Posted by அந்நஜாத் on Oct 30 2007
அல்லாஹ் தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான். எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களை தான் மன்னித்து [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? ஏ.என். குதுபுத்தீன், பி.ஏ., நூர் மஹால், 6-35, கரீமிய்யா வீதி, பொதக்குடி 614 103. தீர்ப்பு: அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? இந்தப் பிரச்சனையில் சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பின்னும் உயிருடன் இருக்கின்றனர் என்றும் வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும். முதலில் (மரணித்த [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
பிஸ்மில்லாஹர்ரஹ்மானிர் ரஹீம். நிர்வாகி தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
பேரன்பு கொண்ட செயல் வீரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், ஓரிறைக் கொள்கையில் ஆழ்ந்த உறுதி கொண்ட நம் சடீகாதரர்களால் “பீஎஸ்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, எனது அண்ணன் P.S. அலாவுதீன் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து நமது பொறுப்பு அதிகமாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் முன்னே எடுத்து வைத்த கொள்கையில் கடைசி வரை “P.S.” அவர்கள் உறுதியாக நின்றார்கள். மரணத்தின் விளிம்பை அடைந்து விட்ட நேரத்தில் கூட, “மாயம், மந்திரங்கள்” மூலம் இந்த நோய் குணமாகும் என்றால், [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் உலவி “அவர்களில், அறிவற்றவர்களும் உள்ளனர்” வெறும் கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருப்பதைத்) தவிர வேதத்ததை அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:78) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் நம் தமிழகத்தில் இஸ்லாம் அறிமுகப் படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. கடந்த பல நூற்றாண்டுகளில் உண்மையான இஸ்லாம் தமிழக முஸ்லிம்களிடம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த காலங்களில் இஸ்லாம் என்ற பெயரில், மக்கள் முன்னே வைக்கப்பட்ட நூல்களைக் காணும் போது திட்டவட்டமாகவே [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
தொண்டியான் “தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1) அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
Posted by அந்நஜாத் on Oct 30 2007
“எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்ககின்றனர். (அல்குர்ஆன் 26: 221, 222) மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுபற்றி நாம் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளத் தேவையுமில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
பேராசிரியர் K. முஹம்மது இக்பால் மதனி, துபை ஷாஃபான் மாதம் 15 ஆம் இரவு நம்மவாகளால், மிக கோலாகலமாகக் கண்ணியப்படுத்தப்பட்டு, விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரவை விழாவாகக் கொண்டாடுவதில் பாமர மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நூதனமான காரியங்களை பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். “முன்னோர்களில் சிலர் இதனை உருவாக்கினர்” என்பதைத் தவிர திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ, [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி ஷம்ஸுள்ளுஹா கப்ருகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதார பூர்வமான பொன்மொழிகளை தொகுத்து தருகிறோம். முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இந்த அமுத மொழிகளின் படி நடப்பது கடமையாகும். கப்ருகள் மீது கட்டடம் கட்டலாமா? சந்தனம், சுண்ணாம்பு, சிமெண்ட் பூசலாமா? ரசூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின் மீது எதனையும் எழுதப்படுவதையும், அதன்மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாவிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:திர்மிதி [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மர்ஹும் “ஒரு இறைநேசர், தன்னை இறைநேசர் என்று கருதக் கூடாது என்பதற்காக திருடனாகக் காட்டிக் கொண்டார். இறைநேசர்கள் இப்படி எல்லாம் நடப்பார்கள்” என்பதாக ஒரு பெரிய ஹஜ்ரத் பயான் செய்தார். இதற்கு ஆதாரம் ஏதுமுண்டா? என்று நண்பரொருவர் கடிதம் எழுதி இருந்தார். அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவு படுத்திட இதனை எழுதுகிறேன். ஆம்! இப்படிப்பட்ட திருடர்கள் இன்று சமுதாயத்தில் மலிந்துவிட்டனர். கடந்த காலத்திலும் இப்படிப்பட்டோர் இருந்தே வந்துள்ளனர். ஷெய்குகள், பெரியோர்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்போர், [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி பி.ஜே. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும் குருடர்களையும் போல் அவற்றின் மீது விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73) அல்லாஹ்வின் இந்த திருவசனம் சிந்தனையின் மேன்மையை நமக்கு நன்கு தெளிவுப்படுத்துகிறது. திருமறைக் குர்அனையே ஆழ்ந்த கவனத்துடன் கவனிக்க வேண்டும் என்னும் போது, மற்றவர்களின் சிந்தனைகள், அவர்களின் சன்மார்க்கத் தீர்ப்புகள் எந்த அளவு பரிசீலிக்கப்படவேண்டும் என்பதை யாரலும் மறுக்க முடியாது. யார் எதைச் சொன்னாலும், அதனை மார்க்கம் என்று எண்ணிக் கொள்கின்ற மனநிலை [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி எஸ்.கே ஜமால் ரமலான் மாதத்தில் இஸ்லாம் அனுமதிக்காத, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டாத பல வினோதச் செயல்களை தமிழக முஸ்லிம்களிடையே பரவலாக நம்மால் காண முடிகின்றது. ஹனபிகளும், ஷாபிகளும் உள்ள ஊர்களில் இரு சாராரும் ஐங்காலத் தொழுகைகளையும், தராவிஹ் தொழுகைகளையும் ஒரு இமாமின் பின்னே ஒன்றாகத் தொழுகின்றனர். ஆனால் ரமலான் இரவுகளில் தொழப்படும் வித்ருத் தொழுகையில் மட்டும், ஹனபிகள் தனி ஒரு இமாமின் பின்னேயும் ஷாபிகள் இன்னொரு இமாமின் பின்னேயும் தொழுவதைக் காண [...]
Posted by அந்நஜாத் on Oct 30 2007
(மவ்லவி பி.எஸ். அலாவுத்தீன் -தொண்டி) கருணையன்பு பொழிபவனும் காருண்யம் மிக்கவனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் …… மறுமை நாள் விசாரணையின் போது “நாங்கள் உலகில் வாழ்ந்த காலத்திலேயே எங்களை எச்சரிக்கும் திருத்தூதர்களை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? என்று தனக்கு எதிராக மானிடப் படைப்புகள் எதிர்வாதம் புரிந்திடக்கூடும் என்பதற்காகவே தன் திருத்தூதார்களை மனிதகுலம் வாழும் பகுதிகள் எங்கும் அனுப்பியதாக இறைவன் தனது திருமறையின் பல இடஙகளில் குறிப்பிடுகின்றான்்.
Posted by அந்நஜாத் on Oct 30 2007
இப்னு எஹ்யா – சங்கரன் பந்தல் “ஈமான் கொண்டவர்களே! உங்களக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் துாய்மையுடையோகராகலாம்” அல்குர்ஆன் 2:183 மதங்கள் என்றால்,மனிதனைக் காடுகளிலும், வனாந்தரங்களிலும், குகைகளிலும், மடாலயங்களிலும், சர்ச்சுகளிலும் ஒழுக்க உயர்வைப் பெறுவதற்காக, தவ வலிமையை அடைவதற்காக அலைய விடுவதுதான்” என்ற தவறான நம்பிக்கையை முதலும் கடைசியுமாக இஸ்லாம் தான் தகர்த்தெறிந்தது.
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மவ்லவி அலாவுத்தீன், தொண்டி “ஏகத்துவத்தை நம்பியிருப்பவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்க்காக சத்தியத்தை நிலை நிலை நிறுத்துவோராய், நீதிக்கு சான்று சொல்வோராய் ஆகிவிடுங்கள். (மக்களில்) ஒரு சாரார் மீதுள்ள கோபம் (அவர்களுக்கு) வேண்டாம். (யாராயிருந்தாலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் (உங்கள்) இறையச்சத்திற்கு மிக நெருங்கிய ஒன்றாகும். (நீதியைச் சொல்வதில்) அலலாஹ்வுக்கு அஞசுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றறிபவனாயிருக்கிறான்”. (அல்குர்ஆன் 5:8)
Posted by அந்நஜாத் on Oct 30 2007
துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களுக்கு நஜாத்தை (ஈடேற்றத்தை) தரக்கூடிய ஒரு வியாபாரத்தை” நான் அறிவிக்கட்டுமா? (அதாவது) அல்லாவின் மீதும் அவனது தூதரின் மீதும் நீங்கள் முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம்செய்து அல்லாவின் பாதையில் தியாகம் செய்து அல்லாவின் பாதையில் நீங்கள் பாடுபடவேண்டும். (இதுவே அந்த வியாபாரமாகும்) நீங்கள் அறிவுடையோராய் இருப்பின் இதுவே உங்களுக்கு மேலானதாகும்(அல்குர்ஆன்: 61:10:11)
Posted by அந்நஜாத் on Oct 07 2007
மூலம்: ஹாரூன் யஹ்யா. தழிழாக்கம்: H. அப்துஸ்ஸமத் இன்ஜினீயர் படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒரு வன் இருக்கிறான் எனும் உண்மை யை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதி யான சான்று ஆகும். வானவீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், [...]
Posted by அந்நஜாத் on Oct 07 2007
இன்று உலகளாவிய அளவில் எங்கு பார்த்தாலும் தீவிரவாத வன்முறைச் செயல்கள், குண்டு வெடிப்புகள், தற்கொலைப் படை தாக்குதல்கள் என அப்பாவி பொது மக்கள் உயிரிழக்கின்றனர், கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். உலகமெங்கும் மக்கள் நிம்மதி இழந்து அமைதியற்று காணப் படுகின்றனர். புலி, சிங்கம் போன்ற ஐயறிவு மிருகங்கள் கூட தங்கள் நியாய மான உணவுத் தேவைக்காக மட்டுமே மற்ற மிருகங்களை வதைக்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதர் களோ அந்த ஐயறிவு மிருகங்களை விட கேடுகெட்ட நிலையில் நியாயமான [...]
Posted by அந்நஜாத் on Oct 04 2007
விமர்சனங்கள்! விளக்கங்கங்கள்!! விமர்சனம்: அந்நஜாத் ஆகஸ்ட் 2007 இதழின் 27-ம் பக்கம் “குர்ஆனோடு விளையாடும் பீ.ஜே.” என்று கூறி 9:34 வசனத்தில் “எவர்கள் பொன்னை யும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்கிறார்களோ” என்றிருப்பதை “எவர்கள் பொன்னை யும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ” என்று எழுதி தனது ஆதரவாளர்களை ஏமாற்றி இருக்கிறார் என்று எழுதி இருக்கிறீர். அவரது குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது, அதில் தெளிவாக “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் [...]
Posted by அந்நஜாத் on Oct 04 2007
1993-ல் இடம் பெற்ற மும்பை வெடிகுண்டு வழக்கின் தீர்ப்புகள் வெளியாகிவிட்டன. 14 ஆண்டு களுக்குப்பின் 123 நபர்களில் 100 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 12பேருக்கு தூக்கு தண்டனை, 20 பேருக்கு ஆயுள் தண்டனை. 15 பேருக்கு கடுங்காவல் தண்டனை. அடுத்து 1998-ல் இடம்பெற்ற கோவை வெடிகுண்டு வழக்கிலும் 166 நபர்களில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் பாலோர் அவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்தைவிட குறைந்த காலமே தண்டனைக்குரிய சிறுசிறு குற்றங்கள் [...]
Posted by அந்நஜாத் on Oct 04 2007
அபூஃபாத்திமா ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும் ரமழான் மாதம் 12.09.07 புதன் அன்று ஆரம்பமாகிறது. அந்த மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல்படும்போது அதை நபி(ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித் தந்திருக்கவேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்தச் செயலாக இருந்தாலும், அதை சுன்னத் என்று செயல்படுத்த முற்பட்டால் அது “பித்அத்’ என்ற வழிகெட்ட செயலாகவே ஆகும். இதை [...]
Posted by அந்நஜாத் on Oct 04 2007
Islamic Dates by. Astronomical Calculation வானியல் கணக்கீட்டின் (Calculation) அடிப்படையில் இஸ்லாமியத் தேதிகள். **************************************** (இஸ்லாமிய மாதங்கள் பற்றி உலகளாவிய தீர்மானம் பற்றி வட அமெரிக்காவின் சட்டதிட்ட (ஃபிக்ஹ்) குழு எடுத்த முடிவு) வட அமெரிக்காவின் இஸ்லாமிய சட்ட திட்டக்குழு (The Fiqh Councilof North America). வட அமெரிக்கா விலுள்ள தகுதி வாய்ந்த கல்வியாளர் களைக் கொண்டமைந்த ஒரு சுதந்திர மான அமைப்பாகும். வட அமெரிக்கா வில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கு இன்றியமையாத சட்ட [...]
Posted by இப்னு ஹத்தாது on Oct 04 2007
இப்னு ஹத்தாது நன்மைகளை அள்ளித்தரும் ரமழான் மாதத்திற்கு முந்திய மாதமான ஷஃபானில் இருக்கிறோம். ஷஃபான் தலைப்பிறை 13.08.07 திங்கள் அன்று பிறந்து 11.09.07 செவ்வாயுடன் 30 நாட்களை பூர்த்தி செய்கிறது.11.09.07-ல் சூரிய கிரஹணம் ஏற்படுகிறது. எனவே ரமழானின் தலைப்பிறை 12.09.07 புதன் அன்று பிறக்கிறது. சங்கைமிகு ரமழான் 11.10.07 வியாழனுடன் 30 நாட்களை பூர்த்தி செய்கிறது; 12.10.07 வெள்ளிக்கிழமை ஷவ்வால் முதல் நாள் ‘ஈதுல்பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள். அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டது, ஹராமாகும். ஆனால் [...]
Posted by அபூ அப்துல்லாஹ் on Oct 04 2007
அபூ அப்தில்லாஹ், அந்நஜாத், ஆசிரியர். உலகெங்கும் ஒரே நாளில் பெருநாளா? என்ற தலைப்பிட்டு பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா பேரவை ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளது. சென்ற வருடமும் இதே போன்று ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தது. இரண்டு பிரசுரங்களிலும் மனாருல் ஹுதா பிப்ரவரி 2005 -ல் வெளியான கருத்துக்களே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் ஊருக்கு ஊர் தனித்தனி தலைப்பிறை என்ற, இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லாத அபத்தக் கருத்தினால் ஏற்படும் ஐயங்கள் குறித்து அந்நஜாத் ஏப்ரல் 2005 இதழில் கேள்விகள் பல [...]