கடவுள்! N. அலி, கல்லிடைக்குறிச்சி கடவுள் என்றாலே கட+வுள்=கடவுள். அதாவது இங்குள்ள அமைப்பை கடந்த வன். இவ்வுலகத்திலுள்ள யாதொன் றோடும் ஒப்பிட முடியாதவன். இவ்வுலகத் தின் அமைப்பை கடந்தவன். இவ்வுலகத் தின் அமைப்பையும் அதற்கான விதிமுறை களையும் வகுத்தவன் வழிகாட்டியவன். ஆனால் நாம் நடைமுறையில் கண்டு வருவது என்ன? கத்தரிக்காய் விலையில் “கறார்’ பேசும் நம்மவர்கள் கடவுள் வியத்தில் ரொம்பவும் தாராளமாக நடந்து கொள் கிறார்கள். இவ்வுலகத்தில் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ அதிக உச்சத்துக்கு கொண்டு […]
பெரும் வழிகேடுகள் மூன்று! தஜ்முல் ஹயாத் கான் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு சந்தேகம் வரும். வழிகேடுகள் மூன்று தானா? இத்தனை வழிகேடுகளைத்தான் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளானா? ஆனால் இதை படித்து முடிக்கும்போது இன்ஷா அல்லாஹ் ஓர் தெளிவு கிடைக்கும். நாம் அன்றாடம் தொழுகையில் ஓர் அற் புதமான வேண்டுகோளை-பிரார்த்த னையை-ஓர் துஆவை அல்லாஹ்விடத்தில் வைக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அதை கேட்கிறோம். ஏன் ஒவ்வொரு ரகா அத்திலும் கேட்கிறோம். ஓர் நாளைக்கு 20 ரகாஅத்துகள் தொழுதால், 20தடவை […]
சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூஅஸீம், இலங்கை ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… அப்போது இப்ராஹீம்(அலை) அவர் களோ இமாலய பொறுமையை மேற் கொண்டவர்களாக “”ஹஸ்பியல்லாஹு வநிஃஅமல் வகீல்” எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். பொறுப்பாளர்களில் அவன் மிக்க நல்லவன் என்று சொன்னார் கள். அவர்கள் தீக்குழியினுள் வீசியயறி யப்பட்டபோது, மழைக்குப் பொறுப்பாள ரான வானவர் மழை பொழிய வேண்டு மென எனக்கு உத்தரவிடப்பட்டால், நான் உடனே மழையை அனுப்பிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா லும் அவரது கட்டளையை […]
மவ்லவிகள் (முஸ்லிம் மதகுருமார்கள்) எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நிகரானவர்களா? அஹமது இப்ராஹீம் அல்குர்ஆன் கூறுகின்றது : அல்லது, அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின் றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (குர்ஆன் 42:21) மேற்கண்ட வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதரையோ அல்லது கற்பனைத் […]
ஆலிம் என்று சொல்பவர் காதில் ஊதும் சங்கு! அபூ உஸ்மான், ஆலிம் என்றால் யார்? இந்தக் கேள்விக்கு பதில் குர்ஆனில் பார்த்தால், “அல்லாஹ்வுக்கு யார் அதிகம் அஞ்சு கிறார்களோ, அவர்கள்தான் உலமாக்கள்” என்ற கருத்துப்பட, அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டியுள்ளான். ஆனால், இன்றைய மக்கள் மத்தியில் யார் ஆலிம்? என்று கேட்டால், வெள்ளை சட்டை, வெள்ளைக் கைலி, தாடி, தொப்பி, கையில் பாசி மணி போன்ற கெட்அப்பில் வருப வரும், பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழ […]
ஒருவனை மட்டுமே வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்! ஷரஹ் அலி எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்த்து நாகூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் குறை´கள், காஃபிர்களானார்கள், நிரந்தர நரகவாதியானார்கள். அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு அணுவின் முனை யளவு கூட சம்பந்தமே இல்லாத ஏர்வாடி நாகூர் போன்ற தர்காக்களில் பறக்க விடும் இந்த கற்பனைக் கொடிகளின் மீதும் கற்பனை கப்ருகளின் மீதும் நம்பிக்கை வைப்பது எல்லாம் வல்ல […]
சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை ஜூலை மாத தொடர்ச்சி… போர் செய்வதற்காக “பைஅத்” எனும் வாக்குறுதி செய்த பின்னரும் பொறுமை வேண்டும்: (நபியே!) நிச்சயமாக (ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது குறைஷயரின் தாக்குதலை எதிர்த்து போர் செய்வதற்காக) உம்மிடம் (பைஅத்) வாக்குறுதி செய்கின்றார்களே! அத்தகையோர் அவர் கள் (பைஅத் எனும்) வாக்குறுதி செய்வ தெல்லாம் அல்லாஹ்விடம் தான். அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கின்றது. ஆகவே எவர் (பைஅத் என்னும் அவ்வாக்குறுதியை) முறித்து […]
அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாமிய காலண்டர் கலந்தாய்வு கூட்ட அழைப்பு!! அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கலந்துரையாடும் சகோதரர்கள் : சகோதரர் றீ.க்ஷி.அப்துர்ரஹ்மான் மற்றும் ம்r.பு. முஹம்மது அலி இடம் : சகோதரர் ம்r.பு.முஹம்மது அலி அவர்கள் “மருத்துவமனை’ முகவரி: 27/43, கான்மியான் சந்து, பாலக்கரை, திருச்சி-620008. தலைப்பு: ஹிஜ்ரி கமிட்டியின் ஹிஜ்ரி நாள்காட்டியில் குறைபாடுகள் பற்றிய கலந்துரையாடல். […]
யாருக்கும் எதுவும் சொந்தமில்லை! இறைப்பிரியன் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு நாய்க்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு சாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க இச்சம்பவம் நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந் தது தினத்தந்தி. (பகுத்தறிவுக்கு நிரந்தர சொந்தக்காரர்கள் என்று தங்களை பீற்றிக் கொள்ளும்) கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்திலேயே இது போன்ற சம் பவங்கள் நடைபெறுகிறதென்றால் சங்பரிவாரங்கள் மற்றும் அதன் கூட்டணிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒட்டுமொத்த மனித […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை தொடர்ச்சி…. “ஓரிறைத் தேட்டத்திற்க்கு முன்மாதிரியாக பாரசீகர்களைப் புகழ்ந்து பேசிய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்” நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு “அல்ஜுமுஆ’ எனும் (62வது) அத்தியாயத்தில் “இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3வது வசனம் அருளப் பெற்றது. அப்போது, “அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் […]
தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஷரஹ் அலி பொங்கு கருணையாளன் தொடர் கிருபையாளன் இறைவனின் பெயரால்! தொழுகையை காத்துக் கொள்ளுங்கள், சிறப்பாக நடுத்தொழுகையை தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னால் முழு அடிபணிதலோடு நில்லுங்கள்! (இறைநூல்: 2:238) யார் அஸர் தொழுகையை தொழாமல் விட்டுவிடுகிறாரோ அவருடைய குடும்பம் அவருடைய சொத்து எல்லாம் நஷ்டமடையட்டும். அதில் தரித்திரம் பிடிக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இப்னு உமர்(ரழி), முஸ்லிம்: 1102 ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முகம்மஸ்’ […]
பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? K.M.H. அபூ அப்தில்லாஹ் இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும் பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங் களுக்கென்று பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டு ஒருசிலராவது ஐங்கால தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள். அப்பள்ளிகளில் தொழ வைப்பதற்காக இமாம்கள் அமர்த்தப்பட்டு தொழ வைக்கிறார்கள். அப்படிப்பட்ட இமாம்களில் பெரும்பாலோர் தர்ஹா சடங்கு சம்பிரதாயங்களை யும், கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது போன்ற அனாச்சார சடங்குகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவுலியாக்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ள சமாதிகளுக்கு […]
புரோகிதர்களை புறக்கணிப்போம்! நபிவழி நடப்போம்! இம்மை-மறுமை வெற்றி பெறுவோம்! அஹமது இப்ராஹீம் இவ்வுலக வாழ்க்கை ஒரு அற்ப வாழ்க்கை! இவ்வாழ்க்கையை நம்பி நாம் ஏமாந்துவிடக்கூடாது! மறுமை வாழ்க்கை ஒன்றே உண்மையானது! நிரந்தரமானது! நபிவழியில் மறுமைக்காக உழைக்கும் ஒரு முஸ்லிம் எவரோ அவரே புத்திசாலியாவார். ஆனால் அத்தகைய புத்திசாலியாக விடாமல் தடுத்து நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடுவதற்கென்றே படைக்கப்பட்டவன் தான் ஷைத்தான் என்பவன். இந்த ஷைத்தானுக்கே தீய வழி காட்டும் பெரிய ஷைத்தான்கள்தான் தாஃகூத் என்ற பெரிய மனித […]
இன்றைய அத்தியாவசியத் தேவை தியாகம்! K.M.H. முழுமை பெற்ற இஸ்லாம் எப் போது இப்பூவுலகிற்கு அறிமுகப்படுத் தப்பட்டதோ அப்போதிருந்தே அந்த இனிய மார்க்கத்திற்கும் நமது தாய்த்திரு நாடான இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம்களாகிய நாம் நமது தாய்நாட்டை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்யும் அளவிற்கு இந்தியாவில் முஸ்லிம்கள் சீரும் சிறப்பு மாக வாழும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆக 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பரம்பரை-மண்ணின் மைந்தர் கள் இன்று வந்தேறிகள் என்று வந்தேறி களால் வர்ணிக்கப்பட்டு […]
தலையங்கம்! மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்! அமைதிப் பூங்காவாக இருக்கும் நமது தமிழ்நாடு தொடர்ந்து அதே அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள். மதவாத கட்சியான பயங்காரவாத பாஜக சுயசிந்தனையாளர்கள் அதிகமுள்ள நமது தமிழகத்தில் இந்த அளவுக்கு காலூன்றக் காரணம் முஸ்லிம் மதவாத இயக்கங்களின் தலைவர்களேயாவர். இவர்கள் அல்குர்ஆனின் கட்டளையான 6:108 வசனத்திற்கு கட்டுப்படாமல் இந்துமதத் தலைவர்களையும் அவர்களின் தெய்வங்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும் நையாண்டிகள் செய்வதுமாய் உள்ளனர். அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை […]
தலையங்கம்! பிற மத கடவுள்களை திட்டாதீர்கள்! பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி: \கடந்த சில நாட்களால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை BJP கட்சியை சேர்ந்த நுபுர் ஷர்மா என்ற பெண் செய்தி தொடர்பாளர் இழிவாக பேசினார் என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து இருக்கிறது. குறிப் பாக உலகம் முழுவதும் உள்ள கிட்டத் தட்ட 16 இஸ்லாமிய நாடுகள் இதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் இந்தியாவின் பொருட்களை புறக்கணிப்போம். இந்துக்களை நாட்டை விட்டு அனுப்புவோம் […]
எது நேர்வழி? கே.எம்.எச். பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி: சென்ற ரமழான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி இமாம் பேசும்போது “”நாங்கள் ஆயிரம் வருடங்களாக நான்கு மத்ஹபுகளில் மட்டுமே உறுதியாக இருந்து வருகிறோம். ஆனால் மத்ஹபுகளை நிராகரித்து குர்ஆன், ஹதீஃத்படி நடக்கிறோம் என்று கூறித் திரியும் தெளஹீத்வாதிகள் இன்று 40 மத்ஹபினர்களாக ஆகிவிட்டார்கள். இது ஒன்றே அவர்கள் வழிகேட் டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். எனவே முஸ்லிம்களே […]
பிரார்த்தனை – துஆ இப்னு ஹத்தாது பிரார்த்தனை-இறைவனிடம் இறைஞ் சுதல் -துஆ ஒரு முஸ்லிமின் வணக்கங்களின் மூளையாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் “”அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 50:16) என்று அல்குர்ஆனில் அறிவித்துக் கொடுக்கிறான். அடியான் தன்னிடம் நேரடியாகக் கேட்பதை அல்லாஹ் மிகமிக விரும்புகிறான். அதற்கு மாறாக அடியான் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பரிந்துரைப்பவர்களாக […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… சமூகம் ஒன்றிணைத்து ஒரே தலைமையில் செயல்படுங்கள்; இல்லையேல் அறியாமை கால மரணமே! ஏக இறைவனின் தெளிவான ஆதாரங் கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் தங்க ளுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு பிளவுபட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோ ருக்குக் […]
அறியாமைக் கால அழைப்பு! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… இறை நம்பிக்கை கொண்டோரே! இன் னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சி செய்ய வேண்டிய முறையில் முயற்சி செய்யுங்கள்! அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளான். இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. உங்களுடைய தந்தை […]