அறிந்து கொள்வோம்!

in 2018 நவம்பர்

மர்யம்பீ, குண்டூர்,

  1. யாரை நீர் விரட்ட வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
    யாசிப்பவரை நீர் விரட்டவேண்டாம். அல்குர்ஆன் : 93:10
  2. பாறைகளை குடைந்து வசித்த கூட்டத்தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஸமூது கூட்டத்தார். அல்குர்ஆன் : 89:9,10
  3. ஸமூது கூட்டத்தினர் எந்த ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் : 91:12,13
  4. யார் யாரெல்லாம் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை விட்டு தூரமாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்களை. அல்குர்ஆன் : 92:17
  5. ஜிப்ரில்(அலை) அவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    “ரூஹுல் குதூஸ்” என்று கூறுகிறார். அல்குர்ஆன் : 2:87
  6. “குன்” என்றால் என்ன?
    “ஆகுக” என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் : 2:117
  7. யூஸுப்(அலை) அவர்கள் என்ன ஆனார்கள் என்று அவரது சகோதரர்கள் கூறினர்?
    அவரை ஓநாய் தின்றுவிட்டது என்று கூறினார்கள். அல்குர்ஆன் : 12:17
  8. அல்கலம் என்றால் என்ன? எழுதுகோல். அத்தியாயம் : 68
  9. குழப்பம் விளைவிப்பதை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    கொலையைவிடப் பெரும்பாவம் என கூறுகிறான். அல்குர்ஆன் : 2:217
  10. மது, சூது பற்றி அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
    “பலனை” விட “கேடு” மிகப் பெரிது என கூறுகிறான். அல்குர்ஆன் : 2:219
  11. யாரை மேலானவன் என அல்லாஹ் கூறுகிறான்?
    உங்களை கவரக்கூடிய இணை வைக்கும் ஆணை விட முஃமினான அடிமை மேலானவன். அல்குர்ஆன் : 2:221
  12. எதையயல்லாம் சமமாக மாட்டாது என அல்லாஹ் கூறுகிறான்?
    தீயதும், நல்லதும் சமமாக மாட்டாது. அல்குர்ஆன் : 5:100
  13. மனிதனின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    அவசரக்காரனாகவே இருப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் : 17:11
  14. யாருடைய உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
    ஓர் அத்தாட்சிக்காக பிர்அவ்னின் உடலை பாதுகாப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் : 10:92
  15. அழ்ழுஹா என்றால் என்ன? முற்பகல். அத்தியாயம் : 93
  16. மூஸா(அலை) அவர்களுக்கு யார் உதவியாளராக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
    மூஸாவின் சகோதரர் ஹாரூனை (அலை). 25:35
  17. அல்லாஹ்வைத் தவிர வணங்குபவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    நரகத்தின் எரிகொள்ளிகள். 21:98
  18. அல்புர்கான் என்றால் என்ன?
    பிரித்தறிவித்தல். அத்தியாயம் 25
  19. ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன் என அல்லாஹ்விடம் கூறியவர் யார்?
    மூஸா(அலை) அல்குர்ஆன் : 28: 17
  20. சுகபோகிகளை வேதனையைக் கொண்டு நாம் பிடிக்கும் போது அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    அபயக்குரல் எழுப்புவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் : 23:64

Previous post:

Next post: