ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : அவர்களுடைய செல்வத்தில் யாசிப் பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. அல்குர்ஆன் 51:19 அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. அல்குர்ஆன் 70:24 “எதைச் செலவு செய்ய வேண்டும்‘ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப்போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்‘ என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:219 அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியு றுத்திக் […]
மன அழுத்தத்திற்கு மாற்று வழி உண்டா? AN திருச்சி இன்றைய காலகட்டத்தில் “மன அழுத்தம்‘ என்பது அனைவரின் வாழ்விலும் விரும் பியோ, விரும்பாமலோ ஒன்றாக கலந்துள்ளது. உடலில் காயங்களால் ஏற்படும் வியாதிகளை கூட ஒருசில நாட்களில் கட்டு படுத்திவிடலாம். அவரவர்களுக்கு உள்ள உடல் வலிமையைப் பொறுத்து நாட்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆகலாம். ஆனால் “மன அழுத்தம்‘ என்றால் என்ன? என்று தெரிந்திருந்தால்தான் அதிலிருந்து விடுபட முடியும். பெரும்பாலோர் “மன அழுத்தம்‘ என்பது இதயத்தினால் மற்றும் மூளையினால் ஏற்படுகிறது […]
அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத், இலங்கை ஜனவரி 24 தொடர்ச்சி…. நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே: நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே அவனே (இந்)நெறிநூலை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (அல்குர்ஆன் 7:196) என்று இறுதி இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது; அல்லாஹ்வே எனது பொறுப் பாளன் அவனே எனக்குப் போதுமானவன்; அவனே எனக்கு உதவியாளன்; அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்; அவனிடமே நான் அபயம் தேடுகிறேன்; அவனே எனக்கு […]
மனிதர்களை வேதனை செய்வதில்….இறைவனுக்கு என்ன லாபம்? N. மர்யம், ஒரத்தநாடு மனித வாழ்க்கை என்பது தொடர் பயணமாகும். ஒவ்வொரு மனிதனின் அவன் செய்த நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலனை அனுபவிக்கும் காலம் பயணத்தின் இறுதியில் நிச்சயம் உண்டு. அதாவது இறைவனின் ஏற்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் மனித படைப்பைப் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். ஆரம்ப மனிதன் மண்ணிலிருந்தும், அடுத்த கட்டமாக […]
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2024 ஜனவரி தொடர்ச்சி…. இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும் அவ்வாறே கூறினார்கள் : ஆகவே, அவள் வந்தபொழுது, உன்னுடைய அரியாசனம் இது போன்றதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள், “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது‘ என்று கூறினாள்; இந்தப் பெண் மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கி றோம் (என்று சுலைமான் கூறினார்) (அல்குர்ஆன் 27:42) இது சுலைமான்(அலை) அவர்கள் சொன்னதுதான் […]
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை! அஹமத் இப்ராஹீம் பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் அல்லாஹ்வை யன்றி வேறு யாரையும் அழைக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18 உயிரற்ற கட்டிடம் ஒருபோதும் இணை வைக்காது. இப்படி இருக்க ஹனஃபி மத்ஹபு பள்ளி இணைவைக்கக்கூடிய பள்ளி. எனவே அங்கே தொழுவது கூடாது. எங்கள் தவ்ஹீத் பள்ளியில் தொழுங்கள் என சிந்திக்கத் தெரியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தவ்ஹீத் புரோகிதர்கள் வழிகெடுத்து சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, வசூல் வேட்டை நடத்தி […]
மனிதர்கள் அந்த இறைவனையன்றி வேறு புகலிடத்தைக் காணவே மாடட்டார்கள்! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்! “இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் அவர்களுக்கு நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து பதராகி அவற்றைக் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மனிதக் கருத்து மார்க்கமாகாது என்று தொடர்ந்து கூறி வரும் “அந்நஜாத்‘ ஹதீத் கலா வல்லுனர்கள், ஹதீத்களை தரம் பிரித்து கூறுவதை சரிகாண்கிறது. ஏற்றுக்கொள்கிறது. அவர்களின் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அவர்களும் மனிதர்கள்தானே! M. அபூநபீல், தேங்காய்பட்டணம் தெளிவு: மேற்படி வாசகர் அந்நஜாத் பத்திரிக்கையானது இதர சமுதாய பத்திரிக்கைகள் போல் மனித சொந்த கருத்தை கூறாமல் ஆதாரபூர்வமான ஹதீத்கள் மட்டுமே அந்நஜாத் பத்திரிக்கையில் இடம்பெறும் […]
தலையங்கம் : அழகிய கடன் கொடுப்பது இறைவனுக்கா? இறைவனுக்காகவா? “கண் பார்வையற்றவர்கள் உதவிக் கேட்டு பாடியபோதுதான் தெரிந்தது, இங்கே காது கேளாதவர்கள் அதிகம் என்று‘. மேற்கண்ட வாசகம் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் மனிதர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதை மிக சுருக்கமாக கூறுகிறது. இவ்வுலகில் பல மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களும் பிறருக்கு உதவி செய்வதை வலியுறுத்தி கூறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்கள் பிறருக்கு உதவிச் செய்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள் […]
புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : டிசம்பர் தொடர்ச்சி… கடமையில்லாததற்குக் கூலி தடையில்லை: ஒரு மொழியைக் கற்று அதனை இவ்வுலகில் கூலி பெற பயன்படுத்தினால் அது தடுக்கப்பட்டதல்ல. அதுவும் பிரசாரம்தான் என்ற வாதம் எடுபடாது. ஒருசிலர் புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்த இப்படியும் வாதம் செய்யலாம். எழுதப்படிக்கத் தெரியாத வரை அவனுக்கு எழுத்து வழி பிரசாரம் கடமையில்லாமல் இருக்கலாம். எழுதப் படிக்கத் தெரிந்துவிட்டால் அதுவும் கடமையாகி விடுகிறதா! எது போன்றது என்றால் ஒருவனுக்குப் […]
அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத், இலங்கை டிசம்பர் மாத தொடர்ச்சி… வானவர்களுக்கும் அல்லாஹ்வே பாதுகாவலன் : (இதற்கு மலக்குகள்) “நீ மிகத் தூய்மை யானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்(களாகிய ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டி ருந்தவர்கள்‘ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 34:41) இறைவா! நீ தூயவன். அதாவது; உன்னுடன் வேறு இறைவன் இருக்கின்றான் என்ற நிலைக்கு நீ அப்பாற்பட்டவன் தூயவன். […]
இறைவனிடம் கையேந்த வேண்டுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனும், இறைத்தூதரும் சொல் லியபடி செய்ததுபடி இறைவனிடம் மட் டுமே கேட்கவேண்டும். இடைதரகர்கள் மூலமோ, இறந்தவர்கள் மூலமோ கேட்பதற்கு இடமில்லை என்பதை ஆணித் தரமாக சொல்லி வந்த பல இஸ்லாமிய பத்திரிக்கைகளில் ‘அந்நஜாத்‘தும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு இருக்க “இறைவனிடம் கையேந்த வேண்டுமா‘ என்ற தலைப்பு “அந்நஜாத்‘தில் இடம் பெற்றிருப்பது மிக வும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்பதில் […]
நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக விரும்பும் மாற்றுமத சகோதரர்! அஹமது இப்ராஹீம் சிவகுமார் என்ற சகோதரர் பல இயக்கங்களாகவும், மத்ஹபுகளாகவும் தரீக்காக் களாகவும் சிதறிக் கிடக்கும் நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக அதாவது முஸ்லிம் ஜமாஅத் என்று ஒன்றுபடவேண்டும் என்று உண்மையாக ஆசைப்படுகிறார். அவருக்காகவும் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்காகவும் இந்தப் பதிவு. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளையான அல்குர்ஆன் 23:52/8:46 வசனத்திற்கே முஸ்லிம் சமுதாயம் கட்டுப்படவில்லை. சுப்ரமணியசாமி என்ற சங்கி இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சம உரிமை […]
ஹஜ் செய்வது அன்றும் இன்றும்! B.A. முகம்மது புகாரி, பெங்களூர் ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று. இது உடல் வலிமையும், பொருளா தாரமும் போதுமான அளவிற்கு உள்ளவர்கள் மீது கடமையாகும். ஹஜ் காலத்தில் மக்காஹ் நகரில் ஹஜ் செய்வது சிறிது கஷ்டமானதுதான் என்றாலும் எவ்வளவுதான் விஞ்ஞான முன்னேற்றங்கள் நவீன வசதிகள் ஏற்பட்டிருந்தாலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே ஹஜ் செய்ய வேண்டியவர்கள் ஓரளவு நல்ல உடல் நலத்துடன் கூடிய வயதிலேயே செய்வது எளிதாக, சிறப்பாக, திருப்தியாக […]
நாம் யாரை பின்பற்றுவது? A.N. திருச்சி நாம் யாரை பின்பற்றுவது என்பது முஸ்லிம் சமுதாயத்தினர்களிடம் இருக்கின்ற மிகவும் முக்கியமான கேள்வி. இந்த கேள்வியானது தமிழக முஸ்லிம்களிடையே சுமார் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எழவில்லை. அதற்கு காரணம் அன்று இரண்டே இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்தன. ஒன்று : ஆலிம்கள் (மதரஸாவில் படித்தவர்கள்) பிரிவு. என்று தங்களைக் கூறிக் கொள்கி றார்கள். இரண்டாவது : அவ்வாம்கள் (மதரஸாவில் படிக்காதவர்கள்) பிரிவு. முதல் பிரிவால் கூறப்பட்டவர்கள். 1. மேற்கண்ட […]
பிறப்புக்கும் – இறப்புக்கும் நடுவே…..!? N. மர்யம், ஒரத்தநாடு மனிதர்கள் பல விசயங்களை மறந்தது போல் கீழ்கண்ட வியங்களையும் மறந்து விடுகிறார்கள். அது என்னவென்றால் : 1. இறையருளால் இந்த உலகத்திற்கு நாம் உயிருடன் வந்தது அடுத்தவர்கள் 2. முதன்முதலில் நம்மை குளிப்பாட்டியதும் அடுத்தவர்கள் 3. இறுதி குளியல் குளிப்பாட்டப் போவதும் அடுத்தவர்களால் 4. நமக்கு பேர் வச்சதும் அடுத்தவர்கள் 5. நமக்கு கல்வியைத் தந்ததும் அடுத்தவர்கள் 6. நமக்கு உணவு, உடை, இருப்பிடம் தந்ததும் அடுத்தவர்கள் […]
சொற்பமானோர்தான் நல்லுணர்வு பெறுவர்! அஹமது இப்ராஹிம் புரோகிதர்களின் பிடியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மீட்டெடுக்க கடும் பாடு படுவோர்க்கான பதிவு: உங்கள் முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தில் நற்கூலி உண்டு. ஆனால் தாஃகூத் என்ற புரோகித மனித ஷைத்தான்கள் இருக்கும் வரை உங்கள் முயற்சி அல்லாஹ் நாடிய ஒரு சிலர்களைத் தவிர பெரும்பாலான முஸ்லிம்களுக்கு எவ்வித பலனுமளிக்காது! (மனிதர்களே!) உங்கள் இறைவனிட மிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெ வரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; […]
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. டிசம்பர் தொடர்ச்சி… இறைத்தூதர் யூஸுஃப்(அலை) அவர்களும் முஸ்லிமாக இருக்கும் நிலையில் மரணிக்கவே பிரார்த்தனை செய்தார்கள் : என் இறைவனே! நிச்சயமாக நீ அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங் களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும், பூமியையும் படைத்தவனே! இம் மையிலும், மறுமையிலும் நீயே என்பாது காவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று […]
நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும். அந்த ஒரே இறைவன் பெயரால்…. இது முற்றிலும் சரியான விசயத்தைக் கூறுகின்ற இறைநூல். புகழ் அழைத்தும் அந்த இறைவ னுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த இறைநூலை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திட வில்லை. இது முற்றிலும் […]
விமர்சனம் : டிசம்பர் 2023, அந்நஜாத். இப்லீஸை வழிகெடுத்தது. கட்டுரை பக்கம் 15, 16, சிறு திருத்த விளக்கம் : மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று: அல்லாஹ்வை நாடிச் செல்லக்கூடிய நேரான வழி. மற்றொன்று: கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தி விடுவான். (அல்குர்ஆன் 16:9) அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர் களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ் […]