உலகில் மிக சிரமமானது எது? அய்யம்பேட்டை, நஜ்முதீன் உலகில்  சிரமமானது…. கோடிகோடியாகபணம்சம்பாதிப்பதா? பெரும்  பதவியில்  இருப்பதா? படித்து  பட்டம்  வாங்குவதா? நாட்டின்  மன்னராக  ஆகுவதா? உலக  அதிசயங்களை  உருவாக்கியதா? விவசாயத்திற்குயாருமேசெய்யமுடியாதஅளவிற்குஉற்பத்தியை   பெருக்கியதா? பெரும்பெரும்தொழிற்சாலைகளைநிர்வாகம்செய்வதா? ஐவேளை  தவறாமல்  தொழுவதா? நோன்பு  வைப்பதா? ஹஜ்  செய்வதா? உண்மையில் மேற்கண்ட எதுவும் இவ்வுலகில் சிரமமானதா என்றால் இல்லை! ஆனால் இவைகள்தான் சிரமமானது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை  அல்ல. எவ்வாறு எனில், 1. அறிவும், ஆற்றலும் இல்லாத பலரும் […]

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்…  அபூ இஸ்ஸத், இலங்கை அக்டோபர் மாத தொடர்ச்சி…. கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விசயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். “மறுமை நாளைப்  பற்றிய  ஞானம்  அல்லாஹ்விடமே  உள்ளது.    (திருக்குர்ஆன் 31:34)  பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார்.  அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் […]

ஆய்வு செய்வோமா? எம். சையத் முபாரக், நாகை இஸ்லாத்தில்  ஆய்வு  உண்டா? மத வேதநூல்கள் எல்லாம் மக்களை சிந்திக்கவோ, ஆராயவோ தூண்டியதில்லை. அல்குர்ஆன் மட்டுமே சிந்தனைச் செய்! ஆராய்ந்து பார்!! என்று  மக்களைத் தூண்டு கிறது. அறிவுக்கு வேலை கொடு என்று சொன்னது இஸ்லாம் மட்டுமே. “அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் உள்ளங்களில் பூட்டுகளா (பூட்டி) இருக்கின்றன?  (அல்குர் ஆன் 47:24)  மேலும் பார்க்க : 3:191, 4:82, 7:185, 12:105, […]

சூனியம் (செய்வது பற்றி அல்குர்ஆன் ஒளியில்) ஓர் அலசல்! அல்குர்ஆன் 2:102 வசனத்தின் அடிப்படையில் ஷைத்தான்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுத்தனர் என்பதை யுஅல்லி மூனன்னாஸ ஸிஹ்ர என்ற அரபிப் பதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அதேபோன்று தான் ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையின் பிரகாரம் அவ்விரு வானவர்களும் மக்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்தனர். இங்கேயும் யுஅல்லிமானி என்ற அரபிப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு […]

குழந்தைகளிடம் எப்படி…?  சேரியான் மறு பதிப்பு : மாற்றுமத பெற்றோர்கள், தங்களின் குழந்தைகள் தங்களை சரிவர கவனிப்பதில்லை, மரியாதையுடன் நடத்துவதில்லை. திருமணமாகி விட்டால் மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோர்களை, கூட பிறந்தவர்களை விட்டுவிட்டு தனிக்குடித் தனம் போய் விடுகிறார்கள். அல்லது பெற்றோர்களை கவனிக்க முடியாத காரணத்தால் முதியோர் இல்லத்தில் பணம் கொடுத்து சேர்த்து விட்டு பிள்ளைகள் மனைவியுடன் சந்தோசமாக வாழ்கிறார்கள். இதில் ஒருசில முஸ்லிம்களும் அந்த முதியோர் இல்லத்தில் காண முடிந்தது. இதற்கு காரணம் என்ன? […]

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்களா? அபூ அப்தில்லாஹ் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். மற்ற சமுதாயங்கள் அனைத்திற்கும் இளிச்சவாயர்களாக முஸ்லிம்களே தெரிகின்றனர். மற்ற எந்த சமுதாயத்தினரும் அல்லது மதத்தினரும் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் பெயராலோ மதத்தின் பெயராலோ தீவிரவாதி என்று பட்டமளிக்கப்பட்டு மீடியாக்களில் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய மக்களோ முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்ற பட்டம் சூட்டி அழைக்கப்படு கிறார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களுக்கு […]

தலையங்கம் : முஸ்லிம்களே! நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமா? “அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சியை வழங்குகின்றான், அதுபோல் தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை பறித்தும் விடுகின்றான். மேலும் அவன் நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறான். அவன் வசமே அனைத்தும் உள்ளது. அல்லாஹ் அனைத்தின்  மீதும்  ஆற்றலுடையவன்”    அல்குர்ஆன் 3:26 மேற்கண்ட திருமறை வசனத்தின்படி அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பது தெளிவாக  தெரிகின்றது. ஆனால் மனிதர்களின் விருப்பம் என்னவென்றால் நாம் யாரை விரும்புகின் றோமோ, யாருக்கு வாக்களித்தோமோ […]

அல்லாஹ்வுக்கு எது பிடிக்கும்? அய்யம்பேட்டை  நஜ்முதீன் மகனுக்கு இது பிடிக்கும்! மகளுக்கு அது பிடிக்கும்! கணவருக்கு இது பிடிக்கும்! மனைவிக்கு அது பிடிக்கும்! தந்தைக்கு இது பிடிக்கும்! தாய்க்கு  அது  பிடிக்கும்! இதுபோன்ற வார்த்தைகளை வாழ்க்கையில் பலரும், பல நேரங்களில் சொல்வதை கேட்டு இருப்போம்; ஏன் நாமே கூட சொல்லியிருப் போம்,  பிடித்ததை  செய்தும்  இருப்போம். இது  எதனால்? நாம் நேசிக்க கூடியவர்களின் அன்பு இன்னும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த அன்பிற்காக நாடு […]

புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் செப்டம்பர்  மாத  தொடர்ச்சி…. புரோகிதர்களில் பெரும்பாலானோர் இதில் மூன்றாம் வகையான கடுமையான லஞ்சமும், பெரும் மோசடியுமான காரியங்களைத்தான் செய்து வருகின்றனர். முன்னர் குறிப்பிட்டது போல் குர்ஆன், ஹதீதை சரியாக பிரச்சாரம் செய்ய, தொழ வைக்க, பாங்கு சொல்ல, குர்ஆன் ஓதிக் கொடுக்க, மார்க்கம் கற்றுக்கொடுக்க இவற்றிற்கு மக்களிடம் கூலி வாங்குவது லஞ்சமாகும். அதே சமயம் கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது, ஸலாத்து நாரியா, தர்கா சடங்குகள், பீர், முரீது, மத்ஹபு, தரீக்கா, […]

தூதர் வழியும்! முன்னோர்கள் வழியும்!! அஹமது இப்ராஹீம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழி ஒன்றே இம்மை மறுமை வெற்றிக்கு  ஆதாரமாகும். முன்னோர்களின் வழி அது மறுமையில் நிச்சயம்  நரகமே: “அல்லாஹ் இறக்கி அருளிய (நெறி நூலின்)பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்‘ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது‘ என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களா கவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் […]

அந்த மாளிகை யாருக்காக? N. மர்யம்,  ஒரத்தநாடு உலகில் பிறந்து இறந்த, இருக்கின்ற எல்லோருக்கும். “அந்த மாளிகை‘யில் நுழைய வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஆசையாகும். அந்த ஆசையில் தவறேதுமில்லை. அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று. எதுவொன்றையும் அடைய வேண்டுமானால் அதற்காக சில தியாகங்களை செய்தே ஆக வேண்டும். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுவே நியதியாகும். அந்த தியாகங்கள் உயிரோ, பொருளோ, நேரமோ, உழைப்போ இவைகளில் எதுவொன்றாகவும் இருக்கலாம். உலக விசயத்திலே சின்ன […]

மண்ணுக்குள் மறைந்திருக்கும் மகத்தான மருந்துகள் ஹலரத் அலி,  திருச்சி. அல்லாஹ்  கூறுகிறான்… உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைக் கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவிக்(தயம்மம்) செய்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 4:43, 5:6) நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்: “பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாக வும், தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர் தொழுகை நேரம் எங்கு வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்‘ அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), அமஹ்மத், பைஹகீ(ஹதீத் சுருக்கம்) இப்பூமியில் உள்ள மண் அனைத்தும், தூய்மையானது என்று […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. செப்டம்பர்  மாத  தொடர்ச்சி….. யார் இறை நம்பிக்கை கொண்டு முஸ் லிமாகி போதுமான அளவு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு தமக்கு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்று அல்லாஹ்வின்  தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) முஸ்லிம் 1903, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், மற்றுமொரு ஹதீதில், யாருக்கு இஸ்லாத்தின் வழிகாட்டப்பட்டு அவரது வாழ்க்கைக்குப் போதுமானதாக அமைந்து அதையே போதுமெனக் கருதினாரோ அவருக்கு வாழ்த்துக்கள் […]

கோழி முதலா? முட்டை முதலா? A.N. Trichy கோழி முதலா? முட்டை முதலா? என்ற கேள்விக்கு விடை தெரிஞ்சால் என்ன? தெரியாமல் போனால் என்ன? இதுவொன்றும் அவ்வளவு முக்கியமான விசயமில்லையே என பலர் நினைக்கலாம்  அல்லது  அலட்சியப்படுத்தலாம். பொதுவாக எல்லோருக்கும் எல்லாமே தெரியுமா? என்றால் தெரியாது. சிலருக்கு தெரிந்த சில சாதாரண விசயங்கள் வேறு சிலருக்கு தெரியாமல் இருப்பது நிஜம்; அது எதார்த்தமும் கூட. ஆனால் மனிதர்களில் சிலர் தெரியாததை தெரிந்தமாதிரி நடித்து பல விசயங்களை தெரிந்து […]

மனிதனும்! மண்ணும்! அபூ அஹமத் நாம் வாழ்கின்ற இந்த பூமியானது உலகம் படைக்கப்பட்டபோது இருந்ததை விட பல மாற்றங்களை அடைந்துள்ளது. ஆதம் – ஹவ்வா என்ற இரண்டு பேர் மட் டுமே இருந்த இந்த பூமியில், பல ஆயிரக் கணக்கான கோடி மனிதர்கள் பெருகி வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இப்போது இருப்பவர்களும் மறைவார்கள், இன்னும் வருவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள். மனிதனின் தோற்றத்தைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும் முடிவைப் பற்றியும் அல்லாஹ்  கூறுவது : “அவனே உங்களை ஓர் ஆத்மாவிலி […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்  இறுதி இறைநெறிநுலை! ­ரஹ் அலி, உடன்குடி கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின்  பெயரால்….. மக்கள் உலக வாழ்வின் புறத்தோற் றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமை யைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக் கின்றனர். என்ன அவர்கள் தங்களைப் பற்றி என்றைக்கேனும் சிந்தித்ததில்லையா?    (இறைநூல்:30:7,8) இறை நம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக்  கொள்ளுங்கள். (இறைநூல் : 66:6) உங்கள் […]

இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறைநூல்! S.H. அப்துர் ரஹ்மான் அந்த ஒரே இறைவனின் பெயரால்… இந்த இறைநூல், யாவரையும் மிகைத் தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அந்த இறைவனிடமிருந்தே  இறக்கியருளப்பட்டது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்ச யமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட் சிகள்  இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணி களைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள்  இருக்கின்றன. மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதி லும், வானத்திலிருந்து அருள் மாரியை அந்த இறைவன் இறக்கி […]

இஸ்லாத்திற்காக இரு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்…! கலீல், கோட்டூர். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்த ஆரம்ப காலப் பிரிவு அப்போது ஏழு நபர்கள் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றிருந் தனர். எட்டாவதாக அபூபக்கர் அஸ்ஸித்தீக் (ரழி) அவர்களின் கரத்தைப் பற்றி ஏறத்தாழ முப்பது வயதுடைய அப்து அம்ர் என்பவர். இஸ்லாத்தைத்  தழுவினார். அபூபக்கர்(ரழி) அவர்களின் கரத்தில் இஸ்லாத்தை ஏற்ற 5 பேரில் இவரும் ஒருவர் ஆவார். அப்து அம்ருக்கு நபி (ஸல்) அவர் களே அப்துர் ரஹ்மான் எனப் […]

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… அபூ இஸ்ஸாத், இலங்கை நபி(ஸல்) அவர்கள் செப்டம்பர்  மாத தொடர்ச்சி…. கல்வியாளர்கள்   கைப்பற்றப்படுதல் : (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிக மாகும். காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது. புகாரி: 7121. மேலும், காலம் சுருங்கி, அமல்கள் குறைந்து, கஞ்சத் தனம்  பெருகி,  குழப்பங்கள்  தோன்றுவது: அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் (மறுமை நாள் நெருங்கும் போது) […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. மற்ற நபிமார்களுக்கு அனுமதிக்காததை நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதித்ததாக நபி(ஸல்) அவர்கள்  கூறியது  என்ன? பூமி முழுவதும் சுத்தமாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி), புகாரி:335 2. யாருடைய செயலால் தயம்மம் வசனம் இறக்கப்பட்டது? ஆயிஷா(ரழி) தொலைந்து போன கழுத்தானிக்கான செயலுக்காக. உர்வா என்ற அறிவிப்பாளர். புகாரி : 336 3. திருமணம் செய்ய சக்தி பெறாதோர் எதைச் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்? நோன்பு நோற்க கூறினார்கள். […]