அபூ அப்தில்லாஹ் சர்வ வல்லமை மிக்க எல்லாம் வல்ல இறைவன், என்று மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பினானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறியை தெளிவாக நேரடியாக இடைத்தரகர்களின் மேல் விளக்கம் தேவைப்படாத நிலையில், அதை நடைமுறைப்படுத்திக் காட்டத் (Practically)  தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி மூலம் அறிவித்துக் கொண்டிருந் தான். அந்த அறிவிப்புகளின்படி தான் மனிதன் நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் மட் டுமே சுவர்க்கம் நுழைய முடியும். அப்படி வஹி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்ட ஒரே நேர் […]

இப்னு ஹத்தாது. கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளையும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, மறுமையில் அதற்குரிய கூலியை எதிர்பார்த்துத் தொழ வேண்டிய, இமாமத் செய்ய வேண்டிய மவ்லவிகள், அந்தத் தொழுகைகளை அற்பமான காசுக்கு இங்கேயே விற்று விடுவதால் நாளை மறுமையில் தொழுகையற்றவர்களாகவே தண்டனைக்குரியவர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை குர்ஆன் 2:41, 79, 174-176, 3:187 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தூய எண்ணத்துடன் (இஃலாஸ்) அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அல்லாஹ்விடம் கூலியை-சம்பளத்தை எதிர் பார்த்துத் தொழ வைத்தால் அல்லவா நபி வழியைப் பின்பற்றித் […]

அபூ ஃபாத்திமா அல்குர்ஆன் அல்அஹ்ஸாப் : 33:56-ல் அல்லாஹ் கூறுகிறான். இத்தூதரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்களும் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவருக்காகப் பிரார்த்தித்து அமைதியையும் வேண்டுங்கள்! (33:56) இந்த இறைவாக்கு இறங்கியவுடன் நபி தோழர்கள் ஸலவாத் எப்படிச் செய்வது என்று கேட்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் துஆ இதுதான்.

அபூ அப்தில்லாஹ் சூனியம்-சிஹ்ர் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அனைத்துத் தரப்பு மவ்லவிகளிடமும் கொடி கட்டிப் பறக்கின்றன. பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. வேதனைக்குரியது என்னவென்றால், குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்கள் இரண்டாவது பொருளுக்கே இடமே இல்லாத ஒரேயொரு பொருளை மட்டுமே கொண்ட வசனங்கள், (3:7) அந்த வசனங்களை 2:159 வசனம் கூறுவது போல் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக, சர்வ வல்லமை மிக்க, முக்காலமும் அறிந்த அல்லாஹ்வே மனிதர்களுக்காகவே விளக்கி விட்டான். அவற்றில் இரண்டாவது பொருள் எடுப்பது அவற்றின் அசலான […]

MTM. முஜீபுதீன், இலங்கை ஜூன் 2014 தொடர்ச்சி…. விபசாரத்தை விட்டு மக்களைப் பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம் : அன்று முதல் இன்று வரை உலகில் பல வடிவங்களில் விபசாரம் பல இடங்களிலும் சமூகத்தை சீரழித்து வருகின்றது. இத்தீய செயற்பாடு மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகின்றது. இதனால் குடும்பங்களில் பிரிவினைகள், கலாசார சீர்கேடுகள், நோய்கள், தந்தை யார் என அறிய முடியாத குழந்தைகளின் உருவாக்கம், அநாதை விடுதிகள் அதிகரிப்பு, கருக் கலைப்பு, குழந்தைக் கொலைகள் அதிகரிப்பு, விலை […]

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை! – அபூ அப்தில்லாஹ் அல்குர்ஆன் கூறுகிறது : “”…பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறை வழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்.” அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகு களிலும் சூடு போடப்படும். “”நீங்கள் உங்களுக் காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்”  (அல்குர்ஆன் : 9:34,35)

அல்குர்ஆன் ஆலஇம்ரான் : 3:102 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1435 வருடத்திய ரமழான் மாதம் 28.06.2014 சனியன்று ஆரம்பித்து 26.07.2014 அதே சனியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 27.07.2014 ஞாயிறன்று 1435 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.

கேப்டன் அமீருத்தீன் “அந்நஜாத்’ மே மாத இதழில் “தொழுகை இருப்பில் விரலசைப்பது’ பற்றிய கட்டுரை யைக் கண்டேன். கடந்த 2010ம் ஆண்டு “சமரசம்’ இதழில் அது பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்ச்சியை எழுதியிருந்தேன். பின்னர் அக்கட்டுரையை 2012ம் ஆண்டு “அந்நஜாத்’தில் வெளிவந்த கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் செய்தியுடன் பூர்த்தி செய்து விரைவில் வெளி வர இருக்கும் “பசுமை பூத்த நினைவுகள்’ (இஸ்லாமிய சிந்தனை) என்ற எனது தொகுப்பு நூலில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நிலையில் […]

Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார். ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது […]

அபூ அப்தில்லாஹ் இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது! நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  (21:93) நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52) ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே […]

அல்லாஹ் தேவையற்றவன்! (அல்லாஹு ஸ்ஸமத் ) முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன். அல்லாஹ் ஒருவன் எனத் துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை. ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய், இணையாய் எவனும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது (காண்க.அல்குர்ஆன்:112:1,4) அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்துக்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக்கடமை. கோடிட்டுக் […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் யார் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் இயக்கத்தை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ (அல்லது அரசியலாகவோ) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமையில்) ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப் படுத்துங்கள். (6:70)

தொழுகை இருப்பில் விரலசைப்பது!  ஷைத்தானின் செயலே! அபூ அப்தில்லாஹ் தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் தனது ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டு தரையில் மணலோடு மணலாக கிடக்கும் பொடிக்கற்களைக் கிளறிக் கொண்டு இருந்த ஒரு மனிதரைக் கண்ட இப்னு உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரே இவ்வாறு பொடிக் கற்களை உமது ஆட்காட்டி விரலால் அசைத்துக் கொண்டு கிளராதீர். இது ஷைத்தானுடைய செயல் என்று கண்டித்தார். அப்போது அந்த நபர் அப்படியானால் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலாக, أَخْبَرَنَا […]

முஹிப்புல் இஸ்லாம் எளிமை : படிப்பறிவில்லாத பாமரனும் எளிதாய்ப் புரியும் வண்ணம் அல்லாஹ்வின் ஒருமை-ஐ அல்லாஹ் அல்குர்ஆனில் படம் பிடித்துக் காட்டியுள்ளான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதிபலிக்கச் செய்வது மானுடத்தின் நீங்காக் கடமை. இறை ஒருமை மொழிய, எழுத, முழங்க மட்டுமன்று. வாழ்வில் வாழ்வியலாக்கி ஒழுகுவதற்கே!

அபூ ஃபாத்திமா ஒரே ஆணிலிருந்தும் ஒரே பெண்ணிலிருந்தும் ஆரம்பமான மனித வர்க்கம் இன்றுவரை பல்லாயிரம் கோடிகளாகப் பல்கிப் பெருகி விட்டது. மாண்டவர்கள் போக இன்று இவ்வுலகில் எட்டு நூறு கோடிக்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகப் பெரும் பான்மையினர் மனித இனத்தில் பிறந்திருந்தாலும், பகுத்தறிவுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவற்ற மிருகங்களைவிட கேடுகெட்ட வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இழிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். (பார்க்க : […]

அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்…(3:103) நபியின் வருகைக்கு முன்னர் குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் இருந்தார்களோ அதேபோல் இன்று முஸ்லிம்கள் நரக விளிம்பில்தான் இருக்கிறார்கள். (பார்க்க: 49:14, 12:106, 9:31) பெயரளவில் இருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 10:103, 22:38, 30:47 இறைவாக்குகள் அளிக்கும் உத்திரவாதப்படி அல்லாஹ்வின் காப்பாற்றுதலோ, பாதுகாப்போ, உதவியோ நிச்சயமாகக் கிடைப்பதாக இல்லை. காரணம் நாம் முஸ்லிம்களாக இருக்கிறோமே அல்லாமல் முஃமின்களாக இல்லை. 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள், […]

மங்களம் மைந்தன் தித்திக்கும் திருமறையாக இருக்கும் திருகுர்ஆனின் இரத்தினக் கருத்துக்களால் கவரப்பட்டு தினந்தோறும் கணக்கில்லா மக்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியத்திற்கு சாட்சியளிக்கும் சபையில் சங்கமித்து, சத்தியக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறுபக்கம் சமுதாய சமுத்திரத்தில் பலர், தங்களின் தவறான கருத்தோட்டத்தில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான கருத்துக் குருடர்களாக நாடுகள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். திருகுர்ஆனைப் படித்தப் பிறகும் இஸ்லாத்தை விட்டும் தூரமாக ஒதுங்கியே நிற்கிறார்கள். சத்தியத்தின் ஒளியில் பயணத்தைத் தொடர்வதற்குத் தயங்குகிறார்கள். படைத்தவனுக்கு மட்டும் பணிந்து வாழவேண்டும் […]

Y. அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், செல்: 8608735960 நாம் வாழும் சூழலில் மன அழுத்தம் (Depression) பெறாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் அமைதியை இழந்து விட்டது. இதனால் நரம்பியல் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தாம்பத்ய நோய்கள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரு முஃமின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ளவர்கள் இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், குடும்ப உறவுகள் […]

பிப்ரவரி 2014 தொடர்ச்சி…. M.T.M. முஜீபுதீன், இலங்கை நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண் மக்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக அன்புடை யவன். (அல்குர்ஆன் : 33:59) மனிதர்கள் உடை அணிவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆபாசங்களைத் தவிர்ப்பதற்காக வும், அந்நிய ஆண்களின் துன்புறுத்தலிலிருந்து பெண்கள் தம்மைப் […]

ஐந்தாண்டுகளுக்கொரு முறை வழமையாக வரும் தேர்தல் திருவிழா தமிழகத்தில் 2014 ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாட்டை ஆள்வதற்கான திறமையுள்ள தகுதியுள்ளவர்களை முறையாகத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வல்ல இது! மக்களிலேயே ஆகக் கேடு கேட்டவர்கள் மக்களின் பொன்னான வாக்குகளை அற்பக் காசுக்கு வாங்கிக் கொண்டு மக்கள் மன்றத்தில் நுழைந்து உள்ளே அராஜகங்கள் அட்டூழியங்கள் தினசரி செய்ய வாய்ப்பளிக்கும் தேர்தல். நடுத்தர, ஏழை மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, மக்கள் சொத்தைக் கபளீகரம் செய்து பகல் கொள்ளையடித்து, […]