குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2019 மார்ச்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 12

அபூ அப்தில்லாஹ்

2019 பிப்ரவரி தொடர்ச்சி…..

உதாரணமாக : 12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர் களில் உள்ளவர்” என்று கூறினாள், என்று முடிவுற்றபின், 12:52 வசனத்தில் “இதன் காரணம் நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்” என்றும் 12:53 வசனத்தில் “அன்றியும், நான் என் மனதை பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் இல்லை. ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. என் இறைவன் அருள் புரிந்தாலன்றி, நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கிறான்” என்றும் உள்ளது.

இங்கு சிந்திப்பவர்கள் அஜீஸின் மனைவி கூறினாள் என்று 12:51வசனம் முடிவுற்றா லும், 12:52,53 வசனங்கள் அவள் கூறிய தல்ல 12:51 வசனத்தில் அதற்கு முன்பும், 12:46 வசனத்திலும் இடம்பெறும். யூசுப் (அலை) அவர்கள் கூறிய கூற்றுக்களாகும் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடி யும். தஃப்ஸீர் இப்னு கதீரில் எழுதப்பட் டுள்ள தவறான விளக்கத்தை நம்பிக் கொண்டு 12:52,53 வசனங்கள் அஜீஸின் மனைவி கூறியதுதான் என்று அடம் பிடிக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல் 22:78 வசனத்தில் “இதுதான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்” என்பதற்குப் பின்னர் வரும் “ஹுவ” என்ற அரபிப் பதம் இப்றாஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும் என்று நம்பிக் கொண்டு இப்றாஹீம்(அலை) அவர்கள்தான் “முஸ்லிம்” என்று பெயரிட்டார்கள் என்று நம்புபவர்களும் எழுதுபவர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் இங்கும் அதற்கு முன்னுள்ள வாக்கி யங்கள் குறிக்கும் அல்லாஹ்வையே இந்த “ஹுவ” குறிக்கும் என்பதே சரியாகும். ஆக ஒரு வசனத்தில் தனித்தனி எழுவாய் பயனிலை உள்ள பல வாக்கியங்கள் இடம் பெற்று அதற்குப்பின் அவர் அல்லது அவர்கள் என்ற சொல் இடம்பெறுமானால் அதனை எந்த வாக்கியத்துடன் இணைத்துச் சொல்லவேண்டும் என்பதை முன்பின் தொடர்களைக் கவனிக்கும் போது விளங் கிக் கொள்ள முடியும். அதற்கு முன்னைய வாக்கியத்தையே குறிக்கும் என்று சொல்லு வது தவறு என்பதை 12:51,52,53 மற்றும் 22:78 வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்தி விட்டோம்.

இப்போது 3:7 வசனத்தை அவர்கள் தவறாக மொழி பெயர்த்துள்ளபடி தனித் தனி வாக்கியங்களாகப் பிரித்து எழுதிப் பார்ப்போம்.

  1. அவன்தான் (இந்) நெறிநூலை உம்மீது இறக்கினான்.
  2. இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன.
  3. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படை யாகும்.
  4. மற்றவை முத்தஷாபிஹாத் ஆகும்.
  5. எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முத்தஷா பிஹாத் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.
  6. அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். 7. “”அவை அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவைதான் நாங்கள் அதை நம்பிக்கைக் கொள்கிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
  7. அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள். இப்போது குர்ஆனின் நடைமுறைப்படி 7வது வாக்கியத்தில் இடம்பெறும் அவர்களை அதற்கு முன்னுள்ள 1,2,3,4,5,6 என்ற ஆறு வாக்கியங்களில் எது ஒன்றுடனாவது இணைத்துச் சொல்லட்டும். நாம் மறுக்கப் போவதிலல்லை அல்லது அதற்கு முன்னுள்ள ஆறு வசனங்களுடனாவது பொருத்திக் காட்டட்டும் பார்க்கலாம். 1வது வாக்கி யத்திலுள்ள அவனுக்கு அது பொருந்தாது.

ஆக, இந்த ஐந்து வாக்கியங்களுக்கோ அல்லது முன்னைய ஆறு வசனங்களுக்கோ 7லுள்ள அவர்கள் பொருந்தாது என்பதை அவர்களும் மறுக்கப் போவதில்லை. எஞ்சி இருப்பது 6வது வாக்கியம் மட்டுமே. அவர்களுக்குத் திறமை இருந்தால் 6வது வாக்கியத்தை இரண்டு தனித்தனி வாக்கியங்களாக எழுவாய், பயனிலையுடன் மூல அரபி மொழியில் பேதம் ஏற்படாமல் பிரித்துக் காட்டட்டும்; முடியாது.

எனவே, 7லில் உள்ள அவர்கள் 6ரில் உள்ளவர்களைத்தான் குறிக்கும் என்றால் நிச்சயமாக அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் “அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொள்கிறோம்” என்று மொழி பெயர்க்க முடியுமேயல்லாமல், அல்லாஹ்வை விட்டு கல்வியில் உறுதிப்பாடுடையவர்கள் மட்டுமே அவ்வாறு கூறுவார்கள் என்று பிரித்தெடுப்பதற்கு அல்குர்ஆனில் ஆதாரம் இல்லை. அரபி இலக்கண விதிப்படியும் தவறு என்ற முடிவுக்கே வரமுடியும்.

நம்மீதுள்ள ஒரு கடும் குற்றச்சாட்டுக்கு விளக்கம் :

இதுவரை “முத்தஷாபிஹாத்” வசனங் களை விளங்க முடியாது என்று முல்லாக்கள் சொல்லி மக்களை குர்ஆனை நெருங்கவிடாமல் தடுத்து வந்தனர். ஆனால் இன்று முல்லாக்களை எதிர்ப்பதாக கூறிக் கொள்வோர் “முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியாது என்று கூறி முல்லாக்களின் வேலையை எளிதாக்கி வைத்துள்ளதாக ஒரு கடும் குற்றச்சாட்டு நம்மீது சொல்லப்பட்டிருக்கிறது. “முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியாது என்று நாம் அன்றும் சொன்னதில்லை.

இன்றும் சொல்வதாக இல்லை. நாம் சொல்வது எல்லாம் “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்கு இறுதியான, முடிவான கருத்தைச் சொல்லி “முத்தஷாபிஹாத்” வசனங்களை “முஹ்க்கம்” வசனங்களாக மாற்றும் அதிகாரம் கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கும் இல்லை அந்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்பதேயாகும். குர்ஆனை விளங்கும் தகுதி பொதுமக்களுக்கு இல்லை.

அரபி மொழி படித்த எங்களுக்கே அந்த ஆற்றல் உண்டு என்று முல்லாக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது உண்மைதான். இந்த நிலையில் “முத்தஷாபிஹாத்” வசனங்களை “முஹ்க்கம்” வசனங்களாக மாற்றும் அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்லும். அதாவது கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கு சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் தனிச் சிறப்பு இல்லை என்று சொல்லும் நாம், முல்லாக்களின் பிரிவினை வாதத்திற்கு துணை போகிறோமா? அல்லது கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களுக்கும் அல்லாஹ்வுக்கு இருப்பதுபோல் “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்கு இறுதியான திட்டமான – பொருளைக் கொடுத்து அவற்றை “முஹ்க்கமான” வசனங்களாக ஆக்கும் அறிவு உண்டு என்று சொல்லும் அவர்கள் அந்த முல்லாக்களின் வேலையை இதன் மூலம் எளிதாக்கி வைத்துள்ளனரா? என்பதை சிந்தித்து விளங்க வேண்டும்.

முல்லாக்களுக்குத் துணை போவது யார் என்பதை முடிவு கட்டவேண்டும். பொது மக்களால் முடியாத இந்தச் செயல் அறிவில் உறுதிப்பாடுடையவர் களால் ஆகும் என்றால் அதன் பொருள் என்ன? அதுவும் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இவர்களுக்கும் ஆற்றல் இருக்கிறது என்ற பொருளில் 3:7 வசனத்தில் “அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை (முடிவு-) அறியமாட்டார்கள்” என்று மொழி பெயர்ப்பது எதைக் குறிக்கிறது?

ஆலிம்கள் -அறிந்தவர்கள்-உயர்ந்தவர்கள், அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள்-மவ்லவிகள், அவர் களை ஹழரத்-சந்நிதானம், ஹழரத்-சந்நி தானம் என்று மூச்சுக்கு முப்பது தடவை அழைத்து அவர்களை தெய்வாம்சம் பொருந்தியவர்களாக உயர்த்தி அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு (பொதுமக்களுக்குத்தான் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளங்காதே. மவ்லவிகளாகிய-ஆலிம்களாகிய இவர்களுக்கு மட்டும்தானே விளங்கும்) என கண்மூடி வாய்பொத்தி எவ்வித சுய சிந்தனையுமில்லாமல் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைத்தானே குறிக்கிறது. இப்போது முல்லாக்களின் புரோகித வாதத்திற்கு பிரிவினை வாதத்திற்கு துணை போவது நாமா? அவர்களா? நிதானமாகச் சிந்திக்க வேண்டுகிறோம்.

“முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்கும் வி­யத்தில் முறையாக முயற்சிப்பவர்கள் அனைவரும் பலவிதமாக விளங்குகி றார்கள். ஒரே கருத்தை உறுதியாக-இறுதி யாக சொல்லும் ஆற்றல் அவர்களின் எவருக்கும் இல்லை. அந்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு, கல்வியறிவில் உறுதிப் பாடுடையவர்கள். இவை அனைத்தும் (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத் இருவகை வசனங்களும்) எங்கள் இறைவனிடமிருந்து, வந்தவைதான்; நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொள்கிறோம் என்று சொல்லு கிறர்கள் என்று 3:7 வசனத்திற்கு பொருள் கொள்கிறவர்கள் முல்லாக்களுக்குத் துணை போகமுடியாது. 3:7 வசனத்திலுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அறிவதால், ஆலிம்களுக்கு- அறிஞர்களுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது என்று வாதம் செய்வோரே முல்லாக்களின் பிரிவினை வாதத்திற்கு துணை போகிறார் கள். இதனை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இதுவரை நியாயமான வாதங்கள் அனைத்திற்கும் முறையான விளக்கங் களைக் கொடுத்துவிட்டோம். விதண்டா வாதங்களை மட்டுமே தவிர்த்துள்ளோம். நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு 3:7 வசனம் பற்றிய ஐயப்பாடுகள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம். ஆக 3:7 வசனத்தில் முத்தஷாபிஹாத் வசனங்களின் இறுதி முடிவை அல்லாஹ்வோடு, அறிவில் சிறந்த வர்களும் அறிவார்கள் என்று பொருள் கொள்வது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய குற்றம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களின் நிலைக்குக் கொண்டு வரும் தனிப் பெரும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்த மானதாகும். அந்த தனிப்பெரும் ஆற்றலில் அறிவில் உறுதிப்பாடுடையவர்கள் மட்டு மல்ல வேறு எவரும் பங்குபோட முடியாது. இதுவே தெளிவான தீர்ப்பாகும்.

 3:7 வசனத்தில் வரும் “தஃவீல்” பதத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் கொள்ளாமல் விளக்கம் என்ற பொருளைக் கொடுத்து தானும் குழம்பி மக்களையும் குழப்புவது பெருங் குற்றமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பெரும் வழிகேட்டிலிருந்து நம் அனைவரையும் காப்பானாக. முடிவுரை : அல்குர்ஆனை, முயற்சிப்பவர்களனை வரும் விளங்கிக் கொள்ள முடியும் என்று நாம் சொல்வதை சிலர் தப்பாக புரிந்து கொள்கிறார்கள். அரபியில் இருப்பதை அரபி மொழி தெரியாதவர்களும் பார்த்த வுடன் விளங்கிக் கொள்வார்கள் என்று நாம் சொல்வதுபோல் கதை கட்டி விடுகிறார்கள்.

ஒரு கூட்டத்தில் முகல்லிது மவ்லவி ஒருவர் திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்துப் படித்துக் காட்டி அதனை எல்லோரும் விளங்கிக் கொண்டீர்களா? என கேட்டு நையாண்டி செய்துள்ளார். அவர்கள் எண்ணுவது போல் மூளையற்ற வாதத்தை மக்கள் முன் நாம் எடுத்து வைக்கவில்லை. அரபி மொழியிலுள்ள குர்ஆனை அவர்களது தாய் மொழியில் மொழி பெயர்த்துக் கொடுக்கும்போது, அரபி மொழியிலுள்ளதை அரபிகள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்களோ அதேபோல் அவரவர்களது தாய்மொழிகளில் பெயர்க் கப்பட்டிருப்பதை அந்தந்த மொழியை பேசுபவர்கள் விளங்கிக் கொள்ள முடியும் என்றே சொல்லுகிறோம்.

திருக்குறள் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் மொழி நடையில் இயற்றப்பட்டுள்ளது. இன்றைய தமிழ்மொழி நடையில் அதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். அதிலொன்றைப் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவனும் அதனை விளங்கிக் கொள்வான். அது மட்டுமல்ல, பள்ளிக்கே செல்லாமல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்ப வனும் அந்த உரையைக் கேட்ட மாத்திரத்தில் விளங்கிக் கொள்வான் என்ற உண் மையை அந்த முகல்லிது மவ்லவி அறியாத அறிவிலியாக இருக்கிறார். தமிழ் மொழிக் காவது இப்படியயாரு தடுமாற்றமிருக்கிறது.

100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு தமிழ் உரையைப் படித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள். இந்தத் தடுமாற் றமும் அரபி மொழிக்கு இல்லை என்பதே உண்மையாகும். 1400 வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த அதே மொழி நடை இன்றும் அரபு நாடுகளின் இருக்கத் தான் செய்கிறது. அந்த அளவு அற்புதத்தை அல்குர்ஆன் இன்று வரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதாவது குர்ஆன் இறக்கப்பட்ட அரபி மொழி நடை சாகாமல், ஏட்டுச் சுரைக்காய் ஆகாமல் இன்றும் நடை முறையில் இருந்து வருகிறது. ஏனைய வேதங்கள் அருளப்பட்ட மொழிகள் அனைத்தும் இன்று மக்களின் நடைமுறையிலிருந்து அழிந்து விட்டன. செத்த மொழிகள் ஆகிவிட்டன. அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனை அகில உலக மக்களும் இறுதி நாள்வரை விளங்கிச் செயல்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே அல்லாஹ் இந்த தனி ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

இன்று தமிழ் பேசும் ஒருவர் திருக்குறளின் மூலத்தைப் படித்துவிட்டு தடுமாறுவது போல் அரபி மொழி பேசும் ஒருவர் அல்குர்ஆனை படித்துவிட்டு தடுமாற வேண்டியதில்லை. அவரால் அதனை விளங்கிக் கொள்ள முடியும். அந்த அளவு எளிதாக்கப்பட்டுள்ளது அல்குர்ஆன். அல்குர்ஆனை அனைவரும் விளங்க முடியும் என்று நாம் சொல்வது, 1400 வருடங்களாக அறிஞர்கள் குர்ஆனின் வசனங்களுக்கு கொடுத்திருக்கும் விளக்கங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு சுயமாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லவில்லை. குர்ஆனின் கருத்துக்கு மாற்றமான-தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டு உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது.

நாங்கள் சொல்வதுதான் சரியான விளக்கம் என்று பொதுமக்களை சத்தியப் பாதையிலிருந்து-நேர்வழியிலிருந்து வழிகேட்டிற்கு இட்டுச் செல்வதையே வன்மையாகக் கண் டிக்கிறோம். உதாரணமாக 18:102லிருந்து 106 வரையுள்ள வசனங்கள் அல்லாஹ்வின் அடியார்களை-அவுலியாக்களை தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரும் பாது காவலர்களாக எடுத்துக் கொள்பவர்கள் காஃபிர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் நற்செயல்கள் யாவும் அழிந்து விடுகின்றன. அவர்கள் போய்ச்சேருவது நரகமாகும். அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஆனால் இந்த முல்லாக்களோ பொது மக்களிடம் இந்த வசனங்கள் குறை´ காஃபிர்களுக்காக இறங்கியது. உங்களுக் காக அல்ல. நீங்கள் தாராளமாக இறந்து போனவர்களுக்காக தர்காக்களைக் கட்டிக் கொண்டு, அவற்றை அலங்கரித்து அங்கு சென்று உங்களின் சகல தேவைகளையும் அவர்களிடமும் முறையிடவும், இறந்து போன அவர்கள் உங்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றல் பெற்ற வர்கள் என்று கூறி வழிகெடுக்கிறார்கள். 18:102-106 வசனங்கள் நீங்கள் கூறுவதைச் சொல்லவில்லையே என்று அந்த மவ்லவி களிடம் கேட்டால், உங்களால் குர்ஆனை விளங்கமுடியாது.

