அண்டை வீட்டார் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

in 2026 ஜனவரி

அண்டை வீட்டார் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

S.H. அப்துர் ரஹ்மான்

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட் டும் 

அண்டை வீட்டாரைக் குறித்து இறை நூல் மிக உயர்ந்த முறையில பேசுகிறது. அண்டையவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு முக்கியமான பகுதி என்று இறைநூல் வலியுறுத்துகிறது.

இறைநூல் கூறுவது வசனம் 4:36ல்

அந்த இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதையும் இணைக்காதீர்கள். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் அண்டை வீட்டார், உறவுடையவராக இருந்தாலும், உறவில்லாதவராக இருந்தாலும் அருகிலுள்ள தோழருக்கும், பயண தோழருக்கும், உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். அகந்தையுள்ளவர்களையும், பெருமை பேசுபவர்களையும் அந்த இறைவன் விரும்புவதில்லை. 

இந்த வசனத்தின் முக்கிய கருத்துகள் :

அண்டை வீட்டார் உறவினர் ஆவார்களா இல்லையா என்பதை இறைநூல் வேறுபடுத்த வில்லை. எல்லோருக்கும் நல்லொழுக்கம் கட்டாயம். அண்டையவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, நன்மை செய்யவும் உதவவும் உத்தரவிடுகிறது. அண்டைய வர்களிடம் அகந்தை, அலட்சியம், துன்புறுத்தல்  செய்யக்கூடாது.

இஸ்லாமிய  போதனை :

அண்டை வீட்டாரின் உரிமைகள் சமூக ஒற்றுமைக்கான அடித்தளம். மதம், இனம், மொழி எதுவாக இருந்தாலும் அண்டையவர்களிடம் நியாயத்துடனும், கருணையுடனும் இருப்பது கடமை. இறைத்தூதர் செய்திகளில் அண்டை வீட்டார் குறித்து கூறப்பட்டுள்ளது.

அண்டை வீட்டார் குறித்து இறைத்தூதர் முஹம்மது கூறிய செய்திகள் சிலவற்றை பார்க்கலாம். 

அண்டை வீட்டாருக்கு தீங்கு செய்யா தது. இறை நம்பிக்கையின் அடையாளம். 

இறைத்தூதர் கூறினார்கள்:

ஓர் இறைவன் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவன் தன் அண்டை வீட்டாருக்கு தீங்கு செய்யக்கூடாது” (புகாரி, முஸ்லிம்)

அண்டையவருக்கு தீங்கு செய்து இறை நம்பிக்கையின் குறைவைக் காட்டுகிறது. அண்டை வீட்டாரின் உரிமை மிக உயர்ந்தது. 

இறைத்தூதர்  கூறினார்கள்:

ஜிப்ரீல்(அலை) அண்டை வீட்டார் குறித்து எனக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இறுதியில் அவரை வாரிசாக (பங்காளியாக) ஆக்கிவிடுவாரோ என நான் எண்ணினேன். (புகாரி)

அண்டை வீட்டாரின் உரிமை குடும்ப உறுப்பினர்  அளவுக்கு  முக்கியம். 

அண்டை  வீட்டார்  பசியுடன்  இருந்தால்

நபி  கூறினார்கள் :

தன் வயிறு நிரம்பி, அண்டையவீட்டார் பசியுடன் இருப்பவன் உண்மையான இறை நம்பிக்கை கொண்டவர் அல்ல”. (தப்ரானி)

உணவு, உதவி, சுவனம் அனைத்தும் அண்டையவரின் உரிமை. நல்ல அண்டையவர் சொர்க்கத்திற்கு வழிகாட்ட கூடியவர்.

இறைத்தூதர்  கூறினார்கள்:

சிறந்த தோழன்உன்னை நன்மைக்குத் தூண்டும் தோழன்.

சிறந்த அண்டை வீட்டார்உனக்கு தீங்கு  செய்யாதவன்  (திர்மிதி)

இஸ்லாத்தில்  அண்டை  வீட்டார்  யார்?

இறைத் தூதர் மொழிகளின்படி முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும், சிரமம் தருபவராக இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்வதே முஸ்லிமின் கடமையாகும்.

அண்டை வீட்டாருக்கு தீங்கு செய்யக் கூடாது.

தேவையில்  உதவ வேண்டும்.

மரியாதை பொறுமை, கருணை காட்டவேண்டும்.

இது இறை நம்பிக்கை மற்றும் சொர்க்கத்துடன்  தொடர்புடையது.

அண்டையவர்களின்  உரிமைகள்  பட்டியல்:

அண்டை வீட்டாரின் உரிமைகள் மற்றும் இன்றைய வாழ்க்கையில் அதை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும்  பார்ப்போம்.

அண்டை  வீட்டாரின்  முக்கிய  உரிமைகள்:

தீங்கு செய்க்கூடாது. சுத்தம், தூய்மை இல்லாமை தொந்தரவு வார்த்தையால், செயலில், பார்வையால் கூட பாதிக்கக் கூடாது.

தேவையில் உதவ வேண்டும், நோயில், துயரத்தில், அவசரத்தில் முடிந்த உதவியை மனமுவந்து  செய்யவேண்டும்.

உணவு பகிர்வு, உணவு சமைத்தால் சிறிது பகிர்தல், நபி சூப்பை அதிகமாக்கி அண்டை வீட்டாருக்கு  கொடு  என்றார்கள்.

மரியாதை, பொறுமை, அண்டையவர் கடுமையாக இருந்தாலும் பொறுமையுடன், நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ளுதல்.

பாதுகாப்பு உணர்வு, நம் வீட்டினால் அண்டைய வீட்டார் அச்சப்படக்கூடாது. நம் இருப்பே அவர்களுக்கு நிம்மதியாக இருக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது  எப்படி?

அடுக்கு மாடி வீடுகளில்; அதிக சத்தம் தவிர்த்தல், பொதுப் பகுதிகளில் தூய்மையாக வைத்தல்.

வேறு மதத்தைச் சேர்ந்த அண்டை வீட்டார்கள்: மத வேறுபாடு காரணமாக அலட்சியம் செய்யக்கூடாது, மரியாதை, நல்லிணக்கம்  காட்டுதல்.

சமூக ஊடக காலத்தில் : அண்டை வீட்டாரை பற்றி அவதூறு பேசாமல் இருப்பது, பிரச்சனைகளை  அமைதியாக  தீர்த்தல்.

அண்டை  வீட்டாரிடம்  நல்லொழுக்கம்: 

அது சமூக அமைதிக்கான வழி!

இறைவனின் திருப்திக்கான வழி!

சொரக்கத்திற்கு அழைக்கும் நற்பண்பு நீங்கள் விரும்பினால்,

அண்டை வீட்டாரிடம் செய்யக்கூடாத செயல்கள் :

அண்டை வீட்டார் குறித்து ஒரு சிறிய இறைத் தூதர் சொல் அடிப்படையிலான கதை சொல்கிறேன்.

பொறுமையின்  பலன்:

இறைத் தூதர் முஹம்மது அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒரு மூத்த பெண் தினமும் இறைத் தூதர் அவர்கள் செல்லும் வழியில் குப்பை, மண் போன்றவற்றை வீசுவார், திட்டுவார், தொந்தரவு செய்வார். ஆனால் இறைத்தூதர் ஒருநாளும் கோபப்படவில்லை, பழி வாங்கவில்லை, கடுமையாக பேசவில்லை. ஒருநாள்! அந்தப் பெண் வரவில்லை, இறைத் தூதர் கேட்டார்கள்; “அந்தப் பெண் இன்று ஏன் காணவில்லை?” அவர் நோய்வாய்ப்பட் டிருக்கிறார் என்று அறிந்ததும், இறைத் தூதர் அவரே சென்று நலம் விசாரித்தார்கள். அந்தப் ஆச்சரியமடைந்தார். “நான் உங்களுக்கு தீங்கு செய்தேன்…. ஆனால் நீங்கள் நன்மை செய்கி றீர்களே?” அந்த நல்லொழுக்கம் அவரின் மனதை மாற்றியது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்கும் பாடம் :

அண்டை வீட்டார் தீங்கு செய்தாலும் நன்மையால்  பதிலளித்தல்.

பொறுமை இதயங்களை வெல்லும் ஆயுதம்.

நல்லொழுக்கம் பிரசங்கத்தை விட சக்தி வாய்ந்தது.

நல்ல அண்டை வீட்டார்பேசாமல் இஸ்லாத்தை தன் செயல்கள் மூலம் போதிப்பவன் 

நாமும் நல்ல அண்டை வீட்டாராக இருந்து இஸ்லாத்தை நம்முடைய செயல்களின் மூலமாக போதிப்போம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: