அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

in 1990 ஏப்ரல்

குர்ஆனின் நற்போதனைகள்:        

தொடர்: 15

அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

    ஏ. முஹம்மது அலி, எம்.ஏ.,எம்.பில்.,

1. நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கி விடுங்கள்: என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறவுரைகள்) வரும்போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தைகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (என ஆதிமனிதர் ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அல்லாஹ் உரைத்தது) (2:38)

2. நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும்

 “அல்லாஹ்வையே வணங்குங்கள்;

 “ஷைத்தானை விட்டு விலகிச் செல்லுங்கள்” என (உபதேசிக்குமாறுநம் தூதர்களை அனுப்பி வைத்தோம்.   (16:36)   

3. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ் படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. (4:64)

முந்திய இறைத்தூதர்களின் கூற்றுகள்:

4. அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (நூஹ்(அலை) கூறியது) (71:3)

5.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.   (நூஹ்(அலை) கூறியது) (26:108,110)

6.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.  (ஹுது(அலை) கூறியது) (26:126,131)

7.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.  (ஸாலிஹ்(அலை) கூறியது) (26:144,150)

8.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.   (லூத்(அலை) கூறியது) (26:163)

9.அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.   (ஷுஐபு(அலை) கூறியது) (26:179)

10. நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (மூஸா(அலை) தனது கூட்டத்தாரை நோக்கி கேட்டது)  (20:93)

11. எனது சமுகத்தவரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கிறேன்(மூஸா(அலை) கூறியது), (40:38)

12. நிச்சயமாக உங்களுடைய இரட்சகன், அர்-ரஹ்மானே! எனவே என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்குக் கீழ்படியுங்கள் (ஹாரூன்(அலை) கூறியது).  (20:90)

13. என் தந்தையே! உண்மையாக உங்களிடம் வந்திராத கல்விஞானம்(வஹி மூலம்) நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே  நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை செம்மையான நேர்வழியில் நடத்துகிறேன்(இப்ராஹிம்(அலை) தனது தந்தையிடம் கூறியது)     (19:43)

14. உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழிப் பெற்றவர்கள்.  (36:21)

ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தமது கூட்டத்தினருக்கு உபதேசித்ததைக் கண்டீர்கள்.

***************************

பாவத்தை விட்டொழிக்காது பட்டினி கிடப்பதால் என்ன பலன்?

ஒருவர் தமது பொய்யையும், தீய செயலையும் விட்டொழிக்க இல்லை என்றால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

Previous post:

Next post: