மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை” எம். சையத் முபாரக், நாகை செப்டம்பர் மாத தொடர்ச்சி….. “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று ஒருவர் கேட்டபோது “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடும் என) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ர் தொழுவீராக!’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ( புகாரி : 1137 ) “எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். […]
ஐயமும்! தெளிவும்! ஐயம் : அல்லாஹ் மனிதர்களிடம் இறுதித் தீர்ப்பு நாள் வரை பேசவே மாட்டானா? அறியத் தாருங்கள். ஆத்தூர் சுல்தான்ஜீ தெளிவு : இறுதி நாள் வரை மட்டுமல்ல, எந்தவொரு நபிமார்களிடமும் கூட அல்லாஹ் நேரிடையாக பேசவில்லை. மனிதரிடத்தில் வஹீ மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தான் விரும்பியதை அறிவிப்பதன் மூலமோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்த வன், ஞானமிக்கவன். […]
தலையங்கம் : சுதந்திர நாள்! உலக நாடுகளில் சுதந்திரம் வழங்கப்பட்ட நாடுகளை விட வாங்கப்பட்ட நாடுகளே அதிகம். இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்றால் வாங்கப் பட்டது. வழங்கப்பட்டதற்கும், வாங்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொருளோ, இடமோ எதுவாக இருந்தாலும் விலை பேசாது கொடுக்கப்படுவதற்கு வழங்கப்பட்டது என்று பொருள். அதுவே விலைபேசி கொடுக்கப்பட்டிருந்தால் வாங்கப்பட்டது என்று பொருள். இந்தியாவின் சுதந்திரம் வாங்குவதற்காக கொடுக்கப்பட்டது பல நூற்றுக்கணக்கான தலைவர் களின் உயிர், பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர், […]
இஸ்லாம் மார்க்கம் ஏன் எதிர்க்கப்படுகிறது? அய்யம்பேட்டை – நஜ்முதீன் உலகில் பல நூற்றுக்கணக்கான மதங்கள் உள்ளன. அதில் ஒருசில மதங்கள் மட்டும் பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது. அவற்றுல் கிருஸ்த்தவ மதம், யூத மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம் ஆகியவை பரவலாக எல்லோராலும் அறியப்பட்டவையாகும். இவைகளுக்கு வேத நூல்களும் உள்ளன. அவை அனைத்தும் மனித கரங்களால் உருவாக்கப்பட்டு குறைபாடுகளுடன் இருக்கின்றது. இருப்பினும் அவைகள் அதிகமாக விமர்சனத்திற்கு ஆளாகுவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் எதிர்க்கப்படுகிறது. இஸ்லாம் […]
இறைவனுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்ய நினைக்கும் இறைமறுப்பாளர்கள்! பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு, மக்களை பல பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் பிறக்கப்போகும் ஆண் குழந்தையால்தான் தனக்கு முடிவு காத்திருக்கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகி போன சரித்திரம் இவர்களுக்கு தெரியாதா? சிந்தித்து பார்க்க வேண்டாமா? இறை நிராகரிப்பாளர்கள் உங்களை ஒழித்துக் கட்டுவதற்காக எப்படியயல்லாம் சூழ்ச்சி பண்ணிக் […]
இஸ்லாமியர்கள் சாத்தானின் (ஷைத்தானின்) குழந்தைகளா? A.N. மிக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சீமான் என்பவர் பேசியபோது இஸ்லாமியர்களும், கிருஸ்த்தவர்களும் சாத்தானின் குழந்தைகள் இவர்கள் இருவரும் என குறிப்பிட்டார். மேற்கண்ட பேச்சுக்கு கிருஸ்த்தவ சமுதாய தலைவர்களோ! அதை சார்ந்தவர்களோ பொங்கி எழவில்லை. ஆனால் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் என்று மக்கள் மத்தியில் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு முன்னிலைப்படுத்துகின்ற சிலர் பொங்கி எழுந்தனர். பல கண்டன குரல்கள், சீமானே! மன்னிப்பு கேள்! என் றெல்லாம் முழங்கினர். “சீமான்‘ என்பவர் சொன்னதைப் போல […]
பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… இருமுறை நற்கூலி கொடுக்கப்படும் : இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தான தருமங்களில் செலவும் செய்வார்கள். (28:54) அதாவது முந்தைய “தவ்ராத்‘ வேதத்தையும், பிந்தைய “குர்ஆன்‘ வேதத்தையும் நம்பிக்கை கொள்வதெனும் இருவகையான இப்பண்பைப் பெற்ற இவர்களே இருமுறை பிரதிபலன் வழங்கப்படுவர். முந்தைய தூதர் மூஸா(அலை) அவர்கள் பிந்தைய தூதர் […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநுலை! சரஹ் அலி, உடன்குடி கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின் பெயரால்….. தம் இறைவனிடம் இருந்து வந்த தெளிவான சான்றில் இருப்பவர், யாருக்கு தமது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டுத் தம் மனவிருப்பங்களைப் பின்பற்றினார்களோ அவர்களைப் போன்றவரா (என்ன)? (இறைநூல் : 47:14) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு : மக்களுக்கு ஒரு மோசமான காலம் வரும். அக்காலத்திலே உண்மை பேசுபவர்களை பொய்யர்களாக கருதுவார்கள். பொய் பேசுபவர்களை உண்மையாளர்களாக கருதுவார்கள். துரோகியை […]
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? K.S.H. அபூ அப்துர்ரஹ்மான் மறு பதிப்பு : அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமை யாதது தண்ணீர். எனவேதான் “நீரின்றி அமையாது உலகம்‘ என்றான் வள்ளுவன். ஒரு ஊரில் ஆறு ஓடாவிட்டால் அந்த ஊரில் வளமில்லை என்பதைக் குறிக்க “ஆறில்லா ஊர் பாழ்‘ என்ற பழமொழியும் நாமறிந்ததே. இதை இன்னும் விரிவாகக் கூறினால், “நீரில்லா கோள் பாழ்‘ இது உண்மை! விண்வெளியில் எத்தனையோ கோள்கள் சுழல்கின்றன. இவை அனைத்தையும் விட […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. எந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல் மழை பொழிந்தான்? லூத் நபி சமுதாயத்தின் மீது. (அல்குர்ஆன் 27:52) 2. பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? அர்ரஹ்மானின் அடியார்கள்தான். (அல்குர்ஆன் 25:63) 3. நூஹ் நபியின் மகனைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? நிச்சயமாக அவன் உனது குடும்பத்தை சேர்ந்தவனில்லை. (அல்குர்ஆன் 11:4) 4. உம்மி என்று யாரை அல்லாஹ் கூறுகிறான்? எழுத்தறிவற்றவர்களை. (அல்குர்ஆன் 2:78) 5. […]
புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எமது பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட ஹஜ்ரத்(?)களை, மவ்லவிகளை, லெப்பைகளை மிகக் கடுமையாகச் சாடி வருவதாக எம்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏதோ சொந்தக் காரணங் கொண்டு அல்லது பொறாமையினால் அவர்களை நாம் வெறுப்பதாகப் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். செய்திகள் பரப்பி வருகின்றனர். அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்கள் மீது எமக்குச் சொந்த வெறுப்போ, பொறாமையோ அணுவத்தனையும் இல்லை. ஒரு காலத்தில் நாமும் மற்றவர்களைப் […]
நான் அவன் இல்லை… A.N. மேற்கண்ட தலைப்பு எங்கேயோ கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவு இருக்கலாம். ஆம்! உண்மைதான். நம் கட்டுரையில் வரும் கதாநாயகன் படித்து, பட்டமும் வாங்கிவிட்டு மக்களை ஏமாற்றுவார். அந்த படத்தின் கதாநாயகன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியது உண்மையே. ஆயினும் நமது இந்திய சட்டத்தின் உள்ள ஓட்டைகளின் (குறைகளின்) காரணமாக சாதுரியமாக நீதிமன்றத்தின் (ணூPளீ) தண்டனை யிலிருந்து தப்பித்து விடுவார். ஆயினும், “நான் அவன் இல்லை‘ என்பார். அதுபோல் நம் கதாநாயகன் தப்பித்து விடுவாரா? […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… அபூ இஸ்ஸத், இலங்கை ஆகஸ்ட் தொடர்ச்சி…. ரோமானியர்கள் : கிழக்கு ரோமானியர்கள் பாரசீகர்களால்முதலில் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும் வெற்றி பெற்றார்கள் என்பதாகும். (கிழக்கு) ரோமாபுரி வெற்றி கொள்ளப்பட்டது. அண்மையிலுள்ள பிரதேசத்தில் (வெற்றி கொள்ளப்பட்டது இருப்பினும்) அவர்கள் தாம் தோல்வி கண்ட பின்னர் விரைவில் வெற்றி பெறவுள்ளனர். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (அவர்கள் வெற்றி பெறவுள்ளனர் இதற்கு) முன்னரும் (இதன்) பின்னரும் (ஆட்சி) அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. (அவர்கள் வெல்லும்) அந்நாளில் […]
தனிமையும், தவறும்… அபூ அஹமத் எனது சமூகத்தில் சில மனிதர்களை நான் மறுமையில் அறிந்து கொள்வேன். அவர்கள் திஹாமா மலையைப் போன்று நன்மைகளை செய்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய நன்மைகளை ஒன்றும் இல்லாத புழுதிகளாக அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி தோழர்கள் கேட்டார்கள்; அவர்கள் யார் என்பதைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்பதாக. ஏனெனில் அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அவர்கள் உங்களுடைய […]
மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை‘ எம். சையத் முபாரக், நாகை ஆகஸ்ட் மாத தொடர்ச்சி….. முதலில் மக்கள் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக வெவ்வேறு பகுதிகளில் வசித்தனர். அப்போது ஒரு செய்தி உடனுக் குடன் எல்லோரையும் சென்றடையும் வாய்ப்பு இல்லை. அதனால் அங்கங்கு பிறை பார்த்து நோன்பு பிடித்தனர். இரு பெரு நாள்களையும் கொண்டாடினர். இதற்கு உதாரணமாக, டெலிபோன் (தொலைபேசி) கூட இல்லாத காலத்தில் வெளிநாடு சென்ற ஒருவர் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு ஒரு செய்தியைக் கேட்டு அறிய […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்! S.N. குத்புதீன் மறு பதிப்பு : அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நிய மானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்‘ என்பதை நாம் பரவலாய், வார்த் தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக் கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோமாய் மாறிவிடாமல் நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக் […]
தலையங்கம் : அந்த கால ஃபிர்அவ்னும் இந்த கால ஃபிர்அவ்னும் இறைவனுடைய ஒரு பெரும் சோதனையே! இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) எந்த ஆத்மா வும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்காது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. அன்றி, […]
அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா? அய்யம்பேட்டை நஜ்முதீன் இன்றைய நவீன உலகத்தில் மீடியாக்களால் முழங்கப்படும் ஒரே மந்திரம் “பரபரப்பு‘ என்பதே. இந்த மந்திரத்தை தங்களது மீடியாக்களின் வளர்ச்சிக்காக “உயிர் மூச்சாக‘ சுவாசிக்கப்படு கின்றது. மீடியாக்களால் சொல்லப்படும் “பரபரப்பு‘ என்பது உண்மையா என்றால் இல்லை. ஆனால் அதை நம்பக்கூடியவர்கள் பல்வேறு துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அதுபோல் நவீன மருத்துவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் பெரும்பாலோரின் மூலமந்திரம் முன்பு காச நோயாக (வீய) இருந்தது. தற்போது அவர் களின் மூலமந்திரம் இரத்த அழுத்தம், […]
மார்க்க அறிஞர்களால் பூதகரமாக்கப்படும் “பிறை‘ எம். சையத் முபாரக், நாகை முஸ்லிம் சமுதாயத்தினர் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக பல்வேறு பகுதியில் முன்பு வசித்து வந்தனர். அதன் காரணமாக ஆங்காங்கே தென்படும் பிறையை பார்த்து ரமலான் மாத நோன்பையும், பெருநாளையும் தீர்மாணித்தனர். அதனை மார்க்க அறிஞர்களும் சரியயன கூறினர். பின்பு மக்கள் தொகை பெருகி பல்வேறு ஊர்களும் பெருகி மற்றும் விஞ்ஞான வளர்ச்சியும் அடைந்துள்ளது. அதன் காரணமாக எந்தவொரு செய்தியையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய வளர்ச்சியின் […]
முஸ்லிம்களே ஒன்றுபடுவோம்…. அன்சர் யரீப் பின் R.A. மாலிக் இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத் துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங் களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி […]