எழுத்து வழி பிரச்சாரம் கடமையான விதிக்கப்பட்ட, அதைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் ஒரு பணி அல்ல. அபூ அப்தில்லாஹ் 1984.10.30 செவ்வாய் அன்று திருச்சி தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில், (St.Pauls Seminery)”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில், மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கு வது என்ற உப தலைப்பில் அன்றே கடமையான மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்யக் கூடாது. அதுவே சமூகத்தின் சர்வ நாசத்திற்குக் காரணம் என்று தெளிவாக […]

முஹம்மது ஸலீம், ஈரோடு வரும் 2016 ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை திருச்சியில் நடத்த இருப்பதாக TNTJ இயக்கத்தினர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து அந்த மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு எப்படி இருக்கிறதென்றால் மிகப்பெரிய அளவில் மதுபான ஆலைகளை நடத்திக் கொண்டு அதன் மூலமாக கொழுத்த வருமானம் பார்க்கும் அரசியல் வாதிகள் மதுவை ஒழிக்க வேண்டும், பூரண மது விலக்கை […]

இறைமறையில், நபிவழியில் “இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை! இஸ்லாத்திலுமில்லை!! “இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் […]

அபூ அப்தில்லாஹ் (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள்; ஆனால், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்க முடியாது; மேலும், அல்லாஹ் உம்மீது இறைநூலையும், ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்கு கற்றுக் கொடுத்தான்; உம்மீது அல் லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கின்றது. (4:113) அல்லாஹ்வின் வசனங்கள்(சிலரால்) நிராகரிக் கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீர் செவியுற்றால் அவர்கள் இதை விட்டு வேறு விபீயத்தில் ஈடுபடும் வரையில், […]

பெரியார் முன்னர் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த முற்பட்டது அரசு. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த அர்ச்சகர் வழக்குத் தொடர்ந்தார். அவ் வழக்கில் கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என மிக நீண்ட காலம் கழித்து இப்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆகம விதி முறைகள்படி உயர் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணிபுரிய முடியும் என்பதே அத்தீர்ப்பு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் அது […]

Y. முஹம்மது ஹனீப், திருச்சி-2. வரும் 2016 ஜனவரி மாதம் 2016ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடக்க இருக்கும் ´ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக வேண்டி தினம் தினம் 9 மணியளவில் தமிழன் டிவியில் மேற்படி இயக்க நபர்களால் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதில் பிரச்சாரத்தில் பேசிய ஒரு நபரிடம் ஹிஜ்ரி காலண்டர் பற்றிய கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு அந்த ததஜ இயக்க நபர் பதிலாக பேசியபோது. ஹிஜ்ரிக் காலண்டர் என்ற ஒன்றே நபி (ஸல்) […]

“இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் தருவதில்லை. இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்த […]

அல்குர்ஆனின் அறிவுரை : இன்னும், நாம் அவர்கள் மீது மழையைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக! (7:84) (மேலும் பார்க்க : 6:6, 7:133, 29:14) இன்னும் பூகம்பம்(22:01, 33:11, 99:1) புயல் (10:22, 14:18, 17:69, 41:16) நில நடுக்கம், சுனாமி, பெரும் நெருப்பு, எரிமலை இன்னும் பல பேரிடர் களால் சமீப காலத்தில் மனித குலத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி […]

சமுதாய மயம்! விமர்சனக்குழு, அந்நஜாத் ஏகன் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால், சிறு, பெரும் வி­யங்கள் என்ற பாகுபாடின்றி, எல்லாவற்றிலும் இஸ்லாத்தை அடைவதை இலட்சி யமாக்கி, இஸ்லாத்தை இஸ்லாமாய்க் காட்டும் இஸ்லா மிய இலட்சிய இதழாய் ஏகன் அல்லாஹ், ஏப்ரல் 1986 முதல் அந்நஜாத்தை மலரச் செய்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ். ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், அதுவரை தமிழ் முஸ்லிம்கள் கவனத்துக்குக் கொணரப்படாத பல மார்க்கக் கருத்துக்களையும் அவைகளுக்குரிய சரியான மார்க்கத் தீர்வையும் “அந்நஜாத்’ தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்நஜாத் […]

ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபி தோழரையாவது சபித்ததுண்டா? றீ.னி.யஹ்யா, காரைக்கால் தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக-அருட்கொடையாகவே யன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 21:107). இவ் இறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர் : அல்லாஹ்வின் இவ்வருள் வாக்குப்படி நபி (ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபித்தோழர் களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் […]

ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி-620 007. செல் : 9176699684 இன்னும், நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் மனைவியரை படைத் திருப்பதும் உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனு டைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் : 30:21 அழகிய முகமன் : வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் […]

  A.மெஹருன்னிசா, தஞ்சை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், கலிமாவை ஏற்று இஸ்லாத்தில் அடியயடுத்து வைத்த நாம் ஒரு கையில் இறைபோதமும் மறு கையில் நபி போத மும் கொண்டு நாம் செல்ல வேண்டிய இடம் எது என்று தெரியுமா? எந்தக் கண்ணும் பார்த்திடாத எந்த காதும் கேட்டிடாத அழகிய சுவனத்தை அல்லவா! ஆனால் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் நேர்வழிதானா? என்ற சிந்தனை யில் சில வி­யங்களை நாம் சிந்திப்போம் நேர் வழி எது? […]

எஸ். ஹலரத் அலி. திருச்சி-7. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை […]

MTM முஜீபுதீன், இலங்கை   அக்டோபர் 2015 தொடர்ச்சி…… இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் : அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக இறைவன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியா னும் இறைத் தூதருமாவார்கள் என நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இறை விசுவாசியும், அல்குர் ஆன் மீதும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும். அதாவது இது அல்லாஹ்வினால் ஜிப்ரீல்(அலை) என்ற வானவர் மூலம் முஹம்மது(ஸல்) அவர்க ளுக்கு அரபு மொழியில் இறக்கி அருளப்பட்ட […]

  சதீஸ்குமார், மதுரை, 7094516303 பெருமை அடிக்கும் மக்களை இறைவன் கண்டிக்கிறான். இதை நபி(ஸல்) அவர்களும் கண்டிக்கிறார்கள். இஸ்லாம் கூறும் பண்பு உண்மை, நிதானம், தூய்மை, நம்பிக்கை, வணிகம் போன்ற இவை யாவும் நற்பண்பு அனைத்துமே ஒருவனை எல்லா வகையிலும் பண்படுத்தக்கூடியவை. இறைவன் கூறுகிறான்: என்னை அழையுங்கள் உங்களுக்கு பதில ளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன் : 40:60 உங்கள் இறைவன் ஒரே இறைவனே; […]

அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்! அபூபக்கர், அதிரை (நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கட லிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சம யத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்து வோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக் கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்று கின்றவன் யார்? (6:63) இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன் பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) […]

ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரகாஅத் தொழக்கூடாதா? எம்.அப்துல் ஹமீத், திருச்சி ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரக்அத் தொழுவதற்கு தடை ஏதும் இல்லை. அதேபோல அதானுக்கு பதில் கூறி விட்டு துஆவும் செய்து விட்டு 2 ரக்அத் தொழுவதற்கும் தடை ஏதும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் இந்த இரண்டிற்குமே தடை […]

அபூ அப்தில்லாஹ் சென்ற அக்டோபர் இதழில் “”இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடம் அணுவளவும் இல் லவே இல்லை”. மதகுருமார்களை, இயக்கத் தலை வர்களை, அரசியல் தலைவர்களை வழிகாட்டிக ளாகக் கொள்வது 9:31 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத ´ஷிர்க்-இணை வைத்தல் எனும் பெருங்குற்றம் என்பதை எண்ணற்ற குர் ஆன் வசனங்களைக் கொண்டு விளக்கி இருந்தோம். இந்த இதழில் அதே வி­ஷயத்தை இன்னொரு கோணத்திலும் அலசுவோம். உலகளாவிய அளவில் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பரீட்சை மூலம் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் […]

1450 வருடங்களுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் நின்று கொண்டிருந்த னரோ (பார்க்க 3:103) அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல அற்பமான இவ்வுலகிலும் நாயி லும் கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அதற்குக் காவியினரோ, யூதர்களோ, கிறித்தவர்களோ, பெளத்தர்களோ, இவை போல் ஏனைய மதத்தினரோ காரணம் அல்லவே அல்ல. முஸ்லிம்களே முழுக்க முழுக்கக் காரணகர்த்தாக்க ளாக இருக்கிறார்கள். இதை […]

விமர்சனம் : அந்நஜாத் ஆகஸ்ட்15 இதழ் பக்கம் 10ல் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்றும், ஃபஜ்ரில் ஆரம்பித்து அடுத்த ஃபஜ்ரில் முடியும் 24 மணி நேரம்தான் ஒரு நாள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள். அதேபோல் லைலதுல் கத்ர் என்பது கத்ருடைய நாள் இரவு மட்டுமல்ல என்றும் வாதிட்டு உள்ளீர்கள். சரி. இப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவதால் (குர்ஆன் : 97) கத்ர் […]