அறிந்து கொள்வோம்!

in 2022 பிப்ரவரி

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

  1. இப்றாஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை என்ன செய்வதாக கனவு கண்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
    அறுத்து பலியிடுவதாக. அல்குர்ஆன் 37:102
  2. மார்க்கத்தில் இல்லாத புதிய வி­யங்களை உருவாக்கியவனை அல்லாஹ் என்ன செய் வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    சபிப்பதாக. முஸ்லிம் 4002
  3. யூனுஸ் நபி அவர்கள் மீது நிழல் தர எந்த கொடியை முளைக்கச் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    சுரைக்கொடி. அல்குர்ஆன் 37:146
  4. சுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட துஆ எது?
    எனக்கு பின் எவருக்கும் கிடைக்காத ஒரு ஆட்சி. அல்குர்ஆன் 38:35
  5. சேவல்கள் யாரை பார்த்தவுடன் கூவுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    வானவரை. புகாரி :3303
  6. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான சொற்கள் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர். முஸ்லிம் 4330
  7. நீதிபதியிடமிருந்து எப்போது அல்லாஹ் விலகி விடுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    அநீதி இழைக்கும் போது. திர்மிதி 1251
  8. மறுமை நிகழும்போது எத்தனை வகையாக மக்கள் பிரிக்கப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    வலப்புறத்தார், இடப்புறத்தார், ஈமானில் முந்தியவர்கள் என்று மூன்று வகையாக. அல்குர்ஆன் 56:8,9,10
  9. பொய்ப்பிக்கும் வழிகேடர்களின் உணவு எது என அல்லாஹ் கூறுகிறான்?
    ஸக்கூம் மரம். அல்குர்ஆன் 56:51,52
  10. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள் ளப்பட்ட ஆண்டில் எதனை அணிந்து கொண்டு மக்காவினுள் நுழைந்தார்கள்?
    இரும்பு தொப்பி. புகாரி : 5808
  11. குற்றவாளி தனது வேதனைக்கு ஈடாக எதை எதையயல்லாம் கொடுக்க பிரியப்படுவான்?
    தன் மக்கள், மனைவி, சகோதரன், உற வினர்கள் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும். அல்குர்ஆன் 70:11,12,13,14
  12. அல்லாஹ்வின் கண்ணியமான எழுத்தாளர் கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    கிராமன், காத்திபீன்.  அல்குர்ஆன் 82:11
  13. நல்லவர்களின் பதிவேடு எது என்பதை அல்லாஹ் கூறுகிறான்?
    இல்லிய்யூன்.  அல்குர்ஆன் 83:18
  14. கண்டெடுக்கப்பட்ட பொருளை எத்தனை ஆண்டுகள் கழித்து கண்டெடுத்தவர் உபயோகபடுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதி தந்தார்கள்?
    3 ஆண்டுகள் அறிவிப்பு செய்ய வேண்டும்.  புகாரி : 2426
  15. பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சத் தோப்புகளின் பெயர் எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    “அல்புவைரா” புகாரி 2326
  16. கழுதை யாரைப் பார்த்ததும் கத்துகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    ஷைத்தானை. புகாரி 3303
  17. எதனைச் சரியாக கழுவாதவர்களுக்கு நரகம் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    குதிங்கால்கள். புகாரி : 60
  18. நபி(ஸல்) அவர்கள் யூதனிடம் எதை அடமானம் வைத்து உணவு தானியத்தை வாங்கினார்கள்?
    இரும்பு கவசம். புகாரி : 2386
  19. ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருக்கும் காலம் எதற்கு அடையாளம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    மறுமை நாளின் அடையாளம். புகாரி : 5577
  20. வீட்டில் நாய் வளர்ப்பவர்களின் நற்ச்செயல்கள் ஒவ்வொரு நாளும் எந்த அளவு குறையும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    ஒரு கீராத் அளவு. புகாரி : 3324

Previous post:

Next post: