தலையங்கம் : நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்! “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசி களுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனிதன் இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக்  கொண்டிருக்கிறான். நபி ஆதம்(அலை) […]

{ 0 comments }

தூக்குத் தண்டனை! மனித நேயமற்ற செயலா? மறுபதிப்பு : பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டன. பெரும்பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அதனால் இந்தியாவிலும் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. முதலில் மனிதன் எப்படிப்பட்டக் குணமுடையவன் என்பதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அற்பப் பொருளிலிருந்து படைக் கப்பட்டவனே மனிதன். பிறந்த மனிதன் மரிப்பது உறுதி. கர்வம் கொண்டவன் மனிதன், உலக இன்பங்களில் மூழ்க விரும்புகிறவனே மனிதன். அவன் துணிச்சல் மிக்கவன் […]

{ 0 comments }

வாழ்க்கைப் பரீட்சையில்…. தேறுபவர்கள் யார்? – அபூ அப்தில்லாஹ் உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும் வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி : 67:2) (மேலும் பார்க்க 5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57) இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக  அறிந்து கொள்ள  முடியும். பரீட்சை […]

{ 0 comments }

மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு… S.H. அப்துர் ரஹ்மான் மார்ச்  மாத  தொடர்ச்சி…… “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த (ஒரே) இறைவன் பெயரால்…. இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறை நூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது. மூஸா(அலை) அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்றபோது, “என் […]

{ 0 comments }

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை ஏப்ரல்  2026  தொடர்ச்சி… இறை நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவி யையும் அல்லாஹ் கெட்ட உதாரணமாகக் கூறுகிறான்: நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்கு (மனைவியராக) இருந்தனர். பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து […]

{ 0 comments }

ஒலியின் விசித்திரம்… கழுதையின் கத்தலும் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மையும்! எஸ். ஹலரத் அலி முன்னுரை  :  புனித அல்குர்ஆனில் லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறும் போது, “உன் குரலைத் தாழ்த்திக்கொள்; சத்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தமாகும்” (31:19) என்று குறிப்பிடுகிறார்கள். 1450 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட இந்த உவமை, வெறும் தார்மீக அறி வுரை மட்டுமல்ல; அதன் பின்னால் பொதிந்துள்ள ஆழமான அறிவியல் உண்மைகளை நவீன ஒலியியல் (புஉலிற்விமிஷ்உவி) மற்றும் விலங்கியல் […]

{ 0 comments }

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை ஏப்ரல்  2026  தொடர்ச்சி… ஒருமுறைநீதிபதிஷிரைஹ்பின்அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் அந்த வெட்டுக் கிளியை இழிவாக்குவானாக; அதில் வலிமை மிக்க ஏழு வகைப் பிராணிகளின் உருவ அமைப்பு உள்ளது. அதன் தலை குதிரையின் தலையாகும். அதன் கழுத்து காளையின் கழுத் தாகும். அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும். அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும். அதன் கால்கள் […]

{ 0 comments }

அமெரிக்கா + இஸ்ரேல் VS ஈரான் “போர்‘ முடிவு அடையுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக “போர்‘ (நிபுயூ) என்றால் அது வெறும் சண்டை அல்ல. அது ஒரு அரசியல், பொருளாதாரம், அதிகார நோக்கத்திற்காக செய்யப்படும் திட்டமிட்ட மோதல். இப்போது கச்சா எண்ணெய் வளங்க ளுக்காக போர் நடக்கிறது. குறிப்பாக ஈரானி டமுள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்காவும்–இஸ்ரேலும் கூட்டாக ஈரான்  மீது  போர்  தொடுத்துள்ளது. அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் போரின் நோக்கம் தவறானதாக இருந்தா லும் ஈரானின் […]

{ 0 comments }

சையத் முபாரக், நாகை சிலந்தி வீடு என்பது சிலந்தி கட்டுகின்ற வலை என்பது அனைவருக்கும் தெரியும். சிலந்தி தன் வீட்டை எப்படிக் கட்டுகிறது? பெண் சிலந்தி தன் உடலில் இருந்து சுரக்கும் திரவத்தைக் கொண்டு வலையைப் பின்னு கிறது. இத்திரவம் காற்றுடன் வேதிவினை புரிந்து இழையாக (நூலாக) மாறுகிறது. அந்த நூலை வட்ட வடிவில் தேவையான அளவில் சிலந்தி வலையாகப் பின்னுகிறது. சிலந்திக்கு இது வீடாகவும், இரையைப் பிடிக்கும் கருவி யாகவும் பயன்படுகிறது. சிலந்தி தன் உடலில் […]

{ 0 comments }

வானில் மிதக்கும் கனமான மேகங்கள்…  அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை! எஸ். ஹலரத் அலி அவன் தான், தன்னுடைய அருள்(மழைக்)கு   முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங் களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும். (வறண்ட) பூமிக்கு பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்…       (அல்குர்ஆன் 7:57) வானில் பஞ்சுப் பொதிகள் போல மென் மையாக மிதந்து செல்லும் மேகங்களைக் காணும்போது, அவை […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன்,  குண்டூர் 1. வேதம் அருளப்பெற்று அதன் வழி நிற்காத வர்களை எதற்கு உதாரணம் என அல்லாஹ்  கூறுகிறான்? கழுதையைப் போன்றவர்கள்.    அ.கு. 62:5 2. உயிரினங்களில் அல்லாஹ்விடம் கீழ்த்தர மானவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்? மார்க்கத்தை விளங்கிக் கொள்ளதவர்கள்.  அல்குர்ஆன் 8:22 3. விருந்தில் கலந்து கொள்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள அல்லாஹ் கூறுகிறான்? உணவு உண்டபின் பேசிக் கொண் டிருக்க வேண்டாம். அல்குர்ஆன் 33:53 4. இரு கடல்களின் தரம் […]

{ 0 comments }

“யார் பிற மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே” என்ற ஹதீதின் சட்டவிளக்கம்! எஸ். ஹலரத் அலி முன்னுரை : “செயல்கள் எல்லாம் எண்ணங் களைக் கொண்டே” (புகாரி 1) என்பது இஸ்லாத்தின் தங்க விதி. (றூலியிdeஐ யூற்யிe). அதே நேரம், “”யார் ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்த வரே!”!(அபூதாவூத் 4031) என்றும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள். ஒரு இந்து சகோதரன் மரியாதை நிமித்தம் கைகூப்பி வணக்கம் சொல்லும்போது, பதிலுக்கு ஒரு […]

{ 0 comments }

கண்ணைக் கொடுத்து பெண்ணைப் படைத்தவன் கொடியவனா? A. நஜ்முதீன் வரலாற்று மூலம் ஆட்சியாளர்களில் யார் யாரெல்லாம் கொடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்துள்ளோம். உதாரணம் :  ஃபிர்அவ்ன் மேலும் மனிதர்களிலும் சிலர் கொடியவர்களாக இருந்தார்கள், இருக்கின்றார்கள் என்பதையும்  அறிவோம். அதுபோல் இறைவனையும் கொடியவன் என  கவிஞர்களில்  சிலர்  கூறினார்கள். அதாவது : “கண்ணைக் கொடுத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவன்” என்பதாக, மனிதர்களை படைத்து உடலில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்புக்களை கொடுத்து படைத்திருக் கும்போது இந்த கவிஞர்கள் கண்ணைக் […]

{ 0 comments }

தியாகத் திருநாள் சிந்தனை! – K.M.H. மறு பதிப்பு : இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வருடத்தில் இரண்டு நாட்களைப் பெருநாளாகக் கொண்டாட அனுமதி அளித்துள்ளது. ஒன்று ஈகைத் திருநாள்; மற் றொன்று தியாகத்திருநாள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று பெருங்கொண்ட சமுதாயங்களும் ஏகோபித்து போற்றிப் புகழும், இறைவனின் நெருங்கிய நேசரும், தூதருமான நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாக உள்ளத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவதே தியாகத் திருநாளாகும். நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது விருந்தாப்பிய வயதில் இறைவனிடம் அழுது, […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஒரு குடும்பத்திற்கு எத்தனை குர்பானி ஆடுகள் கொடுக்கலாம்? ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்காகவும் தனித்தனியாக ஒவ்வொரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டுமா? அல்லது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்காக வும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்தால்  போதுமானதா? ஆடுகளைக்  குர்பானி  கொடுப்பது : தெளிவு : “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது? என்று அபூ அய்யூப் (ரழி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் “ஒருவர் தமக்காகவும், தம் […]

{ 0 comments }

தலையங்கம் : அந்நஜாத்தும்… – 41 ஆம் ஆண்டும்… “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம்  செய்கிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் “அந்நஜாத்” தனது 40 ஆண்டுகள் பணியை தொய்வின்றி முடித்துக்கொண்டு 41ஆம் ஆண்டில் பணியை துவங்குகிறது. எல்லாப்  புகழும்  இறைவனுக்கே! 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “அந்நஜாத்” என்ற இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்  தொடங்கப்பட்டது. “அந்நஜாத்” தொடங்கிய […]

அல்ஹம்துலில்லாஹ்!   K.M.H. மறு பதிப்பு : அந்நஜாத் எதிர்மறை அணுகுமுறையை விட்டு நேர்மறை அணுகுமுறையை கடைபிடித்தால் இன்னும் அதிக பலன்கள் ஏற்படுமே என்று சிலர் எழுதுகிறார்கள். அனாவசியமான அக்கப் போர்களையும், அடுத்தவர்களை சாடுவதையும் விட்டு ஆக்கப்பூர்வமாக குர்ஆனையும், ஹதீதையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே போகலாமே என சிலர் ஆதங்கப்படுகிறார்கள். மேல் எழுந்த நிலையில் பார்க்கும்போது இக்கருத்துக்கள் இனிக்கத்தான் செய்கின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றிலுள்ள இடர்பாடுகளை விளக்கிக் கொள்ள முடியும். கடந்த 1447 ஆண்டுகளாக குர்ஆன், ஹதீத் இருந்து […]

இறைவன் சொன்ன இறையாட்சியும்! மனிதர்கள் செய்யும் மக்கள் ஆட்சியும்!! S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இறைவனின் ஆட்சியைக் குறித்த நம் பிக்கைகள் முன்பு அனுப்பிய இறை தூதர்களால் யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் இறை நூல்களில் காணப்படுகின்றன. யூதர்களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர் ஆவார். அவன் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் […]

உலகில் ஒரே வல்லரசா? பல வல்லரசுகளா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் எந்தவொரு நாடு உலக அரசியலில், பொருளாதாரத்தில், இராணுவ வலிமையில், பெரிய தாக்கம் செலுத்தும் திறன் கொண்டவையாக இருக்கிறதோ அதையே வல்லரசான நாடு எனச் சொல்லுவார்கள். மிக நீண்ட காலமாக அமெரிக்காவை வல்லரசு நாடு என சொல்லுகிறார்கள். அமெரிக்கா  வல்லரசு  நாடா? ஆம்! இருந்தது. எவ்வாறு என்றால்,  முதற் காரணம் : இரண்டாம் உலகப் போருக்கு பின் (Second World War) பொருளாதார ரீதியாக ஐரோப்பா மிகவும் […]

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை மார்ச்  2026  தொடர்ச்சி… தலைகீழாகக் கவிழ்த்துப் புரட்டப்பட்ட “”லூத்”(அலை) அவர்களின் சதூம் சமூகத் தவர்கள்: பின்னர் நமது ஆணை பிறந்ததும் அந்த ஊரைத் தலைகீழா(கக் கவிழ்த்திப் புரட்டப்பட்டதா)க ஆக்கினோம். அதன் மீது சுட்ட செங்கற்களைத் தொடர்ச்சியாகப் பொழிந்தோம். (அவை) உம்முடைய இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தன. (இவர்க ளைப் போன்ற) அநீதியாளர் களுக்கு இ(ந்தச் சோதனையான)து  தொலைவில்  இல்லை. (11:82,83) இறைத்தூதர் லூத்(அலை) அவர்க ளும் அவர்களுடைய மனைவி மட்டும் […]