரிய காரணங்களைத் தொகுத்துத் தருகிறேன் சிந்தனையாளர்கள் சிந்தித்து விளங்கிக் கொள்வார்களாக.
Posted by அந்நஜாத் on Mar 07 2008
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நவம்பர் 1987 - ரபீவுல் அவ்வல் 1408 ————————————————————————— மனமுவந்து துஆ செய்கிறோம் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 1987 நவம்பர் இதழை, வாசகர் மலராக அமைத்துத் தந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். குர்ஆன், ஹதீஸில் முயற்சிகள் செய்யும்போது சாதாரண மக்களும் தலைசிறந்த மார்க்க வல்லுநர்களாக ஆக முடியும்.