அறிந்து கொள்வோம்!

in 2024 ஜூன்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

1. கவ்ஸர் என்னும் நீர்தடாகத்தின் அளவு என்ன?

ஒரு  மாத  பயண  தூரம்.   (புகாரி: 6579)

2. எந்த நேரத் தொழுகையை தொழுவதால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்?

அஸர்  தொழுகை.   (முஸ்லிம் : 1510)

3. அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு இறந்தோரை உயிர்ப்பித்த நபி யார்?

ஈஸா(அலை).   (அல்குர்ஆன் 5:110)

4. நாம் எதனை நினைவு கூறவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மரணம்.   (திர்மிதி : 2307)

5. இப்றாஹிம்(அலை) அவர்கள் காலத்து மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தார்?

சிலைகளை.   (அல்குர்ஆன் 26:71)

6. மறுமையில் பயபக்தியுடையோருக்கு அருகில் எது கொண்டுவரப்படும்?

சுவனம்.    (அல்குர்ஆன் 26:90)

7. ஒரே இனத்தை சேர்ந்த இரண்டின் நடுவே தடுப்பு இருப்பதாக எதை அல்லாஹ் கூறுகிறான்?

கடல்கள். (அல்குர்ஆன் 55:19, 20)

8. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்?

அய்யூப்(அலை)  (அல்குர்ஆன் 21:83, 84)

9. எந்த நபியின் மகன் நிராகரிப்பாளன் என அல்லாஹ் கூறுகிறான்?

நூஹ்(அலை)    (அல்குர்ஆன் 11:42,43)

10. நரகவாசிகள்  சொர்க்கவாசிகளிடம்  எதை  கேட்பார்கள்?

தண்ணீர்  அல்லது  உணவு.   (அல்குர்ஆன் 7:50)

11. நபி(ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அன்சாரிகள் கூடிய இடம் எது?

பனூசாயிதாசாவடி.  (புகாரி : 2462)

12. முதல் முதலில் மண்ணறையை பிளந்து உயிர்த்து எழுபவர் யார்?

முஹம்மத்  நபி (ஸல்).   (முஸ்லிம் : 4575)

13. புர்கானின்  நாள்  என்று  அல்குர்ஆனில்  குறிப்பிடும்  போர்  எது?

பத்ர்போர். (அல்குர்ஆன் 8:41)

14. எதனை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?

ஆதாயம். (அல்குர்ஆன் 74:6)

15. எவருடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அல்லாஹ் கூறுகிறான்?

நம்பிக்கைகொண்டபின்நிராகரிப்புஅதிகமாக்கிக்  கொண்டவர்களின்  தவ்பா. (அல்குர்ஆன் 3:90)

16. மஸ்ஜிதுந் நபவியில் தொழும் சிறப்பை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?

ஆயிரம்  தொழுகைகளை  விட  சிறந்தது.    (புகாரி: 1190)

17. ஸஃபா மர்வாவில் தொங்கோட்டம் எதற்காக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

இணைவைப்போருக்குதம்பலத்தைகாட்டுவதற்கு.  (புகாரி : 1649)

18. எதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

நோன்பு  துறப்பதை.  (முஸ்லிம்: 2003)

19. தானிய வகைகளில் எந்த அளவு வரை ஜகாத் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஐந்து  வஸ்க்களை  விட  குறைவானவற்றிற்கு.   (முஸ்லிம் : 1780)

20. பெண்களில் முழுமை பெற்றவர்கள் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மர்யம்(அலை) பிர்அவ்னின் மனைவி  ஆசியா  அவர்கள்.   (முஸ்லிம் : 4816)

Previous post:

Next post: