2018 நவம்பர்

  ஆதார்! ஆதார் அட்டை சம்பந்தமாக இத்திட்டத்திற்கு நாட்டில் பல எதிர் கருத்துக்கள் வெளிப்பட்டன. இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்கள் ஒவ்வொருவரைப் பற்றிய உண்மைகள் அவை ரகசியங்களாக இருந்தாலும், அந்த ரகசியங்களைப் பெற நினைப்பவர் பெற்றுவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீதிபதிகளின் ஒரு அமர்வில், ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மனிதனின் அடிப்படை உரிமை என 2017ல் தீர்ப்பு வழங்கியது. திட்டம் நீடிக்காது என் றெண்ணி மக்கள் நிம்மதியாயினர். […]

மனித உயிர் குடிக்கும்… மது நோய்!  (Alcoholism Disease) ஹலரத் அலி, திருச்சி. மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவானதாக சொல்லப்படும் மதங்கள் அனைத்துமே நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ மது குடித்தலை ஊக்கப்படுத்தும் நிலையில்தான் இன்றும் உள்ளன. அல்லாஹ்வின் நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே இந்த சமூகச் சீர்கேட்டை கடுமையாக எதிர்த்து களமாடுகிறது. மதுவை “தீமைகளின் தாய்” என்று வர்ணித்து சிந்திக்கச் சொல்லி சீர்படுத்துகிறது. நபியே! மதுபானத்தையும் சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது. […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அக்டோபர் தொடர்ச்சி… இன்று உன்னை உன் சடலத்தோடு கரை ஒதுங்கச் செய்வோம். உனக்குப் பின்வரு வோருக்கு நீர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் (என்று நாம் கூறினோம் எனினும்) மக்களில் பெரும்பாலானோர் நமது சான்றுகளை(ப் பாராது) அலட்சியம் செய்பவராகவே உள்ளனர். 10:92 நற்செய்தி கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கிறது) ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அலட்சியம் செய்கின்றனர். (மேலும்) அவர்கள் செவியேற்பதுமில்லை. 41:4 பெரும்பாலானோர் சத்தியத்தை உண்மையை வெறுக்கிறவர்களாகவே இருந்தார்கள் : […]

முஹம்மது ஸலீம், ஈரோடு நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதியில் பிறந்தார்கள். ஆகையால் இந்த மாதத்தில் பனிரெண்டு நாட்கள் பள்ளிவாசல்களில் மெளலிது ஓத வேண்டும் இந்த மாதத்தில் அதிகமதிகம் மீலாது விழாக்கள் நடத்தப்படவேண்டும். இதன் மூலமாக நபியின் புகழை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மவ்லவிகள் கூறி வருகிறார்கள். உண்மையில் நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பனிரெண்டாம் தேதியில் தான் பிறந்தார்களா? இது குறித்து அனைவரும் ஒரு மித்த கருத்தில்தான் உள்ளார்களா? […]

மர்யம்பீ, குண்டூர், யாரை நீர் விரட்ட வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்? யாசிப்பவரை நீர் விரட்டவேண்டாம். அல்குர்ஆன் : 93:10 பாறைகளை குடைந்து வசித்த கூட்டத்தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஸமூது கூட்டத்தார். அல்குர்ஆன் : 89:9,10 ஸமூது கூட்டத்தினர் எந்த ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் : 91:12,13 யார் யாரெல்லாம் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை விட்டு தூரமாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வை அதிகம் […]

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் தொடர்ச்சி…… இமாம் தொழுகை நடத்தும் போது அவருக்கு முன்னதாக செயல்படக் கூடாது. நபி(ஸல்) அவர்களின் போதனையை கவனியுங்கள். இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்து “ருகூஉ”ச் செய்தால் நீங்களும் குனியுங்கள். அவர் “சமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்” என்று சொன்னால் நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 10 அபூ அப்தில்லாஹ் அக்டோபர் தொடர்ச்சி….. அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம். எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையா ததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய், பயனிலை தெரியும் நிலையிலே பிரித்து எழுதுவோம். அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். B. இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இந்நெறிநூலின் […]

முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விசயத்தில் (அதற்கு மாறாக வேறு) மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (எனினும்) நிச்சயமாக, அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். அல்குர்ஆன் : 33:36 அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணி(பல) பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். (அந்த) ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர். அல்குர்ஆன்:30:32 எனினும் தங்களது மார்க்கக் காரியங்களில் […]

விமர்சனம் : 2018 அக்டோபர் இதழ் பக்.35ல் தஃப்ஸீர்களை தவிர்த்துக் கொள்வது சிறப்பு என்கிறீர்கள், சரி! அப்படியானால் இங்கே உதாரணத்திற்கு “அல்குர்ஆன் 2:189ல் பிறைகளை காலங்காட்டி என்று கூறிவிட்டு, நீங்கள் வீட்டுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல….” இங்கே இதனை எப்படி விளங்கிக் கொள்வது?  அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : தாங்கள் கூறுவதைப் பார்த்தால் தஃப்ஸீரே படிக்க வேண்டாம் என்று எழுதியது போல சொல்கிறீர்கள், மன்னிக்கவும். தாங்கள் கூறியபடி நாங்கள் எழுதவில்லை. “அந்த தஃப்ஸீர்களைத் தவிர்த்துக் […]

ஐயம் : இது நாள் வரைக்கும் குர்ஆன் சுன்னா (ஸஹீகான ஹதீஃத்) மட்டுமே மார்க்கம் என்பவர்களின் மத்தியில் இன்று புதிதாக குர்ஆனுக்கு முரணில்லாத ஹதீஃத் என்கிறார்களே! இப்படி கூறக் காரணம் என்ன? அப்படியானால் குர்ஆனுக்கு முரணாக ஸஹீஹான ஹதீஃத் இருக்கிறதா? இதில் அந்நஜாத்தின் நிலையையும் தெளிவு படுத்தவும். நாஸர், நாகர்கோவில் தெளிவு : தமக்குக் கிடைத்த ஹதீஃத்களில், ஸஹீஹானதைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஹதீஃத் கலா வல்லுனர்கள் கையாண்ட அளவுகோள்களில் முதன்மை யானது. கிடைத்த ஹதீஃத் குர்ஆனுடன் […]