அறிந்து கொள்வோம்!

in 2022 ஜுலை

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

  1. வானங்களையும், பூமியையும் இவற்றிற்கு இடைப்பட்டதையும் எத்தனை நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    ஆறு நாட்களில். அல்குர்ஆன் 50:38
  2. பயபக்தியாளர்கள் மறுமையில் எங்கி ருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    பாதுகாப்பான இடத்தில். குர்ஆன் 44:51
  3. யார் வெற்றிபெற மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    குற்றவாளிகள். அல்குர்ஆன் 10:17
  4. சூழ்ச்சி செய்வதில் மிக விரைவானவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ். அல்குர்ஆன் 10:21
  5. மூஸா(அலை) அவர்களின் கைத்தடி என்னவாயிற்று?
    தெளிவான பெரியதொரு பாம்பாயிற்று அல்குர்ஆன் 7:107
  6. யூனுஸ்(அலை) அவர்கள் எவ்வாறு கடலில் எறியப்பட்டார்கள்?
    சீட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின். அல்குர்ஆன் 37:141
  7. எனது இரட்சகனே! என் உள்ளத்தை நீ விரிவுபடுத்துவாயாக என எந்த நபி பிரார்த்தனை செய்தார்?
    மூஸா(அலை). அல்குர்ஆன் 20:25
  8. என் முகத்தை அல்லாஹ்வுக்கே அடிபணி யச் செய்துவிட்டதாக எந்த நபி கூறினார்?
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள். குர்ஆன் 3:20
  9. எந்த நாளில் வானம் பலமாக அசைந்து சுற்றும்?
    மறுமை நாளில். அல்குர்ஆன் 52:9
  10. அல்குர்ஆனில் மொத்தம் எத்தனை வசனங்கள் உள்ளன?
    6236 வசனங்கள்.
  11. அந்நாளில் பொய்ப்பிப்போருக்கு கேடு தான் என்ற வசனம் எத்தனை முறை எந்த அத்தியாயத்தில் பதிவாகியுள்ளது?
    பத்து முறை. அத்தியாயம் 77, அல்முர்ஸலாத்.
  12. ஸூர் ஊதப்படும் நாள் என்னவாக இருக்கும்?
    ஒரு கடினமான நாளாக இருக்கும்.  அல்குர்ஆன் 74:8,9
  13. எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது எதுவாகிவிடும்?
    மிகக் கெட்டதாகிவிடும். குர்ஆன் 37:177
  14. ஸூலைமான்(அலை) அவர்களின் மாளிகை எவ்வாறாக இருந்தது?
    பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகையாக இருந்தது. குர்ஆன் 27:44
  15. ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர்.
    இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும். அல்குர்ஆன் 26:221, 222
  16. கவிஞர்களை பின்பற்றுபவர்கள் யார்?
    வழிகேடர்கள். அல்குர்ஆன் 26:224
  17. எந்த நபிக்காக நெருப்பை குளிச்சியாக வும், இதமாகவும் நீ ஆகிவிடு என்று அல்லாஹ் கூறினான்?
    இப்றாஹிம் நபிக்கு. அல்குர்ஆன் 21:69
  18. யாரை நேசிக்கமாட்டேன் என அல்லாஹ் கூறுகிறான்?
    பெரும் மோசடிக்காரனான குற்றவாளியை. அல்குர்ஆன் 4:107
  19. தன்னை எப்படி அழைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
    பணிவாகவும், மெதுவாகவும் (அந்தரங் கமாகவும்) அல்குர்ஆன் 7:55
  20. தன்னை எவ்வாறு நினைவு கூற வேண் டும் என நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்?
    மனதில் காலையிலும், மாலையிலும், பணிவாகவும், மெதுவாகவும், உரத்த சப்தமின்றியும். அல்குர்ஆன் 7:205

Previous post:

Next post: