மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.
இறை மறையின் குறையற்ற பிறை![PDF]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-10 அவர்கள் கூறுகிறார்கள்: “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறைநேசரை வணங்குதல், இறைநேசர் வணங்குதல் என்று இருபொருள் எடுக்கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவதால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ= நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை” என்று அவர்கள் எழுதி இருப்பதும் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.
விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் என ததஜ தலைவராலும், பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப் படுகின்றதே!
MTM முஜீபுதீன், இலங்கை ஜூலை தொடர் :10 அவர் (ஈசா) இறப்பதற்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வேதக்காரர்களில் யாரும் இருக்கமாட்டார்கள். மறுமை நாளில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார். (அல்குர்ஆன் :4:159)
“மைல் கற்கள்” ஷஹீத் செய்யித் குதுப் இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான்.
மர்ஹூம் (ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது. ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?”
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: சவூதி அரேபியாவில் பெண்கள் கண்களைத் தவிர பிற பாகங்கள் அனைத்தையும் துணியினால் மறைத்து ‘ஹிஜாப்’ முறையை பேணி வருகிறார்கள். “முகத்தையும், கைகளையும் மறைக்க தேவையில்லை” அவ்வாறு மறைப்பது கண்டிப்பாக ‘பித்அத்து’தான் (அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள்) என்று தவ்ஹீது சகோதரர்கள் சிலர் வாதிடுகின்றனர்.இது சரியா? விளக்கம் கோருகின்றேன்.
A.H. நஸீர் அகமது, குன்னூர். அல்லாஹ் ஜல்லஷானஹுதஆலாவுடைய மாபெரும் கிருபையாக உள்ளது, பல முறை பல நபிமார்கள் மூலம் ஷரீஅத்துடைய சட்ட திட்டங்களை கொடுத்தும், வேதத்தைக் கொடுத்தும் அருள் செய்தான். ஆனால், ஷைத்தான் அவன் சூழ்ச்சியில் மனிதர்களை ஆட்டிப் படைத்து, மாசற்ற தூய்மையான முறையில் அல்லாஹ் கொடுத்த மார்க்க ஞானத்தை, தீனின் உண்மையை கலங்கப்படுத்தி பலவகையாக மனிதர்களை பல பிரிவினர்களாகப் பிரித்து, பல கோளாறுகளை உண்டாக்கி, பல இன்னல்களை மனிதர்களை சந்திக்க செய்து அல்லாஹ்வும் அவன் […]
மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார் நாங்கள் , எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
K.M.H. நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1 1/4 லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/4லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும். நிலையில் அவர்களைத தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
சகோதரர் அ. அப்துல் அஜீஸ் அவர்கள் 30-11-1989ல் தினமணி நாளிதழுக்கு எழுதிய கடிதம் அந்த நாளிதழில் இடம் பெறவில்லை. எனவே அதனை இங்கு இடம் பெற செய்கிறோம்.
விமர்சனம்: (sep.’96-26-27) கிணறு, குளம் போன்றவற்றில் “குளிப்பு கடமையானவர்” குளிக்கலாம் என்று கூறியுள்ளீர். அந்த ஹதீஸ் தண்ணீரின் தன்மையைப் பற்றித்தானே கூறியுள்ளது.ஏனெனறால்,
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-8 அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம்: எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையாததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய் பயனிலை தெரியும் நிலையில் பிரித்து எழுதுவோம்.
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி […]
இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: ஆகஸ்ட் (1996) வெளிவந்த அந்நஜாத் இதழில் ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் அறவே ஆதாரம் கிடையாது என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், அதற்கு தக்க ஆதாரம் ஸஹீஹுல் புகாரி பாகம்-1, மூலம் தமிழாக்கம், வெளியீடு நாள் 17.7.94 என்ற கிரந்தகத்தில் 48 மைல்களுக்கு அப்பால் அதாவது சுமார் 72 கி.மீ.க்கு மேல் கஸ்ர், மற்றும் 19 நாட்களுக்குள் தங்கியிருந்தால் கஸ்ர் தொழுகை கடமை என்று எழுதப்பட்டுள்ளது. கஸ்ர் என்ற பகுதியில் பக்கம் 818, […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?