1989 ஜூன்

தொடர் :30                                         அபூ அப்திர்ரஹ்மான் “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)

அல்லாஹ்(ஜல்), ஆதி மனிதன் ஆதம்(அலை) முதல் மனித வர்க்கத்தின் நல்வாழ்விற்காக நேர் வழியைத் தன் புறத்திலிருந்து அளித்துக் கொண்டிருந்தான். மனித வர்க்கத்தில் தோன்றிய புரோகிதர்கள் – இடைத்தரகர்கள் அந்த நேர்வழியில் தங்கள் மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட கோணல் வழிகளை இடைச் செருகல்களாக இணைத்தனர். அதனால் ஆரம்பத்தில் ஒரு சமூகத்தினராக இருந்த மனித சமுதாயம் பல பிரிவினராக – பல மதத்தினராக பிரிந்தனர்.