குர்ஆனின் நற்போதனைகள்

in 1989 டிசம்பர்

       தொடர் : 11   

நபி(ஸல்) அவர்களுக்கு

விரோதிகளின் சொல்லடிகள்

                                                தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.,

*எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)

*(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)

*தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)

*”ஓரு பைத்தியம் பிடித்த புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா? என்றும் கேட்டனர். (37:36)

*அவர்கள் (உம்மை பற்றி, அவர் ஒரு) “கவிஞர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழிப்பார்த்து இருக்கின்றோம்” என்று கூறுகிறார்களா? (52:30)

*அநியாயக்காரர்கள் (மூமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வெறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள். (25:8)

*(நினைவூட்டும்) வேதம் அருளப்பட்ட(தாகக் கூறுப)வரே! “நிச்சயமாக நீர் பைத்தியக்காரர் தாம்” என்று கூறினார்கள். (15:6)

*நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “இவர் (ஒரு சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும் அல் ஹக்கு (சத்தியம்: அல்குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (34:43)

*இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள், கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிப் புரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். (25:4)

*இன்னும் “அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே; அவற்றை இவரே எழுதிக் கொண்டிருக்கிறார்” என்றும் கூறினர். (25:5)

*இதனை (குர்ஆனை) இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா? (11:13)

*(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டப்பட்டவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள். (16:101)

*(அல்குர்ஆன்) “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”, இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பியுள்ளனர்).

*(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் (கூறும்படி) உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மைத் தம்) அவர்கள் உற்ற நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

—————————————————

பர்ளு இல்லாத தொழுகைகளை வீட்டில் தொழுவதால்

வீட்டில் பரகத் ஏற்படும்.

உங்களில் ஒருவர் தமது பள்ளியில் தொழுகையை முடித்து விட்டால், தமது தொழுகையில் ஒரு பகுதியைத் தமது வீட்டி(ல் தொழுவத)ற்காக வைத்துக் கொள்வாராக! ஏனெனில் அவரது தொழுகையின் காரணமாக அவரது வீட்டில் கைர்-பரக்கத்தை உண்டாக்கி விடுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), முஸ்லிம்)

**********************************************************************************************

நண்பர்களில் நல்லவர், தீயவர் நிலை

நல்ல நண்பருக்கும் தீயவருக்கும் உதாரணம்: கஸ்தூரி வைத்திருப்பவர். கொல்லனின் உலையை ஊதிக் கொண்டிருப்பவர் ஆகியவரைப் போன்றதாகும். கஸ்தூரி வைத்திருப்பவர் (அதிலிருந்து கொஞ்சம் ஓசியாக) உமக்குத் தரலாம் இல்லை என்றால் நீரே அவரிடமிருந்து கிரயத்திற்கு வாங்கிக் கொள்ளலாம். அதுவும் இல்லை எனில் அவரிடமிருந்து நறுமனத்தையேனும் நீர் அடைந்து கொள்ள முடியும்.

ஆனால் கொல்லன் உலையை ஊதிக் கொண்டிருப்பவனிடமிருந்து (அவர் அதை ஊதுவதால் நெருப்புப் பொறி) உமது ஆடையில் பட்டு அதைக் கரித்து விடலாம். அது இல்லாவிடினும் அதிலிருந்து வரும் தீயவாடை (புகையையாவது நீர் அனுபவிக்க நேரிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூமுஸா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

Previous post:

Next post: