இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் -9 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு “ஜாஹிலிய்யா” என்ற மடமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த அன்றைய அரபு மக்களை அறிவின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்கள் இறைவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள். அதற்காக அவர்கள் கையாண்ட முறை, முன்னோர்களையும், முன்சென்ற அறிஞர்களையும் மூடத்தனமாக நம்பி அவர்களின் அடிச்சுவற்றில் நடைபோட்ட அந்த மக்களை அதிலிருந்து திசை திருப்பி இறைவனது இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதனது போதனைகள்படி நடைபோட வைத்ததேயாகும். […]

திருமண அவலங்கள்… (பகுதி-2) Y. முகமது ஹனீப், திருச்சி வரதட்சணை வி­யத்தில் சொல்ல வேண்டுமானால், அதைக் கண்டித்து பேசக் கூடியவர்கள் பேசிப்பேசியே வாய்கள் புளித்துப் போய் சலித்துப் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு தெளிவாகவும், கடுமையாகவும் ரோஷம் வரும்படியும் பேசியும் நம் முஸ்லிம் சமூகத்துக்கு புத்தி வரவில்லை. நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வரதட்சணை கொடுமைகளுக்கான தண்டனை சட்டங்களையும் இயற்றிவிட்டார்கள். ஆனாலும் நம்மவர்கள் திருந்தவில்லை. பெண் பேசச் செல்லும்போதே நன்கு விசாரித்துக் கொண்டு நல்ல பசையுள்ள ஆட்கள் […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! M. அப்துல் ஹமீத் தொடர் : 69 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி […]

குர்ஆனின் நற்போதனைகள்… மனிதனின் மறுபக்கம்! Dr. A. முஹம்மது அலி, மறுபதிப்பு : 1. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:6) 2. மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 18:54) 3. நான் இறந்தால் மீண்டும் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா? எனக் கேட்கிறான். (அல்குர்ஆன் 19:66) 4. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நாம் நிச்சயமாக முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்கவேண்டாமா? (அல்குர்ஆன் 19:67) 5. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். […]

தொழுகையில் வரிசையின் ஒழுங்கு! K. ரஹிமுத்தீன், திருச்சி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழுங்கு தொழுகையை முழுமைப்படுத்துவதில் உள்ளது. (புகாரி : 723, முஸ்லிம்:433) வரிசையில் சமமாக நில்லுங்கள் : வரிசையில் சமமாக நில்லுங்கள். தோள்பட்டை அருகே நிற்பவரின் தோள்பட்டையுடனும் உங்கள் பாதங்கள் அருகே நிற்பவரின் பாதத்துடனும் சேர்ந்து நில்லுங்கள் (இல்லையயனில்) உங்கள் முகத்தை அல்லாஹ் வேறுபடுத்திவிடுவான். (புகாரி:717-725, முஸ்லிம்:436) அல்லாஹ் பிற்படுத்தி விடுவான்: நீங்கள் (ஜமாஅத்திற்கு) முந்துங்கள். என்னை பின்பற்றுங்கள். […]

இயக்கம்! – கு. நிஜாமுதீன் மறு பதிப்பு : இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலகிலிருந்து ஒழித்துவிட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் முயற்சிகள் அதிவேகமாக செய்யப்பட்டு வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற புரட்சிக்கு தலைமை தாங்கும் சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. இம்முயற்சிகளை முறியடிக்க அவ்வப்போது பல இயக்கங்கள் உலக அளவில் தோன்றின. இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இங்கு முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களின் […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்… எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை ஏப்ரல் மாத தொடர்ச்சி…. உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்க முடியாது: உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்கமுடியாது. (இது) உம்முடைய இறைவனால் தீர்மானிக்கப்பட்டு விட்ட உறுதியான முடிவாகும். (19:71) என்பதாக இறைவன் குறிப்பிடுகின்றான். இதில் நல்லோர் தீயோர் யாராக இருந்தாலும் நாளை மறுமையில் நரகத்தில் நுழைந்து அதைப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள் என்பது தெளிவு. (நபியே!) இவை உம்முடைய இறைவன் […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி மறைந்த திரை, இதயத்தில் உறை, காது செவிடு : நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம். எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறை போட்டு விடுவோம். மேலும், அவர்கள் காதுகளை செவிடாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம் அதிபதியின் கட்டளைகளை எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகத்தை திருப்பி சென்று விடுகின்றார்கள். (இறைநூல்: 17:45,46) […]

ஆட்சியை அளிப்பவன் அல்லாஹ்வே! இறைப்பிரியன் இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, யார் ஆட்சியை கைப்பற்றுவது என்று தெரிந்து விடும் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்னதாகவே பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய ஊடக பேரங்கள் வாயிலாகவும், மத்திய அரசின் எடுபிடி யாக செயல்படும் தேர்தல் கமி­னின் இதுவரை நம் தமிழக அரசியல் சரித்திரத் தில் நடைபெறாத சில அதிரடி செயல் பாடுகளினாலும் ஆட்சிக்கு […]

தலையங்கம்! தேர்தல் வருது!  தேர்தல் வருது!  ஓட்டுப்போடுங்க!! சட்டசபைக்கான தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை பயன்படுத்தும் நாள் இது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியைத் தொடரச் செய்யலாமா? அல்லது தேர்தலில் களம் காணும் பிரதான எதிர்கட்சி திமுகவையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியையோ ஆட்சியில் அமர்த்தலாமா என்று மக்கள் முடிவெடுக்கும் நாள் இது! மாநிலத்தின் இதுபோன்ற ஒவ்வொரு தேர்தலும் அந்தந்த மாநிலத்தை ஆளும் அரசின் வலிமையைக் கொண்டு […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 8 மறு பதிப்பு : இஸ்லாமிய நிறைவு பெற்று, உலகம் அழியும் வரை இஸ்லாம் மார்க்கமாக்கப்பட்டு, இறுதி நெறிநூல் அல்குர்ஆன் ஒரு புள்ளி கூட மாற்றப்பட முடியாத நிலையில் இறைவனால் பாதுகாக்கப்பட்டிருந்துநம், மார்க்கத்தை மதமாக்கி, அதைத் தொழிலாக்கிப் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள், இஸ்லாத்திற்குள்ளும் சட்டவிரோதமாக கொல்லைப்புற இடுக்கு வழியாகப் புகுந்து கொண்டு, செய்து வரும் தில்லுமுல்லுகளையும், அட்டூழியங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவர்களில், பிணத்தை மக்கள் நடமாடும் […]

நோன்பு ஆரம்பம், பெருநாள் தினம் பற்றிய அறிவிப்பு! அன்று தொழுகையின் நேரங்களை சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் கண்டே உரிய நேரங்களில் தொழுது வந்தனர் முஸ்லிம்கள். ஆனால் இன்றோ சூரிய ஓட்டத்தை எந்த முஸ்லிமும் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இதுபோலவே அன்று தலைப்பிறையைக் கண்ணால் கண்டே நோன்பு நோற்க ஆரம்பித்தது போல், அடுத்த பிறையைக் கண்ணால் கண்டே நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியது போல், இன்றும் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் அவசியம் மார்க்கத்தில் இல்லை. இன்று சூரியன், […]

இஸ்லாத்தின் இலட்சியம்!     ஒன்றுபட்ட சமுதாயம்!! நபிகால  இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல்  இஸ்லாம் (தொடர் – 2) நாங்கள் யார்? நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும் நாங்கள் பல அமைப்புகளாய், பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால் எங்களை தாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம். சேவைகள் அடிப்படையில் செயல்பட வசதியாய் பல்வேறு குழுக்களாய் இயங்கி வருகிறோம். நன்மைதானே! நன்மைகள் தானே செய்துவருகிறோம். ஒன்று முடக்கப்பட்டாலும் மற்றொன்றின் மூலம் செயல்பாடுகள் தொடரலாமே…. ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டதொரு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் […]

தானதர்மங்களைக் குறித்த சில நினைவூட்டல்! M.A. ஹனிபா, பொட்டல்புதூர். தர்மங்கள் செய்வதை இஸ்லாம் அதிகமாக ஆர்வமூட்டியுள்ளது. அவற்றில் சில… ‘மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். நன்மையும் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.” (2:195) “நம்பிக்கையாளர்களில், தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதனையும்(தர்மம் செய்ய) பெற்றுக் கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்வோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 68 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் :  அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி நிம்மதியாக இருக்கிறார்களா? சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராது என்று அல்லது அவர்களே உணராத வகையில் யுக முடிவு நாள் திடீரென வராது என்று அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? (அல்குர்ஆன் : 12:107) நீங்கள் ஒரு சோதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. (மற்றவர்களையும் தாக்கும்) நிச்சயமாக அல்லலாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். […]

முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருப்பவை எவை? எவை? H.S. ஜாஹிர் ஹுஸைன், சென்னை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஈமானிய உணர்வின் மூலம் அவரவர்கள் தங்களால் முடிந்த அளவு என்று சொல்வதை விட அளவுக்கு அதிகமாகவே தங்களின் பங்களிப்பால் இஸ்லாத்திற்காக பெரும் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். உத்தம சஹாபாக்கள், அந்த தியாகங்கள் என்பது உயிராலும், உடலாலும், பொருளாலும், ஹிஜரத் செய்வதன் மூலமும், சொத்து சுகங்களை இழந்ததின் மூலமும், வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, பல தற்காப்புப் போர்கள் செய்து […]

சிந்திப்பவர்களுக்காக…. அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம். வானங்கள் மற்றும் பூமியில் அமைப்பையும், அல்லாஹ் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களது “தவணை” நெருங்கிவிடக்கூடும் என்பதையும் அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?  இதன்  பின்னும் அவர்கள் எந்த விஷயத்தைத்தான் நம்பப் போகிறார்கள்? (இறைநூல் 7:185) சில நூறு மைல்கள் பூமிக்கு மேலும் கீழும் பயணித்துவிட்டு, படைப்புகளின் பிரம்மாண்டங்களைப் பார்த்தபின்னும் படைத்தவனை மறுக்கும் மனிதர்களே! நீங்கள் இதுகாறும் அங்கே என்ன கண்டீர்கள் தெரியுமா? பலநூறு ஆண்டுகள் பறந்தாலும் முடிவடையாத பெருவெளி, அதில் காற்றில் பறக்கும் […]

திருமண அவலங்கள்… (பகுதி-1) முகமது ஹனீப்,  திருச்சி இந்த மனித இனம் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் எப்படி அவசியமோ அதைப்போன்று இந்த மனித இனம் பூமி முழுவதும் பல்கிப் பெருகி தன் இனத்தை அழியாமல் பெருக்கி வாரிசு வாரிசாக வாழ்ந்து வருவதற்கு திருமணம் என்ற ஆண் – பெண் ஒப்பந்தம் அவசியமாகிறது. மனித இனம் வாழ அவசியமான காற்றும், நீரும், பூமியை தவிர மற்ற கிரகங்களில் தேவையான அளவு இல்லை. பூமி மட்டும் தான் இந்த மனித இனம் வாழ […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்… எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர், இலங்கை மார்ச் மாத தொடர்ச்சி…. நரகவாசிகளின் இரு காதுகளின் தூர அளவு : நரகத்தில் நரகவாசிகள் மிகவும் கோரத் தோற்றமுடையவர்களாகக் காட்சியளிப்பார்கள் அவர்களது காதின் சோனைக்கும் தோளுக்குமிடையே எழுபது ஆண்டுகால நடைப்பயண தூரம் அளவிற்கு இடைவெளி இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 2:284) நரகவாசியின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் : […]