அறிந்து கொள்வோம்!

in 2019 ஜுலை

மர்யம்பீ, குண்டூர்,

  1. அல்லாஹ் நம்மிடத்தே எதை பார்க்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
    உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்.  அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்: 5012
  2. எதனை வலுவாக பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன்: 3:103
  3. ஜும்ஆ நாளில் பள்ளிக்கு முதலில் வருபவரின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
    கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு பள்ளிக்கு முதலில் வருபவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போலாவார்.
    அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 881
  4. கொள்ளையடிப்பவனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதென்ன?
    அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என கூறுகிறார். அனஸ்(ரழி), நஸயீ: 3284
  5. ஜோதிடம் பார்ப்பவரின் நிலை பற்றி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு எச்சரிக்கிறார் கள்?
    அவரின் நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.  ஸஃபிய்யா (ரழி), முஸ்லிம் : 4488
  6. இஸ்லாத்தில் கொள்ளை நோய் பற்றிய கருத்து என்ன?
    கொள்ளை நோய் என்பது தண்டனையின் அடையாளம். இதன் மூலம் அல்லாஹ் தன் அடியார்களில் சிலரைச் சோதிக்கிறான். உஸாமா பின்ஸைத்(ரழி), முஸ்லிம்:4456
  7. மலைகளை எதற்காக படைத்தான் என அல்லாஹ் கூறுகிறான்?
    உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக உறுதியாக நிறுத்தினான். அல்குர்ஆன்:16:15
  8. செல்வங்களில் மேலான செல்வம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    நல்ல மனைவி என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் அல் ஆஸ்(ரழி), நஸயீ: 3180
  9. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), முஸ்லிம்:4320
  10. அல்லாஹ் உங்களிடம் எதைப் பார்ப்ப தில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
    உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை.  அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம்: 5012
  11. நளினத்தை இழந்தவரின் நிலை பற்றி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
    நன்மைகளை இழந்தவர் ஆவார்.  ஜரீர்பின் அப்துல்லாஹ்(ரழி), முஸ்லிம் : 5052
  12. தக்க காரணமின்றி கணவனிடம் குலா (பிரி வினை) கோரும் பெண்களை நபி (ஸல்)அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
    ஈட்டுத் தொகை கொடுத்து குலா (பிரிவினை) கோரும் பெண்கள். நயவஞ்சகியர் ஆவர். அபூஹுரைரா(ரழி), நஸாயீ:3407
  13. நோன்புப் பெருநாள் ஃபித்ரா (தர்மத்தை)வை எப்போது தரவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்?
    பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன் தரவேண்டும் என கூறினார்கள். இப்னு உமர்(ரழி), புகாரி: 1509
  14. மாபெரும் பொய்களில் ஒன்றைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதென்ன?
    தமது கண் காணாத ஒன்றை அது கண்டதாக கூறுவது. இப்னு உமர்(ரழி), புகாரி:7043
  15. உங்களில் சிறந்தவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
    தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே.  அபூஹுரைரா (ரழி), புகாரி: 2393
  16. அல்குர்ஆனின் நிலை பற்றி அல்லாஹ் கூறுவதென்ன?
    மக்கள் திரட்டி வைத்திருக்கும் செல்வங்களை விட இது மிக்க மேலானது. அல்குர்ஆன்: 10:58
  17. காரியங்களில் உறுதியானது எது என அல்லாஹ் கூறுகிறான்?
    எவரொருவர் பொறுமையைக் கொண்டு மன்னித்து விட்டாரோ இதுவே காரியங்களில் உறுதியானது. அல்குர்ஆன் : 42:43
  18. நபியின் மீது யார் யார் அருளும், ஸலா மும் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வும், மலக்குகளும் அருளை தேடுவதாகவும், ஆகவே நீங்களும், ஸலாமும், ஸலாத்தும் சொல்லுங்கள். அல்குர்ஆன் : 33:58
  19. உலகில் செயல்களில் சிறந்தது எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    பாவச் செயல்கள் எதுவும் கலக்காத ஹஜ் என கூறினார்கள்.  அபூஹுரைரா(ரழி), புகாரி : 1519
  20. எந்த மாதிரியான பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    கொம்பு உடைந்த, காது கிழிந்தவைகளை குர்பானி கொடுக்கவேண்டாம் என கூறினார்கள். அலீ(ரழி), அஹமத் : 599

Previous post:

Next post: