அகில உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ், இந்த உலகையும், அதில் மனித ஜின் வர்க்கம் உட்பட எல்லா உயிரினங்களையும், உயிரற்றவைகளையும் படைத்து, அனைத்தையும் உலகில் தற்காலிகமாக வாழச் செய்து, பிறகு உலக முடிவு நாளுக்காக உயிரற்றவைகளை அவன் விருப்பிற்கேற்ப அழித்து, உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்து, மீண்டும் ஒரு தற்காலிக வாழ்வை மண்ணறையில் கொடுத்து, பிறகு மரித்தவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, அதன் பின் உலகில் வாழ்ந்து முடித்த வாழ்க்கையைப் பற்றிய விசாரணை நாளை ஏற்படுத்தி, விசாரணையின் முடிவாக […]
அபூ கலீல் தொடர்-1 1. முன்பெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் அரபி கற்ற மவ்லவிகள் எதை சொன்னா லும் அது மார்க்கம் என்ற நிலை மக்களி டையே நிலவி வந்தது. இந்த நிலை நீண்ட காலமாக சாவகாசமாக நிலைத்து இருந்தது. 2. சமீப காலமாக குறிப்பாக தமிழகத்தில் அரபி மொழி தெரிந்த, தெரியாத அதே நேரத்தில் மார்க்கம் தெரிந்த பலரின் முயற்சியால், அல்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஆயத்துக்களும், ஹதீஃதுகளும் தான் உலக மாந்தர்களின் வாழ்க்கை வழி […]
N. அலி, கல்லிடைகுறிச்சி டிசம்பர் மாத அந்நஜாத் இதழில் விமர்சனம் விளக்கம் பகுதியில் இடம்பெற்ற சகோதரர் சைக் அப்துல் காதிர் (சிங்கப்பூர்) அவர்கள் அக்டோபர் மாத இதழில் வெளியான அந்நஜாத் Vவி புரோகிதம் கட்டு ரையை வாசித்ததோடு மட்டுமல்லாமல் விமர்சித்தும், விளக்கம் கேட்டும் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சி யான வியமாகும். நேர்வழியை அறிந்து கொள்வதற்கு நல்ல வழிமுறையாகும் அந்நஜாத் VS புரோகிதம் கட்டுரையில் 18:102ன் நேரடிக் கருத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு எழுதப்பட்டதாகும். இப்பொழுது அவரின் (PJ) […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் பக்கம் : 376 திறன் ஆய்வுத்தொடர் :32 M.. அப்துல் ஹமீத் சென்ற இதழில் ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இந்த இதழிலும் தொடர்வதால், ஏற்கனவே கூறப்பட்ட செய்திகள் அடுத்த பாராவில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. மனிதர்கள் ஓரிடத்தில் சேர்ந்து கூட்டமாக […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்… தொடர் : 31 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் பக்கம் : 375, ஹதீஃத் எண் 12ம் அதன் தொடர்ச்சியும். ஹதீஃத் எண். 12 ஹஜ்ரத் அபூதர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹுத ஆலா கியாமத்து நாளில் […]
அபூ அப்தில்லாஹ் முஸ்லிம் யார்? காஃபிர் யார்? இந்த மதகுருமார்கள் மக்களிடையே முஸ்லிம்களுக்கும், காஃபிர்களுக்கும் தவறான பொருளைக் கற்பித்து அதை மக்கள் உள்ளங்களில் புரையோடச் செய்துள்ளனர். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்து, முஸ்லிம் பெயரிட்டு, சுன்னத்துச் செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்தால் அவன் முஸ்லிம்; அவனுக்கு முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையான கலிமாவே தெரியாமல், மார்க்க சம்பந்தப்பட்ட அடிப்படைகள் எதையும் தெரியாமல் இருந்தாலும் அவன் முஸ்லிம்; இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் கடுமையாக கண்டித்துக் கூறும் […]
இறைப்பிரியன் மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக – அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் […]
மர்யம்பீ, குண்டூர், 1. சந்திரன் எத்திசையில் உதிக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்? கிழக்கு திசையில். 91:1 2. “”அகபா” என்றால் என்ன? ஓர் அடிமையை விடுதலை செய்வது. அத்:90:12,13 3. நாம் மனிதனை எவ்வாறு படைத்துள் ளோம் என அல்லாஹ் கூறுகிறான்? கஷ்டத்தில். 90:4 4. அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் என்ன பெறுவார்கள்? நல்லுபதேசம் பெறுவார்கள். 87:10 5. “”தாரிக்” என்றால் என்ன? இலங்கும் நட்சத்திரம். 86:2,3 6. ஒவ்வொரு காரியத்தையும் என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்? […]
தொடர் – 4 தோழர் ஹம்துல்லாஹ் “”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடரின் முழுமுதல் திருப்பெயரான “”அல்லாஹ்” என்பதின் பொருளென்ன? இப் பெயர் சொல் அரபி மொழி ரீதியாக எப்படி உருவானது, அல்லாஹ்வைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்த்தோம். நம் உள்ளத்தால் உணர முடியாத வன். நம் பகுத்தறிவால் புரிய முடியாதவன். அதற்கு தமிழில் “”கட+வுள்” என பொருள் கொள்வது சால சிறந்தது என்பதையும் விளங்கி னோம். அவனைப் பற்றி தெளிவாக […]
MTM. முஜீபுதீன், இலங்கை அந்நஜாத் மாத இதழ் வெளியீட்டுக் குழு சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) “”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக் கக் கூடியதாகவே இருக்கிறது. தீமையைக் கொண்டும், நன்மையைக் கொண்டும் பரீட்சிப் பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம். மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப் படுவீர்கள். (அல்குர்ஆன் :21:35) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக் கக் கூடியதாகும். பின்னர் நீங்கள் நம்மிடமே திருப்பிக் கெண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:35) அவன் எத்தகையவனென்றால், […]
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் பிரமாண்டமான உயிரினங்களும்,கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளும் இவ்வுலகில் வாழ்கின்றன.இந்த படைப்பினங்களின் மூலம் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு, அல்லாஹ் பல உதாரணங்களை சொல்லிக் காட்டி பாடம் நடத்துகின்றான். அவற்றுள் ஒன்று நாம் அற்பமாக கருதும் கொசுவின் மூலமாக, நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. – அல்குர்ஆன்.2:26. உருவத்தில் மிக சிறியதாக, அற்பமானதாக இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் கொசுக்களே முதலிடத்தில் இருக்கின்றன. மலேரியா, டெங்கு, யானைக்கால் […]
புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறை வச னங்கள் பலவற்றை உலகில் நடைபெற்று வரும் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் நாம் அறிந்து வருகின்றோம். இந்த நிகழ்வுகள் குர்ஆன் கூறும் வழிகளை வாழ்க்கையில் சாதாரண மனிதர் களாலும் பின்பற்றி வாழ முடியும் என்பதையே நிரூபிக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை, “”தி ஹிந்து” தமிழ் நாளிதழ் (11.11.2017) வாயிலாக அறிந்தோம். (நன்றி). அப்துல் முனீம் என்பவரின் மகன் சலாவுதீன் ஜித்மவுத் 22 வயது நிரம்பிய இளைஞர். பீசா கடை ஒன்றில் […]
விமர்சனம் : பிறை கணிப்பின் மூலம் சமூகத்தில் மாபெரும் பிளவு/பிரிவு உண்டாக்கி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே பாவப் படுகுழியில் தள்ளி “”ஆஷிரா” நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை வேறுபடுத்தி ஒரு சாரார் நோன்பு வைத்திருக்க மற்றொரு சாரார் பெருநாள் கொண்டாட சமூகப் பிரி வினையை உண்டாக்கி “”ஒருவர் தன்னைத் தானே ஆக பரிசுத்தமானவர் என நினைத்து இன்னொரு சகோதரரை இழிவாக/ ஏளனமாக / தரக்குறைவாக பார்த்து, பெருமையின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு, இறை வனின் […]
அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் […]
