பிறைபற்றி
Posted by அந்நஜாத் on Nov 21 2008
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 15 2008
அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் முஸ்லிம்களே புரோகிதர்களைப் புறக்கணித்து சுயமாக சிந்திப்பீர்! புரோகித மவ்லவிகளிடமும், அவர்களின் மூடக் கொள்கைகளை இறைவாக்காக ஏற்றிருக்கும் உலகியல் அறிஞர்களிடமும், சந்திர மாதத்தின் முதல் நாள் – தலைப்பிறை இரு நாள் – 48 மணி நேரம், மூன்று நாள் – 72 மணி நேரம் வர முடியும் என்ற அறிவீனமாக கூற்றினால் ஏற்படும் ஒன்பது ஐயங்களுக்கு சரியான விடையளிக்கும்படி கேட்டிருந்தோம். இதுவரை பதில் இல்லை; இதன் பின்னரும் [...]
Posted by அந்நஜாத் on Nov 13 2008
அன்பாளன், அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் மவ்லவிகளே, அறிஞர்களே பதில் தாருங்கள்! சந்திர மாதம் பிறந்துவிட்டது, நேர்கோட்டைத் (CONJUNCTION) தாண்டுவதன் மூலம் பழைய மாதம் முடிந்து புதிய மாதம் பிறந்துவிட்டது. ஆயினும் மறுநாள் புதிய மாதத்தின் தலைப்பிறை புறக்கண்ணுக்குத் தெரியாமலிருப்பதால் (NONVISIBLE MOON) அதை மாதத்தின் முதல் நாளாக ஏற்கமுடியாது. புறக்கண்ணுக்குத் தெரியும் 2-ம் பிறையையோ, மூன்றாம் பிறையையோ மட்டும் முதல் நாளாகக் கணக்கிட வேண்டும் என்று கூறும் மவ்லவிகளே, அறிஞர்களே தயவு செய்து எமது கீழ்க்காணும் [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 13 2008
அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க “இத்தா” ஆதாரமா? 14.07.2008 அன்று கோலையில் ஜாக்கினருக்கும், முஜாஹித்களுக்குமிடையில் பிறை பற்றிய ஒரு விவாதம் நடந்ததாகவும், அதில் ஒரு முஜாஹித் மவ்லவி பிறை கணிப்பிற்கு அறிவியலைப் பயன்படுத்துகின்ற நீங்கள் ஏன் இத்தாவுக்கு இதே அறிவியல் அளவுகோலைப் பயன்படுத்த மறுக்கிறீர்கள்? அறிவியல் வளர்ந்துவிட்டது என்று கூறி அங்கும் அதைப் பயன்படுத்தி மூன்று மாத கால இத்தாவை மிச்சம் பிடிக்கலாம் அல்லவா? என்ற கேள்வியை முன் [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 12 2008
துல்கஃதா – துல்ஹஜ் 1429 நவம்பர் 2008 ஜமாஅதி அல்முஸ்லிமீன் – ஏன்? அவசியம் என்ன? அன்புள்ள சகோதர சகோதரிகளே! உண்மையை யார் கூறினாலும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருக்காதவரை உண்மை மார்க்கத்தை விளங்கியவர்களாக மாட்டோம். நம்மில் பலரின் அளவீடுகள் நாம் பின்பற்றும் நபர் அரபி ஞானம் பெற்றவரா? என்றும் பெரும் கூட்டம் அவர்களுக்கு பின்னால் செல்கின்றதா? என்றும் அரசியல் பின்னணி உடையவர்களா? என்றும் உலக ஆதாயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வழிகெட்டுச் செல்கிறார்கள்.
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 08 2008
ஷவ்வல் 1429 அக்டோபர் 2008 ஈத் சிந்தனை! முஸ்லிம்களின் எதிர்காலம்? உலகளாவிய அளவில் குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்களை, ஸ்பெயினில் ஒழித்துக் கட்டியதுபோல் ஒழித்துக் கட்டும் முயற்சியில் முஸ்லிம் அல்லாத அனைத்துக் கொள்கையினரும் ஒற்றுமையாக தீவிர முயற்சியில் முஸ்லிம் அல்லாத அனைத்துக் கொள்கையினரும் ஒற்றுமையாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் தங்களின் உளவுத்துறைகள் மூலம் பெரும் சதிகள் செய்து வருகின்றனர். யூதர்கள், கிறிஸ்தவர்கள், பாஸிஸ காவி மனம் படைத்த [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 04 2008
ரமழான் 1429 செப்டம்பர் 2008 அதீத நன்மைகளைக் கொள்ளை கொள்ளுங்கள்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை கொண்டு, ஹிஜ்ரி 1429ம் ஆண்டின் ரமழான் மாதத்தில் நுழைய இருக்கிறோம். சரியான, துல்லியமான கணக்கீட்டின்படி ரமழான் முதல்நாள் 2008 ஆகஸ்ட் 31, ஞாயிறன்று துவங்குகின்றது. 2008 செப்டம்பர் 29 திங்களன்று 30 நாட்களுடன் ரமழான் நிறைவடைகிறது. 2008 செப்டம்பர் 30 செவ்வாயன்று ஈதுல் பித்ர் என்ற நோன்புப் பெருநாள், எல்லாம் வல்ல அல்லாஹ் உரிய நாளில் [...]
Posted by அந்நஜாத் on Nov 03 2008
ரஜபு – ஷஃபான் 1429 ஆகஸ்ட் 2008 காலத்தின் கட்டாயம்! இன்று உலகளாவிய அளவில் அநியாயங்கள், அக்கிரமங்கள், பண்பாட்டுச் சிதைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகளான புகை, குடி, விபச்சாரம்.
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 03 2008
ஜ.ஆகிர் – ரஜபு 1429 ஜூலை 2008 பேராபத்தில் இந்திய முஸ்லிம்கள் ! 1947-க்கு முன்னர் இந்தியா அகன்று விரிந்த ஒரே நாடாக இருந்தது. முஸ்லிம்களும் கணிசமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனிநாடு கொடுத்து அவர்களை இந்தியாவிலிருந்து அகற்றிவிட்டால், தங்களின் ஆரிய பாஸிச ஆதிக்கத்தை எளிதாக நிலை நாட்டி விடலாம். அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது முஸ்லிம்களே என்ற எண்ணத்தில் ஆரியர்கள் சதித்திட்டம் தீட்டினர். முஸ்லிம்களை அந்த நோக்கத்தோடு வம்புக்கு இழுத்தனர். முஸ்லிம்களும் இறையுணர்வு(தக்வா) இழந்து இன உணர்வுக்கு [...]
Comments Off
Posted by அந்நஜாத் on Nov 03 2008
ஜ.அவ்வல் – ஜ.ஆகிர் 1429 ஜூன் 2008 அந்நஜாத்தின் இலட்சியம்! 1986-ல் அந்நஜாத் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதன் ஆரம்ப கால வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்த இலட்சியம் என்ன? அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, சுயநலத்துடன் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு, மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் புரோகித மவ்லவிகளை அடையாளம் காட்டுவது; அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிவது; மக்களை அப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதே அந்த [...]
Comments Off