மர்யம்பீ, குண்டூர், 1. அல்குர்ஆன் யாருக்கு நேர்வழி என்று அல்லாஹ் கூறுகிறான்? பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டி என அல்லாஹ் கூறுகிறான். (2:2) 2. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எந்த நிலையில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2:154) 3. வறட்டு கவுரவம் கொண்டவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்? வறட்டு வாதம் பாவத்தின் பக்கம் தள்ளிவிடுகின்றது. அதனால் அவனுக்கு நரகமே. (2:206) 4. இமாம்களும் தமது உளறல்களும் […]
முஹம்மது சலீம், ஈரோடு மனிதர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நன்மை மற்றும் தீமைகளை தெளிவாக எடுத்துக் கூறி அதன் மூலம் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களிலி ருந்தே ஒருவரை அல்லாஹ் தன் தூதராக தேர்வு செய்து அவருக்கு இறை செய்திகளை வழங்கி மனித சமுதாயத்திற்கு பேருதவி புரிந்துள்ளான். இத்தகைய ஏராளமான இறைத்தூதர்களில் நபி(ஸல்) அவர்கள்தான் இறுதியானவர். நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு வேறு எந்த ஒரு இறைத்தூதரும் வருவதற்கு தேவையில்லாத அளவிற்கு பரிபூரணமான வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் குர்ஆனின் மூலமாகவும், […]
அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு!. தொடர் : 37 னி. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கவும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரை யிலிருந்து, 12 வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே […]
அபூகனீபா, புளியங்குடி பொதுமக்களின் ஜகாத் நன்கொடை பணத்தில் 7 வருடம் உழைக்காமல் உண்டு, மார்க்கம் பயிலும் மதரஸா கல்வியை மத்ஹப்கல்வியை எனது இஸ்லாம் படிக்க சொல்லவில்லை. எங்கள் இறைத்தூதர் முகம்மது(ஸல்) அவர்களும் அப்படிப்பட்ட மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை இறைக்கல்வியை வைத்து எந்த இறைத் தூதரும் பிழைப்பு நடத்தவில்லை. அப்படி பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கவில்லை. இன்று மதரஸா என்ற பெயரிலே இஸ்லாம் காட்டித்தராத முறையில் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த கல்வி நிலையங்களில் […]
ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதீஃதின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும். பிறை பார்த்தலுக்கான ஹதீஃதை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) புகாரி, 1900,1906, முஸ்லிம் 1958. இது […]
ரமழான்-ஷவ்வால்-1439 நீட் நுழைவுத் தேர்வு! இக்கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்துள்ள, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) குளறுபடிகள் நமக்கு கற்பித்துத் தந்த பாடம் என்ன? கல்வியை மத்திய ஆளுமையின் கீழ் கொண்டு வருவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதே நாம் கற்றுக்கொண்ட பாடம். எப்போதுமே நடைபெற்றிராத குளறுபடிகள், மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மையங்கள் ஒதுக்குவதில் ஏன் இந்த குளறுபடிகள்? தமிழகம் எங்கே? சிக்கிம் எங்கே? […]
செப்டம்பர் 2016 துல்கஃதா-துல்ஹஜ் 1437 ஜனநாயக சாபக்கேடு! உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர் களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன்வருவார்களா? அதன் விளைவு முற்றிலும் தகுதியற்றவர்களே ஆட்சியில் […]
இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்! நாள் : ஹிஜ்ரி 1439 துல்ஹஜ் பிறை 29 ஈசவி 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை (இறைவன் நாடினால்) இடம் : .K. மஹால், துறைமங்களம், பெரம்பலூர் தொடர்பு எண் : 9345100888, 9443304115 குறிப்பு : பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் இரவில் தங்குவதற்கு மண்டபத்தில் வசதி உண்டு.
தராவீஹ் தொழுகைக்கு கூலி வாங்கலாமா? S. முஹம்மது சலீம், ஈரோடு மார்க்கப் பிரசாரங்கள் செய்வதற்கோ, இமாமத் செய்வதற்கோ கூலி வாங்கக் கூடாது என்று குர்ஆனும், ஹதீஃதும் தெளிவுபடுத்தி கொண்டிருக்க அந்த போதனைகளையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாமல் சுயவிளக்கம் கொடுத்து மெளலவிமார்கள் மார்க்கத்தை தொழிலாக்கி வருகிறார்கள். இவர்களிடம் குர்ஆன், ஹதீஃதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறினால் எங்கள் மத்ஹப் நூல்களில் இவ்வாறு கூறவில்லை என்று எதிர்வாதம் செய்து தங்களது தவறுகளை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்த மத்ஹபையாவது […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் -4 அபூ அப்தில்லாஹ் நிச்சயமாக நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்ததை (விட்டு) விட்டு, நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி, உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராக வும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்திரப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும், அவர்களின் பால் சாய்ந்து விடக்கூடுமாயிருந்தது. அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும் பொழுதும், […]
பெண்மணியே உன் வழி என்ன? கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை இஸ்லாத்தின் இனிய சகோதரியே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் செயல்படுகின்றார்கள். குர்ஆன், ஹதீஃது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரியே! உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரழி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? பெருமானார் (ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து, […]
போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வது இறை நிராகரிப்பே! ´ஷிர்க்கே! புளியங்குடி அபூ ஹனிஃபா “(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. 2:186 கபுரில் கையேந்துபவர்கள் அல்லாஹ்வின் சோதனையில் தோற்று ஈமானை இழந்து, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுல கில் விதித்ததை அடையும் போது அவுலி யாக்களே […]
குர்ஆனைப் பொருளுணர்ந்து படிப்போம்! முஸ்தபா, ஈரோடு அஸ்ஸலாமு அலைக்கும், இஸ்லாமை வாழ்வாகக் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் அதன் ஆதாரமான குர்ஆனைப் படித்து அதன் பொருளை உணர்ந்து வாழ்கிறோமா? அல்லது குர்ஆனின் உயர்ந்த உபதேசங்களைப் படிக்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறோமா? என்பதை இக்கட்டுரையின் வாயிலாக பார்ப்போம். குர்ஆன் யாருடைய வார்த்தை? உண்மையை மட்டுமே உள்ளடக்கிய குர்ஆன் கூறுகிறது : இது மிகைத்தவனும் அறிவு மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதம் (40:2) அன்ஸலஹு பி இல்மிஹீ (4:166) (அல்லாஹ்வாகிய) அவன் […]
வெற்றி பார்முலா… – M. பஷீர் அஹமது, தென்காசி எல்லா புகழும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல ஏக இறை வனாம் அல்லாஹ்விற்கே முழு மனித குலம் வெற்றி பெற உள்ள ஒரே மார்க்கமான இஸ் லாமை உலகுக்கு கொண்டுவந்த உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் உத்தம தோழர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மீதும் இன்னும் நம் அனைவர் மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக என்று வேண்டி இதை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், 1. முதல் மனிதனை அல்லாஹ் எவ்வாறு படைத்தான்? சுட்ட மட்பாண்டம் போன்ற தட்டினால் ஓசை வரக்கூடிய களிமண்ணினால் படைத்தான். 55:14 2. இரு கடல்களுக்கு நடுவே என்ன இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? இரு கடல்களுக்கு நடுவே தடுப்பு இருப் பதாக அல்லாஹ் கூறுகிறான்? 55:20 3. நரகத்தில் உள்ளோர் நரகத்தின் காவலர்களிடம் என்ன கேட்பர்? ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திடுமாறு கேட்பார். 40:49 4. […]
அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி. குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் […]
நோன்பின் மாண்பு… மிஸ்பாஹி மறுபதிப்பு : ஏப்ரல் 1987 உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக வேண்டி உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183) மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளை கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியரு ளப்பட்ட (மகத்தான) மாதமாகும் ரமழான். எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (கட்டாயம்) நோன்பு நோற்க வேண்டும். யாரேனும் நோயாளியாகவோ அல்லது பயணியாகவோ இருந்தால் […]
சிரியா… இப்னு ஸதக்கத்துல்லாஹ் “…அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். ஆனால், அவர்களிடையே பிளவை உண்டாக்குவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 5417 நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். 3:103 யாரெல்லாம் தங்கள் மார்க்கத்தை (தங் கள் இஷ்டப்படி)ப் பிரித்து பல பிரிவினராகி விட்டார்களோ அவர்களுடன் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 6:159 “நீங்கள் இருவரும் இ(ந்த சொர்க்கத்)திலிருந்து […]
ஷக்குடைய (சந்தேகத்திற்குரிய) நாள் உண்டா? S. முஹம்மது சலீம், ஈரோடு வருகிற 16.05.2018 அன்று ஷக்குடைய நாளாக இருப்பதால் இன்று மட்டும் இஷாத் தொழுகை 9.30 மணிக்கு நடைபெறும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகளில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். ஷஃபான் மாதத்தின் இருபத்தொன்பதாவது நாளின் மஃரிபுக்கு பிறகு ஷக்குடைய நாள் ஆரம்பமாகிறது இந்த நேரத்தில் பிறை தகவல் குறிப்பிட்ட எல்லையிலிருந்து வருகிறதா என்று எதிர்பார்க்க வேண்டும். பிறை தகவல் வந்துவிட்டால் ரமழான் மாதம் ஆரம்பித்துவிட்டது. பிறை […]
சகோதரி ஆசிஃபாவே…. அபூ கனிபா, புளியங்குடி இதுவும் இறைவனின் நாட்டமே : ஒரு மரத்தின் ஒரு இலை உதிர்ந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் உதிர்வது இல்லை. நீ உதிர்ந்ததும் ஏக இறைவனின் நாட்டப்படியே. எந்த உயிரும் இறைவனின் நாட்டம் இல்லாமல் மரணிப்பது இல்லை. எல்லாம் விதியின் அடிப்படையில் நடக்கிறது. உன்னுடைய மரணமும் விதியின் அடிப்படையில் நிகழ்ந்தவையே. ஒரு அடியானின் காலில் ஒரு முள் தைத்தாலும் அவனுடைய ஏதாவது ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பது […]