2023 டிசம்பர்

தலையங்கம் : கல்வியின் அவசியமும் உலக முஸ்லிம்களின் நிலையும் உலக முழுவதும் இப்போது பேசு பொருளாக இருப்பது (TRENDING NEWS) இஸ்ரேல் பாலஸ்தீனம் போரைப் பற்றியே, சிறிது நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 7ம் தேதிக்கு முன்பு) வரை  உக்ரைன்  ரஷ்யா  போர்  பேச்சு  பொருளாக  இருந்துவந்தது. உலகில் சுமார் 1080 கோடி மக்கள் (2022 ஆண்டு கணக்குப்படி) வசிக்கின்ற னர். இதில் கிருஸ்தவ மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் சுமார் 200 கோடி பேர் (இதில் மூன்று பிரிவுகள் உள்ளது) […]

புரோகிதத்திற்குக் கூலி நரகமே!  அபூ அப்தில்லாஹ் நவம்பர்  மாத  தொடர்ச்சி…. வழிகேட்டின்  ஒட்டுமொத்த  உருவம் : ஹறாம்களைச் செய்கிறவர்கள் சமுதா யத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு சில பகுதிகளைச் சீரழிக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றால், மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சகல துறைகளிலும் சீரழிக்கும் நிலையிலிருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா? இன்று முஸ்லிம் சமுதாயம் சீரழிவின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள்தான் […]

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியது ஏன்? (ATTITUDE, SKILL, KNOWLEDGE) அய்யம்பேட்டை  நஜ்முதீன் இறைவனின் முதல் திருவாக்கு; ஓதுவீராக!   அல்குர்ஆன் 96:1 எதை ஓதவேண்டும்? ஏன் ஓதவேண் டும்?  தெரிந்ததையா?  தெரியாததையா? முதன்முதலில் அருளப்பட்ட குர்ஆன் வசனத்தில் “நீர் ஓதுவீராக‘ என்று அல்லாஹ் சொல்கிறான்;  அதாவது  “நீர் படிப்பீராக!’  என்கிறான். பொதுவாக எதையயான்றையும் படிக்கவேண்டும் என்றால் ஏற்கனவே அவர் படித்தவராக இருந்திருக்க வேண்டும் அல்லது சொல்லி தருவதற்கு ஆசிரியர் இருக்க வேண்டும். முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் படிக்காதவர் […]

முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர்,  இலங்கை. நவம்பர்  மாத தொடர்ச்சி….. இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களும் முஸ்லிம்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்பதாகவே அல்லாஹ்வால்  ஏவப்பட்டார்கள்: ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்துவிட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்க வில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) “முஸ்லிம்களில்‘ ஒருவனாக இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார்) (அல்குர்ஆன் 10:72) அதாவது, […]

அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத்,  இலங்கை முஃமின்களைக் காப்பாற்றுவது அல்லாஹ்வின்  கடமையாகும் : அல்லாஹ் இறை நம்பிக்கை கொண் டோரின் பாதுகாவலன் ஆவான். (3:68) என்று தூயோன் அல்லாஹ் சொல்கின்றான்; அதாவது; தனது தூதர்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு நல்குகின்றான் என்பதாகும்.  (தஃப்சீர் இப்னு கஸீர் 2:122-124) முஃமின்களை அதாவது; இறை நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது இது மாண்பு மிக்க […]

குர்ஆனும் – மொழி பெயர்ப்பும்…. (2) இப்லீஸை வழி கெடுத்தது அல்லாஹ்வா? அபூ அஹமத், ஒரத்தநாடு ஏதேனும் தொழில் நிறுவனத்தில் வேலை செய்பவர் அந்த நிறுவனத்தின் சட்டங்களுக்கு மாற்றமாக ஒரு பெரும் தவறை செய்துவிட்டால் அந்த நிறுவனத்தின்  உரிமையாளர் மன்னிக்க முடியாத தவறு செய்தவரை பார்த்து இனி உனக்கு இங்கு வேலை இல்லை, வெளியேறு  என்றுதான்  கூறுவார்.  இதுவே  எதார்த்தம். அவ்வாறு வெளியேற்றிய உரிமையாளரைப் பார்த்து நான் தவறு செய்ததற்கு காரணம் நீங்கதான். நான் இல்லை என்று […]

நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! இஸ்லாத்தில் தூய்மை! இஸ்லாத்தின் தூய்மை! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : அல்லாஹ்,   அல்லாஹ்வின்  மார்க்கம் : படைப்பினங்களின் வாழ்வை நெறிப்படுத்தும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் வழிகாட்டல்தான் இஸ்லாம். மற்ற படைப் பினங்கள் இஸ்லாத்தை வாழ்விலேற்று ஒழுகும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள் ளன. காண்க: அல்குர்ஆன் 4:38, 3:83 அல்லாஹ் மஹா பரிசுத்தமானவன்: காண்க : அல்குர்ஆன் 12:108, 16:1 அவன் அருளிய மார்க்கமும்  பரிசுத்தமானதே! அல்லாஹ்வின் அடிமைகளாகிய படைப்பினங்கள் அல்லாஹ்வின் […]

மனிதன் அநீதி இழைப்பவனாகவும்,அறியாதவனாகவும் இருக்கின்றானா? N. மர்யம், ஒரத்தநாடு அல்லாஹ்வின் படைப்புக்களி லேயே  மிகவும் உயர்வான படைப்பு மனித படைப்பாகும். எவ்வாறெனில் இறைவனிடமிருந்து நேரிடையாக அவன் அறியாதவற்றை (அறிவை) கற்றுக் கொண்டவன்  மனிதன் மட்டுமே. அத்தியாயம் 96ல் ஐந்தாவது வசனத்தில், “மனிதனுக்கு அவன் அறியாதவற்றை தான் கற்றுக்கொடுத்தேன்” என்று குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். அவ்வாறு இருக்க, அதே மனிதன் “அமானிதம்‘ என்ற ஒன்றை சுமந்து கொண்டபொழுது அநீதி இழைப்ப வனாகவும், அறியாதவனாகவும் இருப்பதாக  கூறுகிறான். “நாம் இந்த […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. ஆச்சரியத்திற்குரியோரின் அத்தாட் சியை அல்லாஹ் எப்படி விவரிக்கிறான்? குகைவாசிகள்.    அல்குர்ஆன் 18:9 2. நரகத்திற்கு செல்லும் வழிகளில் இதுவும் ஒன்று என்று எதைக் குறிப்பிட்டு நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்? உளூவின்போதுகுதிங்கால்கழுவாதது. புகாரி : 60 3. தீய செயல்களை யாருக்கு அலங்கரித்து காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்? மறுமைமீதுநம்பிக்கைகொள்ளாதவருக்கு.    அல்குர்ஆன்  27:4 4. உயர்ந்த மாளிகையை அமைக்க யாரிடம்  பிர்அவ்ன்  கூறினான். ஹாமானிடம்.    அல்குர்ஆன் 28:38 […]

அப்பாவி குழந்தைகளை அநியாயமாக கொல்லும் பிர்அன்கள்  S.H. அப்துர் ரஹ்மான் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பு டையோனுமாகிய அந்த இறைவனின் பெயரால்.. இது இறை நூலாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இறைநூலை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அந்த இறைவனின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!) அந்த இறைவன் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே […]

மாதக் கூலிக்கு மார்க்கப் பணி செய்வது சரியா? K. சர்புத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும், அருள்வளமும் உண்டாகட்டும். இஸ்லாமிய சமூகம் பல்வேறான கூட்டங்களாக மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். எந்த கூட்டமானாலும் சரி பெரும்பாலும் தலைமையில் இருப்பவர்கள் செல்வத்தில் பொருளாதாரத்தில் செழிப்பவர்களாகவும், இவர்களுக்கு கீழ் கட்டுப்பாட்டில் இமாமத், தஃவா செய்வோர் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இஸ்லாமிய சமூகத்தில் ஊதியத்திற்கு இமாமத், அழைப்பு பணி செய்யக்கூடிய பலர் வறுமையில் இருப்பதையும் […]

இறைவன் இவ்வுலகை கண்காணிக்கிறானா? A.N. திருச்சி அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்  ஒருவன், அல்லாஹ்  தேவைகள்  அற்றவன், அல்லாஹ்  சோர்வு  அற்றவன், அல்லாஹ்  தூக்கம்  இல்லாதவன், அல்லாஹ்  மறதி  இல்லாதவன், அல்லாஹ் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாதவன், அல்லாஹ் மனிதனை மீண்டும் உயிர் கொடுத்து  எழுப்புபவன், அல்லாஹ் வானம், பூமி, கடல், நெருப்பு, காற்று, மனிதன், ஜின், மலக்குகள், மலைகள், சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதர கோள்கள், விலங்கினங்கள், இதர உயிரிணங்கள், தாவரங்கள் இன்னும் கண் ணுக்கு தெரிந்தது, […]