பெருநாள் ஜகாத்

in 1986 மே,ரமளான்

ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி

நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:-

“எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால், ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழுகைக்கு பின்னர் அதனைக் கொடுக்கின்றாரோ, ஸதகாவாக நிறைவேறும்”.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)

ஆதார நூல்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ

மேற்கூறிய நபி மொழியில் ஜகாத் (அதாவது கட்டாயம் செய்ய வேண்டிய தர்மம்) என்ற பதம் பயனபடுத்தப்பட்டுள்ளதால் இது கட்டாயமான தர்மமாகும்.

“யார் மீது கடமை”?

பெருநாள் தினத்தின் செலவுகள் போக எவரிடமாவது எஞ்சி இருக்குமானால் அவர் மீது இந்த தர்மும் கடமையாகும். அவர் தனக்காக மட்டுமின்றி தன் பொறுப்பில் இருக்கின்ற சிறு குழந்தை, பெரியவர், ஆண், பெண் அத்தனை பேர் சார்பாகவும் இந்த தர்மத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வளவு தொகையை வைத்திருப்பவர்கள் தான் ஃபித்ரு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கவில்லை.

“முஸ்லிமான அடிமை, அடிமையல்லாதவன் ஆண், பெண், சிறியவர், பெரியவர் அத்தனை பேர் மீதும் இதனை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள்”.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி)

ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்

“எவ்வளவு கொடுப்பது?”

பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு “சாஉ” என்றும், அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ” என்றும் அந்த தர்மத்துக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி)

ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேற்கூறிய ஹதீஸில் இடம் பெற்றுள்ள “சாஉ” என்ற சொல் அன்றைய காலத்தில் அரபு பகுதியில் வழக்கிலிருந்த ஒரு அளவாகும். இரண்டு கைகளாலும் ஒரு பொருளை அள்ளும்போது, அதன் கொள்ளளவு எவ்வளவோ, அது போன்ற நான்கு மடங்காகும்.

தெளிவாகச் சொல்வதென்றால், இரண்டு கைகள் நிறைய ஒரு தானியத்தை அள்ளினால் அது 1/4 “சாஉ” ஆகும். இதுபோல் நான்கு முறை அள்ளினால் அது ஒரு “சாஉ” ஆகும்.

இது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களுக்கு இடம் தந்து விடாமல் இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி வழங்குவதே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஒருவனுடைய பொறுப்பில் ஐந்து பேர் இருந்தால், அந்த ஐந்து பேர் சார்பாக ஐந்து “சாஉ” தானியம் கொடுக்க வேண்டும். ஒரு நபரின் சார்பாக கொடுக்க வேண்டிய அளவு ஒரு “சாவு” ஆகும்.

எதனைக் கொடுக்க வேண்டும்?

எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குறிப்பிட்ட ஒஐ தானியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

1) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப் பொருட்களிலிருந்து நாங்கள் ஒரு “சாஉ” கொடுத்துக் கொண்டிருந்தோம். அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரழி)

ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபுதாவூத் நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி

உணவுப் பொருள் என்ற வாாத்தை இந்த ஹதீஜில் பொதுவாக பிரபோகம் செய்யப்பட்டுள்ளதால் எந்த உணவுப் பொருளையும் வழங்கலாம்.

எது சிறந்தது?

“நீங்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்ற (மணப் பக்குவம் பெறாத) வரை நீங்கள் நன்மையை அடைந்து விடவே முடியாது. (அல்குர்ஆன்)

இந்த வசனத்தின் அடிப்படையில் நமது நாட்டிலுள்ளோர் உணவாக உட்கொள்ள அரிசியையே விரும்புகின்றனர். எனவே அதனையே பெருநாள் தர்மமாக வழங்குதலே சிறப்புடையது.

“எப்போது கொடுப்பது?”

மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் இந்த தர்மத்தைக் கொடுத்து விடும்படி எங்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

ஆதாரம்: புகாரி, முஸ்லிம், நஸயீ, முஸ்னத் அஹ்மத்

யார் தொழுகைக்கு முன்னால் இதனை நிறைவேற்றுகின்றானோ அதுதான் பெருநாள் தடீமமாகும், யார் தொழுதபின் நிறைவேற்றுகின்றானோ, அது சாதாரண நாட்களில் செய்கின்ற சாதாரண தர்மத்தைப் போன்றதேயாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி)

ஆதார நூல்கள்: அபூதாவூது, இப்னுமாஜா

மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து, பெருநாள் தொழுகைக்கு முன் இதனைக் கொடுத்தாக வேண்டும் என்பது தெளிவாகின்றது.

“தேடிச் சென்று கொடுப்போம்”?

இந்த தர்மத்தை வாங்குவதற்காக எந்த முஸாபிர் வீடு தேடி வருவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாறாக நாமே வலிய தேடிச் சென்று அதனைக் கொடுத்தாக வேண்டும். இந்த தர்மத்தின் நோக்கமும் அதுதான்.

“அந்த ஏழைகள் இன்று (அதாவது பெருநாள் தினத்தில்) வீடு வீடாக சுற்றி வருவதை தேவையற்றதாக்குங்கள்” என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி)

ஆதார நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ

யாருக்குக் கொடுக்கக் கூடாது?

இஸ்லாம் தான தர்மங்கள் செய்வதை வலியுறுத்தும் போது, இனத்தின் அடிப்படையில் அதனைச் செய்யும்படிக்

கூறவில்லை. நாம் விரும்பிச் செய்கின்ற தர்மங்களை முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதாருக்கும் கொடுப்பதை அனுமதிக்கின்றது. எனினும் பெருநாள் தர்மத்தையும், ஜகாத்தையும் முஸ்லிமுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். ஏனெனில் “பெருநாள் மற்றவர்களும் கொண்டாட வேண்டும்” என்ற உயர்ந்த நோக்கில் தான் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் பெருநாள் கொண்டாடும் பிரச்னை இல்லாததால், முஸ்லிமுக்கு மட்டும் இந்த தர்மத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒருவன் தான் கொடுக்க வேண்டிய ஜகாத்தை பெருநாள் தர்மத்தை தனது தந்தை, பாட்டன், பாட்டி, மகன், பேரன், மகள், பேத்தி ஆகியோருக்கும், தன் மனைவிக்கும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இந்த வகை உறவினர்களை கவனிப்பது அவன் மீது கடமையான ஒன்றாகும். ஜகாத் பணத்திலிருந்து இவர்களுக்காக செலவு செய்யக் கூடாது. இவர்களைத் தவிர மற்ற உறவுகளில் ஏழைகள் இருந்தால் இதுபோன்ற தர்மங்கள் செய்வதில் அவர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

பெருநாள் தர்மத்தைப் பற்றிய விவரங்களை மட்டுமே இந்த இதழில் இடம் பெறச் செய்துள்ளோம். செல்வந்தர்கள் மீது மட்டும் கடமையாக்கப்பட்டுள்ள “ஜகாத்” பற்றிய சட்டங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வெளியிடுவோம்.

அந்நஜாத்: ஜுலை,1986

Previous post:

Next post: