Posted by அந்நஜாத் on Jan 30 2008
அபூஉவைஸ் வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) நடைமுறை, காரியங்களில் கெட்டது பித்அத்துக்களாகும்! பித்அத்துகள் அனைத்தும் வழிகெடுகள்; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத்(ரழி) ஜாபிர்(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ
Posted by அந்நஜாத் on Jan 30 2008
மவ்லவி P.S. அலாவுத்தீன் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும்! அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்! கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட அநாச்சாரங்களில் நல்லவை அழகானவை என்று ஏதேனும் உண்டா?
Posted by அந்நஜாத் on Jan 30 2008
குஸ்வந்த்சிங் நன்றி: இந்துமதி தற்போதுள்ள நமது சரித்திரப் பாடப்புத்தகங்கள் அந்த கால முஸ்லிம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு கருத்தைக் கூறி தற்போதைய தலைமுறையினரிடம் , உண்மைக்கு மாறான ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. அந்தக்கால முஸ்லிம் மன்னர்களில் பலர் இந்துக்களை வெறுத்தவர்கள் போலவும், கோவில் சிலைகளை உடைத்து நொறுக்கியவர்கள் போலவும், இந்துக்களை வாள் முனையில் மிரட்டி முஸ்லிம் மதத்துக்குக் கொண்டு போனவர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றன.
Posted by அந்நஜாத் on Jan 28 2008
புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., சமூகவியல்: பண்பாடு அமையப் பெற்றவனே மனிதனாவான். சமூகம் என்று சொல்லும்போது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதக் கூட்டத்தையே ‘சமூகம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். எந்த சமூகம் ஒழுங்கு நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு சிறப்பாக்கப்படுகின்றதோ அந்த சமூகம் உலகின் உச்சியில் வைத்து மெச்சப்படும் என்பது ஒப்புக்கொள்ளப்படும் உண்மையாகும்.
Posted by அந்நஜாத் on Jan 28 2008
இப்னு மர்யம் “இவ்வுலகமும், மறு உலகமும் நபியே! உங்கள் அருட்கொடைதான்” என்று பூசிரி பாடியிருப்பதை திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்தோம். “இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடைதான்” என்பதைக் கண்டோம். இனி ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதை நாம் ஆராய்வோம்.
Posted by அபூ அப்துல்லாஹ் on Jan 27 2008
K.M.H. அபூஅப்தில்லாஹ் (சென்ற இதழ் தொடர்ச்சி) அவர்கள் “நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள்; அவை அல்லாஹுவின் வேதமும், எனது நடைமுறையுமாகும்” என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.
Posted by அந்நஜாத் on Jan 27 2008
ஜனவரி&பிப்ரவரி இதழில் அடையாளம் காட்டுகிறார்கள். என்ற கட்டுரையில் பல குர்ஆன் வசனங்கள் மூலம் மக்கத்து காபிர்களின் கொள்கைகளைச் சொல்லிவிட்டு, அதை விடவும் கபுர் வணங்கிகளின் கொள்கை கீழ்தரமானது என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் அந்த வசனங்கள் இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்குகளை)ப் பற்றியது, நிராகரிப்பவர்களை (காபிர்களை)ப் பற்றியது அல்ல என்று தெரிகின்றது. இரண்டும் ஒன்றா? அல்லது வேறா? செய்யது முஹ்யீத்தீன் மரைக்காயர், சவூதி அரேபியா.
Posted by அந்நஜாத் on Jan 27 2008
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் துல்கதா -1407 ஜுலை-1987 நபி(ஸல்) கூறினார்கள்: எந்த மனிதனும் தனது மனைவியை விட்டு பிரிந்திருக்கலாகாது. எந்த மங்கையும் துணைக்கு முஹ்ரிம் (அவனை திருமணம் செய்வதை தடுக்கப்பட்ட உறவினர்) இன்றி (ஹஜ்) பிரயாணம் செய்யக் கூடாது. அப்போது ஒரு நபித் தோழர்: ஓ! அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு தியாகப்போருக்கு எனது பெயரைக் கொடுத்திருக்க, எனது மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள் என்றார்கள். இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் நீர் [...]
Posted by அந்நஜாத் on Jan 27 2008
காயல் இப்னுஷேக் தற்காலத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களையும், இறைத்தூதர்களையும் சிறுகதையின் மூலம் சீண்டுவது ஒரு வழக்கமாகி வருகிறது. அண்மையில் நமது நபி(ஸல்) அவர்களை பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் ஹெரால்டு’ எனும் பத்திரிவை இழிவாக எழுதி, பெரும் கலவரமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு, பின்னர் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.
Posted by அந்நஜாத் on Jan 27 2008
மவ்லவி S. கமாலுத்தீன் – மதனீ நபிவழியில் இடைச்செருகல்கள் ஹிஜ்ரி 40-ம் ஆண்டு வரை நபிவழி அறிவிப்புகளில் எந்த இடைச் செருகல்களும் இடம் பெறவில்லை. நபித் தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை நுழைப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40 ம் ஆண்டு வரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபி வழியைப் பயன்படுத்தவில்லை.
Posted by அபூ அப்துல்லாஹ் on Jan 21 2008
K.M.H. அபூ அப்துல்லாஹ் (நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் தன்னை “முஸ்லிம்” என்று சொல்லிக் கொள்ள விரும்புவானேயல்லாமல் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று அழைத்துக் கொள்ள விரும்ப மாட்டான். காரணம் நபி(ஸல்) அவ்வாறுற அழைத்துக் கொள்ளக் கற்றுத்தரவில்லை. ஆயினும் “அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்” என்று முஸ்லிம்களை ஒரு சாரார் குழப்பி வருவதால் அந்த அடிப்படையிலும் அதற்குச் சொந்தக்காரர்கள் குர்ஆன், ஹதீதுபடி நடப்பவர்களே என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்)
Posted by அந்நஜாத் on Jan 21 2008
ஐயம்: நான் 19 வயதிலிருந்து தொழுது வருகின்றேன், எத்தனை வயதிலிருந்து தொழுகை கடமை ஆகின்றது. தொழாமல் விடுபட்ட ‘களா’ தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது?
Posted by அந்நஜாத் on Jan 21 2008
அபூமுஹம்மத் ஆண்களின் ஆடைகள் மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,
Posted by அந்நஜாத் on Jan 21 2008
மவ்லவி P.S. அலாவுத்தீன் திருமறை வழியிலும், நபிமொழி நெறியிலும் வாழுதல் கேள்வி: அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆன் அருளினான்?
Posted by அந்நஜாத் on Jan 19 2008
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல் : புகாரி, அஹ்மது மர்மஸ்தானத்தைத் தொட்டால் ஒளூ நீங்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள விஷயங்களில் மர்மஸ்தானத்தைத் தொடுவதும் ஒன்றாகும். இதுபற்றி முரண்பட்டதாகத் தோன்றுகின்ற இரண்டு ஹதீஸ்கள் அறிவிக்கப்படுவதே கருத்து வேறுபாடு தோன்றக் காரணமாகும்.
Posted by அந்நஜாத் on Jan 19 2008
இப்னு மர்யம் புர்தாவின் தவறுகள் இனி ‘புர்தா’வில் உள்ள தவறுகளைக் காண்போம். ஃப இன்னமின் ஜுதிகத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக இல்முல் லவ்ஹி வல்கலமி இது புர்தாவில் வருகின்ற வரிகள். மூன்று முறை ஓதப்படுகின்ற கவிதைகளில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதையின் கருத்து திரக்குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற நச்சுக் கருத்தாகும். ‘பர்தா’ ஓதக்கூடாது என்று முடிவெடுக்க இந்த இரண்டு வரிகளே போதுமாகும். அவ்வளவு மோசமான கருத்தை இந்த வரிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் [...]
Posted by அந்நஜாத் on Jan 19 2008
மர்ஹும் “நபி(ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தான் தொழுதுள்ளனர்” 20 ரக்அத்கள் தொழுததாகக் கூறுவது ஆதாரமற்றது” என்று கு.குரல் ஒப்புக் கொண்டதை நாம் கூட்டிக்காட்டி இருந்தோம். உமர்(ரழி) அவர்கள் கட்டளையிட்டது 11 ரக்அத்கள் பற்றித்தான். 20 ரக்அத்கள் தொழ வைக்கும்படி அவர்கள் கட்டளையிடவுமில்லை. செய்யவுமில்லை என்பதைச் சென்ற இதழ்களில் நாம் சுட்டிக்காட்டினோம். இனி கு.குரலின் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம். “உமர்(ரழி) அவர்கள் 20 தொழச் சொன்னபோது, மஹர் விஷயமாகத் தட்டிக் கேட்டது போல் ஒருவருமே ஏன் [...]
Posted by அந்நஜாத் on Jan 19 2008
“ஷஹீதாகும் பாக்கியத்தை ஏற்படுத்திக் தர ஜ.உ. சபையினர் முயற்சிக்கிறார்கள்” என்று எழுதி இருந்தீர்கள். முஸ்லிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காரணமாக உயிர் துறப்பதை நீங்கள் வரவேற்கிறீர்களா? இது தற்கொலைக்குச் சமம் அல்லவா? மு.முஹம்மது நஜீர் , P.B. 2672, புருனை.
Posted by அந்நஜாத் on Jan 19 2008
அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ் ஜுன் 1987 – ஷவ்வால் 1407 ************************************ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் எல்லோருமே சேர்ந்து ஒன்றாக வெளியே செல்வது கூடாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும் (வெளியேறி சென்ற அவர்கள்) (பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களைத் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 9 : 122) *********************************** வேஷம் [...]
Posted by அந்நஜாத் on Jan 17 2008
அல்லாஹ்வுக்கும் அவனது ரஸுலுக்கும் தான் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனின் வசனங்கள்.
Posted by அந்நஜாத் on Jan 17 2008
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் பத்திரிகை உண்மையிலேயே தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு (அந்நஜாத்) ஈடேற்றம் தான் என்பதைப் புரிந்து செயல்படும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது உறுதி.
Posted by அந்நஜாத் on Jan 17 2008
ஐயம்: வெளிநாட்டில் உள்ளவர்கள் எத்தனை வருடம் மனைவியைப் பிரிந்து இருக்கலாம். மதுக்கூர் M. ஜகபர் அலி, ராணுவப் பயிற்சி முகாம், ஷார்ஜா.
Posted by அபூ அப்துல்லாஹ் on Jan 17 2008
K.M.H. அபூ அப்தில்லாஹ் தங்களை மார்க்க அறிஞர்கள் வல்லுனர்கள் என்று அகம்பாவத்துடன் மார்தட்டிக் கொள்ளக் கூடியவர்கள், மார்க்க விவகாரங்களில் தங்களாலும் யூகம் செய்து முடிவு செய்ய முடியும், நாங்கள் நம்பிப் பின்பற்றும் முன் சென்ற அறிஞர்கள் இப்படித்தான் யூகம் செய்து, மார்க்க விவகாரங்களை முடிவு செய்தார்கள், என்று கூறி அதற்கு ஆதாரமாக,
Posted by அந்நஜாத் on Jan 16 2008
தருபவர் : மவ்லவி முஹம்மது அலீ ரஹ்மானீ (திருச்சி ‘ரசூல்’ அவர்களால் நடத்தப்பட்ட ‘ஷாஜஹான்’ இதழில் 15-3-54 அன்று வெளியான ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம். 33 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை என்றாலும், இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது) சமூகத்தில் படர்ந்துள்ள அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது . இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம்.
Posted by அந்நஜாத் on Jan 16 2008
P. ஜைனுல் ஆபிதீன் இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
Posted by அந்நஜாத் on Jan 16 2008
மவ்லவி S. கமாலுத்தீன் – மதனீ ஹதீஸைத் தேடி நபித் தோழர்கள் இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்கள் அபூபக்ரு (ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்களிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக முக்கியமான சில நபித் தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.
Posted by அந்நஜாத் on Jan 16 2008
சங்கை சிராஜுத்தீன் ‘அர்த்தமற்ற இந்து மதம்’ என்ற நூலின் இறுதிப் பகுதியில் மஞ்சை வசந்தன் என்பவர் இஸ்லாத்தையும் தனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டு ஒரு மாதம் பட்டினி கிடப்பது காட்டுமிராண்டித்தனமானது’ என்று எழுதியுள்ளார்.
Posted by அந்நஜாத் on Jan 16 2008
“நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தலையை மறைத்த நிலையிலே இருந்திருக்கின்றனர்” என்ற ஹதீஸ் பலவீனமானதா? தொப்பி தலைப்பாகை கட்டுரையில் நபிகள் முன்மாதிரியை விட நபித்தோழுர்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அமைந்துள்ளன. ஏன்? நஜாத்தீ. ரியாத், சவூதி அரேபியா.
Posted by அந்நஜாத் on Jan 15 2008
புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம். இறைவனின் மாபெரும் அருட்கொடையான அறிவுச் செல்வம், மனித சமுதாயத்துக்கு வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் யாதெனில், சிந்தித்துச் செயல்படுவதற்கே! ஆம்! மனிதன் தன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சிந்தித்துச் செயல்படுவதற்கே!
Posted by அந்நஜாத் on Jan 15 2008
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள்: புகாரி, அஹ்மத் தூக்கம் ஒளூவை நீக்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்று கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தூக்கமும் ஒன்றாகும். இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூாவமான ஹதீஸ்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.