கடைசி பக்க சிந்தனை! தியாகம் எங்கே?  K.M.H.  நபி இப்ராஹீம்(அலை) அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி தள்ளாத முதுமைப் பரு வத்தில் ஆசையுடன் பெற்றெடுத்த அருமை மகனையே குர்பானி கொடுக்கத் தயாரா னார்கள். சோதனையில் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார் கள். மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட் டான். அவர்களின் தியாக வாழ்க்கையை முன் மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் ஈத் (பெருநாள்) தொழுகைக்குப் பிறகு குர்பானி […]

தடுக்கப்பட்டது மீடியா வருமானமா? புரோகித வருமானமா?  அன்புள்ள  சகோதரர்களே! உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்! இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே மீடியா வருமானம் ஹராமாக பார்க்கப்படு கிறது. ஆனால் அதைவிட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் முஸ்லிம்கள் குர்ஆனை சுயமாக படித்து புரிந்துகொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். ஹராமும், ஹலாலும் 1444 வருடத்திற்கு முன்னரே நபி(ஸல்) அவர்களால்  […]

K.M.H. அபூ அப்தில்லாஹ் அன்புள்ள  சகோதரர்களே! யார் சாதனையாளர் என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதிலைத் தருவார்கள். ஒரு அரசியல்வாதியிடம் கேட்டால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி, முதன்மந்திரி, பிரதம மந்திரி ஆகிறவர்கள் சாதனையாளர்கள் என்பார். பல கோடிகளைத் திரட்டி வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரிடம் இதைக் கேட்டால் பணம் பண்ணுவதே சாதனை என்பார்; பெரும் படிப்புப் படித்துப் பெரும் மேதையாகத் திகழ்பவரிடம் கேட்டால் கல்வியின் மூலம் மேதையாகத் திகழ்பவரே சாத னையாளர் என்பார்; புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து […]

முஸா(அலை), ஈஸா(அலை) ஆகியோருக்கு கடமையாக்கப்பட்ட வார வழிபாட்டு நாள் எது?  அபூ ஹனிபா, புளியங்குடி. இன்றைக்கு நாம் வெள்ளிக்கிழமை ஜூம்மாவுடைய நாளை வார வழிபாட்டு நாளாக கொண்டிருக்கிறோம். அதுபோல யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையம் வார வழிபாட்டு நாளாக  கொண்டிருக்கிறார்கள். மூஸா(அலை) அவர்களுக்கு சனிக்கிழமையும். ஈஸா(அலை) அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாக அல்லாஹ் தான் நிர்ணயித் தான். மூஸா(அலை) அவர்கள் சனிக்கிழமை தான் வார வழிபாட்டை நடத்தினார்கள். ஈஸா(அலை) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தான் வார வழிபாட்டை […]

அறியாதவற்றை கற்றுக் கொடுத்த படைத்த இறைவனும்! பொய்யாக்கி வரம்பு மீறும் மனிதனும்!!  S.H. அப்துர் ரஹ்மான்  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால்  துவங்குகிறேன். யாவற்றையும் படைத்த உம்முடைய இரட்சகனின் பெயரைக் கொண்டு வாசிப் பீராக!  அட்டை போல் ஒட்டிக்கொள்ளும் நிலையிலிருந்து  மனிதனை  படைத்தான். வாசிப்பீராக! உம் இரட்சகன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையயல்லாம் கற்றுக் கொடுத்தான். எனினும் நிச்சயமாக மனிதன்  வரம்பு  மீறுகிறான். அவன் […]

சோதனைகளின்  நோக்கங்கள்!  அபூ இஸ்ஸத், இலங்கை  மே  மாத  தொடர்ச்சி…. இறை நம்பிக்கையோடு நன்றி செலுத்திக் கொண்டு  இருக்கவேண்டும்  என்பதற்காக: நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது ஈமான் கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (4:147) அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்  என்பதற்காகவே : அல்லாஹ் தனது அடியார்களுக்கு உணவு (மற்றும் சொகுசான வசதிகளை) விரிவாக்கிவிட்டால், அவர்கள் பூமியில் […]

முஸ்லிம்களே! ஒரே அமீரின் கீழ் ஒன்றுகூடுங்கள்!  அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக்  நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறிய வில்லையா? (அல்குர்ஆன் 2:107) (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகின்றாய்; நீ நாடியோரை கண்ணியப் படுத்துகின்றாய்; நீ நாடியோரை இழிவு படுத்தவும் செய்கின்றாய்; […]

மனிதர்கள்!  S. அப்துல் நாசர், மங்களூர்  அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும், வாழ்க்கையின் எல்லா நிலை களிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். மனிதன் தன் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சுயநலம் மிக்கவன். தொழி லானாலும் சரி, அவன் வாழ்க்கை நிலைகள் ஆனாலும் சரி அனைத்திலும் மனிதன் சுய நலம் மிக்கவன். பிற மனிதர்களின் துன்ப நிலைகளைக் கண்டு சிரிப்பவன்; அல்லது ஏளனம் செய்பவன்தான் மனிதன், சாலைகளில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் மனிதர்களுக்கு […]

ஹிஜாப், பர்தா, புர்கா, அபாயா!  மீரான்  ஹிஜாப், பர்தா, புர்கா மற்றும் அபாயா இந்த நான்கு பெயர்களும் முஸ்லிம் பெண்களுடன் தொடர்புப்படுத்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் வார்த் தைகள். இது தொடர்பாக முஸ்லிம்களிடையும் தெளிவு இல்லாத சூழ்நிலையில் சர்ச்சை தொடரத்தான் செய்கிறது. ஆகவே இது தொடர்பான புரிதல் பெறும் நோக்கில் மட்டுமே  இந்த  பதிவு. முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அணியும் ஆடை யைத்தான் இந்த நான்கு பெயர்களிலும் அழைக்கிறார்கள். இவற்றுள், ஹிஜாப் என்பது ஆடையே […]

வலப்புறத்தை முற்படுத்துங்கள்!  K.S.H.அபூஅப்தில்லாஹ்  அல்லாஹ் படைத்த அத்தனைப் படைப்பினங்களும் பொருள்களும் இரண்டு இரண்டாகவே உள்ளன. படைப்பில் சிறந்தவனாகிய மனிதனையும் ஆண், பெண் என ஜோடியாகவே படைத்துள்ளான். இதையே “”நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி, ஜோடியாகப் படைத்தோம்‘ அல்குர்ஆன் 51:49 என்று அல்லாஹ் கூறுகிறான். இப்படி ஜோடி, ஜோடியாகப் படைத் ததில் ஒவ்வொன்றிலும் வலது, இடது என இரு புறங்களையும் அமைந்திருக்கின்றான். மனிதனின் அவயங்களும் வலது இடதாகவே உள்ளன. மனிதன் சுற்றித் திரிந்து சுதந் […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!  எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  மே  மாத  தொடர்ச்சி…. அபூசினான்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எனது மகன் சினானை நான் அடக்கம் செய்தேன். அப்போது கப்ரில் இருந்த என்னை அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் எனது கையைப் பற்றித் தூக்கி வெளியேற்றிவிட்டு “நான் உமக்கு ஒரு நற்செய்தி சொல்லட்டுமா?’ என்று கேட்டார்கள் நான் சரி சொல்லுங்கள் என்றேன் அவர் கூறினார். ஓர் அடியாரின் குழந்தை இறந்துவிட்டால் அல்லாஹ் உயிரைப் பறிக்கும் வானவரை அழைத்து மரணத்தின் வானவரே! […]

வணக்கத்திற்குரியவன்… அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை!  அப்துல் ராஸிக்  உலகத்தில் அல்லாஹ் மனிதனுடைய சிந்தனையில், மனிதனுடைய பார்வையில், அவன் இதயத்தில் அகிலலோகங்களையும் அவற்றிலுள்ளவற்றையும் படைத்திருக்கின்ற படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்பதை ஆக்கிவிட்டான். வானமும், பூமியும் உலகத்தில் உள்ளவை அனைத்தும் படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்று சாட்சியளிக்கின்றன. இது எல்லா மனிதனுடைய சிந்தனையிலும் இருக்கிறது. ஆனால் அவன் ஒருவன்தான் என்பதை இந்த உலகத் தில் நிலை நாட்டுகின்ற பாக்கியம், அவன் ஒருவன் தான் என்பதை இந்த உலகத்தில் […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ, குண்டூர்  1. எந்த கலீஃபாவின் ஆட்சிக் காலத்தில் அல்குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது? உஸ்மான் (ரழி) 2. நபி(ஸல்) அவர்களின் ஹதீத்களை அதிகமாக அறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்களின்  மனைவி  யார்? ஆயிஷா(ரழி) 3. திக்ருகளில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? லாயிலாஹா  இல்லல்லாஹ் 4. ஆரம்பகால ஸஹாபாக்கள் தஞ்சம் புகுந்த நாடு  எது? அபீஸீனியா 5. தொழுகையில் அவசியம் ஓத வேண்டிய சூரா எது? அல்ஃபாத்திஹா 6. தீயோர்களின் […]

விமர்சனம்! விளக்கம்!!  விமர்சனம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அன்பு அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு, முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும்! அந்நஜாத் மே மாத இதழ் கண்டேன். அன்று அல்லாஹ்வுடைய பள்ளி இன்று சுன்னத் வல்ஜமாஅத் பள்ளி என்ற கட்டுரை (பக்கம் 23) அபூ உவைஸ் என்ற சகோதரரால் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. மவ்லவிகள் என்ற மத புரோகிதர்களின் சூழ்ச்சிகளைப் பற்றி அதில் தெளிவாக்கப் பட்டிருந்தது. அக்கட்டுரையை எழுதிய சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் மார்க்க அறிவை விசாலப்படுத்த அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். […]

தலையங்கம் : தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! மக்களுக்கு மார்க்க பிரச்சாரம் செய்யப்போவது எப்போது?  அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். இறைச்செய்தி 23:52 வசனத்தின் அடிப்படையிலான ஒரே சமுதாய அமைப்பான இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா?  அல்லது அல்குர்ஆன் 3:105 வசனத்தின் எச்சரிக்கை யான இயக்கங்கள், மத்ஹபுகள், தரீக்கா போன்ற வழிகெட்ட பிரிவினை மதமாகிய போலி இஸ்லாமிய மதத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா? எதைப் பற்றிப் பிரச்சாரம்  […]

சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதற்காகவே இருக்கிறது; “பரீட்சைக் காக‘ கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர் கள். (21:35) பிறந்தவன் ஒருநாள் இறக்கத் தான் வேண்டும் இந்த பொது விதியிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு இல்லை இடைப்பட்ட காலத்தில் “பரீட்சைக்காக‘ சோதனைகள் உண்டு; இதுகுறித்து இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பின்வரும் கவிதை வரிகளை எடுத்துக்காட்டாகக்  கூறியுள்ளார்கள். எனது இறப்பைச் சிலர் எதிர்பார்க்கின் றார்கள்; நான் […]

உறவுகளை பேணிக்கொள்ளுங்கள்… அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக் மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமை களைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்  மீது […]

பிறந்தநாள் விழா! புத்தாண்டு விழா! ஐய்யம்பேட்டை நஜ்முதீன்  2023ம் புத்தாண்டு தொடங்கி 3 மாதங் கள் கடந்துவிட்டது, அதுபோல் ஹிஜ்ரி 1444ம் ஆண்டு  முடிந்து இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு வர இன்னும் 3 மாதங்களே  உள்ளன. புத்தாண்டையும், பிறந்த நாளையும் உலகம் முழுவதும் பெரும்பாலோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையும், அன்றைய தினம் பல ஆயிரம் கோடி செலவு செய்வதையும்  பார்க்கின்றோம். உண்மையிலேயே  இது  மகிழ்ச்சியான  நாளா?  சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக […]

ரமழான், ஈத் சிந்தனை! K.M.H.அபூ அப்தில்லாஹ்  21ம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சிகளாக இருப்பது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர் களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறியும் அவலங்களாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ் தான் முஸ்லிம் […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  2023  மார்ச்  தொடர்ச்சி… அய்யாமுல் யபீழ் எனும் 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட் களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கதாதா இப்னு மில்ஹான்(ரழி) ரியாளுஸ் ஸாலிஹீன் 1263, அபூதாவூத்:2449) மேலும், அல்லாஹ்வின் “”அய்யாமுல் யபீழ் (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) […]