Archive for December, 2007
Posted by அந்நஜாத் on Dec 26 2007
(காலம் சென்ற மவ்லவி P.S. அலாவதீன் அவர்களால் எழுதப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கரன்பந்தல் நகர ஜமாஅத்துல் உலமாவின் சார்பாக இது பிரசுரம் செய்யப்பட்டது. இந்த மாதத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் இப்போது வெளியிடப்படுகின்றது) உங்களுக்கு வற்றாத செல்வமும் வளமான வாழ்வும் வேண்டுமா? அரைக்கிலோ மைதாவும் அளவான சர்க்கரையும் 50 கிராம் பொட்டுக் கடலையும் முற்றிய தேங்காய்த் துருவலும் கொஞ்சம் கசகசாவும் எள்ளும் தேவை.
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 26 2007
K.M.H. அபூ அப்துல்லாஹ் நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 11/4லட்சம் நபிமார்கள் செய்து வந்த தூய பணியான, அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வவொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளனத. சுமார் 11/4 லட்சம் நபிமார்கள் செய்த பணியினைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
Posted by அந்நஜாத் on Dec 26 2007
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவற்றை நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள் : புகாரி, அஹ்மத் சிறுநீர் கழித்த பின்னர் மலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு தண்ணீரோ, கற்களோ போதுமானது என்பதை முன்பு கண்டோம். தண்ணீரால் சுத்தம் செய்வதே மிகவும் சிறந்தது என்பதையும் பார்த்தோம். மலம் கழித்து சுத்தம் செய்வதற்கே தண்ணீரோ, கற்களோ போதும் என்றால், சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்யத் தண்ணீரோ, கற்களோ, போதுமானது என்று யாரும் உணரலாம். தண்ணீரால் சுத்தம் செய்ய [...]
Posted by அந்நஜாத் on Dec 26 2007
ஐயம் : “நல்லடியார்களான ஆண்களுக்கு மறுமையில் ‘ஹுருல் ஈன்கள்’ கொடுக்கப்படுவார்கள்” என்பது உண்மையா?உண்மையென்றால் நல்லடியார்களான பெண்களுக்கும் ‘ஆண் ஹுருல் ஈன்கள்’ உண்டா? கணவனும், மனைவியும் சுவர்க்க வாசியாக இருக்கும் போது, கணவன் மட்டும் ஹுருல் ஈன்களிடம் உல்லாசமாக இருந்தால் மனைவி என்ன நினைக்க கூடும்? இம்மையில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களை மறுமையிலும் அல்லாஹ் சேர்த்து வைப்பானா?
Posted by அந்நஜாத் on Dec 23 2007
இப்னு மர்யம் “சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.
Posted by அந்நஜாத் on Dec 23 2007
மவ்லவி P.S. அலாவுத்தீன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகை கேள்வி: இணை கற்பிக்கும் பாவத்தில் சிறிய வகை என்பது யாது? பதில்: ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வதையே இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.
Posted by அந்நஜாத் on Dec 23 2007
அபூ முஹம்மத் தொப்பியும் தலைப்பாகையும் ஆண்கள் தங்கள் தலையில் தொப்பி, தலைப்பாகை அணிந்து கொள்வது பற்றி தமிழக முஸ்லிம்களிடம் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. சிலர் “எல்லா நேரங்களிலும் தொப்பியுடன் தான் காட்சி தர வேண்டும்; அது சுன்னத்” என்கிறார்கள்.
Posted by அந்நஜாத் on Dec 23 2007
(தராவீஹ் பற்றி தனி நூல் ஒன்று தயாராகிக் கொண்டுள்ளது. அதற்கிடையில், நாம் ஏற்கனெவே வாக்களித்திருந்தபடி குர்ஆனின் குரலில் வெளிவந்த தராவீஹ் கட்டுரையை இங்கே விமர்சனம் செய்கிறோம்) முதலில், “பித்அத் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையைத் துவக்கினார்கள். தராவீஹ் பற்றிய எல்லா ஐயங்களும் அந்தக் கட்டுரைத் தொடரில் தெளிவு படுத்தப்படும் என்று அவர்களால் சொல்லப்பட்டது. அந்தக் கட்டுரையில் தராவீஹ் பற்றி தெளிவான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஒரு சில குறிப்புகள் தான் தராவீஹ் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் காண்போம்.
Posted by அந்நஜாத் on Dec 22 2007
மவ்லவி அபூ சுமைய்யா மிஸ்பாஹி “அந் நஜாத்” வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த “இஸ்லாமிய மாநாடு” எதிர் பார்த்ததை விட சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்!
Posted by அந்நஜாத் on Dec 22 2007
மார்ச் 1987 – ரஜப் 1407 அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வரும் போதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியனியாகச் சேருவதை நீர் காணும் போதும் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக!
Posted by அந்நஜாத் on Dec 22 2007
ரஹ்மத் ஆசிரியரின் வாதங்கள் இங்கே சில வரிகளில் விமர்சனம் செய்யப்படுகின்றன. முன்பு காதியானிகள் இப்படித்தான் வலை விரித்தார்கள் என்கிறார் ரஹ்மத் ஆசிரியர்.
Posted by அந்நஜாத் on Dec 22 2007
நாம், முகலாய மன்னர்களை திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல்களை மதரஸாக்களில் போதிப்பதாக எழுதியிருந்தோம். இதற்கு பதில் எழுதப் புகுந்த ரஹ்மத் ஆசிரியர் என்ன நெஞ்சழுத்தம்! என்று கேட்கிறார். அப்படியானால் ரஹ்மத் ஆசிரியர், அவர்களின் சட்ட நூல்களில் காணப்படுகன்ற பின்வரும் சட்டங்கள் யாரைத் திருப்திப்படுத்த என்பதை விளக்குவாரா?
Posted by அந்நஜாத் on Dec 22 2007
ரஹ்மத் ஆசிரியர் அவர்கள் அளித்த தெளிவான (?) விளக்கத்தில் நாம் தில்லுமுல்லுகள் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்த மஸ்அலாவில் நாம் தில்லுமுல்லுகள் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாரோ, அதே மஸ்அலாவில் அவர்தான் தில்லுமுல்லு செய்துள்ளார் என்பதை நாம் விரிவாகப் பார்ப்போம்.
Posted by அந்நஜாத் on Dec 22 2007
ரஹ்மத் ஆசிரியர் எடுத்து வைத்த “தெளிவான(?) விளக்கத்திற்கு , இந்த இதழில் பல்வேறு தலைப்புகளில் விரிவான பதில்களைத் தந்துள்ளோம். சுருக்கமாக பதில் தர வேண்டிய சில பிரச்சனைகளை இங்கே காண்போம்.
Posted by அந்நஜாத் on Dec 22 2007
நாம் ரஹ்மத் ஆசிரியருக்கு எழுதிய பகிரங்கமான கடிதத்தில் நான்கு இமாம்களின் கூற்றுக்களை மூலத்துடன் வெளயிட்டிருந்தோம். அதற்கு நேரடியாக என்ன பொருளோ அதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கூற்றுக்களை அந்த இமாம்கள் கூறியதாக ரஹ்மத் ஆசிரியரும் ஒப்பக் கொள்கிறார். ஆனால் அந்த இமாம்களின் கருத்துக்களைப் புரிந்து கொள்ள எங்களுக்கு தவ்பீக்(நல்லருள்) கிடைக்கிவில்லை என்று கூறி இருக்கிறார்.
Posted by அந்நஜாத் on Dec 22 2007
P. ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத் ஆசிரியர் தன்னுடைய கருத்தை நியாயப்படுத்துவதற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தீர்மானத்தை பெரிய ஆதாரமாக வெளியிட்டுள்ளார். அந்தத் தீர்மானத்தில் அமைந்திருக்கின்ற முரண்பாடுகளையும் ரஹ்மத் ஆசிரியரை அந்த தீர்மானமே காலை வாரி விட்டிருப்பதையும் நாம் தெளிவுபடுத்துவதற்கு முன் ஜமாஅத்துல் உலமா சபை பற்றி ஒரு சில குறிப்புக்களை வாசகர்களின் முன்னே வைக்கிறோம்.
Posted by அந்நஜாத் on Dec 21 2007
புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம் உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா! இஸ்லாத்தின் பெயரால் மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாத்திஹாக்களின் வகைகள் இருக்கின்றதே! அப்பப்பா! கொஞ்சமா? மிச்சமா!
Posted by அந்நஜாத் on Dec 21 2007
மர்ஹும் தமிழகத்தில் “இஸ்லாமிய மாத இதழ்கள் ” என்ற பெயரில் எண்ணற்ற இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இணை வைத்தலையும் இறைவணக்கம் என்று பறைசாற்ற கூடியவை. மிகச் சில இதழ்கள், சில தவறான தீாப்புகளைத் தந்தாலும் இணை வைத்தலைத் கண்டிக்கத் தயங்காதவையாக இருந்தன. கடந்த காலங்களில் கடுமையாக இணைவைத்தலைக் கண்டித்து அதனால் பாமர மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டதுண்டு. இந்த நிலையிலும் ஓரிறைக் கொள்கைக்கு ஊறுவிளைவித்ததில்லை. அதற்கு உதாரணமாக ‘ரஹ்மத்’ குர்ஆனின் குரல் ஆகியவற்றை [...]
Posted by அந்நஜாத் on Dec 21 2007
அபூ முஹம்மது பொன்னகைக்காக புண்ணாக்கலாமா? தமிழக முஸ்லிம்களிடம் பெண்களுக்குக் காது, மூக்குக் குத்துகின்ற வழக்கமாக தொன்று தொட்டு நிலவி வருகின்றது. அது விரும்பத்தக்கத் காரியமாகவும் கருதப்படுகிறது. சில பகுதிகளில் காது, மூக்குக் குத்தும் நிகழ்ச்சி விழாவாகவே நடத்தப்படுகின்றது. சில பகுதிகளில் காது, மூக்குக் குத்தும் நிகழ்ச்சி விழாவாகவே நடத்தப்படுகின்றது. இஸ்லாம் இதை அனுமதித்துள்ளதா? என ஆராயும் பொழுது காது, மூக்குக் குத்துதல் சரியானதல்ல என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது.
Posted by அந்நஜாத் on Dec 21 2007
மவ்லவி P.S. அலாவுதீன் கேள்வி: சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன? பதில்: சூனியம் செய்தல் இறை மறுப்பான செயலாகும். ஏனெனில்… “ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்” (அல்குர்ஆன் 2 : 102) என்று “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,
Posted by அந்நஜாத் on Dec 21 2007
இப்னு மர்யம் நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா? நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.
Posted by அந்நஜாத் on Dec 21 2007
மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகள் மலஜலம் கழிப்பதற்காக நுழையும் போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல்குபுஸி, பல்கபாயிஸி” என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
Posted by அந்நஜாத் on Dec 21 2007
S. கமாலுத்தீன் மதனீ நபி வழியைப் பின்பற்றுவதில் நபித்தோழர்கள் நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களை எந்த அளவிற்குப் பின்பற்றினார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவர்களும் அப்படியே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில், இதை ஏன் எதற்காகச் செய்கிறார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புவதே இல்லை.
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 20 2007
K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
Posted by அந்நஜாத் on Dec 20 2007
அபூ முஸ்லிம் குர்ஆனின் குரல் ஜனவரி இதழில் “அபத்தங்கள் – ஓர் அலசல்” என்ற புதிய பகுதியை அந்நஜாத்திற்கு பதில் கூறுவதற்காகவே துவக்கியுள்ளனர். மனிதர்கள் என்ற முறையில் எங்களையுமறியாாமல் எங்களிடம் ஏற்பட்டு விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடியவர்களும் வாழ்கின்ற காலத்தில், எங்களையும் வாழச் செய்த வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களின் தவறுகளைத் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படுமானால், அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு, அதற்காக அவர்களுக்கு எங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம். இது போன்ற விமர்சனங்களை மிக்க [...]
Posted by அந்நஜாத் on Dec 20 2007
நீங்கள் ‘தக்லீத்’ கூடாது என்று சொல்லிக் கொண்டே “ஹதீஸ்கலை” இமாம்களைத் “தக்லீத்” செய்து “லயீப்” ஸஹீஹ்” என்று கூறுகிறீர்களே! இது மட்டும் கூடுமா? S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ், லால் பேட்டை.
Posted by அந்நஜாத் on Dec 20 2007
எழுது கோல் எனும் வலிமை மிக்க ஆயுதம் பொறுப்பற்றவர்களின் கையில் இருந்தால் நிலைமை என்ன ஆகும்? பெங்களூர் ஆகும்! ஆம்! பெங்களூரிலும் மைசூர் மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் ஒரு துயரக்கதை எனில், அதற்குக் காரணமாக இருந்தது ஒரு சிறுகதை என்பது இன்னும் வேதனைக்குரியது!
Posted by அந்நஜாத் on Dec 20 2007
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஜனவரி & பிப்ரவரி 1987 – ஜ.அவ்வல் & ஆகிர் 1407 “வணக்கங்கள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்” அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு “அந் நஜாத்” தன் பயணத்தைத் துவக்கியது. மிகக் குறுகிய காலத்தில் மக்களிடம் மகத்தான மாறுதலையும், விழிப்புணர்ச்சியையம் “அந் நஜாத்” [...]
Posted by அந்நஜாத் on Dec 18 2007
மு. முத்துவாப்பா, நெல்லை ஏர்வாடி. தொடர்: 5 அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! மனிதர்களாகிய நம்மிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிவதற்காகவே இறுதி நெறி நூலான திருகுர்ஆனும், முந்தய நெறி நூல்களும் அல்லாஹு ரப்புல் ஆலமீனால் இறக்கி அருளப்பட்டன. இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? (4:82) என்று சத்திய நேர்வழிகாட்டல் நூலில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் கேட்கும் கேள்விக்கு நம்முடைய பதில்தான் என்ன? அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! சிந்திக்க வேண்டாமா?
Posted by இப்னு ஹத்தாது on Dec 18 2007
இப்னு ஹத்தாது தொடர்:8 ஜூலை 2007 இதழ் தொடர் ஏழில் அல்லாஹ், எழுதப்படிக்கத் தெரியாத, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை நபிமார்களாக ஏன் தேர்ந்தெடுத்தான், அதன் உண்மை இரசகியம் என்ன என்ற பில்லியன் டாலர் கேள்விக்குரிய பதிலைப் பார்த்தோம். இதிலிருந்து அரபிமொழி கற்ற மவ்லவிகள்தான் மார்க்க அறிஞர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் வழிகாட்டல்களின்படி நடப்பது கண்மூடி(தக்லீது) பகிரங்க வழிகேடு என்பதை தெளிவாக விளங்கினோம்.
Older Entries »