ஒரு நவீன காரீஜ்ஜியின் வளர்ச்சியும்… வீழ்ச்சியும்… ஒரு பார்வை! எஸ். ஹலரத்அலி, திருச்சி-7. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வெடித்துக் கிளம்பிய ஏகத்துவ புரட்சியின் நாயகனாக, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஜ்தஜிதாக, இஸ்லாத்தின் போர்வாளாக, அனாச்சார, மெளடீக சடங்குகளுக்கு சாவு மணி அடித்த புரட்சி புனலாக, பொங்கு வெள்ளமாக காட்சி தந்த அண்ணனின் நிலைமை இன்று, ஊர் சிரித்து ஒடுங்கிப் போக காரணம் என்ன? அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீங்கள் அவர்களுக்கு (பல்ஆம் இப்னு பாஊரா) என்னும் […]
விமர்சனம் : சென்ற செப்டம்பர் 2017இதழில் வெளியாகி இருந்த தலையங்கத்தின் தலைப்பு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதே! அல்லாஹ் குர்ஆன் “”இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை” என்று குறிப்பிடுகிறான். எனவே, தலையங்கத்தின் தலைப்பு இப்படி “”ஃபிரன்ட்லி மேட்ச்” “FRIENDLY MATCH”” என்று இருப்பது சரியா? (தொலைபேசி மூலம் வாசகர்) விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ள தலையங்கத்தில், அந்நஜாத் இதழில் தவறான கருத்து எதுவும் இருந்தால், தங்களின் விமர்சனத்தை அனுப்புமாறு கேட்டிருந்தோம். குர்ஆன்-ஹதீஃத் அடிப்படையில் நாங்கள் தவறி இருந்தால், […]
– M.S.D. ஸரஹ் அலி, உடன்குடி இறைவனுக்கு செய்யவேண்டிய வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது. நிம்மதியான, சந்தோஷமான வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஹலாலான முறையில் ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. உழைப்பின் சிறப்பைப் பற்றி குர்ஆன் கூறுகிறது: “”தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி […]
ஐயம் : இரவு நேரத்தில் துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான் என்று சொல்கிறார் களே உண்மையா? சபூரா பேகம், தஞ்சை. தெளிவு : இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ நிறைவேற்றித் தரப்படும் என்று ஹதீஃதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹதீஃதை பார்ப்போம். “”நிச்சயமாக இரவில் ஒரு நேரம் இருக் கிறது. அந்த நேரத்தை எந்த முஸ்லிமாவது அடைந்து, அதில் ஈருலக விஷயங்களிலும் எந்த நன்மையையாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாராயின் அதனை அவன் அவருக்குக் கொடுத்து விடுகிறான். இதன் […]
முஹம்மது இஸ்மாயீல், கடையநல்லூர். தவ்ஹீது சகோதரர்கள் மத்தியில் தொழுகையில் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை நீட்டுவது நபிவழியா? அல்லது அசைப்பது நபிவழியா? என்ற பிரச்சனை எழுந்துள்ளது. பெரும்பாலான சகோதரர்கள் அந்த ஹிய்யாத்து இருப்பில் விரலை அசைப்பது தான் நபிவழி என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள். மத்ஹபை பின்பற்றி நடப்பவர்கள் எவ்வாறு தங்களுடைய மத்ஹபு அறிஞர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்களோ அது போன்றுதான் தவ்ஹீது அறிஞர்களை தவ்ஹீது சகோதரர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்கள். விரலை அசைப்பது தான் நபிவழி என்று சொல்லக்கூடியவர்கள் வாஇல் […]
– மண்டபம் M. அப்துல்காதிர் நாகரீகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்க்கை முறையில் மனிதர்கள் இன்று பலர் மாறி வருகின்றனர். உடை விஷயத்திலும், தங்களது அங்கங்கள் விஷயத்திலும் மனிதர்கள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பொறுத்தவரையில் மிகவும் கவனமாக வாழவேண்டிய கால கட்டம் இது. எப்படியும் வாழலாம் என்பது அல்ல… இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு மார்க்கம் கட்டளையிடுகிறது. பெண்களின் வாழ்க்கை தரத்தை வல்ல இறைவன் தன் அருள்மறையாம் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான். தங்கள் அங்கங்களை […]