தலையங்கம் : தேர்தல் முடிவுகளும்…கூட்டணி அரசின் சவால்களும்…. “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. சமீபத்தில் (மே மாதம் 2026ல்) நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய திருப்பமாக பார்க்கப்படுவது தமிழக  தேர்தல்  முடிவுகள். கருத்து கணிப்புகள் அனைத்தும் தி.மு.க.வே அதிக பெரும்பான்மைப்  பெற்று ஆட்சி அமைக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் முற்றிலும் மாறிவிட்டது. (இனி கருத்துக் கணிப்புகளை […]

{ 0 comments }

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?  – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங்களுக்கென்று பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டு ஒரு சிலராவது ஐங்கால தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள். அப்பள்ளிகளில் தொழ வைப்பதற்காக இமாம்கள் அமர்த்தப்பட்டு தொழ வைக்கிறார்கள். அப்படிப்பட்ட இமாம்களில் பெரும்பாலோர் தர்ஹா சடங்கு சம்பிரதாயங்களையும், கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது போன்ற அனாச்சார சடங்குகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவுலியாக்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ள […]

{ 0 comments }

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை மே 2026  தொடர்ச்சி… நிச்சயமாக நாம் தோட்டத்தையுடைய வர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்கு டைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதி காலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள். “அல்லாஹ் நாடினால்” என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது உம்முடைய இறைவனிடமிருந்து சுற்றக்கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது (நெருப்புக் கரித்து விட்டபடியால் அத்தோட்டம்) காலையில் கறுத்த […]

{ 0 comments }

முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்! எஸ். அப்துல் நாஸர் மறு பதிப்பு : அல்லாஹ்வின் ஏவல், விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன். முஸ்லிம்களாகவே மரணமடைய நம்முடைய முயற்சி இருக்கிறது. அல்லாஹ் முஸ்லிம் களாகவே நம்மை மரணம் அடையச் செய்வானாக. ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு மணித்துளிகளும் செல்லச் செல்ல காலங்களும் நாட்களும் மட்டுமல்ல நம்முடைய ஆயுள் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாட்கள் தான் எத்தனை […]

{ 0 comments }

உபதேசம் பலனளிக்குமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “நபியே! இவற்றைக் (இறைநூலைக்) கொண்டு உபதேசம் செய்வீராக. நிச்சயமாக நீர் உபதேசம் செய்பவர்தாம்”.  (88:21) பொதுவாக உபதேசம் தான் மனித சமூகத்தை சீர் செய்கிறது. மற்றும் உபதேசத்தை கவனமுடன் கவனிக்கும்போது மனித மனம் தவறிலிருந்து திருந்துகிறது. மேலும்  மனித  மனம்  பக்குவப்படுகிறது. எனவேதான் இறைவன் இறைத்தூதர்கள் அனைவரையும் “உபதேசம்‘ செய்யுங்கள் என  அறிவுறித்துள்ளான். இது ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி தூதராக வந்த நபி(ஸல்) அவர்கள் வரை அனைவருக்கும் அவரவர்களுக்கு […]

{ 0 comments }

பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோர் பங்கு…! M. சையத் முபாரக், நாகை நமது வெற்றியின் இலக்கு என்பது சொர்க் கம்தான். அதற்கான வழியைக் காட்டும் நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பர். பெரும்பாலான நண்பர்கள் ஆடம்பரத்திற்கும், வீணானச் செயலுக்கும்தான் வழிகாட்டுவர். பெண் தோழிகளை எடுத்துக்கொண்டால் புடவைகளைப் பற்றி, நகைகளைப் பற்றி, மெகா சீரியலில் அவள் இப்படி இருக்கிறாள், இவள் இப்படி இருக்கிறாள் என்பது பற்றி; மற்றவர்களை புறம், அவதூறு சொல்வது பற்றி இப்படி பலவற்றை பேசி, தீய குணங்களை நம்மிடம் […]

{ 0 comments }

கலிஃபா உமர்(ரழி) செய்தது மக்களாட்சியா? இறையாட்சியா? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த  ஒரே  இறைவன்  பெயரால்…. உமர்(ரழி) அவர்கள் உலக வரலாற்றில் மிகச் சிறந்த கலீபாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர்களின் ஆட்சியின் முக்கிய  சிறப்புகள்  பின்வருமாறு:  நீதியான ஆட்சி : உமர்(ரழி) அவர்கள் மிக வும் நீதியுடன் ஆட்சி செய்தார். ஏழை, பணக்காரர், முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வர் என்ற […]

{ 0 comments }

பிரபஞ்ச இயக்கவியலும்! வாழ்வியலின் புதிய செயல் இலக்கணமும்!! S.M. அப்துல் ஹமீது 1. இறைவனின் நற்செய்தியும் விவசாயத் தொடர்புடை சொல்லாடலும்: “உர்ஹூனில் கதீம்” (காய்ந்த பேரீத்தம் மட்டையின் வளைந்த பாலை, காம்பு) என்பது அரேபியர்களின் விவசாயப் பழக்க வழக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான சொல். இதன் வழியாக, ஏக இறைவனான அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் காலத்தின் கணக்கீட்டைப் பற்றிய ஒரு மாபெரும் நற்செய்தியை வழங்குகிறான். 2. சந்திரனின் துவக்கமும் ஹிலால் முதல் பிறையின் தோற்றமும் […]

{ 0 comments }

ஒளி என்னும் ஒருமைக்கும் இருள்கள் என்னும் பன்மைக்கும் பின்னால்  உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகள்! எஸ். ஹலரத் அலி திருக்குர்ஆனில் ஒளி என்பது “நூர்‘ (ஒருமை) என்றும், இருள்கள் என்பது “ளுலுமாத்‘ (பன்மை) என்றும் கையாளப்பட்டுள்ளது. இது ஏதோ தற்சயலான சொல் பயன்பாடு அல்ல; மாறாக இதற்குப் பின்னால் பிரபஞ்சத்தின் ஆழமான அறிவியல் உண்மைகளும், உன்னதமான ஆன்மீகத் தத்துவங்களும் ஒளிந்துள்ளன. நவீன அறிவியலின்அடிப்படையில இதைப் பார்க்கும்போது சில சுவாரசியமான உண்மைகள் புலப்படுகின்றன. அறிவியல் ரீதியாக ஒளி […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன்,  குண்டூர் 1. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உலகை ஆண்ட நல்ல மன்னர்கள் யார்? 1. ஸுலைமான்(அலை) 2:102,  2. துல்கர்னைன். 18:83 2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டு கெட்ட மன்னர்கள் யார்? யார்?  1. ஃபிர்அவ்ன். 7:103,   2. நம்ரூத் 3. நபி(ஸல்) அவர்கள் காலத்தின் ரோமாபுரிச் அரசனின்  பெயர்  என்ன? யஹர்குலிஸ்.  புகாரி 7 4. இறைச்செய்தி எவ்வாறு வருகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மணிஓசைப்போன்று.    புகாரி: 2 […]

{ 0 comments }

ஏணி வைத்து வானம் ஏறு: குர்ஆன் காட்டும்  விண்வெளி விஞ்ஞானமும், மனிதன் எல்லையும்! எஸ். ஹலரத் அலி 1447 ஆண்டுகளுக்கு முன் இறங்கிய இரண்டு இறை வசனங்கள். இன்று மனிதன் ராக்கெட்டில் விண்வெளி ஏறு வதை அச்சு அசலாக படம் பிடிக்கின்றன. அது வெறும் தற்செயலா? அல்லது படைத்தவன் மனித அறிவின்  எல்லையை முன்கூட்டியே அறிந்து வைத்த சவாலா? 1. இரண்டு வசனங்கள், ஒரே சவால்: குர்ஆன் 38:10 : அல்லது வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி […]

{ 0 comments }

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை மே  2026  தொடர்ச்சி… அன்றியும், அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்படவேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 44:24) என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ்; இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கட்டளையிட் டான். அதனால்தான் கடல் பிளவுபட்ட நிலையிலேயே உலர்ந்த பாதையாக இருக்க கடலினை மூஸா(அலை) அவர்கள் விட்டுச் சென்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் […]

{ 0 comments }

பிரார்த்தனை – துஆ!  இப்னு ஹத்தாது மறு பதிப்பு :  பிரார்த்தனை–இறைவனிடம் இறைஞ்சுதல் – துஆ ஒரு முஸ்லிமின் வணக்கங்களின் மூளையாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் “அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம்”  (அல்குர்ஆன் 50:16) என்று அல்குர்ஆனில் அறிவித்துக் கொடுக்கிறான். அடியான் தன்னிடம் நேரடியாகக் கேட்பதை அல்லாஹ் மிகமிக விரும்புகிறான். அதற்கு மாறாக அடியான் தனக்கும் […]

{ 0 comments }

வலது கை வரமா? நவீன ஆய்வு சொல்லும் அறிவியல் உண்மைகள்! எஸ். ஹலரத் அலி முன்னுரை : இஸ்லாம் “வலது‘ என்பதை “யமீன்‘ – வளம், பரக்கத், சத்தியம் என்று குறிப்பிடு கிறது. “இடது‘ – ´மால் – துர்பாக்கியம், பலவீனம் என்று குறிப்பிடுகிறது. இது வெறும் சடங்கு இல்லை. இதற்குப் பின்னால் இறை ஞானமும்,  உடலியல்  அறிவியலும்  உள்ளது. 1. இஸ்லாம் வலது கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் – ஆதாரம் : “மறுமையில் நல்லடியார்களுக்கு பதி […]

{ 0 comments }

தலையங்கம் : நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்! “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசி களுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனிதன் இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக்  கொண்டிருக்கிறான். நபி ஆதம்(அலை) […]

தூக்குத் தண்டனை! மனித நேயமற்ற செயலா? மறுபதிப்பு : பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டன. பெரும்பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அதனால் இந்தியாவிலும் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. முதலில் மனிதன் எப்படிப்பட்டக் குணமுடையவன் என்பதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அற்பப் பொருளிலிருந்து படைக் கப்பட்டவனே மனிதன். பிறந்த மனிதன் மரிப்பது உறுதி. கர்வம் கொண்டவன் மனிதன், உலக இன்பங்களில் மூழ்க விரும்புகிறவனே மனிதன். அவன் துணிச்சல் மிக்கவன் […]

வாழ்க்கைப் பரீட்சையில்…. தேறுபவர்கள் யார்? – அபூ அப்தில்லாஹ் உங்களில் அழகிய செயல்கள் செய்பவர்கள் யார் என்பதை பரீட்சித்து அறிவதற்காக மரணத்தையும் வாழ்வையும் (அல்லாஹ்) படைத்தான் (ஆட்சி : 67:2) (மேலும் பார்க்க 5:48, 6:165, 11:7, 16:92, 5:94, 27:40, 8:57) இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள், மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை அல்லாஹ் கொடுத்துள்ள இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை என்பதைத் திட்டமாக  அறிந்து கொள்ள  முடியும். பரீட்சை […]

மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு… S.H. அப்துர் ரஹ்மான் மார்ச்  மாத  தொடர்ச்சி…… “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த (ஒரே) இறைவன் பெயரால்…. இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறை நூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது. மூஸா(அலை) அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்றபோது, “என் […]

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை ஏப்ரல்  2026  தொடர்ச்சி… இறை நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவி யையும் அல்லாஹ் கெட்ட உதாரணமாகக் கூறுகிறான்: நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்கு (மனைவியராக) இருந்தனர். பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து […]

ஒலியின் விசித்திரம்… கழுதையின் கத்தலும் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மையும்! எஸ். ஹலரத் அலி முன்னுரை  :  புனித அல்குர்ஆனில் லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறும் போது, “உன் குரலைத் தாழ்த்திக்கொள்; சத்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தமாகும்” (31:19) என்று குறிப்பிடுகிறார்கள். 1450 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட இந்த உவமை, வெறும் தார்மீக அறி வுரை மட்டுமல்ல; அதன் பின்னால் பொதிந்துள்ள ஆழமான அறிவியல் உண்மைகளை நவீன ஒலியியல் (புஉலிற்விமிஷ்உவி) மற்றும் விலங்கியல் […]