சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்… எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை மாத தொடர்ச்சி…. சுவர்க்கத்தில் பசி எனும் அந்தரங்க அவலம் இல்லை. இன்ப ருசியை அனுபவிப்பதற்காகவே உண்ணலும், பருகலும்: நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் (சூரியனால் ஏற்படும்) வெயிலில் (கஷ்டப்) படவும் மாட்டீர். இன்னும் இதில் நீர் தாகிக்கவும் மாட்டீர். பசியாகவும் இருக்க மாட்டீர்(என்று கூறினோம். 20:118.119, 76:13) அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்தவர்களாக) இருப்பார்கள். (சூடாக இருக்கும்) சூரியனையோ, கடுங் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், தான் எந்த தினத்தில் பிறந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? திங்கட்கிழமை. அபூகத்தாதா அல்அன்சாரி (ரழி), முஸ்லிம் : 2153 யாரை மறுமை நாளில் குருடனாக எழுப்புவேன் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வுடைய உபதேசத்தை புறக்கணிப்பவன். அல்குர்ஆன் : 20:124 எந்த நோயானாலும் நிவாரணம் இருக்கும் பொருள் எது? என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? கருஞ்சீரகம், மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. அபூஹுஹைரா (ரழி), முஸ்லிம்: 4452 உறங்கச் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஹதீஃத் அறிவிப்புகளில் இப்னு அப் பாஸ்(ரழி) என்று வருகிறது. இப்னு அப்பாஸ் என்றால் அப்பாஸ் உடைய மகன் என்றுதானே அர்த்தம். முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி. தெளிவு : ஒருவரை யார் என்று தெரிந்து கொள்ள, தந்தை பெயர் மூலமாக இன்னாரின் மகன் என்று அறியப்படுவது, அரபிகளின் வழக்கம். எனவே, அப்பாஸ்(ரழி) அவர்களின் மகனை இப்னு அப்பாஸ்(ரழி) என்று அழைத்து வந்தனர். இப்னு அப்பாஸ் அவர்களின் பெயர் அப்துல்லாஹ் ஆகும். அப்துல்லாஹ் இப்னு […]
இதழின் உள்ளே….. v அன்பு வேண்டுகோள் ! v நபி வழியில் நம் தொழுகை… v வினா எழுப்பினர்! விடை கண்டனர்!! v ஒரே சமுதாயம்… v மறுமை சிந்தனை! v தூய இஸ்லாத்தில் பித்அத் ஊடுருவல் v மூல ஆதாரங்கள் அடிப்படையில் சின்னஞ்சிறிய விசயங்கள் தான் ஆனாலும்…! v நவீன தாருந் நத்வா பாரீர் ! v துலாக்கோல்…. v ஐயமும்! தெளிவும் !! v விமர்சனங்கள்! விளக்கங்கள்!! *********************************************************************** அன்பு வேண்டுகோள் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை கொண்டு அந்நஜாத் கொண்ட கொள்கையில் இதுவரை நழுவாது […]
நபி வழியில் நம் தொழுகை! தொடர் : 38 அபூ அப்திர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழில் “ஜமாஅத்து தொழுகை” பற்றிய விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அதன் தொடரில் எஞ்சியுள்ளவற்றைப் பார்ப்போம். ஜமாஅத்து தவறிவிட்டால் பிறகு ஜமாஅத்து நடத்துவதன் நிலை! ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு தொழு வைத்தார்கள். அதன் பிறகு நபித்தோழர் களில் ஒருவர் அங்கு வந்தார் அப்போது நபி(ஸல்) […]
குர்ஆனின் நற்போதனைகள் : தொடர் : 13 வினா எழுப்பினர்! வீடை கண்டனர்!! பகுதி – 1 தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, MA., M.Phil., 1. (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர்கூறும் : அவை மக்களுக்குக் (காலக் கணக்குகளையும்), ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும். (2:189) 2. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும் : அக்கலாத்தில் […]
சமூகவியல் :20 ஒரே சமுதாயம் புலவர் செ. ஜஃபர் அலீ, பி. லிட்., “உறுதியாக உங்களுடைய இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயம் தான் நானே உங்களுடைய இறைவன் ஆகவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்.” (23:52) இவ்வாறு பேரிறைவன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்க. ஒன்றைப் பல கூறுகளாக்கிக் குழம்பிக் கொண்டிருக்கின்ற சமுதாயமாக இன்றைய நம் சமுதாயம் ஆகிவட்டது. குழம்பிக் கொண்டிருக்கின்ற “மத்ஹபு’க்காரர்களே ஏகத்துவத்தை எடுத்து இயம்புகின்றவர்களைப் பார்த்து “குழப்பக்காரர்கள்’ என்கின்றனர். மூளைக்கோளாறு உள்ளவன், தான் காணுகின்றவர்களையயல்லாம், “நீ பைத்தியம், உன் […]
மறுமை சிந்தனை முஹம்மது சல்மான், சென்னை. இஸ்லாம் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவதற்கு இடமளிக்காமல் அதற்குரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது. உலக வாழ்வில் மக்கள் எல்லாத்துறைகளிலும் வெற்றிபெறவேண்டும்; இறைவன் வழங்கியுள்ள படைப்பினங்களை முழுமையாகப் பயன்படுத்தி சமுதாய வாழ்வில் முன்னேற வேண்டும். உலக வாழ்வை ஒதுக்கிடவோ, அலட்சியப்படுத்தவோ இஸ்லாம் கூறவில்லை! ஆனால் மறுமை வாழ்வே மேலான, நிரந்தரமான தெனக் கருதி அதன் வெற்றிக்கு முக்கியத்துவம் அளித்து இம்மை வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். என குர்ஆனும், ஹதீஸும் மக்களை வலியுறுத்துகின்றன. […]
தூய இஸ்லாத்தில் பித்அத் ஊடுருவல் அபூ அஸ்பியா ஜித்தா தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்த குறிப்பாக ஆலிம்கள் நிறைந்த காயல்பட்டினம், அதிராம்பட்டினம், லால்பேட்டை போன்ற ஊர்களில் புகாரி ரீப் மஜ்லிஸ் என்ற பெயரில் பெரும் பித்அத் நடக்கிறது. மற்ற ஊர்களில் எப்படி நடக்கிறது என்பதை நான் நேரில் பார்த்தது இல்லை ஆனால் லால்பேட்டையில் நடப்பதை நான் அறிவேன். இது வருடம்தோறும் ரபிய்யுல் ஆகிர் மாதம் பிறை ஒன்றில் ஆரம்பித்து நாற்பது நாள் தொடர்ந்து நடத்து கிறார்கள். ஜாமிஆ மஸ்ஜித் […]
மூல ஆதாரங்கள் அடிப்படையில் முஹப்புல் இஸ்லாம் துபை. “ஈமான் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீளவேண்டி இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை யயல்லாம் அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான் ” (5:105) பெருமதிப்பிற்குரிய முஸ்லிம் பெருங்குடி மக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஆலிம்கள் வாக்கே வேதவாக்கு! அவர்கள் எதைச் சொன்னாலும் சரியாக […]
சின்னஞ்சிறிய வியங்கள் தான் ஆனாலும்…! அபூஃபாத்திமா “ஈமான் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உரக்க “ஆமீன்’ சொல்லலாமா கூடாதா? ரஃபுவுல்யதைன் (இருகைகளையும் உயர்த்துதல்) செய்யலாமா, கூடாதா? பிஸ்மியை சப்தமின்றி ஓதுவதா, சப்தமிட்டு ஓதுவதா? கையை நெஞ்சிய கட்டுவதா, தொகுப்புளுக்கு கீழ் கட்டுவதா? ரமழான் இரவுத் தொழுகை 8 ரகாஅத்தா, 20 ரகாஅத்தா? என இவைபோன்ற சின்னஞ்சிறிய வியங்களினால் முஸ்லிம்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம் […]
நவீன தாருந் நத்வா பாரீர்! இப்னு ஹத்தாது திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அப்படியே கீழே தந்துள்ளோம். திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா, பேகம் மஸ்ஜித் திருச்சிராப்பள்ளி – 8. 20-12-89 பிஸ்மிஹீ தஆலா கண்ணியத்துக்குரிய …………….. பள்ளிவாசல் முத்தவல்லி சாஹிப் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரின் அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் மேலான சமூகத்திற்கு நாங்கள் தெரிவித்துக்கொள்ளும் முக்கியமான வியம் யாதெனில் சமீப காலமாக தமிழகத்தில் […]
துலாக்கோல் கிரிட்டிக் சென்ற இதழில் அல்ஜன்னத் டிசம்பர்’ 89 இதழின் 53ம் பக்கத்தில் இடம் பெற்ற மறுப்புக் கட்டுரையின் ஆட்சேபனை – 1 விளக்கம் – 1 என்ற பகுதியை அலசினோம். இந்த இதழில் ஆட்சேபனை -2 விளக்கம் -2 ஐ அலசுவோம். அதற்கு முன் ஒரு வியத்தை தெள்ளத் தெளிவாக அறிவித்து விடுகிறோம். அந்நஜாத் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தவறை தவறு என்று ஒப்புக்கொள்ள என்றுமே நாம் தயங்கியதில்லை. தவறு உரிய ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படும்போது அதனை ஏற்று […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜனாஸா-மய்யித்தைக் குளிப்பாட்டும் போது தண்ணீரில் இலந்தை இலையை ஏன் போடுகிறார்கள்? இது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தா? வழிமுறையா? மாஜிலா இத்ரீஸ், அடிஅக்காமங்கலம். தெளிவு : நபி(ஸல்) அவர்களின் புதல்வி (ஜைனபு(ரழி) அவர்கள்) மரணமாகி (அவர்களின் ஜனாஸாவை நாங்கள் குளிப்பாட்டி)ய போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து நீங்கள் 3 தடவை அல்லது 5 தடவை, மேலும் தேவை என்று கருதினால் இவற்றைவிட அதிகமான தடவைகள் தண்ணீரையும் இலந்தை இலையையும் கொண்டு ஜனாஸாவைக் குளிப்பாட்டுங்கள். இறுதியாக […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! இமாம்களை தொழுகைக்கு நியமித்து சம்பளம் வழங்குவதை விமர்சிக்கும் நீங்கள்- உங்கள் கூட்டு இயக்கமான JAQH நாகூரில் தம் முஹல்லாவிற்கு ஒரு இமாமை (மன்பஈ) விலைக்கு வாங்கி, நாளுக்கு ஒரு ஆள் வீட்டில் சாப்பாடு கொடுத்து வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ? உம்முடைய எழுத்து சீர்திருத்தம், நடைமுறை வாழ்வில் சொல்லாக்காசாக மாறி வருவதை உம்முடைய ஆதாரவாளர்களே கண்ணாரக் கண்டு வருகிறார்கள். (JAQH -க்கும் நஜாத்திற்கும் சம்பந்தம் இல்லையயன்று நீங்கள் எழுதினாலும் – தவ்ஹீத் கொள்கை – என்ற லேபளில் நீங்களும்-பி.ஜேயும் ஒன்றுபடுகிறீர்கள் […]
தலையங்கம்! இணைய வழி ரம்மி சூதாட்டம்! இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இணைய வழி ரம்மி சூதாட்டத்தை, சமுதாய நலன் கருதி, தடை செய்ய வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி 17.06.2020 அன்று “இந்து தமிழ் திசை’யில் பாராட்டிற்குரிய ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது : கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இணையவழி சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஜின்கள், மனிதர்கள், பறவைகள். 27:17 யார் தேவை உள்ளவர்கள், யார் தேவை அற்றவர் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வை தவிர மற்ற அனைவரும் தேவை உள்ளவர்கள். அல்லாஹ் தேவை அற்றவன். குர்ஆன் : 35:15 ஸபா நாட்டு இளவரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தது யார் என அல்லாஹ் கூறுகிறான்? வேதம் பற்றி அறிவுள்ள ஒருவர். 27:40 நபி(ஸல்) அவர்களுக்கு அய்லாவின் […]
விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : நிர்பந்தத்தின் காரணமாக வீடுகளில் ஜும்ஆ தொழுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடை ஏதும் இல்லை என எழுதியுள்ளீர்கள். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும். மேலும், ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் (வீட்டில்) குத்பா இல்லாமல் தொழலாமா? இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா? முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி. விளக்கம் : நடைமுறை உண்மை ஒன்றைக் கூறி, தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும் என்று […]
காயிப் ஜனாஸா… S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்றைய லாக்டவுன் சூழலில் ஏற்படும் மரணங்களில் ஜனாஸா தொழுகைக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை. ஜனாஸாவில் கலந்து கொள்ள நெருங்கிய உறவினர் 20-25 நபர்களுக்குத்தான் அனுமதியுள்ளது. வெளியூர் பயணங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பலரும் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதற்கு தீர்வு ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை ஆகும். இதை அவரவர் இருப்பிடங்களிலேயே செய்யலாம் அதுபற்றி போதிய விழிப்புணர்வு இஸ்லாமியரான […]
சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்… எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூன் மாத தொடர்ச்சி…. சுவர்க்கவாசிகள் என்றைக்கும் நோயுற மாட்டார்கள் : சுவர்க்கத்தில் நுழைகின்ற முதலாவது அணியினர் பெளர்ணமி இரவில் ஒளிரும் பூரண சந்திரனைப் போன்று தோற்றமளிப் பார்கள், அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் விண்ணில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்கள் என்றைக்கும் நோயுறமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 3246 முஸ்லிம் : 2837) மற்றுமொரு […]