2012 ஆகஸ்ட்

அபூ ஃபாத்திமா மவ்லவிகளின் வீண் பிடிவாதம்! பிறையைக் கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் இந்த மவ்லவிகள், கணக்கீட்டின் மூலம் மாதம் பிறப்பதை உறுதியாக அறிய முடியும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் பிறை தென்படும் என்று கணக்கீட்டின்படி அறிவித்தால் நிச்சயமாக அந்த நாளில் அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் பிறை இருக்கும். மேகமூட்டத்தால் மறைக்கப்பட்டாலும் பிறை இருந்தே தீரும் என உறுதியாகச் சொல்கிறார்கள்.

விமர்சனம்: குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் சஹாபாக்களின் விளக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அறிவைக் கொண்டு சுயமாக விளங்கக் கூடாது? அப்படி விளங்குவது வழிகேட்டில் விட்டுவிடும் என்று அஹ்லே ஹதீஸ்காரர்கள் மற்றும் ஸலஃ பிகள் கூறுகிறார்கள். இதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? இது சஹாபாக்களை தக்லீது செய்வது போல் ஆகாதா? விளக்கவும். B. சகாபுத்தீன், திருச்சி-26.

MTM. முஜீபுதீன், இலங்கை ஜூலை 2012 தொடர்ச்சி … மதத்தின் பெயரால் பேய், பிசாசு, இறந்த ஆவிகள் மீதான மூட நம்பிக்கைகள்: சிலைகளை தெய்வமாக வணங்கும் சமுதா யங்களிடையில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதன்படி ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனது உயிர் அல்லது ஆத்மா அல்லது ரூஹு அவன் செய்த நன்மை தீமைக்கு அமைய இந்த பூமியில் பல சேட்டைகளைச் செய்தபடி சுற்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை. இதன்படி சில இறந்த மனிதர்களின் ஆத்மா ஆவியாக […]

அல்லாஹ்வின் ஒருமை அறிவியல் Science of One-ness of Allah இஸ்லாத்தின் இலட்சியம்: வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த ரமழான் மாதத்தின் சிறப்புப் பற்றி சர்வ வல்லமை மிக்க இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஏகன் அல்லாஹ் வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:185 வசனத்தில் இவ்வாறு கூறி தெளிவுபடுத்துகிறான்.