அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாதிஇரவுவரைநின்றுதொழுதநன்மை. முஸ்லிம் : 1162
2. மூன்று குழந்தைகளை மரணத்தின் மூலம் இழந்த பெண்ணின் நிலை என்னவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நரகிற்குசெல்லாமல்தடுக்கப்படுவார்கள். புகாரி : 101
3. அபூ சுஃயானின் வணிகக்குழு பற்றி அறிந்துவர உளவாளியாக நபி(ஸல்) அவர்கள் யாரை அனுப்பி வைத்தார்கள்?
புசைசாபின்அம்ர்அல்அன்சாரீ(ரழி). முஸ்லிம் : 3858
4. ஹஜ் செய்த நபி(ஸல்) அவர்களுக்காக அலி(ரழி) அவர்கள் குர்பானி ஒட்டகங்களை எந்த நாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்?
யமன் நாட்டிலிருந்து. முஸ்லிம்: 2334
5. நபி(ஸல்) அவர்களுக்கு தலாக் செய்திட எந்த நிபந்தனைகளுடன் அல்லாஹ் ஆணையிட்டான்?
இத்தாவைக்கணக்கிட்டுதலாக்செய்திட. அல்குர்ஆன் 65:1
6. இரவு நேர உணவு வைக்கப்பட்டபோது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உணவைஅருந்தவேண்டும். புகாரி : 672
7. படுக்கையில் எவ்வாறு படுக்கவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வலப்பக்கம் சாய்ந்து படுக்கவும். புகாரி:247
8. யூதர்களுடன் போரிடாதவரை எது வராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இறுதி நாள். புகாரி : 2926
9. யாரை ஏசாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இறந்தோரை. புகாரி : 6516
10. நபி(ஸல்) எந்த தொழுகையை தாமதப்படுத்தி தொழுவதை விரும்புபவர்களாக இருந்தார்கள் யார்?
இஷாதொழுகை. புகாரி : 547
11. பத்ருப் போரில் இணை வைப்பாளர்கள் எத்தனை பேரை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர்?
70 பேர். முஸ்லிம் : 3621
12. நரகத்தில் இறை மறுப்பாளரின் கடைவாய்ப்பல் எவ்வாறு இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உஹூத் மலையைப் போன்று. முஸ்லிம்:5479
13. படைப்புகளில் மிக மேலானவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
ஈமான்கொண்டுநற்செயல்கள்செய்பவர். அல்குர்ஆன் 38:7
14. கஅபாவை தவாப் செய்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன?
அடிமையைவிடுதலைசெய்தநன்மை. இப்னு மாஜா : 2947
15. நோன்பாளிகள் மட்டும் சுவர்க்கத்தில் எந்த வாசல் வழியாக செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ரய்யான்என்றவாசல். புகாரி : 3257
16. அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாக பங்கிடாமல் நடப்பவர்களுக்கு மறுமை நாளில் எது உரியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நரகம். புகாரி : 3118
17. நபி(ஸல்) அவர்கள் எதனை வெறுப்பவர்களாக இருந்தார்கள்?
இஷாவுக்குமுன்உறங்குவதை. புகாரி:547
18. ஸஅத் பின் முஆத்(ரழி) அவர்கள் எந்த போரில் மரணமடைந்தார்கள்?
அகழ்ப்போரில். புகாரி: 4122
19. அஸ்ர் தொழுகையை பேணித் தொழுதவருக்கு எத்தனை மடங்கு நன்மை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இரண்டுமடங்குநன்மை. முஸ்லிம்: 1510
20. எந்த நபித்தோழர் நீண்ட காலம் உயிர் வாழ்வதன் மூலம் எங்களுக்கு பயன் கிடைக்க நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டனர்?
ஆமிர்பின்அக்வா(ரழி) புகாரி : 4196