நாங்கள் கூறுவது தான் விளக்கம் என்று பொதுமக்களை ஏமாற்றி வழிகெடுக்கிறார்கள். ஆக இந்த மவ்லவிகள் சொல்வது போல் குர்ஆன் விளங்க முடியாத நிலையில் இல்லை என்றே நாம் சொல்லி வருகிறோம். அதேபோல் 7:3 வசனத்தில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை பின்பற்றும்படியும் முன்னோர்களையோ, இமாம்களையோ பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின் பற்ற வேண்டாம் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வால் இறக்கப்பட்டது அல்குர்ஆன், அவனது அனுமதியின்பேரில் அவனது அங்கீகாரத்துடன் உள்ளவை குர்ஆனையும், ஹதீஃதையும் மார்க்கத்தின் அடிப்படை களாக ஏற்றுக் கொள்வது இந்த 7:3 வசனத்தின் கட்டளை. ஆனால் இந்த மவ்லவிகள் எவற்றை மார்க்கமாக உபதேசிக்கிறார்கள். 7:3 வசனத்தின் கட்டளைக்கு நேர்மாற்ற மாக குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக முன்னோர்களின் கற்பனை கட்டுக்கதை களை மார்க்கமாக எடுத்து நடக்கும்படி உபதேசிக்கிறார்கள். தங்களின் தவறான போதனையை நியாயப்படுத்த குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்று இவர்களாக கற்பனை செய்கிறார்கள்.

குர்ஆனையும், ஹதீஃதையும் போல் இஜ்மா, கியாஸையும் மார்க்கத்தின் அடிப்படைகளாக எங்கிருந்து பெற்றார்கள். குர்ஆனிலிருந்து ஒரேயயாரு வசனத்தையாவது காட்ட முடியுமா? 7:3 வசனத்திற்கு முற்றிலும் முரணான இஜ்மா, கியாஸை மார்க்கத்தின் அடிப்படைகளாக ஆக்கிக் கொண்டு, உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது. நாங்கள் கூறுவது தான் விளக்கம் என்று சொன்னால் அதனையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஆக இப்படி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணானவற்றை மார்க்கமாக்கிக் கொண்டு உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது என்று இந்த மவ்லவிகள் மக்களை ஏமாற்றி வருவதைத்தான் தாம் வன்மையாக மறுக்கிறோம், கண்டிக்கிறோம்.

அல்குர்ஆனில் வெள்ளை என்றிருப்பதை கருப்பு என்று சொல்லிக்கொண்டு (உதாரணத்திற்கு குறிப்பிட்டுள்ளோம்) உங்களுக்கு குர்ஆனை விளங்க முடியாது என்று சொல்வதை பகுத்தறிவு சிறிதாவது வேலை செய் யும் எவனாவது ஏற்றுக் கொள்ள முடியுமா? பகுத்தறிவை பயன்படுத்தத் தெரியாத வடிகட்டிய மூடர்கள் மட்டுமே குர்ஆனில் வெள்ளை என்றிருப்பதற்கு கருப்பு என்று இந்த மவ்லவிகள் விளக்கம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். மவ்லவிகள் பொதுமக்களை இப்படி ஏமாற்றி வருவதையே வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அப்படி ஒன்றும் குர்ஆன் விளங்க முடியாத ஒரு நெறிநூல் அல்ல என்று தெளிவுபடுத்துகிறோம். மற்றபடி குர்ஆன் வசனங்களுக்கு இணக்கமான விளக் கங்களைக் கொடுத்துள்ள அறிஞர்களின் கருத்துகளை மதிக்கிறோம். அவற்றை ஆராய்கிறோம் அவற்றிலுள்ள சத்திய விளக்கங்களை மதித்துப் போற்றுகிறோம். இந்த அடிப்படையில் கலீஃபாக்கள், நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள், இமாம்கள், அறிஞர்கள் அனைவரின் குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்த கருத்துக்களை மதித்து ஏற்றுக் கொள்கி றோம். தெள்ளத் தெளிவான குர்ஆன், ஹதீஃத் அறிவுரைகளுக்கு முரணான கருத் துகள் மேலே சொன்ன பெரியார்களின் பெயரால் சொல்லப்பட்டால் குர்ஆன், ஹதீஃதுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்கிறோம்.

7:3 வசனம் இவ்வாறே கட்டளையிடுகிறது. எந்த நிலையிலும் அல்லாஹ் அல்லாத யாரையும் பாது காவலர்களாக எடுத்து அவர்களுக்கு குர்ஆன் தெரியாதா? ஹதீஃத் தெரியாதா? அவர்களை விடவா நாம் அறிந்து கொண்டோம்? என்ற ஷைத்தானின் துர்போதனை யில் சிக்கி அவர்களைக் கண்மூடி பின்பற்று வதை 7:3 வசனம் தெளிவாக மறுக்கிறது. அல்லாஹ்வின் கட்டளையை தலைமேல் கொண்டு அதனையே செயல்படுத்தக் கோருகிறோம்.

இந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஃதுக்குத் தெள்ளத் தெளிவான விளக்கம் இருக் கும் நிலையில் அதற்கு முரணாக, உங்க ளுக்கு குர்ஆன் விளங்காது, ஹதீஃத் விளங்காது என்று சொல்லி, முன்னோர் களின் பெயரால் மார்க்க முரணான காரி யங்களை மார்க்கமாக கற்பித்து மக்களை வழிகெடுத்து இந்த முல்லாக்கள் அற்ப உலக ஆதாயம் அடைவதையே வன்மையாகக் கண்டிக்கிறோம். அதனையே மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

அந்த அடிப்படையிலேயே குர்ஆனை அனைவராலும் விளங்க முடியும் என்று கூறி பொதுமக்களை விழித்தெழச் செய்கிறோம். ஆதம்(அலை) அவர்களது சந்ததிகளில் தோன்றிய இடைத்தரகர்கள்-புரோகிதர்கள் துணிந்து செய்த மாபெரும் குற்றம். இறைவனை மனிதனாக்கியதும், மனிதனை இறை வனாக்கியதுமேயாகும். இதனையே “அத்வைதம்” என்றழைக்கிறார்கள். இந்த மாபெரும் குற்றத்தை இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகத்தை இந்த மவ்லவிகள் இஜ்மா, கியாஸ் என்ற பெயரால் இஸ்லாத்திலும் நுழைத்து விட்டார்கள். தூய “இஸ்லாம்” மார்க்கத்தையும் களங்கப்படுத்தி விட்டார்கள்.

எனவே எங்களது நோக்கம் இதுதான். இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடமே யில்லை. அடியான் அல்லாஹ்விடம் நேரடியாக முறையிட முடியும். எவரும் மார்க்கத் தின் பெயரால் இடைத்தரகர்களாகப் புகுந்து மக்களை ஏமாற்றக் கூடாது. அவர்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக மக்களை வழிகெடுத்து நரகப் படுகுழியில் கொண்டு தள்ளக் கூடாது.

இந்த இடைத் தரகர்களான மவ்லவிகள் நெருப்பை தங்கள் வயிற்றில் நிரப்பக்கூடாது. ஆக பொதுமக்களும், இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளும் உண்மையில் வெற்றி பெற்று மறுமையில் ஈடேற்றம் பெறும் வழியையே மக்கள் முன் வைக்கிறோம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் அவன் கொடுத்துள்ள நேர்வழி சென்று அவனது பொருத்தம் பெரும் நல்லடியார்களாக நம்மனைவரையும் ஏற்றருள் புரிவானாக!

Previous post:

Next post: