அல்லாஹ்விடம் அனைத்துமே துல்லியமான கணக்கிலுள்ளன!

in 2014 டிசம்பர்

S.M.அமீர், இலங்கை, +94776096957

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் ஒன்று ஹஸீப் (கணக் கெடுப்பவன்) என்பதாகும். 4:6,86 33:39, 2:202, 284, 5:4, 58:6 ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். 72:28 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாக) கணக்கெடுப்பவனாக இருக்கிறான் 4:86. அல்லாஹ் விரைந்து (அனைத்துப் பொருட்களையும் துல்லிய மாக) கணக்கெடுப்பவன் (ஆவான்) 2:202, 5:04

அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாக) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடைய வன் 2:284, அல்லாஹ் (அனைத்துப் பொருட்களையும் விசயங்களையும் (துல்லியமாக) கணக் கெடுக்கப் போதுமானவன். 33:39 அல்லாஹ் ஒவ்வொருப் பொருளையும். (அதன் எண்ணிக்கையில் துல்லியமாக) அறிந்தவனாக இருக்கிறான். 33:40 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (எண் ணிக்கை அளவில் துல்லியமாக) கண்காணிப்ப வனாக இருக்கிறான். கடலிலும் திடலிலும் உள்ள மரம், செடி, கொடிகளிலிருந்து ஓர் இலை உதிர்வதும் அவனது கணக்கில் உள்ளது.

அவன் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. 6:59 என்ற தொடருக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிலத்திலும் நீரிலும் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மரத்திலிருந்து (உதிர்ந்து) கீழே விழுகின்ற (ஒவ்வொர்) இலைகளை(யும்) அவர் பதிவு செய்கிறார் என்று விளக்கமளித்துள்ளார்கள். தஃப்சீர் இப்னு அபீ ஹாத்தீம், தஃப்சீர் இப்னு கஸீர்-3-460 நிலத்திலும், நீரிலும் உள்ள வற்றையெல்லாம் எண்ணிக்கை அளவில் துல்லிய மாகக் கணக்கிட்டு) அவன் அறிகின்றான். 6:59 அதாவது தரையிலும், கடலிலும் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களையும் உயிரற்ற ஒவ்வொரு பொருட்களையும் முழுமையாக அல்லாஹ் அறிகின்றான். அவற்றில் எதுவும் அவனது அறிவிலிருந்து தப்பிவிடாது.

கடலிலுள்ள, பூமியிலுள்ள, வானத்திலுள்ள, பால்வெளி மண்டலத்திலுள்ள, கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்திலுமுள்ள ஓர் அணு கூட அணுவின் துகள் கூட அவனுடைய அறிவிலி ருந்து மறைந்து விடாது. மண்ணின் எண்ணிக்கையையும் அதன் கணக்கையும் அறிந்தவன். மனிதர்கள் உட்பட ஒவ்வோர் உயிரினங்களின் உரோமங்களின் எண்ணிக்கையையும் அல்லாஹ் அறிந்தவன்.
72:28, 3:05, 41:47, 6:59

பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) காரிருளில் உள்ள எந்த வித்தும் ஈரமான மற்றும் காய்ந்த எந்தப் பொருளும் (கணக்கின் அடிப்படையில்) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. 6:59 பூமியிலுள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஊசி துளையிடும் (ஒவ்வொரு) துவாரத்திற்கும் கூட ஒவ்வொரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். மரம் ஈரப்பதத்துடன் இருக்கும்போதும் காய்ந்த நிலையில் இருக்கும் போதும் அதன் நிலைகளை அந்த வானவர் அல்லாஹ்விடம் சமர்ப்பிப்பார் என்று அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தஃப்சீர் இப்னு அபீ ஹாத்தீம்-தஃப்சீர் இப்னு கஸீர் 3:460.

வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு (எண்ணிக்கை அளவில்) தெரியாமலில்லை. 3:5 அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் கிளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை. எந்தப் பெண்ணும் கர்ப்பமடைவதோ பிரசவிப்பதோ இல்லை. 41:47 வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் உமது இறைவனாகிய அவனை விட்டும் மறைந்து விடுவதில்லை. அதை விடச் சிறியதா(ன அணுவின் துகளா)யினும் அல்லது பெரியதாயினும் விளக்கமாக அவனது (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. 34:3, 10:61, 54:53 வானங்களிலும், பூமியிலும் உள்ள அணு அளவு அல்லது அதைவிட சிறிய அணுவின் துகளளவு அற்பமான பொருளும் கூட அவனது அறிவிலிருந்தும் பார்வையிலிருந்தும் துல் லியமான கணக்கீட்டிலுமிருந்தும் தப்ப முடியாது.

அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப்படி (கணக்கிட்டு) அமைத்தான். (25:2) ஒவ்வொரு பொரு ளையும் (துல்லியமாக) கணக்கிட்டு நாம் படைத் துள்ளோம். 54:49 ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை (கணக்கின் பிரகாரம்) வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கின்றானே அவன்தான் எங்கள் இறைவன் என்று (மூஸா) கூறினார். 20:50

வானங்களையும், பூமியையும் படைத்ததற்கு கணக்குண்டு.
உங்கள் இறைவன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். 7:54, 11:7, 10:3, 25:59, 32:4, 50:38, 57:4, 50:49, 41:9,10,12

இரண்டு நாட்களில் அல்லாஹ் வானங்களை ஏழாக அமைத்தான். 41:12 இரண்டு நாட்களில் அவன் பூமியைப் படைத்தான். 41:9 பூமியில் மலைகளையும் நிறுவி உயிரினங்களுக்குத் தேவை யான வாழ்வாதாரங்களையும் இரண்டு நாட்களில் அவன் படைத்தான். 41:10 ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில், பூமியும், செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில் உயிரினங்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களும், வியாழன் வெள்ளி ஆகிய இரு நாட்களில் ஏழு வானங்களும் படைக்கப்பட்டன. சனிக்கிழமை அன்று படைக்கும் பணி நடைபெறவில்லை. ஏனெனில் அது வாரத்தின் இறுதி நாளாகும். இதை முன்னிட்டே சனிக்கிழமைக்கு அரபி மொழியில் “யவ்முஸ் ஸப்த்” என்று சொல்லப்படுகிறது. “ஸப்த்’ என்றால் (இயக் கத்தை) நிறுத்துதல் என்பது பொருள். தஃப்ஸீர் இப்னு கஸீர் : 3:779, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4:589.

குகைவாசிகள் அங்கு தங்கியதும் அல்லாஹ்விடம் கணக்கு ஆகும் :
அவர்கள் முந்நூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தனர். மேலும் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தனர். (நபியே) அவர்கள் தங்கியிருந்த (இந்தக் காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன். 18:19,25,26

குகைவாசிகளின் சரியான எண்ணிக்கையையும், அல்லாஹ் தான் சரியாக அறிந்தவன் :
(குகைவாசிகள்) மூவர் : நான்காவது அவர்க ளின் நாய் என்று (சிலர்) கூறுகின்றனர் : (வேறு சிலர், அவர்கள்) ஐவர் : ஆறாவது அவர்களின் நாய் என்று கூறி மறைவானதை நோக்கிக் கல் எறிகின்றனர். (அவர்கள்) எழுவர் என்றும் எட்டாவது அவர்களின் நாயாகும் என்றும் (இன்னும் சிலர்) கூறுகின்றனர். (நபியே) அவர்களின் எண்ணிக்கையை என் இறைவனே நன்கறிந்தவன் என்று கூறுவீராக. 18:22

உஸைர்(அலை) அவர்களை இறக்கச் செய்தது நூறு ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் கணக்கு :
அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரை (நீர் அறிவீரா?) அந்தக் கிராமம் எவருமே இல்லாத நிலையில் அடியோடு வீழ்ந்து கிடந்தது (மடிந்து விட்ட இந்த ஊரை) அது மடிந்த பின் எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கப் போகிறான்? என்று அவர் கூறினார். அப்போது அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் வரை இறக்கச் செய்தான். பின்னர் அவரை எழுப்பி எவ்வளவு காலம் (இங்கே) தங்கியிருந்தீர்? என்று கேட்டான்; அதற்கு அவர் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிதளவு நேரம் தங்கியிருப்பேன் என்று கூறினார். இல்லை நூறு ஆண்டுகள் இங்கே நீர் தங்கிவிட்டீர். இதோ உமது உணவும் பானமும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் காண்பீராக (செத்துப்போன) உமது கழுதைதையும் காண்பீராக. மக்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்தோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளை நாம் எவ்வாறு இணைத்து பின்னர் அவற்றில் சதையை அணிவிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக என்று அவன் கூறினான். அவருக்கு இது தெளிவான போது அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன் என்று கூறினார். 2:259, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 18:843-847, தஃப்ஸீர் மாஜித், அல் முன்ஜித்

நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத்தை நாற்பது நாட்களில் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்த கணக்கு ஆகும்.
(ஸினாய் மலைக்கு வந்து “தவ்ராத்தை’ பெற்றுச் செல்வதற்காக) மூஸாவுக்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம். எனவே அவருடைய இறைவன் நிர்ணயித்த கால அளவு மொத்தம் நாற்பது நாட்களானது. 7:142, 2:51

எழுத்து வடிவிலான தவ்ராத்தை, முப்பது நாட்களில் வழங்குவதற்காக, “தூர்’ எனும் ஸினாய் மலைக்கு வருமாறு மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். அந்த முப்பது நாட்களும் மூஸா(அலை) அவர்கள் உண்ணாது நோன்பு இருந்தார்கள். அந்தக் கால அளவு நிறைவடைந்ததும் ஒரு மரத்தின் குச்சியால் பல் துலக்கினார்கள். ஆனால் மேற்கொண்டும் பத்து நாட்கள் நோன்பு நோற்று நாற்பது நாட்களாக நிறைவு செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். அந்த முப்பது நாட்கள் துல்கஅதா மாதம் என்றும் பின்னர் துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் என்றும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளனர். தஃப்ஸீர் தபரீ, தப்ஸீர் இப்னு கஸீர்: 3:884, இவை குறித்து விவிலியம் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு காணப்படுகிறது. அங்கே, அவர் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்தார்.
யாத்திரகாமம் 34:28 தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:206

மூஸா(அலை) அவர்கள் மணமுடிக்க மஹராக எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்தார்கள் என்று அல்லாஹ்வின் கணக்கு :

அதற்கு அவர் (மூஸாவிடம்) நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை நான் உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளாகப் பூர்த்தி செய்தால் அது உமது விருப்பம். நான் உம்மைச் சிர மப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் நீர் என்னை நல்லவர்களில் ஒருவனாகவே காண்பீர் என்று கூறினார். 28:27 புகாரீ : 2684

நபி யூனுஸ்(அலை) ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தூதராக அனுப்பியதாக அல்லாஹ்வின் கணக்கு :
அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு தூதராக அனுப்பினோம்.
37:147

பாகப்பிரிவினை அல்லது சொத்துப் பங்கீடு என்பது குடும்பத்திலும், சமூகத்திலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொரு பிரச்சினை ஆகும். பாகப்பிரிவினை அவரவருக்கு ஏற்ப நீதியோடும், நேர்மையோடும் நடக்காவிட்டால் தலைமுறை தலைமுறைக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த நேர்மையான விரிவான வினோதமான பின்னல் கணக்கீட்டு முறை அல்லாஹ் இறுதியாக அருளிய குர்ஆனில் தவிர வேறு வேதங்களிலோ, மனிதர்கள் இயற்றிய சட்டங்களிலோ முழுமையாகக் கிடையாது, தவிரவும் குர்ஆன் கூறும் இந்த பங்கீட்டு முறை எல்லாம் வல்ல இறைவன் வகுத்த விதியாகும். இதில் அல்லாஹ் அல்லாத வேறு எவரது தலையீடும் இல்லை. இது அவனது அற்புதப் பின்னல் கணக்கு. அல்லாஹ் ஜல்லஜலாலஹு வின் கணக்கீட்டில் எவ்வித குளறுபடிகளும், குழப்பங்களும், சந்தேகங்களும் அறவே வராது. அவன் தீர்க்க ஞானமுடையவன். 1435 ஆண்டுகளாக புத்தி ஜீவிகளுக்கு இது சவாலான துல்லியமான கணக்கு முறையாகும்.

ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமனானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டு பாகங்கள் அவர்களுக்கு கிடைக்கும். ஒரே ஒரு பெண் (பெண் மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குக் கிடைக்கும். (இறந்த) அவருக்கு மக்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்ற (சொத்) திலிருந்து அவருடைய பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும், அவருக்கு மக்களே இல்லாமலிருந்து அவருடைய பெற்றோர் (மட்டுமே) அவருக்கு வாரிசுகளாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் கிடைக்கும். (ஆனால்) அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகமே கிடைக்கும். (இவ்வாறு பங்கீடு செய்வ தெல்லாம்) அவர் தெரிவித்த இறுதி விருப்பத்தையும் (அவரது) கடனையும் நிறைவேற்றிய பிறகு தான், உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்குப் பலன் அளிப்பதில் யார் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இந்தப் பங்கீட்டு முறை) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் ஞானமிக்கவனா கவும் இருக்கின்றான் 4:112.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் பாதி உங்களுக்கு கிடைக்கும். அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் நான்கில் ஒரு பாகமே உங்களுக்குக் கிடைக்கும். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர்கள் தெரிவித்த அறுதி விருப்பம் மற்றும் (அவர்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகு தான். மேலும் உங்களுக்கு குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒரு பாகமே அவர்களுக்கு கிடைக்கும். (இதுவும்) நீங்கள் தெரிவித்த இறுதி விருப்பம் மற்றும் (உங்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இறந்துவிட்ட) ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (தந்தை, பாட்டன் ஆகிய) மூல வாரிசுகளும் (மகன், பேரன் ஆகிய) கிளை வாரிசுகளும் இல்லாதவராக இருந்து இவருக்குச் சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும். அதைவிட அதிகமானவர்களாக அவர்கள் இருந்தால் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் பங்கு தாரர்களாக ஆவர். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இது யாருக்கும்) பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் (அமைய) வேண்டும். இது அல்லாஹ் வின் சாசனமாகும். அல்லாஹ் நன்கறிந்தவனும் சகிப்புத் தன்மை மிகுந்தவனும் ஆவான். 4:12

(வரைபடங்களுடன் கூடிய மேலதிக முழு விபரங்களுக்கு பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர் : 2:403-424, புஹாரி: 4577, 5651, 5676, 6723, 6743, 7309, 2747, 4578, 6739, 2749க்கு முன் குறிப்புரை, (முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அகமத், தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்தீம்)

படைப்பதற்கு முன்னரே அனைத்தும் அவனது கணக்கீட்டில் :
படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்க ளையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு ஆஸ்(ரழி) முஸ்லிம், திர்மதி.

காலங்கள் அனைத்தம் அவனது கணக்கின் அடிப்படையில் :
நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனது பதிவேட்டில் (இவ்வாறே பதியப்பட்டுள்ளது) 9:36.

புனிதமான மாதங்கள் அல்லாஹ்வின் கணக்கில் :
….அவற்றில் (ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) நான்கு (மாதங்கள்) புனித மானவை(களாகும்) 9:36 நபி தோழர்களான அபூபக்ரா(ரழி) இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய தாவது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தாம் செய்த) விடை பெறும் ஹஜ்ஜின் போது அய்யா முத் தஷ்ரீக் நாட்களில் இரண்டாவது நாளில் மினாவில் வைத்து (மக்களிடையே) உரை நிகழ்த்தினார்கள் அப்போது அவர்கள்.
மக்களே காலம் என்பது வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த (ஆதி) நாளில் எந்த நிலையில் இருந்ததோ, அதே (அசல்) நிலைக்கு இன்று (திரும்பி) வந்துவிட்டது. அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. அவற்றில் முந்தியது ஜமாதுல் ஆகிராவுக்கும் ­ஃபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்தாரின் ரஜப் ஆகும். அதையடுத்த துல்கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகியவையாகும் எனக் குறிப்பிட்டார்கள். புஹாரி : 3197, 4406, 4662, 5550, 7447, முஸ்லிம் 3467, தஃப்ஸீர் தபரீ தஃப்ஸீர் இப்னு மத்தவைஹி, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4:261:269

சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் கணக்கின் படியே இயங்குகின்றன.
சூரியனும், சந்திரனும் (அவற்றிற்கு அல்லாஹ் நிர்ணயித்த) கணக்கின்படியே இயங்குகின்றன. 55:5, 16:12, 17:12, 36:39,40, 6:96, 10:5

சூரிய சந்திரனுடைய கணக்கின் படியான துல்லிய மான ஓட்டம் மனித குலத்திற்கான நாள்காட்டியாகும்:
சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டி யாகவும் (அல்லாஹ்) அமைத்தான். 6:96 ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (அதன் காலக்) கணக் கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைந்தான். (அதற்காகவே) சந்திரனுக்குப் பல நிலைகளை(யும்) ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் (தான்) அல்லாஹ் இதைப் படைத் துள்ளான். 10:55, 2:189, 6:96, 7:54, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39,40, 39:5, 55:5, 17:12

அல்லாஹ் கணக்கிட்டு வகித்து வட்ட வரைக்குள் சூரியனும் சந்திரனும் சஞ்சரிக்கின்றன.
தமது வரையறையில் ஒழுங்காகச் செல்லும் சூரியனையும், சந்திரனையும் அவன் தான் உங்க ளுக்கு வசப்படுத்தினான். 14:33 சூரியனையும், சந்திரனையும் அவனே தனது அதிகாரத்தில் வைத்துள்ளான். அவை தமது வட்ட வரையறையில் சுழல்கின்றன. 13:2 சூரியன், சந்திரனை (நெருங் கிப்) பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தமது) வட்ட வரைக் குள் நீந்திச் செல்கின்றன 36:40 சூரியன் சந்திரனை எட்டி பிடிக்க முடியாது. அது தனது வட்ட வரை யறைக்குள் சுழல்கிறது. 39:5 சூரியன் அது தனது வரையறையில் சுற்றிக் கொண்டுள்ளது. 36:38, 31:29 சூரியனும், சந்திரனும் சஞ்சரிக்கும் அதே பாதையில் அடுத்த நாள் சஞ்சரிப்பதில்லை, சிறிது இடம் மாறி அல்லாஹ் வகுத்த கணக்கின் பிரகாரம் அதன் பாதைகளில் சஞ்சரிக்கிறது என்பது திடமான உண்மை.
இந்திய மண்ணில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலுள்ள காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள கலசத்தில் வருடா வருடம் அவரது ஜனன தினமான அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று மட்டும் சூரிய ஒளி அதில் விழுமாறு கணக்கிட்டு துவாரம் ஏற்படுத்தப்பட்ட விஷயம் சாத்தியமானது எவ்வாறெனில் சூரியன் துல்லிய மான கணக்கின்படி சஞ்சரிப்பதனால் தான் என் பதனை எவரும் மறுக்க முடியாது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் அல்லாஹ் வகுத்துக் கொடுத்தக் கணக்கு நூற்றுக்கு நூறு துல்லியமானது.

சூரா அல்-கஹ்பில் அவர்கள் முந்நூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தனர். மேலும் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தனர். 18:25 என்பதானது சூரிய ஆண்டு முன்னூறு ஆண்டுகளும், சந்திர ஆண்டு கணக்குப்படி முன்னூற்றி ஒன்பது ஆண்டுகளுமாகும். சூரிய ஆண்டு 365.25 நாட்களைக் கொண்டது. (நான்கு ஆண்டுகளுக் கொருமுறை வரும் லீப் ஆண்டு 366 நாட்களைக் கொண்ட தாகும் இதன்படி) நூறு ஆண்டுகளுக்கு 36.525 (365.25 மு100=) நாட்களாகின்றன. சந்திர ஆண்டு 254.25 நாட்களைக் கொண்டதாகும். (அதாவது சூரிய ஆண்டை விட 11 நாட்கள் குறைவு இதன்படி) நூறு ஆண்டுகளுக்கு 35.425 (354.25 மு100=) நாட்களாகின்றன. மொத்தம் 1100 (1100@ மு354.25=) 3 ஆண்டுகள் 10 நாட்களாகும். எனவே 100 சூரிய ஆண்டுகள் 103 சந்திர ஆண்டுகளாகின்றன. இதன் படி 300 சூரிய ஆண்டுகள் 309 சந்திர ஆண்டுகளாகும்.
தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5:418.

இச்சம்பவ விதி அடிப்படையில் வேதக்காரர்களின் ஏடுகளில் சூரிய ஆண்டுக் கணக்குப்படி வெறும் முந்நூறு ஆண்டுகள் என்றே காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ வேதக்காரர்கள் தொன்று தொட்டு வெறும் சூரிய ஆண்டு கணக்கை பின்பற்றி வருகிறார்கள். எனினும் அல்லாஹ் இங்கே இரண்டு கணக்குகளையும் தெளிவாக குறிப்பிடுகின்றான். ஆனாலும் நான்கு வருடங்களுக்கு ஒரு நாள் கூடுவதும் 127 வருடங்களுக்கு பின்னர் ஒரு நாள் குறைவதும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை 29 என்பதை மீறி 28 ஆகவும் கூடிய பட்ச எண்ணிக்கை 30 என்பதை மீறி 31 ஆகவும் நபி(ஸல்) அவர்களின் கட்ட ளையை (புஹாரி : 1907-1910, 1913) மீறியதாகவும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்கள் கிரேக்க ரோமானிய கடவுள்களின் பெயரால் இருப்பதனாலும் மேலும் ஏராளமான குறைபாடுகள் சூரிய ஆண்டு கிறிஸ்தவ காலண்டரில் இருப்பதை, அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவாக கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் 73:20 என்று சொல்வதனாலும் இஸ்லாத்திற்கு எதிரான இந்த கிரிகோரியன் கிறிஸ்தவ காலண்டரை நிராகரித்து அல்லாஹ் சொல்லும் இஸ்லாமிய மாதங்களைத் துவங்குவது முதல், குழந்தைக்கு பாலூட்டும் காலம் 2:233, 46:15, 65:6,7, 31:14 இத்தாவின் மாதக் கணக்கு 2:234, 65:4 கொடுக்கல் வாங்கல்களை திகதியிட்டு எழுதுவது 2:282, 2:283 உட்பட ஃபர்ழான நோன்புகள் 2:183-185, சுன்னத்தான நோன்புகள், பெருநாட்கள், ஹஜ் கடமை நிறைவேற்றுதல் 2:200, 2:197, 2:189 புனித மான மாதங்களைப் பேணுதல் 9:36 லைலதுல் கத்ர் 97:1 ஹாஜிகள் குர்பானி கொடுத் தல் 2:203, புஹாரி: 1710-1720, 1725-1730, 22:2 போன்ற வணக்கங்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பிறைகளின் படித்தரங்களை வைத்து மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு முஃமின்க ளுக்கு கட்டளையிட்டுள்ளதுடன் 2:189, 9:36, 10:5, 6:96, 55:5, 7:54, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29. 35:13, 36:39,40, 39:5 அவனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் வலியுறுத்திய அல்லாஹ் நிச்சயமாக பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு திகதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். அவற்றை கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்பட்டால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரழி) இப்னு ஹூசைமா : 1789 முஸன்னஃப் அப்துர் ரஸாக்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நாம் உம்மி சமுதாயமாவோம்; எழுது வதை அறியமாட்டோம் விண்கலையையும் அறியமாட்டோம்; மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.
அறிவிப்பு : இப்னு உமர்(ரழி) புஹாரி :1913

ரமழானுக்காக ஷஃபான் பிறைகளைக் கணக் கிட்டு வாருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரழி) திர்மிதீ, அஹ்மத், நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களை விட ஷஃபான் மாதத்தின் நாட்களை மட்டும் (விஷேஷமாக) கணக்கிடக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆயிஷா(ரழி) அபூதாவூத், அஹ்மத்) போன்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தினமும் பிறைகளின் படித்தரக்களைக் கவனித்து அதனை கணக்கிடுவதே குழப்பமில்லாத சந்தேகமற்ற உறுதியான நிலையாகும். பிறை விஷயத்தில் இதை விடச் சிறந்த வழிமுறை வேறு வருவதற்கு சந்தர்ப்பமே இல்லாதவாறு ஆதாரங்களின் அடிப்படையில் முன் நிற்கிறது.

உண்மையில் நபி(ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்தது நாற்பதாவது வயதில் எனும் பிரபலமான செய்தியானது. தெளிவான சான்றுகளை ஆராயும் போது அது பிறை கணக்கின்படியே, நாற்பது ஆண்டுகள், ஆறு மாதங்கள் பன்னிரண்டு நாட்களாகும். சூரிய கணக்கின்படி 39 ஆண்டுகள் 03 மாதங்கள் 20 நாட்கள் மாத்திரமே என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக! ரஹீக் :90
மேலும் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய விடைபெறும் ஹஜ்ஜின் போது துல்ஹஜ் 10வது நாள் அதாவது ஹிஜ்ரி 10.12.10 வெள்ளிக்கிழமை யன்று ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிகு உரையில் “”அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் இருந்த பழைய அசல் நிலைக்கே காலம் திரும்பி விட்டது” (அறிவிப்பு இப்னு உமர் (ரழி) புஹாரி : 3197, 4662, 5550, 7447, 4406, முஸ் லிம் 3467, 4477 தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு மத்தவைஹி தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:261-269) என அறிவித்து இஸ்லாமிய மாதங்களில் உள்ள நாட்கள் எவ்வித குழப்பங்களுக்கும் அப்பாற் பட்டு துல்லியமாக உள்ளதை உம்மத்திற்கு உணர்த்தினார்கள்.

இதன் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதாவின் துல்ஹஜ் 10வது நாள் 10.12.10 வெள்ளிக்கிழமை என்ற அளவு கோலை வைத்து தற்போதைய சந்திர நாட்காட்டியின் தேதி கள் சரிவர பொருந்திப் போகிறதா என்பதை எவரும் பின்னோக்கிச் சென்று கணக்கிட்டுப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

எனவே குறைபாடுகளற்ற அனைத்து கணக்கீடுகளின் உரிமையாளனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு அருளியுள்ள தனித்தன்மையுள்ள தினமும் துல்லியமான சந்திர நாட்காட்டியை பிறைகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து நாமும் பின்பற்றி இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களுக்கும் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் அன்பை நூறாக பங்கிட்டு அதில் 99தை தன்னிடம் வைத்துக்கொண்டு ஒன்றை மட்டும் பூமியில் இறக்கினான். இந்த ஓர் அன்பின் பங்கினால் தான் உயிரினங்கள் அனைத்தும் பரஸ்பரம் தமக்கிடையே அன்பு காட்டுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அபூ ஹூரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள். புஹாரி : 6000, 6469, முஸ்னத் அஹ்மத். அதுபோன்றே கணக்கிடுவதில் வல்லவனான அல்லாஹ் அவ் அறிவில் சொற்பமானதை இவ் உம்மத்திற்கு அருளியதன் காரணமாக இப்போது பல்லாயிரம் வருடங்களுக்கான சந்திர ஓட்டங்களை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளக்கூடிய நவீன விஞ்ஞான உலகில் நாம் வாழ்கிறோம்.

ஆனாலும் கைசேதம்! நீங்கள் சரியாக கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் 73:20 என்று அல்லாஹ் சொல்லிய சூரிய ஓட்டத்தை ஒரு வருடத்திற்கு முன்பே கணக்கிட்டு காலண்டர் அடித்து வைத்துக் கொண்டு அதன் பிரகாரம் கடிகாரத்தைப் பார்த்து பாங்கு சொல்லி ஏதோ வஹி வந்தது மாதிரி, கடமை மாதிரி, பாங்கு, தொழுகை, இப்தார், ஸஹர் போன்றவற்றை நிறைவேற்றுபவர்கள், சந்திர ஓட்டத்தைத் துல்லியமாகக் கொண்ட ஹிஜ்ரி காலண்டரை மறுப்பதன் மர்மம் என்ன?

குர்ஆன், ஹதீஃத் வலியுறுத் திய துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட காலண்டரை அறிமுகப்படுத்துபவர்கள் வெறும் காலண்டரை மட்டும் பின்பற் றும்படி சொல்லவில்லையே.

தினமும் பிறைகளைப் பார்த்து காலண்டரை ஒப்பீடு செய்து பின்பற்றுங்கள் என்று தானே சொல்கிறார்கள். இதற்கு மார்க்கத்தில் தடையில்லையே! ஹிஜ்ரி காலண்டர் என்ற போர்வையில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு திகதி மூன்று நாள் ஒரு நாள் மூன்று திகதி பிறை 12இல் முழு நிலவு, அல்லாஹ்வுடைய கணக்கில் 29 நாட்க ளைக் கொண்ட மாதத்தை 30 என கொள்வது 30 நாள் கொண்ட மாதத்தை 29 ஆகக் கொள்வது மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றுவது காரணமாக குஃப்ரை மேலும் அதிகப்படுத்துவது 9:37 போன்ற ஏராளமான குறைபாடுகளையுடைய போலியான காலண்டர்களை தூர எறிந்து விட்டு சந்தேகமற்ற துல்லியமானதைப் பின்பற்றி சரியான நாட்களில் நல்லமல்களைச் செய்து எல்லோரும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். சிந்திக்க வேண்டாமா?

Previous post:

Next post: