ஆதாரபூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்!

in 2017 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ்

மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச் செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனி யனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும் (´ர்க்) கொடிய செயலாகும். இப் பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட் டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக் கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், இதர படைப்பினங்களில் யாரையும், எதையும் இணை, துணை தெய்வங்களாகக் கொள்வது மட் டுமே என்றே பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 2:186, 7:3, 9:31, 18:102-106 இறைவாக்குகள் அல்லாஹ்வுக்கும் தங்க ளுக்கும் இடையில் ஸலஃபிகள், இமாம்கள், அவுலி யாக்கள், சாதாத்துகள், அகாபிரீன்கள் என இடைத் தரகர்களை, அதாவது இப்படிப்பட்டவர்கள் விளக் கியதையே எடுத்து நடக்க வேண்டும் என்று நம்பிச் செயல்படுவதும் இறைவனுக்கு இணை வைக்கும் மிகக் கொடிய செயலே என்பதை விளங்காமலேயே 99.9% முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.

அல்லாஹ் மன்னிக்காத இந்தப் பெருத்த வழி கேடு, நபி(ஸல்) அவர்கள் மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே இறுதி உம்மத்தான இந்த முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் நுழைந்துவிட்டது. இதோ படித்துப் பாருங்கள்.

ஷாஹ் வலியுல்லாஹ்வின் ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிகா பக்கம் 155ல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது உண்டா கும் என்ற அச்சம் உங்களுக்கு இல்லையா? நான், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லு கிறேன். நீங்களோ அந்த மனிதர் சொன்னார், இந்த மனிதர் சொன்னார் என்று சொல்கிறீர்கள். இன் னொரு செய்தியில் இவ்வாறு காணப்படுகிறது. உங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப் படுமோ என அஞ்சுகிறேன்; நான் அல்லாஹ் சொல் கிறான், அவனது தூதர் சொல்கிறார்கள் என்றால் நீங்கள் அபூபக்கர் சொல்கிறார், உமர் சொல்கிறார் என்கிறீர்கள்.

ஆக, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபி தோழர்களின் காலத்திலேயே வி­மிகள் மனிதக் கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்த முற்பட்டுவிட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகி கிறதா? இல்லையா? ஆம்! மார்க்கத்தை மதங்க ளாக்கி அவற்றையே கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ் லவிகளின் ஆபாக்களான-புரோகிதர்களான-மத குருமார்களான முன்னோர்கள் இரவில் கள்ள நோட்டுக்களை அச்சடித்துப் பகலில் மக்களிடையே புழக்கத்தில் விடுவது போல் ஹதீஃத்கள் என்ற பெய ரால் கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும் புனைந்து மக்களிடையே பரப்பினர்.

பிரதம ஷைத்தானும் தாஃகூத் என்ற இந்த மனித ஷைத்தான்களுக்குத் துணை போவதால் இப்படிப் பட்ட இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஃத் களே மக்களிடையே வேகமாகப் பரவின. ஆதாரப் பூர்வமான ஹதீஃத்கள் சில ஆயிரங்களே இருக்கும் நிலையில் இந்த தாஃகூத் என்ற மனித ஷைத்தான் களால் கற்பனை செய்யப்பட்ட ஹதீஃத்கள் பல லட்சங்களைத் தாண்டும். நபி(ஸல்) அவர்களே குர் ஆனின் வசனங்கள் 6236க்கும் மேல் விளக்கம் கொடுக்காமல் அவசியப்பட்ட சில வசனங்களுக்கு மட்டுமே மேல் விளக்கம் கொடுத்துள்ள நிலையில் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுரு மார்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு 6236 குர்ஆன் வசனங்களுக்கும் சுய விளக் கம், மேல் விளக்கம் கொடுத்து பெருங்கொண்ட மக்களை (பார்க்க : 32:13, 11:118,119) நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள். இட்டுக்கட்டப்பட்ட, கற்பனை செய்யப்பட்ட பலகீனமான ஹதீஃத்களே சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஹதீஃத்கள் என்ற பெயரால் பொய்யான செய்திகள் சமுதாயத்தில் மலிந்து காணப்படுவதை அறிந்த சில நல்லடியார்கள் பெரும் முயற்சிகள் செய்து ஊர் ஊராகப் பயணித்து பலரைச் சந்தித்து அவர்களுடன் பேசி, ஹதீஃத்களில் ஆதாரபூர்வமான பலமான ஹதீஃத்கள், பலவீன மான ஹதீஃத்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத் கள் என உரிய ஆதாரங்களுடன், ஹதீஃத் அறிவிப் பாளர்களின் வரிசை(இஸ்னாது) அவர்களின் தராதரம், உண்மை நிலையை அறிந்து பதிவு செய்தார்கள்.

அந்த வகையில் புகாரீ, முஸ்லிம், முஅத்தா மாலிக், திர்மிதி, நஸாயீ, அபூதாவூது, இப்னு மாஜா போன்ற ஹதீஃத் நூல்கள் உருவாயின. இந்த நூல் களைத் தொகுத்தவர்களில் யாரும் தங்கள் நூல் ஸஹீஹ் என்று பெருமைப்பட்டுக் கொண்டதாக நாம் அறிந்தவரை ஆதாரம் இல்லை. ஆனால் பின் னால் வந்த வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட மதகுருமார்களே ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹைன், ஸிஷாஹ் சித்தா என சுய மாகப் பெயரிட்டு, கொயபல்ஸ் தத்துவப்படி மக்களிடையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்லி வந்து பொய்ச் செய்திகளை உண்மை போல் மக்களிடையே வலம் வரச் செய்துள்ளார் கள். இப்போதும் செய்து வருகிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா? அல்லாஹ்விட மிருந்து வஹீ மூலம் இறக்கப்பட்டு உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு வருகிற குர்ஆன் மட்டுமே நூற்றுக்கு நூறு ஸஹீஹாகும். குர்ஆன் பதிவில் குறை காண்பவர்கள் அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பாத வழிகெட்ட வர்களாக மட்டுமே இருக்க முடியும். அறிஞர்களால் தொகுக்கப்பட்ட புகாரீ, முஸ்லிம் மற்றும் இதர ஹதீஃத் நூல்கள் அனைத்திலும் ஆதாரபூர்வமான செய்திகளும் உண்டு. பலவீனமான, இட்டுக்கட்டப் பட்ட செய்திகளும் உண்டு. சமீப காலத்தில் சில அறிஞர்கள் பெரும் முயற்சிகள் செய்து, ஆய்வுகள் செய்து ஆதாரபூர்வமான ஹதீஃத்கள், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என அறிவிப் பாளர் வரிசை அவர்களின் தராதரம், நம்பகத் தன்மை என அனைத்தையும் தெளிவுபடுத்தி நூல் வடிவில் தந்தும் உள்ளனர். இவை அனைத்தையும் அந்நஜாத் ஆரம்பித்த ஆரம்பக் காலங்களிலேயே தெளிவுபடுத்தி எழுதி இருக்கிறோம். தனி நூலாக வும் வெளியிட்டிருக்கிறோம். ஹதீஃத் கலை அறிஞர் கள், ஆய்வாளர்கள் இவர்களின் தகவல்களை சரி பார்த்து ஏற்பதே சரியாகும். அவர்களின் சுய கருத்துக்கள் ஒருபோதும் மார்க்கம் ஆகாது. இதில் தெளிவாக இருப்பது முஃமின்களின் கடமை.

நபியின் நடைமுறைகள் (சுன்னத்) உடனுக் குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. நபியின் மறைவுக்குப் பிறகு, ஒரே மார்க்கத்தைப் பல மதங் களாக்கி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க் கும் ஆலிம் வர்க்கத்தின் முன்னோர்கள் பல லட்சக் கணக்கான பொய் ஹதீஃத்களை கற்பனை செய்து மக்களிடையே புழக்கத்தில் விட்டு விட்டார்கள். அதனால் உண்மையான ஹதீஃத்களைத் தேர்வு செய்ய முடியவில்லை எனக் கூறி ஹதீஃத்களை நிராகரிக்கலாமா?

குர்ஆன் மட்டுமே போதும். ஹதீஃத்கள் தேவை யில்லை என்று ஹதீஃத்களை நிராகரிக்கலாமா? ஒரு போதும் கூடாது. அது அல்லாஹ்வின் சுன்னத் தையே நிராகரிப்பதாகும். நரகிற்கு இட்டுச் செல்வ தாகும். எப்படி என்று பாருங்கள். 33:62 இறைவாக்கைப் படித்துப் பாருங்கள்.

அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்ற வர்களிலும் இதுவேதான் அல்லாஹ்வின் (அவ்) வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். (33:62)
முன் சென்ற சமுதாயங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வழி என்ன? அந்தச் சமுதாயங்களின் நபி மார்களுக்கு நேர்வழியை வஹி மூலம் அறிவித்தான் அல்லாஹ். அவை சமயத்திற்கு ஏற்றால் போல் தற்காலிகமானவையாகவும், இரத்துச் செய்யப்பட வேண்டியவையாகவும் இருந்ததால் அவை உடனுக் குடன் பதிந்துப் பாதுகாக்கப்படவில்லை. அந்த நபி மார்கள் மறைந்தார்களோ இல்லையோ, அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியா கும் என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கி, கொடிய ஹராமான வழியில் ஒரு ஜான் வயிற்றை நிரப்பும் மதகுருமார்கள் என்ற போலிப் பெயரில் மறைந் திருந்த தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள், இறைவன் கொடுத்த நேர்வழிச் செய்திகளில், இறைவன் சொன்னான், இறைத்தூதர் சொன்னார் என்று பொய்ச் செய்திகளைத் தந்திரமாக நுழைத்து வேதங்கள் என்ற பெயரில் சமுதாயத்தில் பரவ விட் டார்கள். அவற்றையே இறைவாக்காக (முல்லாக் களின் பாஷையில் வேதவாக்காக) கொண்டு பெரும் பான்மையினர் செயல்பட்டு நரகை நோக்கி நடை போட்டார்கள். இப்போதும் நடைபோடுகிறார்கள். இந்த நிலையில் நேர்வழி நடந்து சுவர்க்கம் புக ஆசைப்படும் அன்றைய மக்களுக்கு அல்லாஹ்வின் வழி காட்டல் என்ன தெரியுமா?

மனிதக் கரம் ப ட்டு மாசு பட்டு வேதங்களாக் கப்பட்ட அந்த வேதங்களிலிருந்தே சரியான நேர் வழியைக் கண்டறிந்து அதன்படிச் செயல்பட வேண்டும் என்பதே. இதுவே அல்லாஹ்வின் சுன் னத். இறை நெறிநூல்கள் மனிதக் கரம் பட்டு மாசு பட்டு வேதங்களாகிவிட்டன என்று கூறி அவற் றைப் புறக்கணித்துவிட்டு, முன்சென்ற நபிமார் களின் சமுதாயத்தினர் தங்கள் மனம் போன போக் கின்படி நடக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இதுவே 33:62 இறைவாக்குக் கூறும் அல்லாஹ்வின் சுன்னத்துகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த சுன்னத் தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே அல்லாஹ் இந்த வசனத்தில் கூறியுள்ளான்.

முன்னைய நபிமார்களுக்கு இறக்கியருளப் பட்ட நெறிநூல்களுக்கு (வேதங்கள்) மாறாக அல் குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்ட தற்கு ஒரே காரணம் மார்க்கம் முழுமையடைந்து விட்டது. இதன் பின்னர் நபி, ரசூல் என்று இறைத் தூதரோ, இறைவன் புறத்திலிருந்து புதிய நெறி நூலோ இல்லவே இல்லை. உலகம் அழியும் வரை குர்ஆன் மட்டுமே மனித குலத்தினருக்கு ஒரே நேர் வழி காட்டும் நெறி நூலாக இருப்பதால் மட்டுமே. குர்ஆன் அல்லாஹ் கட்டளையிட்டுப் பதிந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. (பார்க்க : 15:09) இந்த உண்மையை 5:3, 3:19,85 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே ஒப்புக் கொள்வார்கள்.
அதே சமயம் இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங் களில் கூறி இருப்பதன் அடிப்படையில் (பார்க்க : 2:124,155,249, 3:152,154,186, 4:6, 5:48,94, 6:165, 7:141,163,168, 8:17, 10:30, 11:7, 14:6, 16:92, 18:7, 21:35, 27:40, 33:11, 37:106, 44:33, 47:4,31, 68:17, 76:2, 89:15,16)

முன்னைய நபிமார்களின் சமூகங்களுக்குக் கலப் படமாகி மாசுபட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல் களில் (வேதங்கள்) அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வற்றை மட்டும் கண்டறிந்து அவற்றின் வழிகாட் டல் படி நடப்பது கடமையாக இருந்தது போல், இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் பதிந்து பாது காக்கப்பட்டு விட்டதால், அந்தச் சோதனை வாழ்க் கையில் தனது சுன்னத்தில் மாற்றம் இல்லாத அல்லாஹ்(33:62) நபியின் சுன்னத்தை அறியத் தரும் ஹதீஃத்களில் வைத்துள்ளான். கலப்படமான, மனிதக் கரம் பட்டு மாசு பட்ட ஹதீஃத்களிலிருந்து ஆதாரபூர்வமான ஹதீஃத்களைக் கண்டறிந்து அவற்றை எடுத்து நடப்பது முஸ்லிம்களின் நீங்காக் கடமையாகும். ஒட்டுமொத்த ஹதீஃத்களையும் நிராகரிப்பது குஃப்ராகும் – வழிகேடாகும்.

இப்படி நாம் கூறினால் அது பெரும் தவறாகும். ஆனால் பல குர்ஆன் வசனங்கள் இந்த உண்மை யைக் கூறுகின்றன. 3:32,132, 4:59, 5:92, 8:1,20,46, 20:90, 24:54,56, 47:33, 58:13, 64:12,16. இந்த வசனங் கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக் கும் கீழ்ப்படியுங்கள் என்று நேரடியாகக் கூறுகின் றன. மேலும் 3:50, 26:108,110,126,131,144,150, 43:63, 71:3. இந்த வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள் எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று நபிமார்கள் சொன்னதை அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்து குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

மேலும் 3:31 இறைவாக்கு என்ன கூறுகிறது என்று படித்துப் பாருங்கள்.
(நபியே!) நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங் களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
இன்னும் 33:21 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது என்று படித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (33:21)
3:31 இறைவாக்கு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற நபியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலி யுறுத்தவில்லையா? உங்கள் பாவங்களை மன்னிப்ப தாகவும் கூறவில்லையா?
33:21 இறைவாக்கு அல்லாஹ் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது என்று கூறவில்லையா?
இன்னும் 2:213 இறைவாக்கில், மனிதர்களி டையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை இறைவன் இறக்கி வைத்த (வஹி) அறிவிப்புகளைக் கொண்டு நபிமார்களே தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறவில்லையா?
இன்னும் 16:44 இறைவாக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை(குர்ஆனை) தெளிவுபடுத்துவதற் காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இதை அருளினோம் என்று கூறுகிறதா? இல்லையா?
இன்னும் 16:64 இறைவாக்கு, அவர்கள் எதில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர்(நபி) அவர்களுக்குத் தெளிவாக்குவதற்காக உம்மீது இந்த நூலை(குர்ஆன்) இறக்கினோம் என்றிருப்பதைப் படித்துப் பார்க்கவில்லையா?
இவை அல்லாமல் குர்ஆனில் சுமார் 341 இடங் களில் ரசூல் என்று ரசூலைப் பற்றியும், சுமார் 57 இடங்களில் நபி என நபியைப் பற்றியும் குறிப்பிட் டுக் கூறப்பட்டுள்ளதையும் நேரடியாகப் படித்துப் பார்க்கவில்லையா?

இவ்வளவுத் தெளிவாக நேரடியாக அல்லாஹ் நபியைப் பின்பற்றுவது பற்றிக் கூறி இருந்தும், இவையயல்லாம் குர்ஆனில் இருப்பது உண்மை தான். ஆயினும் அந்த நபியும் குர்ஆன் படிதான் நடக் கக் கடமைப்பட்டுள்ளார். எனவே ஹதீஃத்கள் தேவை இல்லை; குர்ஆன் மட்டும் நேர்வழி நடக்கப் போதும் என்று அவர்களின் சுய கருத்தைக் கூறுகின் றனர். இப்போது சிந்தியுங்கள். இறைவனின் இறுதித் தூதர், இறைவனுடன் வஹி மூலம் நேரடித் தொடர் பிலும், இறைவனது நேரடிக் கண்காணிப்பிலும் (52:48) தவறு செய்தால் உடனுக்குடன் வஹி மூலம் திருத்தப்பட்டவரும் (66:1,2) அதல்லாமல் குர் ஆனுக்கு விளக்கம் கொடுக்க அல்லாஹ்வாலேயே அனுமதிக்கப்பட்டு அதிகாரம் பெற்றவர் (பார்க்க : 2:213, 16:44,64) அப்படிப்பட்டவர் குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்துப் பின்னர் பதிவான ஆதார பூர்வமான ஹதீஃத்கள் தேவை இல்லையாம். குர் ஆன் மட்டும் போதுமாம். ஆனால் இப்படிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லாத 17:85 இறைவாக்குக் கூறுவது போல் அற்பப் புத்தியுள்ள மனிதர்கள் குர்ஆனுக்குக் கொடுத்த, இப்போதுள்ள மனிதர்கள் கொடுக்கும் விளக்கங்கள் நேர்வழியாம். இதுவே ஹதீஃத்களை மறுப்போரின் நம்பிக்கை. இவர்கள் எந்தளவு மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஹதீஃத் நிராகரிப்பாளர்களின் இன்னொரு வாதம், நபி குர்ஆனின் வழிகாட்டல்படிதான் நடந்தார். அவை அனைத்தும் குர்ஆனில் இருக்கின்றன. பின்னர் ஹதீஃத்களின் தேவை என்ன? என்பது தான். இவர்களின் வாதம் எப்படிப்பட்ட மடைமை வாதம் என்பதைக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்து விளங்குங்கள்.
2:129,151,231, 3:48,81,164, 4:54,113, 5:110, 31:12, 33:34, 38:20, 43:63, 54:5, 62:2

இந்த வசனங்களில் காணப்படும் ஹிக்மத் என்றால் என்ன? குர்ஆனிலேயே மேற்கண்ட பெரும்பாலான வசனங்களில் “”கிதாப வல் ஹிக்மா” என்று குர்ஆனையும், ஹிக்மத்தையும் தனித்தனி யாக அல்லாஹ் கூறியுள்ளான். அதுவும் குர்ஆனில் உள்ளதுதான் என்றால் அதைத் தனியாகப் பிரித்து குர்ஆனிலிருந்து வேறுபடுத்தி ஏன் காட்ட வேண் டும்? சிந்திக்க வேண்டாமா?

ஏற்கனவே உள்ளத்தில் ஊறிப்போயிருக்கும் வழி கெட்டக் கருத்துக்களை சில நிமிடங்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையோடு மேலே எழு தப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங் கினால், உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்ட குர்ஆனும், உடனுக்குடன் பதியப்படாமல் பின்னர் பதிந்துப் பாதுகாக்கப்பட்டு வரும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் ஆக இரண்டும் கட்டாயம் நேர்வழி நடக்கத் தேவை என்பதை எளிதாக விளங்க முடியும்.
நீங்கள் ஹதீஃத்களையும் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். ஆனால் குர்ஆனைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதற்குப் பல குர்ஆன் வசனங்கள் இருக்கின்றனவே என எதிர் வாதம் வைக்கின்றனர்.

இதோ குர்ஆனைப் பற்றிக் கூறும் வசனங்கள் :
2:185, 4:82,5:101, 6:19, 7:204, 9:111, 10:15,37,61, 12:3, 15:1,87,91, 16:98, 17:9, 17:41,45,46, 17:60,78, 82,88,89, 18:54, 20:2,114, 25:30,32, 27:1,6,76,92, 28:85, 30:58, 34:31, 36:2,69, 38:1, 39:27, 41:26, 43:31, 46:29, 47:24, 50:1,45, 54:17,22,32,40, 55:2, 56:77, 59:21, 73:4,20, 76:23, 84:21, 85:21, 12:2, 13:31, 17:106, 20:113, 39:28, 41:3,44, 42:7, 43:3, 72:1, 75:17, 18 ஆக 70 இடங்களில் குர்ஆன் பதம் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒரே ஒரு வசனத்திலாதவது குர்ஆனை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று கூறப் பட்டுள்ளதா? இல்லையே! அப்படி இருந்தால் ஹதீஃதை நிராகரிப்போர் காட்டட்டும் பார்க்கலாம்.

அதற்கு மாறாக அத்தீவுல்லாவஹ வ அத்தீவுர் ரசூல் அதாவது அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், அவனின் தூதருக்கும் வழிப்படுங்கள் என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை முன்னர் குறிப்பிட்டுள் ளோம். இத்தனை இடங்களில் குர்ஆனில் அல்லாஹ் கூறி இருக்கும் அவசியம் என்ன? சிந்திக்க வேண் டாமா? மேலும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபிமார் கள் கூறியுள்ள பல வசனங்களையே மேலே குறிப் பிட்டுள்ளோம். இத்தனை இடங்களில் குர்ஆனில் அல்லாஹ் கூறி இருக்கும் அவசியம் என்ன? சிந்திக்க வேண் டாமா? மேலும் அல்லாஹ்வுக்குப் பயபக்தியு டன் நடங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபி மார்கள் கூறியுள்ள பல வசனங்களையும் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இவை மட்டுமா? இன்னும் பாருங்கள். 33:36ல் அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்த பின் னர் அதில் வேறு அபிப்பிராயம் கொள்வது முஃமினான ஆணுக்கும், பெண்ணுக்கும் அனு மதியே இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று கூறும் இடத்திலும் ரசூலையும் சேர்த்துச் சொல்கி றானே அல்லாமல், அல்லாஹ்வின்பால் அதாவது குர்ஆனின்பால் திரும்புங்கள் என்று இறைவன் கூற வில்லை. இன்னும் பாருங்கள். 4:59ல் அல்லாஹ்வை யும் அவனது தூதரையும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களையும் பின்பற்றுங்கள். உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அப்போது அல்லாஹ்வின்பாலும், அவனது தூதரின்பாலும் திரும்புங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடு கிறானே அல்லாமல் அப்போதாவது தூதரை விட்டு அல்லாஹ்வின்பால் திரும்புங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லையே ஏன்?

குர்ஆன் அல்லாஹ்வின் கலாம்-பேச்சு. குர்ஆன் வசனங்களில் ஹதீஃத்களில் ஐயங்களைக் கிளப்பி விவாதம் செய்வோர் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கின்றனர் என்பதைக் கீழ்க்காணும் வசனங் களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள். 5:101, 6:25,68, 8:6, 13:13, 15:91, 18:56, 22:3,8, 40:4,35,56,69, 42:35.

குர்ஆனில், குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் இல்லா மல் சுய கருத்துக்களைப் புகுத்தி விவாதம் செய் வோர் குர்ஆனையும் நிராகரிக்கிறார்கள். ஹதீஃத் களையும் நிராகரிக்கிறார்கள். மாபெரும் வழிகேட் டில் இருக்கிறார்கள்; நரகை நோக்கி நடைபோடுகி றார்கள். ஒரு வகையில் கொடிய ´ர்க்கான கபுரு வழிபாடுகளைச் செய்வோரை விட வழிகேட்டில் ஒருபடி மேலே போய்விட்டனர் 42:21 இறைவாக் குக் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காத சட்டங் களை விதிக்கிறார்கள். 49:16 இறைவாக்குக் கூறு வது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள். (நவூதுபில்லாஹ்)

அவர்கள் சிறிது நடுநிலையோடு சிந்திக்க வேண் டும். குர்ஆனைக் கொண்டு மட்டும் மார்க்கத்தை மனிதர்களால் விளங்க முடியும் என்றால், குர்ஆனை நேரடியாக மனிதகுலத்தினருக்குக் கொடுத்திருக்க லாமே. இறைத்தூதர் தேவையே இல்லையே. அதனால்தானே ஷைத்தானும், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான-இடைத்தரகர்களான புரோகிதர்களும் அத்தூதர்களையே அவதாரம் என்ற பெயரால் இணை, துணை தெய்வங்களாக்கிப் பெருங்கொண்ட மக்களை அல்லாஹ் மன்னிக்காத (4:48,116) கொடிய ´ர்க்கில் மூழ்கடித்து ஷைத்தா னது சபதப்படி நரகை நிரப்ப வழி ஏற்படுகிறது. அல்லாஹ் வீணான ஒரு காரியத்தைச் செய்துள் ளான். (நவூதுபில்லாஹ்) என்பதுதான் ஹதீஃத் நிராக ரிப்பாளர்களின் எண்ணமா? (நவூதுபில்லாஹ்)

இவருக்கு இந்த குர்ஆன் ஒரே தொகுப்பாக (முழுமையாக) ஏன் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கவும் செய்தனர். அப்படித் தான் இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப் படுத்துவதற்காக இன்னும் இதனைப் படிப்படியாக நாம் படித்துக் காண்பித்தோம் (25:32) என்றும் மேலும் 76:23-ல். “”நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கிவைத்தோம்” (76:23) என்றும் அல்லாஹ் கூறி இருப்பது எதனை உறுதிப் படுத்துகிறது. 17:85 இறைவாக்குக் கூறுவது போல் அற்ப அறிவு படைத்த மனிதகுலம் சுயமாக விளங்க முடியாது. அதை விளக்க ஓர் இறைத்தூதர் அவசியம் தேவை. இறைத் தூதரின் விளக்கமான ஆதாரபூர்வமான ஹதீஃத்களை ஒருபோதும் நிரா கரிக்கக் கூடாது. அது கொடிய குற்றம். பெருத்த வழி கேடு நரகில் சேர்க்கும் என்பது புரியவில்லையா?

இவனைப் போன்ற அற்ப அறிவுடைய ஒரு மனிதன் கண்டுபிடித்த ஒரு புதிய கருவி. அதை எப்படி இயக்குவது என்பதை விளக்க ஒரு சிற்றேடு கொடுப்பான். அதைப் படித்து மட்டும் அக் கருவியை இயக்குவது கடினம். எனவே அதைச் செயல் முறையில் இயக்கிக் காட்ட அத்துடன் அக் கருவியை இயக்கி அனுபவப்பட்ட ஒரு பொறி ஞரையும் கூடவே அனுப்பி வைப்பதைப் பாக்கத் தானே செய்கிறோம். அப்படிப்பட்ட சிற்றறிவு தான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க: 17:85) இந்த நிலையில் இறைவனால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல் குர்ஆனை அதனை வஹீ மூலம் பெற்றுப் படித்து, அல்லாஹ்வின் வழிகாட்டல்படி செயல்படுத்திக் காட்டிய நடைமுறை (நபியின் சுன்னத்) எங்களுக் குத் தேவை இல்லை. நாங்கள் சுயமாக நேரடியாக குர்ஆனை விளங்கிச் செயல்படுவோம் என்று ஆண வம் பேசும் ஹதீஃத்களை நிராகரிப்போர் எந்தளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரியவில்லையா?

நாம் 6வது படிக்கும்போது கடிகாரங்களைச் சுயமாகப் பழுது பார்க்கும் ஆற்றலை அல்லாஹ் நமக்குத் தந்தான். அதன் பின்னர் பல் தொழில் கலைஞராகும் (னிற்யிமிஷ் வீeஉஜுஐஷ்உஷ்ழிஐ) ஆற்றலையும் தந்தான். இத்தனைக்கும் எந்த குருவிடமிருந்தும் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ளவில்லை. அதிக பட்சம் அவை பற்றிய நூல்களை மட்டுமே படித்து விளங்கினோம். அல்லாஹ் தந்த அந்த ஆற்றல்களே எமது உலக வாழ்வை வளப்படுத்த வழிவகுத்துத் தந்தது. அப்படிப்பட்ட ஆற்றல் பெற்ற நாமே குர்ஆனை விளங்க நபியின் நடைமுறை விளக்கம் தேவை என்கிறோம். இவர்களின் நிலை என்ன?

ஆம்! அவர்கள் நாம் மேலே எடுத்தெழுதியுள்ள நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரிக் கிறார்கள். இப்லீஸ் ஆதத்துக்கு சுஜூது செய் என்ற ஒரே ஒரு கட்டளையைத்தான் நிராகரித்தான். இப்லீஸ் என்ற பெயரில் இருந்த அவன் தனது செயலுக்கு அழகான சுய விளக்கத்தையே தந்தான். ஆதத்திற்கு முன்னரே நெருப்பிலிருந்து படைக்கப் பட்டவன். மலக்குகளோடு சம அந்தஸ்தில் இருந் தான். இறைக் கட்டளை மலக்குகளுக்குத்தான்; மலக்குகளோடு இருந்ததால்தான் அக்கட்டளை அவனையும் கட்டுப்படுத்தியது. படைப்பின் அடிப்படையிலும், அந்தஸ்தின் அடிப்படையிலும் அவன் உயர்வானவன்தான். ஆயினும் அல்லாஹ் வின் ஒரேயயாரு கட்டளையை நிராகரித்தான் என்ற ஒரேயயாரு காரணத்திற்கு மட்டுமே இப்லீஸ் காஃபிரானான். விரட்டப்பட்டு ஷைத்தானான். நிரந்தர நரகிற்கு உரியவனானான். அந்த ஆத்திரத் தின் காரணமாகவே ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலானோரை அதாவது ஒவ்வொரு ஆயிரத் திலும் 999 பேரை நரகத்திற்கு இட்டுச் செல்கிறான். (பார்க்க: 32:13, 11:118,119) (புகாரீ :3348, 4741)

இந்த நிலையில் ஹதீஃத்களை நிராகரிப்போர் இறைவனின் நூற்றுக்கணக்கான கட்டளைகளை நிராகரித்து குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து ஹதீஃத்களை நிராகரிப்பது எப்படிப் பட்ட பெருத்த வழிகேடு என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். என்ன காரணம்?

என்றைக்கு கபுரு-சமாதி வழிபாடு முஸ்லிம் சமு தாயத்தில் கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் ஆலிம் வர்க்கத்தினரால் புகுத்தப்பட் டதோ அன்றிலிருந்து விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சில உண்மை முஸ்லிம்கள், குர்ஆன் வசனங் களை எடுத்துக் காட்டி கபுருவழிபாடு கொடிய ´ர்க், அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களிடையே மதகுருமார்களால் புகுத்தப் பட்ட தரீக்கா-ஷைகு வழிபாடுகள் முஸ்லிம்களி டையே புகுத்தப்பட்டக் காலத்திலிருந்து ஒரு சில உண்மை முஸ்லிம்கள் குர்ஆன் வசனங்களைக் காட்டி அதுவும் கொடிய ´ர்க் என எச்சரித்து வருகிறார்கள். அதேபோல் மத்ஹபு வழிபாடுகளும் கொடிய ´ர்க்கே என்று நேரடி குர்ஆன் வசனங் களைக் காட்டி சிலர் எச்சரிக்கத்தான் செய்கிறார் கள். அதேபோல் இயக்க வழிபாடுகளும் கொடிய வழிகேடுகள்தான் ´ர்க்தான் என்று சிலர் குர்ஆன் வசனங்களைக் காட்டி எச்சரித்து வரத்தான் செய்கி றார்கள். இப்படி முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்துள்ள அனைத்து வழிகேடுகளும் உரிய குர்ஆன், ஹதீத் ஆதாரங்களை எடுத்துக் காட்டி தெளிவுபடுத்தத் தான் செய்யப்படுகிறது.

ஆயினும் இப்படிப்பட்ட கொடிய ´ர்க்கான அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்கிற (பார்க்க : 4:48,116) பெரும் பாவங்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் எத்தனை பேர் தங் கள் தவறை-வழிகேட்டை உணர்ந்து அல்லாஹ் 6:153 குர்ஆன் வசனத்தில் கூறும் ஒரே நேர்வழிக்கு வருகிறார்கள். மிகப் பெருந் தொகையினர் நேர் வழிக்கு வருவதே இல்லை (பார்க்க : 32:13, 11:118, 119) காரணம் என்ன? 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகளான ´ர்க்கான பாவச் செயல்களையே அழகான செயல்களாக நன்மை தரும் செயல்களாகக் காட்டி அவர்களை வழி கெடுத்து நரகில் தள்ளுவேன் என்று சபதமிட்டு அல்லாஹ்விடம் அதற்குரிய வரத்தையும் பெற்றுக் கொண்டான. (பார்க்க : 15:34-44)

ஷைத்தானின் இந்த கடும் முயற்சியால் வழி கேட்டிலிருக்கும் ஒவ்வொரு பிரிவினரின் உள்ளங்க ளிலும் ஷைத்தானின் துர்போதனைகளும், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்களின் துர்போதனைகளும் நிறைந்து வழிகின்றன.

இந்த நிலையில் அவர்களிடம் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்கள் பலன் தருமா? ஒருபோதும் பலன் தராது. இதை ஓர் உதாரணம் மூலம் பல முறை விளக்கி இருக்கிறோம். அதாவது ஒரு பாத் திரத்தில் வடிய வடிய சாராயம் இருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் சுத்தமான பாலை ஊற்றினால், பால் பாத்திரத்தினுள் போகுமா? அதற்கு மாறாக வெளியே வழியுமா? சிந்தியுங்கள். பால் பாத்திரத்தினுள் செல்ல வேண்டும் என்றால் முதலில் பாத்திரத்தினுள் இருக்கும் சாராயம் வெளியே கொட்டப்பட வேண்டும். பாத்திரம் சுத்த மாகக் கழுவப்பட வேண்டும். பின்னர் அப்பாத்திரத் தினுள் பாலை ஊற்றினால் மட்டுமே அது பாலை உள்வாங்கும். இதை ஓர் அறிவு குறைந்த மனிதனும் விளங்குவான். மறுக்கமாட்டான்.

இப்போது சிந்தியுங்கள். வழிகெட்டக் கொள்கை களை உள்ளத்தில் நிரப்பி வைத்திருப்பவர்களுக்கு முன் படிக்கப்படும் குர்ஆன் வசனங்கள் அவர்களின் உள்ளத்தில் நுழையுமா? ஒருபோதும் நுழையாது. அவை வெளியே வழியத்தான் செய்யும். நரகில் கொண்டு சேர்க்கும் ´ர்க்கான வழிகெட்டக் கொள்கையுடையோருக்கு முன் அவர்களின் வழி கெட்டக் கொள்கையை நேரடியாக விளக்கும் குர் ஆன் வசனங்களை எடுத்து வைக்கும்போது அவர் களின் முகங்களில் ஒரு வெறுப்பு உணர்வையும் (பாரக்க:17:41,45-47,89, 22:72, 25:60, 39:45)) பார்க்கலாம்.

மேலும் அந்த வசனங்களின் நேரடிக் கருத்துக் களை மறைக்கும் விதமாக (பார்க்க : 2:159-162) அவற்றில் தங்கள் சுய கருத்துக்களைப் புகுத்தி வீண் ஐயங்களைக் கிளப்பி அல்லாஹ் வெறுத்துக் கூறும் விதண்டாவாதங்களைச் செய்யவே முற்படுவார் கள். எனவே அவர்களின் பார்க்கும் கண்களில் தடு மாற்றம். கேட்கும் காதுகளில் தடுமாற்றம். உள்ளத் தில் திரை. இந்த நிலையில் அவர்களால் நேர்வழியை எப்படி அடையமுடியும். (பார்க்க : 17:45,46,47)

7:3 வசனத்தையும், 53:2,3,4 வசனங்களையும் படித்துப் பாருங்கள், 7:3 வசனத்தில் உங்கள் இறை வனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை என்றும் 53:4ல் அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹி அறிவிப்பே தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறி இருப்பதை உற்று நோக்குங்கள். அல்லாஹ் குர்ஆனில் ஒவ்வொரு வி­யத்தையும் நேராகவும், தெளிவாகவும், எவ்வித முரண்பாடும் இல்லாத நிலையில் கூறி இருப்பதாகப் பல இடங் களில் கூறி இருக்கிறான். ஹதீஃத் மறுப்பாளர்கள் கூறுவது போல் குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் 7:3ல் இறக்கப்பட்டதை என்று கூறாமல் குர்ஆனையே பின்பற்றுங்கள் என்று நேரடியாகக் கூறி இருப்பான். பின்னால் வருகிறவர் கள் சுய விளக்கம் கொடுக்கும் நிலையில் எந்த குர்ஆன் வசனமும் இல்லை. அப்படியே குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் 2:213, 16:44,64, அல்லாஹ்வின் கட்டளைகள்படி இறைத் தூதரே அப்படி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக இறைத் தூதரும் பின் பற்ற வேண்டிய இறக்கப்பட்டதை அதாவது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் பெற் றதையே கூறினார்கள் என்று உறுதிப்பட வில்லையா?
7:3, 53:4 இந்த இரண்டு வசனங்களை நடுநிலை யோடு, உள்ளத்தில் எவ்வித வழிகெட்ட சிந்தனை யும இல்லாமல் படித்து விளங்குகிறவர்கள், இன் னும் மேலே எழுதப்பட்டுள்ள எண்ணற்ற வசனங் கள் கூறுவது போல் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றியே ஆகவேண்டும், அதுவே ஒரே நேர்வழி என்பதை நிச்சயம் உணர முடியும்.

ஹதீஃத் மறுப்பாளர்கள் பல குர்ஆன் வசனங் களுக்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமின்றி சுய விளக்கம் கொடுத்து அவர்கள் வழிகெடுவ தோடு, அவர்களை நம்பியவர்களையும் வழி கெடுத்து நரகை நோக்கி நடைபோட வைக்கிறார் கள். அவர்கள் கொடுக்கும் சுயவிளக்கங்கள் அவர் களின் சுய கற்பனையாக இருக்கும் அல்லது அவர் கள் நம்பிப் பின்பற்றும் முன்னோர்களின் சுய கற்பனையாக இருக்கும்.

இந்த இரண்டு வகைக் கற்பனைகளைக் கொண்டு சமாளிக்க முடியவில்லை என்றால் உடனே அந்த குர்ஆன் வசனங்கள் சைலண்ட் அதாவது நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்று கூறித் தங்களின் வழிகெட்ட வீன் வாதத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர். அல்குர்ஆனில் ஒரு வார்த்தை கூட, ஓர் எழுத்துக் கூட சைலண்ட் -தேவையில்லை என்ற நிலையில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். உதாரணமாக 4:43 வசனம் கூறும் நீங்கள் போதையில் இருக்கும் போது நீங்கள் கூறுவது இன்னதன்று அறிந்து கொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்றிருப்பது 5:90,91 குர்ஆன் வசனங்கள் இறங்கிய பின் சைலண்ட் ஆகிவிட்டது என்ற வாதத்தை வைப்பார்கள். அதே போல் 49:1-5 வரையுள்ள ஐந்து வசனங்களும் இறைத் தூதரின் இறப்பிற்குப் பின்னர் சைலண்ட் ஆகிவிட்டன என வாதிடுவர். இது ஹதீஃத் நிராகரிப்பாளர்களின் அறியாமையும் வீண் விதண்டாவாதமும் ஆகும்.

இப்போதும் ஒரு மடாகுடிகாரன் எப்போதும் போதையில் இருப்பவன், நான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகிறேன். அதனால் குடிப்பதற்கு இஸ் லாமிய மார்க்கத்தில் அனுமதி வேண்டும் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம். போ போ நீ குடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று கூறினால் எனக்கு இஸ்லாமும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று போய் விடுவான். அதற்கு மாறாக இஸ்லாத்தை ஏற்று குடியை உடனே நிறுத்தினாலும் அவனது உடலில் பல துன்பங்கள் ஏற்பட்டு அவனுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு வெறுப்பும் ஏற்படலாம். அதற்கு மாறாக நீ குடி, ஆனால் தொழுகைக்கு வரும்போது போதை தெளிந்த நிலையில் வந்து கண்டிப்பாகத் தொழு என்று 4:43 குர்ஆன் வசனத்தைத்தான் அவனுக்குக் காட்ட வேண்டும்.

இந்த நிலையில் ஐங்காலத் தொழுகை நேரத்தில் அவன் போதை தெளிந்தவனாக இருக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அவனது உடல் ஆரோக்கியத் திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும். காலக்கிரமத் தில் 5:90,91 இறைக் கட்டளைகள்படி அவன் குடியை விட்டு முற்றிலும் விலக வாய்ப்பு ஏற்படும்.

ஆம்! 4:43 குர்ஆன் வசனம் சைலண்ட் ஆகவில்லை; இப்போதும் நடைமுறைக்குச் சாத்தி யமே என்பது புரிகிறதா? இல்லையா? சிந்தியுங்கள். அதே போல் 49:1-5 ஐந்து குர்ஆன் வசனங்களும் சைலண்ட்-நடைமுறைப்படுத்த முடியாது என வீண் வாதம் வைத்து, இதுபோல் குர்ஆனில் செயல் படுத்த முடியாத பல சைலண்ட் வசனங்கள் இருக் கின்றன என வாதிடுகின்றனர். முதல் வசனம் என்ன கூறுகிறது படித்துப் பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்விடம் பயபக்தி யுடன் நடங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றை யும்) செவியுறுபவன், நன்கறிபவன். (49:1)

இந்த முதலாம் வசனத்தில் அல்லாஹ் தன்னு டன் தன் தூதரையும் இணைத்தே கூறுகிறான். அதன் பொருள் என்ன? இதே அடிப்படையில் அடுத்த நான்கு வசனங்களையும் கவனமாகப் படியுங்கள். இன்று, ஹதீஃத் நிராகரிப்பாளர்கள் போல் வீண் வாதங்களில் ஈடுபடும்போது, ஒருவர் மாறி ஒருவர் குரல் உயர்த்திச் சப்தமிட்டு பேசுவதைப் பார்க்கலாம். அதனால்தான் அல்லாஹ் 6:68 வசனத்தில் இப்படிப்பட்டவர்களைப் புறக்கணித்து விடும்படி கட்டளையிடுகிறான். ஷைத்தான் மறக்கச் செய்தால் நினைவு வந்தபின் அந்த அநியாயக் கூட்டத்தாருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறான்.

மேலும் 40:35 இறைவாக்கிலும் இதையே வலி யுறுத்துகிறான். ஆம்! நபி இறந்த பின்னரும் இந்த 49:1-5 வசனங்கள் நடைமுறையில் இருக்கத்தான் செய்கின்றன. அன்று உயிருடன் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் பற்றிக் கூறும்போது, தங்களின் குரல்களை உயர்த்தி நபியின் அப் பேச்சைக் கேட்கவிடாமல் தடுத்தது போல், இன் றும் நபியின் ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் எடுத் துரைக்கப்படும்போது வீண் விதண்டாவாதம் செய்யாமல் அதைக்காது கொடுத்துக் கேட்டு அதன் படி நடந்து வெற்றி பெருங்கள் என்றே அவ்வசனங் கள் வலியுறுத்துவதை அறியலாம். ஆக குர்ஆனின் எந்த வசனமும் ஹதீஃத் மறுப்பாளர்கள் கூறுவது போல் சைலண்ட் என்ற நிலையில் இல்லை. (பார்க்க : 6:150) ஆக! ஹதீஃத் மறுப்பாளர்கள் குர்ஆன் வசனங்களில் விதண்டாவாதம் செய்கின்றனர்.

தமிழகத்தில் காரிஜியாக்களின் வழித்தோன்றல் கள் எப்போது தலை எடுத்தார்கள் என்பதை இப் போது பார்ப்போம். கடந்த 1000 வருடங்களாக முஸ்லிம் சமுதாயம் கபுரு-சமாதி வழிபாடு, பீர்- முரீது வழிபாடு, மத்ஹபு வழிபாடு, ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி இமாம்கள் வழிபாடு என்ற கொடிய ´ர்க்கில் (பார்க்க 9:31, 18:102-106) மூழ்கி இருந்தார்கள். இப்படிப்பட்ட வழிகேடுகளி லிருந்து விடுபடுவதாக நம்பிக் கொண்டு மிக சமீப காலத் தில் அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி என புதிய வழிகேடுகளைக் கற்பனை செய்து நடை முறைப்படுத்துகின்றனர்.

கடந்த 1963லிருந்து 1983 வரை குர்ஆனைத் தினசரி ஒரு பாகம்(ஜுஸ்வு) மாதம் ஒரு குர்ஆன் எனப் பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாட மாக ஓதிக் கொண்டிருந்தோம். அதனால் குர்ஆனில் அல்லாஹ் எவற்றை நேரடியாகச் சொல்கிறான் என் பதை அறியாமல், இந்த மவ்லவிகளை நம்பி, அவர் களது கூறறுக்களை வேதவாக்காகக் கொண்டு, மதகுருமார்களின் கற்பனையான ஷாஃபி மத்ஹபில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நிலைத்திருந்தோம். தப்லீஃக் ஜமாஅத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் மவ்லவிகளோடு மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு நிறையவே இருந்தது.

அப்போது அவர்களின் பொய்ப் பித்தலாட்டங் களையும், ஒழுக்கக் கேடுகளையும் நேரடியாக, கண் கூடாகப் பார்க்கும் நிர்பந்த நிலை ஏற்பட்டது. அதனால் 1971ல் இருந்து 1981 வரை பெருங் குழப் பத்தில் இருந்தோம். 1981ல் ஹஜ்ஜுக்குப் போகும் போது நாம் உடன் ஹஜ் கிரிகைகளை விபரிக்கும் இமாம் கஜ்ஜாலியின் தமிழ் மொழி பெயர்ப்பை எடுத்துச் சென்றோம். ஜித்தா ஏர்போர்ட்டிலுள்ள அதிகாரிகள் அது என்ன நூல் என்று கேட்டு அறிந்து கொண்டு அந்நூலை அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டார்கள். அது எமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தாடி வளர்ந்ததிலிருந்து நாம் தாடியைச் சிரைத்தது இல்லை. அதற்கு மாறாக 21 வயதிலிருந்து தலையை வழித்து மொட்டை போட்டு வந்தோம். 1981ல் ஹஜ்ஜில் வைத்துத்தான் நபி(ஸல்) அவர்கள், ஹஜ், உம்ரா அல்லாத எந்தச் சமயத்திலும் தலை முடியை வழித்ததில்லை என்ற உண்மை தெரியவந்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அதன் பின்னர்தான் குர்ஆனைப் பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாடமாக ஓதுவதை விட்டு, அன்றிருந்த அப்துல் ஹமீது பாகவியின் ஒரே மொழி பெயர்ப்பைக் கொண்டு குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க முற்பட்டோம். அதுவே எமது வழிகெட்ட போக்கிலிருந்து விடுபட்டு குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல் படி நடக்கும் பாக்கியம் எமக்குக் கிடைக்க வழி வகுத் தது. இவற்றை நாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த அனைத்துப் பிரிவு மவ்லவிகளின் பேச்சை வேத வாக்காகக் கொண்டு வழிகெட்ட, நரகிற்கு இட்டுச் செல்லும் பேரழிவிலிருந்து விடுபட்டு ஒரே நேர்வழி பெற மக்கள் அனைவரும் குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒரே ஜமாஅத்தாக (பார்க்க : 3:103) செயல்பட, குர்ஆனின் போதனைப் படி நடக்க முன் வரவேண்டும். அதுவே அவர்க ளுக்கு ஈருலக வெற்றியைப் பெற்றுத் தரும்.
அதனால் நாம் பொருள் அறிந்து குர்ஆனைப் படிப்பதன் மூலம் பெற்ற நேர்வழியை பிரசுரங்கள் மூலம் 1983லிருந்து மக்களிடையே கொண்டு செல்ல முற்பட்டோம். அனைத்து மதரஸாக்களுக் கும், பிரபல மவ்லவிகளுக்கும் கடிதங்கள் எழுதி னோம். அதன் உச்சக்கட்டமாக 1984 அக்டோபர் 30ம் தேதி கிறித்தவ குருத்துவ மடத்தில் மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ற தலைப்பில் நாம் ஆற்றிய உரை நூல் வடிவில் தமிழகமெங்கும் சென்றடைந்தது. அதைப் படித்த இன்றைய மூத்த தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றிக் கொள்ளும் மவ்லவிகள் (4:49, 53:32) குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம்-ஒரே நேர்வழி என்பதை ஒப்புக் கொண்டு நம்முடன் சேர்ந்து பணி யாற்ற முன்வந்தனர். அவர்களின் அசல் நோக்கம் எம்மையும் அவர்களின் புரோகித வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதே. அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அல்லாஹ் எம்மைப் பாதுகாத்தான்!

அதனால் ஆத்திரமுற்று 1987 ஜூனில் நம்மை விட்டு வெளியேறி எம்மீது பலவிதமான அவதூறு களையும், வீண் பொய்ப் பழிகளையும் சுமத்தினர். அவர்களின் ஒரே நோக்கம் அந்நஜாத் தரும் செய்தி கள் மக்களிடம் போய்ச் சேராமல் தடுத்து அதை இழுத்து மூடவைக்க வேண்டும் என்பதே. ஆனால் அல்லாஹ் அவனது தனிப்பெரும் கிருபையைக் கொண்டு கடந்த 32 வருடங்களாக தொய்வின்றி அந்நஜாத் வெளிவர அருள் புரிந்து வருகிறான். எனவே அந்நஜாத்தின் நேர்வழிக் கருத்துக்களை மக்களிடமிருந்து இருட்டடிப்புச் செய்ய ஹதீஃத் களில் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை பலகீன மானவை என்றும் பலவீன ஹதீஃத்களை ஆதார பூர்வமானவை என்றும் விதண்டாவாதம் செய்து வருகின்றனர். இந்த அவர்களின் தாஃகூத் என்ற மனித ஷைத்தானியச் செயல்களே ஹதீஃத் மறுப்பா ளர்கள் தமிழகத்தில் வளர்ச்சி பெற காரணமாயிற்று.

Previous post:

Next post: