“ஸ்பீடு’ – வேகம்  – இன்ஜினீயர் மறு பதிப்பு “எந்த மவ்லவிகளானாலும், அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் கூறிய உண்மையான நேர்வழியைக் காட்டமாட்டார்கள்” என்று “அந்நஜாத்’ மூலம் சொல்லிக்காட்டிக் கொண்டே இருக்கிறோம். இவ்வுண்மையை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் “அல்லாஹ் அர்ஷ´ன் மீதா? அல்லது ஆகாயத்திலா?” என்ற ஒரு 21ம் நூற்றாண்டுக்கு மிகவும் தேவையான ஒரு கேள்வியை அவர்களாகவே கேட்டுக் கொண்டு பதிலையும் அவர்களாகவே கொடுத்துக் கொண்டுள்ளார்கள். இப்படி ஒரு அறிவுமிக்க ஒரு கேள்வியை எவருமே நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். […]

ஹதீஃத் பெட்டகம்… Dr. A.  முஹம்மது அலி, ஜுன் மாத தொடர்ச்சி : அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் விளக்குகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய் பெண்களுடன் உணவு உண்ணமாட்டார்கள். அவர்களது வீட்டில் தங்க வைக்க மாட்டார்கள். எனவே நபித்தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் மாதவிடாய் பற்றி வினவினார்கள். அல்லாஹ் அருளிய வஹீ (இறைச் செய்தி)யை 2:222 ஓதிக் காட்டினார்கள். இதற்கு விளக்கமாக, மாதவிடாய் பெண்களுடன் உடலுறவைத் தவிர அனைத்தும் அனுமதிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்கள். இதனைச் செவியுற்ற யூதர்கள், இம் மனிதர் […]

மனிதனே உனக்கு மறு உலக வாழ்வு உண்டா? S.H.  அப்துர் ரஹ்மான் “இவ்வுலக வாழ்வு மட்டுமே மனிதனுக்கு உண்டு. மறு உலக வாழ்க்கை என்பது கற்பனையைத் தவிர வேறில்லை” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். …”(இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறு உலக வாழ்வு என்று) ஒன்றும் இல்லை, நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப்பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். (இறைநூல்: 6:29) இவ்வுலக வாழ்க்கையின் முடிவு மரணமே, இதை யாரும் மறுக்க முடியாது. […]

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை! அபூ ஃபாத்திமா மறு பதிப்பு : “(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத் தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோ ருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோ ருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான், அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய இறைநெறிநூலை இறக்கி வைத்தான், எனினும் அந்நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்தபின்னரும், தம்மி டையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் […]

அய்யாமுல் ஜாஹிலிய்யா அறியாமைக் காலத்து மடமைத்தனம்… – ABA மனித சமுதாயத்தை சீர்திருத்தும் உயர்ந்த எண்ணங்களோடு இலட்சியங்களோடு, இன்றைய உலகிலே பல்வேறு இயக்கங்கள் பாடுபடுவதாக கூறுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இதிலே பகுத்தறிவு வாதம் பேசுவோர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் “ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் கீழ் வருவது பகுத்தறிவா? அல்லது அவரவர், மொழி ரீதியாக, இன ரீதியாக தத்தமது இஷ்டத்திற்கு வாழ்வை அமைத்துக் கொள்வது பகுத்தறிவா? என்ற இரண்டு கேள்விகளை மக்கள் முன் […]

விமர்சனமும்! விளக்கமும்!! – ABA விமர்சனம் : அந்நஜாத் ஜூன் 21 இதழ். பக்கம் 13ல் தப்லீக் மர்கஸிற்கு விவாதத்திற்கு வர அழைப்பு விடுத்து அனுப்பிய கடிதம் கண்டேன். அந்நஜாத்திற்கு தப்லீக் மீது இவ்வளவு வன்மம் ஏன் என்பது எனக்கு புரியவில்லை. 1985க்கு முன் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்களும் அந்த பணியை செய்தவர்கள்தான் அதன்பிறகு தப்லீக் ஜமாஅத்திற்கு மட்டுமல்ல, முக்கியமான அனைத்து மதரஸாக்களுக்கும் கடிதம் எழுதினார்கள். எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பின் அதனை மக்கள் […]

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு! குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அதை நிறைவேற்ற விரும்பினாலும், பெருநகர்களில் ஆள், இடம் தோதில்லாமல் தயங்குகிறார்கள். வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு, அங்கு குர்பானி மிருகங்களின் அதிக விலை உயர்வு பெரும் தயக்கத்தைத் தருகிறது. அவர்களுக் காகவே இந்த ஏற்பாடு. ஆடு ஒன்றுக்கு ரூ.11,000/- அல்லது மாடு ஒரு பங்குக்கு ரூ.2600/- அனுப்பித் தந்தால், உங்களுக்குரிய குர்பானியை இங்கு தமிழகத்தில் நிறைவேற்றித் தருகிறோம். இன்ஷா அல்லாஹ். குர்பானி வகைக்கு […]

தலையங்கம்! கொரோனா வைரஸ் – 2019 (COVID – 19) 2019ல் கொரோனா என்ற வைரஸால் ஏற்பட்டதாக கூறப்படும் வியாதி தான் COVID-19. கடுமையான சுவாச நோய்க் குறி இருப்பதாகக் கூறி இதற்கு SARS-CoV2 (SEVERE ACUTE RESPIRATORY SYNDROME-CORONA VIRUS2) என்ற அதிகாரப்பூர்வ பெயரை இட்டது உலக சுகாதார அமைப்பு (WHO) உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் பயங்கர தொற்று நோய் என்று உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் எல்லோராலும் பேசும் பொருளாகிக் கொண்டிருக்கிறது. நோய் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 10 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு இந்த தலைப்பில் சென்ற தொடர்களில் மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாக்கி அது கொண்டு பிழைப்பு நடத்தும் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் எத்தனை வகையினர்? இப்படி அவர்களிலும் பல பிரிவினர் ஏற்படக் காரணம் என்ன? என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தோம். அவர்களில் ஆக அடிமட்டப் புரோகிதர்களான இறந்தவர்களுக்கு சமாதி கட்டி அவை கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் தர்கா முகல்லிது புரோகிதர்கள் […]

ஜமாஅத் அல்முஸ்லிமீன் ஏன்?  எதற்கு? ஹளரத் அலீ,  ஜித்தா “எவர்கள் விரும்புகிறார்களோ அவர் களை மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுவித்து அல்லாஹ்வுக்கே அடிபணியும் வாழ்க்கை முறைக்கு அழைத்து வரவேண்டும். இந்தக் குறுகிய உலக வட்டத்திலிருந்து விடுவித்து விசாலமான உலகின்பால் கொண்டுவரவேண்டும். அநீதமான வாழ்க்கை முறைகளின் கொடுமைகளிலிருந்து விடுவித்து இஸ்லாம் அளிக்கும் நீதியின் நிழலுக்குள் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்களை (மக்களை) இறைநெறியின் பால் அழைக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சத்திய நெறியை வழங்கி வல்ல இறைவன் […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 70 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

முஸ்லிமை காஃபிராக்கும் மடமையைக் கொளுத்துவோம்! இப்னு ஆதம்,   சென்னை. மறு பதிப்பு : இன்றைய காலச் சூழ்நிலையில், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பார்த்து “காஃபிர்’ என்று சொல்லி, தான்தான் “ஒரிஜினல் முஸ்லிம்’ என்று பீற்றிக்கொண்டு நடப்பதைப் பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலை “தவ்ஹீத் மவ்லவிகள்’ என்று தங்களை தம்பட்டம் அடிக்கும் “மார்க்கப் பிரிவினை வாதிகள்’ வந்த பிறகு தலைவிரித்தாடுகிறது. “மத்ஹபுகள் கூடாது’ என்று சொன்ன இவர்கள் “தங்களுக்குள் குறுகிய காலத்தில் பல மத்ஹபுகளாகப் பிரிந்து, பிரித்து சாதனைப்பட்டியலில் […]

நீரால் தூய்மை செய்வது இஸ்லாம் சொன்னது. S.H.  அப்துர் ரஹ்மான் உடல் தூய்மை பற்றி பார்ப்போம்! இஸ்லாத்தில் தூய்மையாக இருப்பது அவசியம். உடை தூய்மை, உடல் தூய்மை உள்ளத்தூய்மை போன்றவை பற்றி இஸ்லாம் வலியுறுத்துகிறது. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான். மேலும் (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.  (அல்குர்ஆன்: 25:48) தூய்மையான நீரைக் கொண்டு அடிக்கடி ஒழு செய்து உடலை தூய்மையாக வையுங்கள்: யஹ்யா […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி,  உடன்குடி நிச்சயமாக மனிதன் பதற்றமிக்கவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் துன்பம் நேரும்போது கலக்கமடைகிறான். தனக்கு நன்மை ஏற்படும்போது (வசதி வாய்ப்புக்கள் மற்றும் செல்வம் வரும்போது மன இறுக்கம் உள்ளவனாக ஆகி மகா கஞ்சனாகி விடுகிறான். தொழுகையாளிகளைத் தவிர… (தொழுகையாளிகள் இத்தகைய தவறுகளில் இருந்து விடப்பட்டிருக்கிறார்கள்) (இறைநூல்: 70:19-22) அல்லாஹூம்ம  மஸ்துர் அவ்ராத்தினா வ ஆமின் ரவ்ஆத்தினா. இறைவா! என் மானத்தை பாதுகாப்பாயாக! வாழ்க்கையில் திடுங்கங்கள் வரா மல் பதரும் நிலை ஏற்படாத […]

குழந்தைக்கு பெயரிடுவதும் அகீகாவும்…. M.A.  ஹனிபா பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காக வும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது. “அகீகா” என்பதா கும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்கு பெயரிட வேண்டும். இதுதான் “அகீகா” கொடுப்பதன் முறை! இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “பையன் (பிறந்த) உடன் “அகீகா” (கொடுக்கப்பட்டால்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) “குர்பானி” கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) […]

ஹதீஃத் பெட்டகம்… Dr. A.  முஹம்மது அலி, அல்லாஹ்  தெளிவுபடுத்துகிறான்: நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள், நீர் கூறும்: “அது ஓர் (இயற்கையான) உபாதையாகும். ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள், பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சய மாக அல்லாஹ் நேசிக்கிறான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 2:222) மாதவிடாய் ஒரு இயற்கையான […]

திருமண அவலங்கள்… (பகுதி-3) Y. முகமது ஹனீப், திருச்சி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான் : படாடோபமான ஆடம்பரத் திருமணங்களை நடத்தி நம் சமூகம் எவ்வாறெல்லாம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி சென்ற ஆக்கங்களில் பார்த்தோம். இப்போது இன்னும் சில திருமண அவலங்கள் பற்றியதான நடைமுறைகளை பார்ப்போம். பெண் பார்த்து முடிவு செய்தல் என்பது நபிகளாரின் காலத்தில் சாதாரணமான ஒரு விஷயமாகவே இருந்து வந்தது. ஒரு சஹாபி “நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணக்கப் போகிறேன்”, என்று நபி(ஸல்) அவர்களிடம் […]

தலையங்கம்! மின்சார வாகனம் வருகிறது! நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சினையால் நம் நாட்டின் தலைநகர் டெல்லி திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே டெல்லிதான் இப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புதிய புதிய வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசிய அல்லது அவசர சூழலில் மத்திய, மாநில அரசு கவனம் செலுத்தி வந்ததன் பயனாக, மின்சார வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாடு பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர […]

இதுதான் இஸ்லாம் காட்டும் கல்வி படைப்பினங்களை ஆராய்ந்து படைத்தவனை அறியும் கல்வி! S. ஹலரத் அலீ மறுபதிப்பு : சமீபத்தில், சவூதி நாளிதழ் “அரப் நியூஸ்’ (Arab News) படித்தபொழுது, ஒரு அமெரிக்கரின் கடிதம் கண்ணில் பட்டது. கோர்டன் ரீட் (Gordon Reade) என்பவர் எழுதுகிறார், “ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இருண்ட காலத்தில் இருந்தபொழுது, அரேபிய முஸ்லிம்கள் கல்வி, கலை, அறிவியல், கணிதம் மற்றும் இராணுவத் துறைகளில் உச்சநிலையில் இருந்ததாகவும், குறிப்பாக, இன்று எனது அமெரிக்கா […]

பெண்கள் காதுகளில் துளையிட அனுமதியுண்டா? அகமது இப்ராஹீம், புளியங்குடி பெண்கள் தங்களை தங்கம், வைரம், வெள்ளி போன்றவைகளை கொண்டு ஆபரணங்கள் செய்து தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் காலகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. தங்கம், வெள்ளி என்றாலே அது பெண்களுக்கான ஆபரணங்கள் என்றே கருதப்பட்டு வருகிறது. இத்தகைய ஆபரணங்கள் அணிய காதுகளில் துளையிட்டுக் கொள்வது ஆதிகாலத்திலிருந்து வரும் நடைமுறையாகும். இஸ்லாமிய மார்க்கத்திலும் காது குத்தி, அதில் காது வளையங்கள், கம்மல் போன்ற ஆபரணங்கள் […]