அறிந்து கொள்வோம்!

in 2026 ஆகஸ்ட்

அறிந்து கொள்வோம்!

ரஹிமுத்தீன், குண்டூர்

1. எவருடைய மரணித்திற்காகவும் எது பிடிப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கிரகணம். புகாரி : 1041

2. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கிரகணம் ஏற்பட்டபோது தொழுகை எவ்வாறு தொழப்பட்டது?

ஜமாஅத்தாக. புகாரி : 1045,1046

3. நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜத் தொழுகை தொழாமல் இருந்தார்களா?

ஆம்! ஓர் இரவு, இரண்டு இரவுகள் நோயின் காரணமாக. புகாரி : 1124

4. அலிபின் அபிதாலிப்(ரழி) அவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?

அதிகமாக தர்க்கம் செய்பவராக இருப்பதாக.  புகாரி : 1127

5. மஸ்ஜிதுல் ஹரம்மஸ்ஜிதுல் அக்ஸா இவ்விரண்டிற்கு எத்தனை ஆண்டுகள் கழித்து  கட்டப்பட்டது?

40 ஆண்டுகள். முஸ்லிம் : 1155

6. மற்ற நபிமார்களை விட எத்தனை விசயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

6 வி­யங்களில்.  முஸ்லிம் : 1161

7. மதினாவின் பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரிடம் எத்தனை இரவுகள் தங்கினார்கள்?

பதினான்கு இரவுகள். முஸ்லிம் : 1167

8. கப்ரின் மீது உருவப்படங்களை வைப்பவர்கள், வரைபவர்கள் மறுமை நாளில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்.  முஸ்லிம் : 1175

9. நபி(ஸல்) அவர்களின் கடைசி தொழுகையின்  இமாமாக  இருந்தவர்  யார்?

அபூபக்கர்(ரழி) அவர்கள். சுனனுந் நஸாயீ :785

10. அம்ர் பின் ஸலமா  அல்ஜர்மீ(ரழி) அவர்கள் எந்த வயதில் இமாமாக இருந்து தொழவைத்தார்கள்?

எட்டு வயதில். சுனனுந் நஸயீ : 789

11. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் தாயாரின் சகோதரி யார்? 

மைமூனா(ரழி) அவர்கள். சுனனுந் நஸயீ : 806

12. நபி(ஸல்) அவர்களுக்கு ஜமாஅத் தொழுகையில் ஒரு சிறப்பு ஆற்றல்  அல்லாஹ்  வழங்கியது  எது?

முன்னால் பார்ப்பதைப் போல் பின்னால் பார்க்கும்  ஆற்றல். சுனனுந் நஸயீ : 813

13. தொழுகை திக்ர், குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களுக்காக பள்ளிவாசல் கட்டுப வருக்கு என்ன அல்லாஹ் தருவான் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

சொர்க்கத்தில் ஒரு வீடு தருவான். சுனன் இப்னு மாஜா : 735

14. மஸ்ஜிதுகளை அதிகமாக அலங்கரித்தால் என்ன நடக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்கள் கூறினார்கள்?

சமூகத்தின் செயல்கள் சீர்கெடும்.  சுனன் இப்னு மாஜா : 741

15. மல ஜலம் கழிக்கும்போது எதனை நோக்கி இருக்கக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கஅபா, பைத்துல் மக்திஸ். சுனன் அபூதாவூத் : 10

16. இருவர் மலம் கழிக்க திறந்த வெளியில் சென்றால் எதனை செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பேச வேண்டாம். சுனன் அபூதாவூத் : 15

17. எந்த வகையான தர்மத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

கையாடல், மோசடி செய்தவற்றிலிருந்து வழங்கப்படுவதை. சுனன் அபூதாவூத் : 59

18. தேங்கி நிற்கும் நீரில் எதனை செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சிறுநீர் கழிப்பது, குளிப்பது. சுனன். அபூதாவூத் : 69

19. பெருநாள் தொழுகையில் தக்பீர் எந்த தொழுகையில் கூறக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மழை வேண்டித் தொழும் தொழுகையில். ஜாமிஉத் திர்மிதி : 559

Previous post:

Next post: